tag:blogger.com,1999:blog-11341725366050434242024-03-13T04:38:36.205+05:30தேசமே தெய்வம்பாரத பூமி பழம்பெரும் பூமி... நீரதன் புதல்வர், இந்நினைவு அகற்றாதீர்!Unknownnoreply@blogger.comBlogger374125tag:blogger.com,1999:blog-1134172536605043424.post-72469177920822969102021-11-23T00:57:00.007+05:302021-11-23T00:57:52.097+05:30மகாகவி பாரதி- சில நினைவுகள்<br /><span style="color: #990000; font-size: medium;"><b>-தஞ்சை வெ.கோபாலன்</b></span><br /><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzpezcJAsOzUNNP5P3pRstx3E6gBnKmk338utzb5PzJWXW5IvbkkgFrTehweK1j1Ucq3V1ohS5S5EnncfOLMrgo-Afs7bZXL9J4IMJOdZDN35DR160CVGYsbk3ijjLrryd7wEzb9WFmOs/s118/Bharathi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="118" data-original-width="90" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzpezcJAsOzUNNP5P3pRstx3E6gBnKmk338utzb5PzJWXW5IvbkkgFrTehweK1j1Ucq3V1ohS5S5EnncfOLMrgo-Afs7bZXL9J4IMJOdZDN35DR160CVGYsbk3ijjLrryd7wEzb9WFmOs/w305-h400/Bharathi.jpg" width="305" /></a></div><br /><div style="text-align: center;"><br /></div><div style="text-align: center;"><span style="color: #cc0000;">(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு)</span></div><br /><b>இன்றைக்கு</b> 100 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வுலக வாழ்வை நீத்து அமரரானார் மகாகவி பாரதியார். இளமையின் உச்சத்தில் இன்னும் எவ்வளவோ அரிய கவிதைகளைக் கவி காளிதாசன் போல், கவியரசர் கம்பன் போல் அளிக்க வாய்ப்பிருந்த நிலையில் தன் முப்பத்தி ஒன்பதாம் அகவையில் அமரர் ஆனார் அவர். அவரது நினைவுகள் என்றென்றும் மக்கள் மனங்களில் கோலோச்சிக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.சொற்களைக் கோர்த்து பொழுதுபோக்காகக் கவிதைகள் புனைந்தவனில்லை மகாகவி. ஒவ்வொரு கவிதையின் பின்னாலும் ஒரு பெருங்கதை மறைந்து கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டு அந்தக் கவிதைகளைப் படிக்கும்போதுதான் அதன் சிறப்பினை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.<br /><br />புதுச்சேரியில் அந்தக் காலத்தில் புழக்கத்திலிருந்தது புஷ் வண்டி எனப்படும் பயண சாதனம். அதில் புதுவை உப்பளம் பகுதியைச் சேர்ந்த ஒரு புஷ்வண்டியோட்டி மகாகவிக்கு அடிக்கடி சவாரி வருவது வழக்கம். அப்படியொரு நாள் அந்த மனிதர் பாரதியிடம், “ஐயா நான் உப்பளம் பகுதியில் வசிக்கிறேன். தாங்கள் ஒருநாள் எங்கள் பகுதிக்கு வர வேண்டும். வந்து, அங்கு கோயில் கொண்டிருக்கும் முத்துமாரியம்மனைத் தரிசித்து அங்கு ஒரு பாட்டுப் பாட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான்.<span><a name='more'></a></span><div><br />இவனைப் போல உள்ளத்தில் உண்மை அன்பு கொண்ட ஏழைகள் யார் அழைத்தாலும் மறுக்காமல் போகும் குணமுடைய பாரதி, அவன் அழைப்பை ஏற்றுக்கொண்டார். மறுநாளே தன் இளைய மகள் சகுந்தலாவையும் அழைத்துக்கொண்டு அந்த புஷ்வண்டிக்காரனின் வண்டியிலேயே பயணம் செய்து உப்பளம் சென்றார்.<br /><br />அங்கு தேசமுத்துமாரி எனும் பெயரால் ஒரு ஆலயம் இருந்தது. அந்த ஆலயத்தில் பூஜைகள் செய்து வந்தவன் ஒரு வள்ளுவ இளைஞன். அந்த இளைஞன் மாரியம்மனுக்கு முறைப்படி வழிபாடுகள் நடத்தி தீபாராதனை செய்து வைத்தபோது, அதனைக் கண்டு பரவசமடைந்த பாரதியார் அருகிலிருந்த தன் மகளிடம் “பாப்பா! அதோ பார், அந்த இளைஞன் அந்தணத் தொழிலை எத்தனை அழகாகச் செய்கிறான் பார்!” என்று சொல்லி வியந்து போனார்.<br /><br />அவனுடைய அந்த ஈடுபாட்டைக் கண்டு அவனைத் தன் இல்லத்துக்கு அடிக்கடி வரவேண்டுமென்று கேட்டுக்கொண்டதோடு, அவனுக்கும் கனகலிங்கத்துக்கு பூணூல் அணிவித்ததைப் போன்றே பூணுல் அணிவித்தார். இவர் செய்யும் காரியத்தை அதிசயமாகப் பார்த்தவர்களிடம், அவன் செய்யும் அந்தணத் தொழிலுக்கு இது தேவை என்றார் பாரதி.<br /><br />அந்த ஒருநாள் உப்பளம் விஜயம் அந்தப் பகுதி மக்களிடையே ஒரு எழுச்சியை ஏற்படுத்திவிட்டது. பாரதி தங்கள் ஆலயத்துக்கு வந்ததைப் பலரும் அறியவில்லை என்பதால் அதே புஷ் வண்டிக்காரன் பாரதியை மீண்டும் ஒருமுறை தங்கள் ஆலயத்துக்கு வரவேண்டுமென்றும், அந்தப் பகுதி மக்கள் அவர் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.<br /><br />அவன் வேண்டுகோளை ஏற்று பாரதி மீண்டும் மறுநாளே உப்பளம் சென்றார். அங்கு வாழுகின்ற மக்கள் தங்கள் வீதிகளை சுத்தம் செய்து தண்ணீர் தெளித்து கோலமிட்டு, தோரணங்கள் கட்டி அவர்களும் தலை முழுகி ஈரத் தலையுடன் இவரை வரவேற்றனர். ஆலயத்தில் வழிபாடு முடிந்ததும் பாரதியை ஒரு பாட்டுப் பாடவேண்டுமென்று கேட்க, அவரும் சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டிருந்து விட்டு “உலகத்து நாயகியே எங்கள் முத்து மாரியம்மா” எனும் பாடலையும் “தேடியுனைச் சரணடைந்தேன் தேசமுத்து மாரி” எனும் பாடலையும் உரத்த குரலில் பாடினார். உடனே அருகிலிருந்த அந்தப் பகுதி ஆண்கள் தாரை தப்பட்டை ஒலியோடு தாளமிட்டுக் கொண்டு ஆடத் துவங்க, பாரதியும் ஆடிக்கொண்டே அந்தப் பாடலைப் பாடி முடிக்கிறார்.<br /><br />தன்னை மறந்து தேசமுத்து மாரி மீது பாடிய அந்தப் பாடலின் இந்தப் பின்னணியைத் தெரிந்து பாடினால்தான் அதே உணர்வு நமக்கும் ஏற்படும்.<br /><br />உப்பளம் சென்று வீடு திரும்பும்போது தந்தையும் மகளும் ஈஸ்வரன் தர்மராஜா கோயிலினுள் நுழைகின்றனர். அங்கிருந்த சிலைகளையெல்லாம் காட்டி, ‘இவர் யார், இது என்ன?’ என்று பாப்பா எனும் சகுந்தலா கேள்வி கேட்டுக் கொண்டு வருகிறாள். அது தருமன், இது பீமன், இது அர்ஜுனன் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு வந்த பாரதி, திரெளபதியின் உருவச்சிலையைக் காட்டி இவர் யார் என்று கேட்டதும் மெளனமாகிவிட்டார். மகளும் தந்தையின் மனநிலையைப் புரிந்து கொண்டு மவுனமாக வீடு திரும்பிவிட்டனர். வீடு திரும்பிய பாரதி யாருடன் பேசாமல் அங்கும் இங்குமாக நடந்து நிறைவில் காலைத் தரையில் உதைத்துக் கொண்டு தன் கவிதை வரிகளை உதிர்க்கத் தொடங்கினார். அப்போது பிறந்ததுதான் அழியாக் காவியமான ‘பாஞ்சாலி சபதம்’.<br /><br />மற்றுமொரு சிறிய பாடல், ‘அம்மாக்கண்ணு பாட்டு’. அதில் “பூட்டைத் திறப்பதுங் கையாலே, நல்ல மனந் திறப்பது மதியாலே, பாட்டைத் திறப்பது பண்ணாலே, இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே” எனும் வரிகளுடன் தொடங்கும். அந்தப் பாடல் தோன்றிய விதம் என்ன தெரியுமா?<br /><br />ஒரு சமயம் செல்லம்மாவும் சகுந்தலாவும் கடையத்துக்குப் போயிருந்தார்கள். பாரதி புதுவையில் தன் இல்லத்தின் வாயிலை ஒரு பூட்டைப் போட்டுப் பூட்டிவிட்டு எங்கோ வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது தான் வைத்திருந்த பூட்டின் சாவி இல்லாதது கண்டு திகைத்துப் போனார். எங்கெல்லாமோ தேடி அலுத்துப்போய் நின்று கொண்டிருந்த சமயம் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த (சம்பளம் எதையும் எதிர்பார்க்காமல் அன்புக்காகப் பணியாற்றிக்கொண்டிருந்த மூதாட்டி அவர்) அம்மாக்கண்ணு எனும் பெண்மணி தற்செயலாக அந்தப் பக்கம் வந்தவர், பாரதியார் பூட்டைத் திறக்க சிரமப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து, அவரை நகர்ந்து கொள்ளச் சொல்லிவிட்டு தானே கையால் அசைத்து அந்தப் பூட்டைத் திறந்து விட்டாள். இதைக் கண்டு மகிழ்ந்து போய் பாரதி அந்த அம்மாக்கண்ணுவின் பெயரால் இந்தப் பாட்டைப் பாடினாராம்.<br /><br />புதுவை வாசத்தின்போது பாரதியார் குவளைக்கண்ணன் போன்ற நண்பர்களுடன் வெல்லச்சுச் செட்டியார் என்று அழைக்கப்பட்ட பாரதியாரின் நண்பருடைய மாந்தோப்புக்குச் சென்று அங்குள்ள மடு ஒன்றில் குளித்துவிட்டு வருவார். அங்கு சென்று குளிப்பதற்காக குவளை பாரதியைப் போய் அழைத்து வருவது வழக்கம். ஒரு நாள் பாரதியே சீக்கிரமாக எழுந்து வந்து குவளையின் வீட்டுக்கு வந்து அவரை அழைக்கிறார். அப்போது குவளையின் தாயார் பாரதியாரிடம், “அப்பா! பாரதி நீதான் பாட்டெல்லாம் நன்றாகப் பாடுவாயாமே! ஒரு சுப்ரபாதம் பாடேன்” என்கிறாள். ஆகா! அதற்கென்ன பாடினால் போச்சு என்று சொல்லிவிட்டு நண்பர்களுடன் மடுவில் பாரதி குளிக்கச் சென்று விடுகிறார். போகும் வழியில் சுப்ரபாதம் என்றால் இறைவனை எழுப்பப் பாடப்படும் திருப்பள்ளி எழுச்சி என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, குளித்துவிட்டு வரும் வழியில் உரத்த குரலில் பாரத நாட்டையே தெய்வமாக வைத்து ‘பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி’ என்று இப்போது நமக்கெல்லாம் அறிமுகமாகியிருக்கும் பாடலான “பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்” எனும் பாடலைப் பாடிக்கொண்டு ஆடிக்கொண்டும் வந்தாராம். இதனை பாரதிதாசன் நன் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.<br /><br />மகாகவி பாரதியாரின் நாவில் கலைமகள் குடிகொண்டிருந்தார் என்பது உண்மையான சத்திய வாக்கு. பொய்யே பேசாதவர், அவர் சொல்லும் வாக்கு ஒவ்வொன்றும் அருள் வாக்கு என்பதை பல நேரங்களில் அவர் நிரூபித்திருக்கிறார்.<br /><br />பாரதி புதுவையில் குடியிருந்த ஈஸ்வரன் தர்மராஜா கோயில் தெருவில் அடுத்த வீட்டில் வசித்தவர் செல்வந்தர் பொன்னு முருகேசம் பிள்ளை. பாரதியார் குடும்பத்தின் தேவையறிந்து அவ்வப்போது பல உதவிகளைச் செய்து வந்தவர்கள் பிள்ளையும் அவரது மனைவியும்.<br /><br />யாரும் வந்து உதவி செய்கிறேன் என்று சொல்லி செய்தால் அதை சுயமரியாதை காரணமாக பாரதி நிராகரித்து விடுவது வழக்கம். அவருக்கு உதவி செய்ய விரும்புகிறவர்கள் அவர் அறியாமல் அந்த உதவிப் பொருட்களை அவர் வீட்டில் வைத்துவிட்டுச் சென்றுவிட வேண்டும். நெசவுத் தொழில் செய்துவந்த அவருடைய நண்பரும், பாரதி குயில் பாட்டைப் பாடிய மாந்தோப்புக்குச் சொந்தக்காரரும், பாரதியால் வெல்லச்சுச் செட்டியார் என்று அன்போடு அழைக்கப்பட்ட நண்பர்கூட பாரதிக்குப் பண உதவி செய்யும்போது அவர் அறியாமல் பணத்தை அவர் வீட்டில் வைத்துவிட்டு வந்து விடும் வழக்கமுடையவர். பாரதியார் வீட்டில் சமையலுக்கு அரிசியோ, காய்கறிகளோ ஒரு பையில் போட்டு ஒருவரும் அறியாமல் அவர் வீட்டு சமையல் அறையில் வைத்து விடுவாராம் பொன்னு முருகேசம்பிள்ளையின் மனைவி.<br /><br />அப்படிப்பட்டவரின் மகன் ராஜாபாதர் என்பவர் படிப்பதற்காக பிரான்சு நாட்டிற்குச் சென்றார். அப்போது முதல் உலக யுத்தம் முடியும் தறுவாயில் இருந்தது. வெகுகாலம் ஆகிவிட்டபடியால் தன் மகனைப் பார்க்க தந்தை முருகேசம் பிள்ளையின் மனம் துடித்துக் கொண்டிருந்தது. மகனுடைய பிரிவு அவரை மிகவும் துன்புறுத்தியது. அப்போது ராஜாபாதர் ஊர் திரும்புவதாக ஒரு செய்தி வந்தது, தந்தைக்கு அளவிடமுடியாத மகிழ்ச்சி. தொடர்ந்து சில நாட்களுக்குள் ராஜாபாதர் பயணம் செய்த கப்பல் நடுக்கடலில் உடைந்துவிட்டது என்ற செய்தி இடிபோல வந்து பிள்ளையைத் தாக்கியது. மனம் பேதலித்த பொன்னு முருகேசம் பிள்ளை நடமாட்டம் இல்லாமல் படுத்த படுக்கையாக தன் மகன் நினைவோடு கிடந்தார். பலரும் பல விதங்களில் அவரைத் தேற்ற முயன்றும் ஒன்றும் பயனளிக்கவில்லை. மகன் பயணம் செய்த கப்பல் கடலில் மூழ்கவில்லை என்றொரு பொய்த் தந்தியைத் தயார் செய்து கொண்டு வந்து காட்டியும் பார்த்துவிட்டனர். ஒன்றுக்கும் அவர் மனம் தேறவில்லை. கடைசியில் பாரதியார் வந்து சொல்லட்டும் நான் நம்புகிறேன் என்றார் பொன்னு முருகேசம் பிள்ளை.<br /><br />அவர் உடல்நலம் தேறவேண்டுமென்கிற நல்ல எண்ணத்தில் சுற்றத்தார் பாரதியாரிடம் வந்து ராஜாபாதருக்கு ஒரு கெடுதலும் நேரவில்லை என்று பிள்ளையிடம் சொல்லுமாறு வேண்டிக் கொண்டனர். செய்வதறியாது திகைத்த பாரதி எப்படி இப்படியொரு பொய்யைச் சொல்லி ஒரு நல்ல மனிதரை ஏமாற்றுவது என்று தயங்கினார். இதுபோன்ற இக்கட்டான சந்தர்ப்பங்களில் பொய் சொல்வது தவறில்லை; மகாபாரதத்தில்கூட தர்மரை ‘அஸ்வத்தாமன்’ இறந்து விட்டதாகப் பொய் சொல்லச் சொன்னபோது தயக்கத்துடன் அவர் ‘அஸ்வத்தாமா ஹத: குஞ்சர:’ (அஸ்வத்தாமன் எனும் யானை இறந்தது) என்று குஞ்சர: எனும் சொல்லை மெல்லச் சொல்லிவிடவில்லையா. ஆகவே முருகேசம் பிள்ளையின் உயிரைக் காக்கவேண்டுமானால் அப்படியொரு பொய்யைச் சொல்வதில் தவறில்லை என்று கருதி, அவரிடம் சென்று “ஐயா! கப்பலே கவிழ்ந்தாலும் பராசக்தியருளால் நம் ராஜாபாதருக்கு ஒரு கெடுதலும் நேராது. அதற்கு நான் ஜவாப்தாரி” என்று ஆறுதல் கூறினாராம். எனினும் மனத் துன்பம் காரணமாக பிள்ளை ஓரிரு நாட்களில் உயிர் துறந்து விட்டார்.<br /><br />அப்படியானால் கவியின் வாக்கு பொய்த்து விட்டதா? இல்லை, கப்பல் உடைந்த போதும் ராஜாபாதர் உயிர் பிழைத்து புதுவைக்கு வந்து சேர்ந்தார். மகாகவி சொன்ன வாக்கு “ஐயா! நாம் ஜவாப்தாரி; பராசக்தி காப்பாற்றுவாள்” என்று அவர் சொன்னதை பராசக்தி நிறைவேற்றி விட்டாள். இந்த அதிசயத்தைச் சொல்லிச்சொல்லி அனைவரும் மகிழ்ந்து போனார்கள்.<br /><br />மற்றுமொரு தெய்வீக அனுபவத்தை பாரதியாரின் மகள் சகுந்தலா பாரதி சொல்லுகிறார். புதுச்சேரியில் அவர்கள் குடியிருந்த வீடு விளக்கெண்ணெய் செட்டியார் என்று பாரதியாரால் பெயரிடப்பட்ட ஒருவரின் பழைய இல்லம். இன்றோ நாளையோ இடிந்து தலையில் விழக்கூடிய நிலையில் இருந்தது அந்த வீடு. முழுவதும் இடித்துவிட்டுக் கட்டினாலொழிய அந்த வீட்டில் வாழ்வது என்பது முடியாத நிலை. அதற்கு நேர் எதிரில் கெட்டியான ஒரு மச்சுவீடு. அந்த வீட்டுக்கு ஒரு போலீஸ் அதிகாரி குடிவருவதாகத் தகவல் இருந்தது.<br /><br />பாரதியாரை வேவு பார்க்க ஏராளமான போலீஸார் சுற்றிக் கொண்டிருக்கும் நேரத்தில் நேரெதிர் வீட்டுக்கு ஒரு போலீஸ் அதிகாரி குடிவருவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அவர் குடிவருவதைத் தடுக்க வேண்டுமானால் இவர்கள் அந்த வீட்டுக்குக் குடி போக வேண்டும், அந்தப் போலீஸ் அதிகாரி இந்த பழைய வீட்டுக்குக் குடி வரமாட்டார். வேறு வழியில்லை அந்த மச்சுவீட்டுக்கு பன்னிரெண்டு ரூபாய் வாடகை என்றபோதும், அது அதிகம் தான் என்றாலும் அங்கு குடி போனார்கள்.<br /><br />அது கார்த்திகை மாதம். இவர்கள் புதிய வீட்டுக்குக் குடிபோன மறுநாள் இரவு கடுமையான மழை, அதனைத் தொடர்ந்து பேய்க்காற்று வீசத் தொடங்கியது. ஆம்! புயல்காற்று தொடங்கிவிட்டது. பாரதியாரின் இரண்டு பெண் குழந்தைகளும் ஓர் அறையில் படுத்துவிட்டனர். பாரதியும் செல்லம்மாவும் விடிய விடிய கண்விழித்து இறைவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். நடு இரவில் சுற்றுப் புறங்களில் மரங்கள் ‘மடேர் மடேர்’என்று ஒடிந்து விழும் ஓசை. ஓசைகேட்டு எழுந்த சகுந்தலாவை பாரதியார் ஆறுதல் சொல்லி “காற்றும் மழையும் பெரிதாக இருக்கிறது பாப்பா, பயப்படாதே” என்று ஆறுதல் சொன்னார். விடியற்காலையில் மகளை அழைத்துக் கொண்டு பாரதி வெளியே வந்தார். அப்போது வாயுதேவனின் விளையாட்டைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். சாலை மரங்களெல்லாம் வேரோடு பெயர்ந்து விழுந்து கிடந்தன. ஏராளமான காக்கைகளும் ஏனைய பறவையினங்களும் கூட்டம் கூட்டமாக இறந்து கிடந்தன. தந்தி மரங்கள் அறுந்து விழுந்து கிடந்தன. வரிசையாக தென்னை மரங்கள் அனைத்துமே வீழ்ந்து கிடந்தன. அப்போது பாரதி பாடிய பாடல்தான்: ”காற்றடிக்குது கடல் குமுறுது கண்ணை விழிப்பாய் நாயகனே!” எனத் தொடங்கும் பாடல்.<br /><br />அதில் வரும் சில வரிகள் அவருடைய அனுபவத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்தது. அது, “நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே, இந்த நேரமிருந்தால் என்படுவோம்? காற்றென வந்தது கூற்றமிங்கே, நம்மைக் காத்தது தெய்வ வலிமையன்றோ” என்ற பாடல்.<br /><br />நிறைவாக வங்கத்தில் தோன்றிய ‘வந்தேமாதரம் எனும் சொல் தமிழகத்தில் வ.உ.சி., சுப்பிரமனிய சிவா, பாரதி ஆகியோரால் முழங்கப்பட்டு அந்த முழக்கங்களே முதல் இருவரையும் சிறையில் அடைத்ததையும் வரலாறு சொல்லுகிறது. அந்த வந்தேமாதரம் எனும் மந்திரச்சொல்லை நாம் சொல்ல வேண்டிய, இல்லை இல்லை முழங்க வேண்டியதன் அவசியத்தை பாரதி ஒரு கவிதையில் சொல்லுகிறார்.<br /><br />இந்த பாரத புண்ணிய பூமி பழம்பெரும் பூமி; நாமதன் மக்கள் இந்நினைவகற்றாதீர் என்று மக்களுக்கு உரைத்தவர் பாரதி. அந்த பாரத பூமியின் மண் எத்தகையது தெரியுமா? இந்த புனிதமான மண்ணில்தான் நம் தந்தையும் தாயும், அவர்களது முன்னோர்களும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்தனர். அந்தப் புனித மண்ணில் அவர்கள் சிறு பிள்ளைகளாக ஓடியாடி விளையாடியதையும், அறிவிலே தேர்ச்சி பெற்று வளர்ந்து நின்றதையும், திருமணமாகி இன்புற்று வாழ்ந்ததையும், பின்னர் முதுமையடைந்து மாண்டுபோன பின்பு இதே மண்ணில் அவர்கள் பூந்துகளாக மாறி மண்ணோடு மண்ணாகக் கலந்து கிடப்பதையும், அத்தகைய புனிதமான மண்ணை சிந்தையில் இருத்தி வந்தனை கூறி வாயுற வாழ்த்தேனோ, இதை “வந்தேமாதரம், வந்தேமாதரம்” என்று வணங்கேனோ என்கிறார்.<br /><br />உலகிலே கர்மபூமி எனப் புகழ்பெற்று புனித நதிகளால் வளமூட்டி, வானுயர்ந்த மலைகளும், காடுகளும், வனங்களும், நதி தீரங்களும், புண்ணியத் தலங்களும் சூழ்ந்து கிடக்கும் இந்த புண்ணிய நாட்டை வணங்குவோம் என்று உரக்கக் குரல் கொடுத்த அந்த மகாகவியை இந்த நினைவு நூற்றண்டில் வணங்கி அவன் வழி நடப்போம்.<br /><br />வந்தேமாதரம்!</div><div><br /></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1134172536605043424.post-88222476096506921462020-11-05T00:24:00.002+05:302020-11-05T00:32:46.791+05:30முருகா எனும் நாமம்!<span style="color: #990000; font-size: medium;"><b>-திருமுருக கிருபானந்த வாரியார் </b></span><div><br /><div style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDN2HHZuqaklhmcAKyCSjelf7l67g6Y0O9C4sZ-AKY-6KheCFHsldajRqjTI30wnR2olPqeYMc6p4j3v__BQSBx1kkP4PMPagMI7-7TBQvkKgwpShr_Qy_F3QL8YeqoHHVmgcb5dqBH24/s225/Muruga.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="224" data-original-width="225" height="318" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDN2HHZuqaklhmcAKyCSjelf7l67g6Y0O9C4sZ-AKY-6KheCFHsldajRqjTI30wnR2olPqeYMc6p4j3v__BQSBx1kkP4PMPagMI7-7TBQvkKgwpShr_Qy_F3QL8YeqoHHVmgcb5dqBH24/w320-h318/Muruga.jpg" width="320" /></a></div><br /> <br /><b> “ஊரிலான் குணங் குறியிலான் செயலின் உரைக்கும்<br />பேரிலான் ஒரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர்<br />சாரிலான் வரல் போக்கிலான் மேலிலான் தனக்கு<br />நேரிலான் உயிர்க் கடவுளாய் என்னுளே நின்றான்” </b><div><br /> என்பது கந்த புராணத் திருவாக்கு. இறைவனுக்கு ஊர், குணம், அடையாளம், செயல் பேர், காலம், பற்றுக்கோடு, போக்கு, வரவு, உயர்வு, ஒப்பு முதலிய ஒன்றும் இல்லை. </div><div><br /> பேரும் ஊரும் இல்லாத பெருமான் ஆன்மாக்களின் பொருட்டு – ஆன்மாக்களுக்கு அருள் செய்யும் பொருட்டு பேரும் உருவும் தாங்கி வருகின்றான். </div><div><br /> இத்திருவருளின் இயல்பை உள்ளவாறு உணராத புலவர்கள் இறைவனுக்கு நாம ரூபம் நம்மால் கற்பிக்கப்பட்டன என்பார்கள். </div><div><br /> மூவாண்டுடைய சீகாழிப்பிள்ளையார் அழுதலும் அவருடைய பண்டைத் தவ வலிமையால் இறைவன் திருவுருவுடன் காட்சி தருகின்றான். வெள்ளை விடையும், பவளமலை போன்ற திருவுருவும், அருகில் மரகதக் கொடி போன்ற அம்பிகையும், பிறையணிந்த திருமுடியும், மான்மழு ஏந்திய திருக்கரங்களும், நீல கண்டமும், தோடணிந்த தாழ்செவியும், கருணை பொழியும் மலர்க் கண்களும், நீறணிந்த திருமேனியுங் கண்டு, அச்சிறியபெருந்தகையார் “தோடுடைய செவியன்” என்று பாடுகின்றார். அத்திருமேனியை மூவாண்டுக் குழந்தை கற்பனை புரியவில்லை. கண்ட காட்சியைக் கழறுகின்றது. <span><a name='more'></a></span></div><div><br /> சூரபன்மனுக்குச் சிங்கமுகன் கூறுகின்ற அறவுரையை கந்த புராணத்தில் காண்க: </div><div><br /><b> வாலிதா மதிச் சடிலமும் பவளமால் வரையே<br />போலு மேனியும் முக்கணும் நாற்பெரும் புயமும்<br />நீல மாமணிக் கண்டமும் கொண்டு நின்றனனால்<br />மூலகாரணம் இல்லதோர் பராபர முதல்வன்<br />தன்னை நேரிலாப் பரம் பொருள் தனியுருக்கொண்ட<br />தென்ன காரணம் என்றியேல் ஐந்தொழில் இயற்றி<br />முன்னை ஆருயிர்ப் பாசங்கள் முழுவதும் அகற்றிப்<br />பின்னை வீடுபேறருளுவான் நினைந்த பேரருளே.</b><br /><br />இவ்வண்ணம் சிவமூர்த்தி ஆன்மாக்களின் நலன் கருதி எடுத்துக்கொண்ட திருவுருவங்கள் பல. அவற்றுள் மிகவும் தொன்மையானது ஆறுமுக வடிவம். <br /> “அந்திக்கு நிகழ்மெய்யண்ணல் அருள் புரிந்தறிஞராயோர்<br />சிந்திக்குந் தனது தொல்லைத் திருமுகம் ஆறுங்கொண்டான்” <br /> <br /><div style="text-align: center;">-கந்தபுராணம். </div></div><div><br /><b> “பழைய வடிவாகிய வேலா” </b><br /><div style="text-align: center;">-திருப்புகழ். </div></div><div><br /> தேவர்கள் துயர்தீர்க்கும் பொருட்டு, வடிவும் வண்ணமும் இல்லாத முடிவிலாப் பரம்பொருள், மூவிரு முகங்களும், ஆறிருபுயங்களும், மூவாறு நயனங்களும் அமைந்த திருமேனி கொண்டு அருள்புரிந்தார். </div><div><br /><b> “அருவமும் உருவும் ஆகி அனாதியாப் பலவாய் ஒன்றாய்<br />பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக்<br />கருணைகூர் முகங்களாறும் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே<br />ஒரு திரு முருகன் வந்தாங் குதித்தனன் உலகம் உய்ய”</b><br /><br />எம்பிரான் சரவணப் பொய்கையில் இத்திருமேனி கொண்டு உதிக்கு முன்னரேயே முருகன் என்ற திருநாமத்தை uடையவன் என்பதை<br />இப்பாடலால் அறிக. </div><div><br /><b><span style="color: #cc0000;"> முருகன் வந்து உதித்தான்! </span></b></div><div><br /> “சாத்தான் வந்தான்” என்றால், வந்தது பின்னர், சாத்தான் என்ற பெயர் முன்னர் என்பது விளங்குந்தானே. மிகப் பழமையான் திருநாமம் முருகன் என்பது. முருகனுடைய திருநாமங்கட்கெல்லாம் சிவபெருமான் உமாதேவியிடம் காரணங்கள் கூறுகின்றார். “இன்ன காரணத்தால் இன்ன பெயர் அமைந்தது” என்று கூறுகின்றார். </div><div><br /> “ஆறுமுகங் கொண்டதால் சண்முகன்”<br />“கங்கையில் தவழ்ந்ததால் காங்கேயன்”<br />“கார்த்திகை மாதர் வளர்த்தனால் கார்த்திகேயன்”<br />“ஆறு திருவுருவும் ஒன்று கூடியதனால் கந்தன்”<br />“மயிலை வாகனமாக உடையவனாதலால் விசாகன்” </div><div><br /> இன்ன காரணத்தால் முருகன் என்ற நாமம் அமைந்தது என்று அந்த வரிசையில் கூறவில்லை. இதனால் அத்துணைத் தொன்மை வாய்ந்த திருநாமம் முருகன் என்பதைத் தெற்றென உணர்க. </div><div><br /> எம்மொழிக்கும் முதல்வனான முருகன் செம்மொழியான தமிழுக்குச் சிறப்புடைத் தலைவன் ஆவான். தமிழில் மூன்று இனம் உண்டு.</div><div><br />அவை வல்லினம், மெல்லினம், இடையினம் எனப்படும். இவற்றுள் மெல்லினம் மென்மையும், இனிமையும் உடையது. ஆதலால்- மெல்லினத்தில் ஒரு எழுத்து ‘மு’இடையினத்தில் ஒரு எழுத்து ‘ரு’வல்லினத்தில் ஒரு எழுத்து ‘கு”’ <br /> -என ‘முருகு’ என்று மூவினத்தில் மூவெழுத்தைக்கொண்டு எந்தை கந்த வேளின் திருநாமம் அமைந்துளது. </div><div><br /> ஆண்டவன் ஆறு ஆகாரங்கட்கும் ஆறு சமயங்கட்கும் ஆறு அத்துவாக்களுக்கும், ஆறுபடை வீடுகட்கும் அதிபன். </div><div><br /> “முருகா” என்ற பெயரும் ஆறு பொருள்களைக் கொண்டது. தெய்வத்தன்மை, அழகு, இளமை, மகிழ்ச்சி, மணம், இனிமை என்ற ஆறு தன்மைகளையும் உடைய சொல் “முருகு”. </div><div><br /><b> “முருகுகள் இளமை நாற்றம்<br />முருகவேள் விழா வனப்பாம்” </b></div><div><br /> -என்று பிங்கள நிகண்டு கூறுகின்றது. </div><div> <br />இதனைப் புலப்படுத்தவே அருணகிரிநாதர், </div><div><b><br /></b></div><div><b> “மெய்மைகுன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்”</b><br /><br />-என்று கூறுகின்றார். இப்பாடலில் முருகா என்பது ஒருமை. நாமங்கள் என்பது பன்மை. பல நாமங்களின் பொருள்களையுடையது “முருகா” என்ற நாமம் என்பதை இப்படி உணர்த்துகின்றார். </div><div><br /> இறைவன் பல்லாயிரம் நாமங்கள் கொண்டவன். அவற்றுள் சிறந்த நாமம் மூன்று – முருகன், குமரன், குகன் என்பவை. இம்மூன்றனுள்ளும் மிகச்சிறந்தது முருகன் என்ற நாமம். </div><div><br /><b> “முருகன் குமரன் குகன் என்று மொழிந்<br />துருகுஞ் செயல் தந்துணர் வென்றருள்வாய்” </b></div><div><br /> -என்று கந்தரநுபூதியில் கூறுகின்றார். </div><div><br /> உலகமெல்லாம் அஞ்சுகின்ற முகமாகிய கூற்றுவனுடைய கோர்முகந் தோன்றுகின்றபோது “முருகா” என்றால் அப்பனுடைய் ஈரமுகம்<br />ஆறுந்தோன்றும். </div><div><br /> அக்கூற்றுவனுக்கும் நமக்கும் ஒருவேளை போர் நிகழுமாயின் அப்போது “முருகா” என்று ஓதினால் அஞ்சேல் என அவனுடைய அயில்வேல் தோன்றும். <br /> ஒருகால் “முருகா” என நினைத்தாலும் போதும், அக்கருணாமூர்த்தியின் இருகாலும் தோன்றும். </div><div><br /></div><div> “முருகா முருகா” என்று ஓதினால் போதும். “முருகா” என்று கூறக் கூடாது; ஓத வேண்டும். கூறுவது வேறு; ஓதுவது வேறு. கூறுவது – வாக்கு மட்டும் தொழில் படுவது. ஓதுவது – உணர்வுடன் காதலாகி உள்ளங் கசிந்து கண்ணீர் மல்குவது.<br /><b><br />“காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார்”</b></div><div> <br /><div style="text-align: center;">– ஞானசம்பந்தர். </div></div><div><br /><b> “அஞ்சு முகந்தோன்றில் ஆறுமுகந் தோன்றும்<br />வெஞ்சமரந் தோன்றில் வேல் தோன்றும்- நெஞ்சில்<br />ஒருகால் நினைக்கின் இருகாலுந் தோன்றும்<br />முருகா என்றோதுவார் முன்” </b></div><div><br /> ‘ஓம்’ என்ற பிரணவ எழுத்து ‘அ- உ- ம்’ என்ற மூன்று எழுத்துக்களின் சம்மேளனம். ‘அ’கரத்தில் தொடங்கி, ‘உ’கரத்தில் மடங்கி<br />‘ம’கரத்திலே ஒடுங்குகின்றது. </div><div><br /> அ – சிருஷ்டிக்கின்றது<br />உ – இரட்சிக்கின்றது<br />ம – சம்மரிக்கின்றது <br /> (சம்ஹாரம் = ஒடுக்கம்) </div><div><br /> இந்த மூன்றில் சிருஷ்டி எழுத்தை பார்க்கிலும், சம்மார எழுத்தாகிய மகரத்தைப் பார்க்கிலும், ரக்ஷக எழுத்தாகிய உகரந்தான் உயர்ந்தது. <br /> நாம் கடவுளை நோக்கி, “என்னை உண்டாக்குவாய். என்னை ஒடுக்கிக் கொள்வாய்” என்றா வேண்டுகின்றோம்? இல்லை; “இறைவனே என்னைக் காப்பாற்று” என்றுதானே வேண்டுகின்றோம்? </div><div><br /> எனவே காத்தலுக்கு உரிய எழுத்தாகிய உகரத்தையே பெரிதாகக் கொள்ள வேண்டும். </div><div><br /> குகையில் கற்முகி என்ற பூதத்தால் அடைப்பட்ட ஆயிரம் பேரையும் காப்பாற்று என்று பாடிய நக்கீரர், ரட்சக எழுத்தாகிய உகரத்தை முதலில் அமைத்து ‘உலகம் உவப்ப வலனேர்பு திரி தரு’ என்று தொடங்கினார். </div><div><br /> தனியடியார் அறுபத்து மூவர்களையும், தொகையடியார் ஒன்பதின்மார்களையும், சிவபெருமான் காத்தருளிய வரலாற்றைக் கூற வந்த கம்பநாடரும் உகரத்தை முதலில் அமைத்தே ‘உலகம் யாவையும் தாமுள வாக்கலும்’ என்று ஆரம்பிக்கின்றார். </div><div><br /> அ-உ-ம என்ற மூன்றில் ரக்ஷக எழுத்தை முதலில் வைத்துச் சொன்னால், உமஅ = உமா என்று ஆகின்றது. இது அம்பிகையினுடைய உயர்ந்த திருநாமம். <br /> இது காறும் கூறியவாற்றால் ஒருவாறு உகரத்தின் பெருமையை உணர்ந்திருப்பீர்கள். </div><div><br /> இனி முருகு என்ற திருநாமத்தைச் சிந்தியுங்கள். <br /> மகர மெய்யில் உகர உயிர் ஏறி ‘மு’<br />ரகர மெய்யில் உகர உயிர் ஏறி ‘ரு’<br />ககர மெய்யில் உகர உயிர் ஏறி ‘கு’ </div><div><br /> “முருகு” என்ற மூன்றெழுத்துக்களிலும் காத்தற்குரிய உகரமே ஊடுருவி நின்று இம்முருக மந்திரமே அகில உலகங்களை காத்தருளும் திருநாமம் என உணர்த்துகின்றது. </div><div><br /> இப்படி மூன்று உகர உயிர் அமைந்த வேறு மந்திரம் இல்லை என்பதும் ஒரு தலை. ஆதலால் முருகா என்று ஓதுவார் மும்மை நலங்களும் பெற்று உயர்வு பெறுவார்கள். </div><div><br /> ஒரு மன்னன் வேட்டையாடினான். விலங்கின் மீது விடுத்த கணை குறி தவறி ஒரு அந்தண முனிவரைக் கொன்றுவிட்டது. அதனால் பிரம்ம அத்தி தொடரப் பெற்ற மன்னன் பெருந்துயர் உழந்தான். இடர்களையும் சாதனத்தை நாடி கங்கைக் கரைக்கு வந்தான். கங்காநதி தீரத்தில் ஒரு மாதவ முனிவர் சிறந்த தவத்தில் இருந்தார். அரசன் அவரிடம் போனான். </div><div><br /> அரசன் வந்த சமயத்தில் ஆஸ்ரமத்தில் அருந்தவர் இல்லை. மாதவருடைய மைந்தன் இருந்தான். அச்சிறுவன் அரசனை வரவேற்று, “வேந்தே! எங்கு வந்தாய்? உனக்கு என்ன வேண்டும்?” என்று வினாவினான். </div><div><br /> “குழந்தாய், உன் பிதா எங்கே?” </div><div><br /> “அரசே! அவர் வெளியே சென்றிருக்கின்றார். நின் மனதில் என்ன குறை? உன் வாட்டத்திற்குரிய காரணத்தைக் கூறு”. </div><div><br /> “குழந்தாய்! நான் அபுத்தி பூர்வமாக் ஒரு முனிவரைக் கொன்றுவிட்டேன். பிரமகத்தி என்னைத் தொடர்ந்து வருத்துகின்றது. அது தீரும் சாதனத்தைக் கேட்க வந்தேன்”. </div><div><br /> “இவ்வளவு தானே? இதற்கென்ன பெரிய ஆலோசனை? நான் சொன்னபடி கேள். பிரமகத்தி தீரும். கங்கையில் நீராடு; வடதிசை நோக்கி நில்; முருகவேளை மனக் கண்ணால் கண்டு, காதலாகிக் கசிந்து, கண்ணீர் மல்கி, மூன்று முறை ‘முருகா’ ‘முருகா’ முருகா’ என்று ஓது. பிரமகத்தி நீங்கும்” என்று அம்மைந்தன் கூறினான். </div><div><br /> மன்னவன் அதுபடி ஓதி பிரமகத்தி நீங்கப் பெற்றான். முனி மகனை வணங்கி மகிழ்ச்சியுடன் சென்றான். </div><div><br /> பின்னர் முனிவர் பெருமான் வந்தார். தேரின் சக்கரங்கள் வந்துசென்ற சுவட்டினைக் கண்டார். </div><div><br /> “மகனே! இங்கே யார் வந்தது?” </div><div><br /> “அப்பா! இந்நாட்டினை ஆளும் வேந்தர் வந்தார்”. <br /> <br /> “கண்ணே, எதன் பொருட்டு வந்தார்?” </div><div><br /> “தந்தையே! பிரமகத்தி தீர வழி கேட்டார். அதற்கு நான் நீராடி உள்ளம் உருகி மும்முறை முருக மந்திரத்தைக் கூறுமாறு உபதேசித்தேன். அவ்வண்ணமே செய்து அனுகூலம் அடைந்து அவர் அகன்றார்”. </div><div><br /></div><div> இதனைக் கேட்ட முனிவருக்கு விழி சிவந்தது. “மூடனே! நீ என் மகனா? என்ன காரியஞ் செய்தாய்? ஏன் உனக்கு இந்த மந்த புத்தி? உனக்கு ஒருசிறிதும் முருக பக்தியில்லையே. பெருந் தவறு செய்துவிட்டாயே” என்று கூறிக் கடிந்தார்.</div><div> <br />அம்மைந்தன் நடுநடுங்கினான். தந்தையின் தாள் மலர்மீது பலகாலும் வீழ்ந்து பணிந்தான். “அப்பா! நான் என்ன பிழை செய்தேன்? நம் குலதெய்வம் குமாரக் கடவுளின் திருமந்திரத்தைத் தானே ஓதச் சொன்னேன்?” </div><div><br /> “மகனே, ஒரு முறை ‘முருகா’ என்றால் கோடி பிரமகத்திகள் தீருமே? நீ மூன்று முறை சொல்லச் சொன்னாயே. நீ முருக நாமத்தின் பெருமையையும் நன்மையையும் நன்கு உணரவில்லை. மூன்று முறை சொன்னால்தான் பிரமகத்தி நீங்குமா? அம்மந்திரத்தின் ஆற்றலை அறிந்தாயில்லை. இதனால் நீ வேடர் குலத்தில் பிறப்பாயாக” என மகனை அவர் சபித்தார். </div><div><br /> மகன் பதைபதைத்துப் பணிந்து பிழை பொறுக்குமாறு வேண்டினான். <br /> முனிவர் கருணைபுரிந்து, “மகனே! அஞ்சற்க. நீ இதே கங்கா தீரத்தில் வேடர்கட்கு அரசனாக பிறப்பாய். முருகன் நாமங்களில் ஒன்றாகிய ‘குகன்’ என்ற பெயரைத் தாங்கி, அன்புருவாக நிற்பாய். ஸ்ரீராமருக்கு நண்பனாய் வாழ்ந்து முடிவில் முருகபதம் பெருவாய்” என்று அருள் புரிந்தார். </div><div><br /> அம்முனிவர் மகன் குகனாகப் பிறந்தான். உத்தமனாக நின்று ஸ்ரீ ராமபிரானுடைய நட்பைப் பெற்று, இறுதியில் கந்தலோகம் பெற்றான். <br /> ஆதலால், ‘முருகா’ என்ற திருமந்திரம் சகல வினைகளையும் போக்கும். <br /> ‘முருகா’ என்று ஒருமுறை கூறியவுடன் முருகம்மையாருக்கு கணவன் வெட்டிய கரமலர் வளர்ந்தது. </div><div><br /><b> “முருகா எனவோர் தரமோதடியார்<br />முடிமேல் இணைதாள் அருள்வோனே” </b></div><div><br /> என்று அருணகிரிநாதர் பாடி இதன் பெருமையை உணர்த்துகின்றார். </div><div><br /><b> “முருகா எனவுனை ஓதுந்தவத்தினர் மூதுலகில்<br />அருகாத செல்வம் அடைவர், வியாதியடைந்து நையார்<br />ஒருகாலமுந் துன்பம் எய்தார், பரக்தி உற்றிடுவார்<br />பொருகாலன் நாடுபுகார் சமராபுரிப் புண்ணியனே” </b></div><div><br /> -என்று சிதம்பர சுவாமிகள் ‘திருப்போரூர்ச் சந்நிதி’ முறையில் பாடியிருக்கின்றார். </div><div><br /> ஆதலால் கண்கண்ட தெய்வமாம் கலியுகவரதன் என்னப்பன், மூவர் தேவர் தொழும் முழுமுதற் கடவுளின் திருவடியைச் சிந்தித்து, வந்தித்து, முருகா என்ற இனிய கனியமுதம் அன்ன நாமத்தை உள்ளம் உருகி, ஓதி, அன்பர்கள் பெற்ற பிறவியின் பயனைப் பெற்று, இனிப் பிறவாப் பெற்றியைப் பெறுவார்களாக! <br /> முருகா! முருகா!! முருகா! <br /> <br /> <br /><b> குறிப்பு: </b></div><div><br /></div><div><a href="https://www.blogger.com/#" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYab0VH7z-7Bv9d9hWKL9m7C2Vy12j-ZeBGL8PpvY2cGfN69THRBbRkN1jUpRLavO34fzB2iqiN4R5GYMBHmA4JKPMjHcc1WOHGXlfj3zu8DngVz9jmc2rOuDUZ-QrwmpRwZEGu6zfrXg/s200/variyar1.jpg" /></a> <br /> <br /> <br /> மறைந்த பூஜ்யஸ்ரீ திருமுருக கிருபானந்த வாரியார், தமிழகத்தில் நாத்திகப் பிரசாரம் உச்சத்திலிருந்த தருணத்தில் அதை வென்ற ஆன்மிகப் பேரருளாளர். தற்போதைய காலச்சூழலை முன்னிட்டு இக்கட்டுரை இங்கு வெளியாகியுள்ளது.
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><br /></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1134172536605043424.post-36993509297254907882020-06-08T23:24:00.008+05:302021-11-23T00:52:22.190+05:30யுவ காண்டீபம்- மின்னிதழ்கள்<div dir="ltr" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhS0yk0ZG_h8SUSyFNVGNRChrmFoNSVoA5phYshpub5XSZvl-mJ1m_x_IeIBSZSWY2O2dz-i6KI4VPy9cyQ_ODUqrWI2RmBHsOwFuDmGYzhI12Wks0PiEq8HAhrj_H_TRmH4p9R-RztPB4/s1600/yk-thai2020.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="242" data-original-width="176" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhS0yk0ZG_h8SUSyFNVGNRChrmFoNSVoA5phYshpub5XSZvl-mJ1m_x_IeIBSZSWY2O2dz-i6KI4VPy9cyQ_ODUqrWI2RmBHsOwFuDmGYzhI12Wks0PiEq8HAhrj_H_TRmH4p9R-RztPB4/s400/yk-thai2020.jpg" width="290" /></a></div>
<br /><br /><b>2020 ஆண்டு இதழ்கள்</b><br /><br /><a href="https://yuvakandeepam.blogspot.com/2020/04/2020.html">சித்திரை-2020 மின்னிதழ்</a><br /><a href="https://yuvakandeepam.blogspot.com/2020/05/2020.html">வைகாசி-2020 மின்னிதழ்</a><br /><a href="https://yuvakandeepam.blogspot.com/2020/06/2020.html">ஆனி-2020 மின்னிதழ்</a><br /><a href="https://yuvakandeepam.blogspot.com/2020/07/2020.html">ஆடி-2020 மின்னிதழ்</a><br /><a href="https://yuvakandeepam.blogspot.com/2020/08/2020.html">ஆவணி-2020 மின்னிதழ்</a><br /><a href="https://yuvakandeepam.blogspot.com/2020/09/2020.html">புரட்டாசி-2020 மின்னிதழ்</a><br /><a href="https://yuvakandeepam.blogspot.com/2020/10/2020.html">ஐப்பசி-2020 மின்னிதழ்</a><br /><a href="https://yuvakandeepam.blogspot.com/2020/11/2020.html">கார்த்திகை-2020 மின்னிதழ்</a><br /><a href="https://yuvakandeepam.blogspot.com/2020/12/2020.html">மார்கழி-2020 மின்னிதழ்</a><br /><a href="https://yuvakandeepam.blogspot.com/2020/01/2020.html">தை-2020 மின்னிதழ்</a><br /><a href="https://yuvakandeepam.blogspot.com/search/label/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%202020">மாசி-2020 மின்னிதழ்</a><br /><a href="https://yuvakandeepam.blogspot.com/2020/03/2020.html">பங்குனி-2020 மின்னிதழ்</a><br /><br /><br /><b>2021 ஆண்டு இதழ்கள்</b><br /><br /><a href="https://yuvakandeepam.blogspot.com/2021/01/2021_13.html">தை 2021 மின்னிதழ்</a><br /><a href="https://yuvakandeepam.blogspot.com/2021/02/2021_13.html">மாசி 2021 மின்னிதழ்</a><br /><a href="https://yuvakandeepam.blogspot.com/2021/03/2021_15.html">பங்குனி 2021 மின்னிதழ்</a><br /><a href="https://yuvakandeepam.blogspot.com/2021/04/2021.html">சித்திரை 2021 மின்னிதழ்</a><br /><a href="https://yuvakandeepam.blogspot.com/2021/05/2021_15.html">வைகாசி 2021 மின்னிதழ்</a><br /><a href="https://yuvakandeepam.blogspot.com/2021/06/2021_16.html">ஆனி 2021 மின்னிதழ்</a><br /><a href="https://yuvakandeepam.blogspot.com/2021/07/2021_17.html">ஆடி 2021 மின்னிதழ்</a></div><a href="https://yuvakandeepam.blogspot.com/2021/08/2021_16.html">ஆவணி 2021 மின்னிதழ்</a><br /><a href="https://yuvakandeepam.blogspot.com/2021/09/2021_16.html">புரட்டாசி 2021 மின்னிதழ்</a><br /><a href="https://yuvakandeepam.blogspot.com/2021/10/2021_18.html">ஐப்பசி 2021 மின்னிதழ்</a><br /><a href="https://yuvakandeepam.blogspot.com/2021/11/2021-2.html">யு.கா. தீபாவளி மலர் 2021</a><br /><a href="https://yuvakandeepam.blogspot.com/2021/11/2021_01037200870.html">கார்த்திகை 2021 மின்னிதழ்</a><div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br /></div><div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br /></div><div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br /></div><div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br /></div><div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br /></div><div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br /></div><div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br /></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1134172536605043424.post-33560905507790500872017-12-06T06:41:00.000+05:302017-12-08T06:51:23.429+05:30நாம் கண்ட தெய்வம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<span style="color: blue; font-size: large;"><b>-இசைக்கவி ரமணன்</b></span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: blue; font-size: large; text-align: start;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5ndLN-0GhIl_MEywBaJO2NuQEmK0fgd4N5RpOACHmPf11nAL3TZ_eU9fg94WnK0t91jgCd7qHW6ibvrpFoKUSZiPPjHA9TdNos53ArKqIHrXKbybzWLRjZSle7zvxU12I6KHo6e2YiX0/s1600/Paramacharya+-Art.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="360" data-original-width="331" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5ndLN-0GhIl_MEywBaJO2NuQEmK0fgd4N5RpOACHmPf11nAL3TZ_eU9fg94WnK0t91jgCd7qHW6ibvrpFoKUSZiPPjHA9TdNos53ArKqIHrXKbybzWLRjZSle7zvxU12I6KHo6e2YiX0/s400/Paramacharya+-Art.jpg" width="367" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="font-size: 12.8px;">காஞ்சி பரமாச்சாரியார்</td></tr>
</tbody></table>
<h3 style="margin-bottom: 0.0001pt; text-align: center;">
<br /><span style="color: #990000;"><span lang="TA" style="font-family: "latha"; font-size: 10pt;">காஞ்சி மஹா பெரியவர் ஆராதனை- மார்கழி விசாகம் </span><span style="font-family: "times new roman" , serif; font-size: 10pt;">28 (12/01/2018)</span></span></h3>
<div>
<span style="color: #990000;"><span style="font-family: "times new roman" , serif; font-size: 10pt;"><br /></span></span></div>
<br /><br /><b>அறமொன்றே தன்கடனாய் அன்பொன்றே தன்னியல்பாய் <br /> பிறர்நலமே தினம்விழையும் பெரும்பண்பே தன்மூச்சாய்<br />இறையொன்றே தன்நினைப்பாய் இகத்தினிலே பரவிளக்காய்<br /> கறையகற்றிக் கலமேற்றிக் கரையேற்றும் அருட்கரமாய்<br /><br />நம்மிடையே தோன்றி நம்மோடே வாழ்ந்து<br /> நாளெல்லாம் இரவெல்லாம் நம்நலமே நாடி<br />இம்மையில் மறுமையை இறக்கி நமைக்காக்க<br /> எங்கிருந்தோ இங்குற்ற ஏழைப் பங்காளனை<br /><br />காஞ்சியில் சுடர்வீசும் கயிலைத் திருவிளக்கை<br />காலால் நடந்துவந்த கண்கண்ட கடவுளை<br />தீஞ்சுவைத் தமிழால் சித்தத்தில் வைத்தேற்றி<br />திசைவியக்கும் பெருமுனியின் திறம்பேச வந்துநின்றேன்!</b><br /><div>
<h2 style="text-align: center;">
<br /><div style="text-align: center;">
<span style="color: magenta;">***</span></div>
</h2>
<b>உலகம்</b> நலமாய் வாழ வேண்டும் என்றால், பாரதம் வாழ வேண்டும். பாரதம் வாழ வேண்டும் என்றால் அதன் தர்மமும் அது சார்ந்த மரபுகளும் பாதுகாக்கப்பட வேண்டும். தர்மத்திற்கு வேதமே வேர். அந்த வேரில் நீரூற்றி, பணமே பெரிதென அலையும் உலகில் எளிமையே ஏற்றமென வாழ்ந்துகாட்டி வழிசொல்ல வந்த அவதாரமூர்த்திதான் நாம் ‘மஹா பெரியவா’ என்று அன்புடன் அழைக்கும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.<br />
<br />
விழுப்புரம் அருகிலுள்ள நவாப்தோப்புக்கு அருகில் 1894 ஆம் ஆண்டு திருமதி மகாலட்சுமி- திரு. சுப்ரமண்ய சாஸ்திரிகள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் மகான். மூத்த மகனுக்கு கணபதி என்று பெயரிட்டிருந்ததால், இவருக்கு சுவாமிநாதன் என்று பெயர்சூட்டினர் பெற்றோர். அவர்களுடைய குலதெய்வத்தின் பெயரை ஏற்ற அந்தப் பிள்ளை மனிதகுலத்துக்கே தெய்வமாக விளங்கப்போகிறது என்பதை அப்போது யாரேனும் அறிந்திருப்பார்களோ?<br />
<br />
அமெரிக்கன் மிஷன் பள்ளியில் (திண்டிவனம்) படித்தார். கல்வியில் மிகச் சிறந்து விளங்கினார். அனைத்துப் பாடங்களிலும் முதன்மையாக நின்றார். பரிசுகளை அள்ளிக்கொண்டு சென்றார். ஏன், பைபிள் தேர்விலும் முதல்பரிசைத் தட்டிச்சென்றார். 12 வயதில் பள்ளியில் மாணவர்களே ஷேக்ஸ்பியரின் நாடகமொன்றை மேடையேறி நடித்தார்கள். அதில் இளவரசராக மிகச் சிறப்பாக நடித்து அதிலும் பரிசை வென்றார்.<br />
<br />
ஸ்ரீ காஞ்சி காமகோடி மடத்தின் 66-ஆவது பீடாதிபதியாய் இருந்தவர், சுவாமிநாதனின் வயதுக்கு மீறிய அறிவைக் கண்டு வியந்து அவரை 67 ஆவது பீடாதிபதியாக்க விரும்பினார். ஆனால், அவர் சித்தியடைந்தார், அவரைத் தொடர்ந்த ஸ்ரீ மகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகளும் ஏழே நாட்கள் பீடத்தை அலங்கரித்து, திடீரென சித்தியடைந்தார். இவர் சுவாமிநாதனின் ஒன்றுவிட்ட சகோதரர். ஆறுதல் சொல்லச் சென்ற வேளையில், முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் அடுத்த பீடாதிபதி சுவாமிநாதன் என்று தீர்மானமாகிறது! இது இறைவனின் சித்தமன்றோ!<br />
<br />
1907 ஆம் ஆண்டு, பிப்ரவரி 13 ஆம் நாள், சுவாமிநாதன் காஞ்சி மடத்தின் 68 ஆவது பீடாதிபதியாகி, ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்னும் திருநாமம் பெற்றார். அன்றிலிருந்து 87 ஆண்டுகள் இந்த நாடெங்கும் காலார நடந்து அவர் நம்முடைய தர்மம் தழைக்கவும் நாம் தர்மத்தை விட்டுவிடாமல் இருக்கவும் வேண்டிச்செய்த தொண்டை ஒரு சிறிய கட்டுரையில் சொல்வதற்கு வழியே இல்லை.<br />
<a name='more'></a><br />
<br />
ஒரு துறவி, அதிலும் ஒரு பீடாதிபதி என்றமுறையில் கடுமையான விதிகளைப் பின்பற்றினார். மற்றவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத விரதங்களைக் கடைப்பிடித்தார். தொடர்ந்து சில நாட்கள் முழுப்பட்டினி கிடந்தபோதும், தன்னுடைய தினசரி பூஜை, ஜெபம், தரிசனம், பிரசாதம் வழங்குதல், வந்தவர்களுடைய குறைகளைக் கேட்டு அறிவுரை அருளல், நிர்வாகம் எவையும் ஒரு துளியும் குறையாமல் நடந்துகொண்டார்.<br />
<br />
வேதங்கள், சாத்திரங்கள் அனைத்திலும் விற்பன்னராக விளங்கினார். மிக அரிய தத்துவங்களைப் பாமரர்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் விளக்கும் அருட்சொற்பொழிவாளராக இருந்தார். தனக்கு சமர்ப்பிக்கப்பட்ட பொருட்களையெல்லாம் அங்கேயே பிறருக்கு விநியோகித்தார். சிலர் அவரிடம் நேரில் குறைகளைச் சொல்லி நிவாரணம் பெற்றனர். ஆனால், பலர் வாய் திறக்காமலேயே நின்றபோதும், அவர்களுடைய துன்பத்தை அறிந்து அதைத் துடைத்த கருணைவள்ளல் அவர். எல்லா விவரங்களும் எப்போதும் நினைவிருக்கும் யோகியாகவும், எதிலும் பற்றிலாத ஞானியாகவும், எளியவர்க்கும் எளியவரான பக்தராகவும் சமுதாயத்தில் திறந்த புத்தகமாக வாழ்ந்த இந்தச் செம்மலை ‘நடமாடும் தெய்வம்’ என்று நாடே கொண்டாடியதில் வியப்பில்லை.<br />
<br />
நம்முடைய வரலாறு, பிற நாடுகளில் நம்முடைய பண்பாட்டின் தாக்கம், வடமொழி – தமிழ் இடையே உள்ள ஒற்றுமை, கல்வெட்டுகள், சிற்பம், தலவரலாறு போன்ற பலவற்றிலும் இடைவிடாது ஆராய்ச்சி செய்து பல அரிய உண்மைகளை நமக்குத் தெரிவித்தார்.<br />
<br />
இன்றைக்கும் வேதபாடசாலைகள் நடைபெற்று வேதம் முழங்குவதற்கும், கோயில்களில் திருப்பணிகள் நடப்பதற்கும் மஹா சுவாமிகளின் பெருமுயற்சியே காரணம்.<br />
<br />
எல்லோரும் செய்யக்கூடிய சில பணிகளை, செய்தே ஆக வேண்டிய பணிகள் என்று சொல்லி, நம்மைச் செய்யத் தூண்டினார். அவற்றுள் சில:<br />
<br />
· வீட்டுக்கு உழைப்பதுபோல நாட்டுக்கு உழைக்க வேண்டும்.<br />
<br />
· ஒவ்வொரு வீட்டிலும் தினமும் இறைவழிபாடு நடக்க வேண்டும். குழந்தைகளுக்கு சுலோகங்கள், தேவாரம், பாசுரங்கள் ஆகியவற்றைக் கற்றுத்தர வேண்டும்<br />
