நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

15.11.10

இறைவனையே தன்னிடம் அழைத்தவர்



பக்த கனகதாசர்
கனகதாசர் ஜெயந்தி:
ஐப்பசி 29 (நவ. 15 )


கண்ணபிரானை முழுமுதற் கடவுளாக கொண்டு, தமிழகத்தில் பன்னிரண்டு ஆழ்வார்கள் பாடி பத மலர் போற்றி பரவசமடைந்துள்ளனர். அதுபோல் சிவபிரானையும் போற்றி, புகழ்ந்து வழிபட வழிகாட்டிய மகான்கள் அறுபத்து மூன்று நாயன்மார்கள். அதுபோல் குரும்பர் குலக்  கோமான் கனகதாசரும் தலைசிறந்த இறையடியவராக இன்றளவும் போற்றப்படுகிறார்.

இவர்,  400 ஆண்டுகளுக்கு முன், கர்நாடகாவின்   துங்கபத்திர நதிக்கரையும் ஆணைகெந்தி சமஸ்தானத்தைச்  சார்ந்த சிற்றரசர் பீரேகவுடா- பத்தியம்மையார் தம்பதிக்கு திருப்பதி வெங்கடேசப்பெருமாள் அருளால் காகிநிலை எனும் ஊரில் அவதரித்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் திம்மப்பன். அவர் பிறந்த பின் பொன், பொருள், தனம், தான்யம் பெருமளவில் சேர்ந்தபடியால் அவர் கனகன் (தங்கம்) என்று செல்லப்பெயரில் அழைக்கப்பட்டார்.

அவர் ஐந்து வயதில் தந்தையை இழந்தார். 16ம் வயதில் ஆணைகெந்தி அரசருடைய பிரபுவாய் பங்காபுரத்து அரசரானார். கனகன் தெய்வாம்சமாகப்  பிறந்தவராதலால் தர்மம் செய்து மக்களை தன் பிள்ளைகளைப் போல் பாவித்தார். அவருக்கு கனகப்பதுரை, கனகப்பநாயக்கர் என்ற பெயரும் வழங்கப்பட்டது.

அவர் நெடுங்காலம் அரசராக இருந்து சுகபோகங்களிலும் மூழ்கியும் இருந்தார். ஒருநாள் இரவில் வெங்கடேச பெருமாள் அடியவர் உருவில் வந்து நிலையற்ற போகங்களைத்   தவிர்த்து நிலையான பக்தி மேலிட ஆணையிட்டார். அதனால், அரசபோகத்தை தொடர்ந்து பல்வேறு கோவில்களுக்கும் சென்று வழிபட்டு துறவு நிலையில் உடுப்பியில் உள்ள கிருஷ்ணன் கோவிலுக்குள் வழிபட நுழைந்தார்.

அவரை கோவிலுக்குள் செல்லவிடாமல் தவிர்த்து சிலரால் வெளியே தள்ளப்பட்டார்.  அப்போது கோவில் பிரகாரத்தின் பின்புறமாக வந்து ஒரு பாடலைப் பாடினார். கோவில் சுற்றுச்சுவர் இடிந்து இறைவன் ஒரு பக்கம் திரும்பி காட்சி அளித்தார். அதனை கண்ட அனைவரும், இவரைப் போற்றிப் புகழ்ந்தனர். அதுமுதல் இவரது புகழ் நாடெங்கும் பரவியது. சுவர் இடிந்த இன்றளவும் 'கனகன் திட்டிவாசல்', 'கனக கிண்டி' என அழைக்கப்படுகிறது.

அவர் தமிழகத்தில் வாழ்ந்த பட்டிணத்தாரை போல் ஞானியாகவும், பக்திப் பாடல்கள் பலவும் பாடியுள்ளார். பள்ளிப் பாடங்களிலும் ஆன்மீகத்  துறையிலும் இப்பாடல்கள இடம் பெற்றுள்ளன. அவர் பாடல்களை அறிஞர்கள் பலர் ஆய்வு செய்து, ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளனர்.  அவரது   பாடலிலேயே, தான் ஒரு சாரணமான குரும்பா எனக் கூறும் பாடல்களும் சில உண்டு. காளிதாசர் போன்று குரும்பா இனத்துக்கு பெருமையளிக்கும் இச்சான்றோர் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். 

கர்நாடக இசைக் கீர்த்தனைகளை வழங்கிய முன்னோடிகளில் கனகதாசர் முக்கியமானவர். இறைவனுக்கு முன் ஜாதி வேற்றுமைகள் நில்லாது என்பதையும் இவரது வாழ்விலிருந்து காண்கிறோம்.

நன்றி: தினமலர்

--------------------------
காண்க:
Kanagadasa 
யமதவம்  புரிந்த ஞானி (தமிழ் ஹிந்து)
தாசர் வாழ்வில்
சித்திரக்கதை (ராமகிருஷ்ண விஜயம்)
கவி பாடிய கன்னட நந்தனார் - ஜடாயு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக