நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

3.12.13

ஈரோடு வேளாளர் கல்லூரியில் கருத்தரங்கம்- அழைப்பிதழ்

ஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், வரும் 21.12.2013, சனிக்கிழமை காலை9.30 மணி முதல், மதியம் 3.00 மணி வரை, சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தியை முன்னிட்டு, கல்லூரி ஆசிரியர்களுக்கான கருத்தரங்கம் நடைபெறுகிறது.

ஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியுடன் தேசிய சிந்தனைக் கழகம் இணைந்து நடத்தும் இக்கருத்தரங்கின் அழைப்பிதழ் கீழே….


inv_01
 
inv_02

படத்தின் மீது சொடுக்கினால் பெரிதாக்கிப் படிக்கலாம்.
அனைவரும் வருக!