<br />
· உடலால் திருத்தொண்டு செய்ய வேண்டும். உடலால் செய்யும் திருப்பணி சித்தத்தைச் சுத்தமாக்கும்.<br />
<br />
· கோயில்களைப் பாதுகாக்கும் பொருட்டு, நம்மால் இயன்ற பொருளுதவியைச் செய்ய வேண்டும்.<br />
<br />
· பசுவை தெய்வமாக, தர்மமாக மதித்துப் போற்ற வேண்டும்<br />
<br />
· பிடியரிசித் திட்டம், வீணாய் விட்டெறியும் காய்கறித் தோலைத் திரட்டிக் கால்நடைகளுக்குத் தருவது, பசுவுக்குப் புல் கொடுப்பது, ஆதரவின்றி இறந்தவர்களுக்கு மரியாதையுடன் ஈமக்கடன் செய்வது, கோயிலில் விளக்கெரிய எண்ணெய் ஊற்றுவது- ஆகிய எளிய செயல்களை அனைவரும் செய்ய வேண்டும்.<br />
<br />
· தாய் தந்தையரை மதிக்க வேண்டும். அவர்களுடைய வயதான காலத்தில் அவர்கள் மனம் நோகும்படி நடந்துகொள்ளக் கூடாது.<br />
<br />
· நமக்குப் பணிவிடை செய்பவர்களிடம் அன்பாக இருக்க வேண்டும். கடுமையாக நடந்துகொள்ளக் கூடாது.<br />
<br />
· குலதெய்வ வழிபாடு, சுமங்கலிப் பிரார்த்தனை ஆகியவற்றை விடாமல் செய்து வந்தாலேயே பலவிதமான தடைகளும் நீங்கும்; சந்ததி தழைக்கும்.<br />
<br />
· அன்றாட அனுஷ்டானங்கள், அமாவாசை தர்ப்பணம், ஆண்டுதோறும் திவசம் இவற்றைத் தவறாமல் செய்துவர வேண்டும்.<br />
<br />
(இதுபோன்றஎத்தனையோ சிறு சிறு செயல்களை சமய – சமூக இயக்கங்களாக மாற்றிய பெருமை அவரையே சாரும்).<br />
<div>
<br />
ஏழையாகவே வாழ்ந்தார். அதேசமயம் ஏழைப் பங்காளனாக எண்ணற்றவர்களுக்கு அருள் செய்தார். ஒவ்வொரு நாளும் அவரைக் காண, பாமரர்கள், படித்தவர்கள், பசித்தவர்கள், பிரமுகர்கள், அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள் என்று பலதரப்பட்டவர்கள் வருவார்கள். அவர் ஒரேதரமான இறைவனாக இருந்து பலவிதமாக அருள்பாலித்தார்.<br />
<br />
பற்பல மொழிகளில் விற்பன்னராக விளங்கியவரை வெளிநாடுகளிலிருந்து பலர் வந்து சந்தித்த வண்ணமிருந்தனர். எல்லோர்க்கும் அவருடைய சந்நிதியில் சாந்தி கிடைத்தது; சஞ்சலம் தீர்ந்தது. இனிமேல் சரியாக வாழ்வோம் என்னும் நம்பிக்கை வந்தது.<br />
<span style="color: yellow;">.</span><br />
<b>காலைப் பணிந்தால் கயவரையும்<br /> காத்துத் திருத்தும் கருணைமனம்<br />பாலைப் பொழிவது போலிதமாய்ப்<br /> பக்குவம் சொல்லும் பரிவுமனம்</b></div>
<div>
<b><br />ஞாலத்தினிலே இருந்தபடி<br /> வானம் காட்டும் ஞானமனம்<br />தூலம் நுழைந்து வந்த குரு<br /> தூய பதங்களில் நமதுமனம்!</b><br /><blockquote class="tr_bq">
<b></b></blockquote>
’’இறைவன் ஒருவனே! இருப்பது அவனே! நம்முடைய கடமைகளைப் பற்றின்றிச் செய்து, மற்றவர்களுக்கு நம்மாலான உதவிகளை அன்புடன் செய்து, நமக்கென்று விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அனுசரித்து நடந்து இறைவனை இங்கேயே இப்போதே அடையலாம்,” என்னும் நம்பிக்கையை அவர் நாடெங்கும் ஊன்றியபடி நடந்து சென்றார்.<br />
<br />
பணம் தான் பெரிது என்று மனித சமுதாயம் நிழலைத் துரத்திக்கொண்டு வாழ்வின் பயனையே வீணாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், பெரிது என்பதைத் தனது வாழ்க்கையின் மூலமே நிரூபித்துக் காட்டினார்.<br />
<br />
அவருடைய வாசகங்கள் அவருடைய வாழ்க்கையின் விளக்கமாகவே இருந்தன. அவருடைய வாழ்க்கையும் அவருடைய வாசகங்களுக்கு விளக்கமாகவே திகழ்ந்தது.<br />
<br /><b>கேட்டவர்க்குக் கேட்டபடித் தருவார், கேளாக்<br /> கேள்விகளின் வேரறுத்துச் சிரிப்பார்; இங்கே<br />போட்டதெல்லாம் போட்டபடிப் போகும் வாழ்வில்<br /> போகாத துணையாகத் தொடர்வார்; நெஞ்சம்<br />வேட்டதெல்லாம் விழியாலே அறிவார்; நம்மை<br /> வீணாக்கும் ஆசையெல்லாம் வீழ்ந்து, நாமே<br />கேட்கின்ற கணம் வரையில் காத்திருப்பார்-<br /> கேட்ட கணம் கைவல்யம் தந்து செல்வார்!</b><br /><br />
ஒரு பசுத் தொழுவம், இடிந்த கட்டிடம், சிறு கோயில், மரத்தடி - இவையே அவர் நாடெங்கும் மேற்கொண்ட பயணங்களின்போது வசித்த இடங்கள்! ஓர் ஊரிலிருந்து கிளம்பும்போது அந்த இடத்தைச் சேர்ந்தவர்கள் கொடுத்ததை எல்லாம் ஏற்றுக்கொண்டவர்கள், தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பிச்செல்ல வேண்டும். அவற்றை அங்கேயே விட்டுவிட்டு வந்தவர்களே அவரைப் பின்பற்றி நடக்கும் தகுதி வாய்ந்தவர்கள் என்பதாக ஓர் ஒப்பற்ற கொள்கையை வைத்திருந்தார்.<br />
<br />
முழுக்க முழுக்க நம்மோடேயே இருந்து, நாம் அவரை எப்போதும் பார்க்கும்படியே வாழ்ந்து, அதேசமயம் தொடர்ந்து தவத்தில் ஆழ்ந்திருந்த அதிசயமான தபஸ்வி அவர்.<br />
<br />
அறிவியல் கோலோச்சும் காலகட்டத்தில் அறவியல் போதிக்க வந்தவர். தொழில்நுட்பமே அறிவு என்று கொண்டாடப்படும்வேளையில், தொண்டே செறிவு என்று நிலைநாட்ட வந்தவர்.<br />
<br />
நம்முடைய இன்றைய பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு, நமது பண்டைய பண்பிபாட்டில்தான் இருக்கிறது, அதற்கு ஆதாரம் வேதமே என்ற நம்பிக்கையில் ஆழ்ந்திருந்தவர்; அதை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டியவர்.<br />
<b><span style="color: yellow;">.</span></b></div>
<div>
<b>சந்தைக்கடையில் தவம் செய்து<br />சந்நிதியாக்கியவர்<br /><br />சாதனை என்பது பிறர்க்குதவல் என<br />சாதித்தருளியவர்<br /><br />மந்தையை நல்ல மக்களாக்கிட<br />மண்ணுக் கவர்வந்தார்<br /><br />மலராய்ச் சிரித்து மழையாய்ப் பொழிந்து<br />மலையாய் அவர் நின்றார்!</b></div>
<div>
<b><br /></b><span style="color: yellow;">.</span><br />
அவரைக் கண்டவர்களுக்கு, நாம் தெய்வத்தை நேரில் கண்டோம் என்னும் நெகிழ்ச்சி கலந்த நிறைவு இருக்கிறது. அவரைக் காணாதவர்களுக்கும் அவர் தங்களுடனேயே இருந்து வழிநடத்துகின்றார் என்னும் நம்பிக்கை இருக்கிறது. இரண்டுமே சத்தியம்தான், அவரைப் போலவே.<br />
<span style="color: yellow;">.</span><br />
<b>கால்முளைத்த தர்மமாய், கண்ணறிந்த தெய்வமாய்,</b><br />
<b>கலியுகத்து விந்தையாய், கருணைபொங்கும் சிந்தையாய்,<br /><span style="color: yellow;">.</span><br />சூல்விளைத்த சூழ்ச்சிகளைப் போக்கவந்த தொண்டனாய்,<br /> சொன்ன சொல்லைப் போல்நடந்து சுடர்ந்தொளிர்ந்த தீபமாய்,<br /><span style="color: #f1c232;">.</span></b></div>
<div>
<b>தோல்சுமந்து யாவருக்கும் தோள்கொடுக்கும் தோழனாய்,<br /> தொன்மை பாரதத்து மேன்மை தூண்டுகின்ற தேவனாய்,</b></div>
<div>
<b><span style="color: #f1c232;">.</span><br />கால்நடந்து நாடளந்த காஞ்சிமுனியின் பாதமே<br /> காட்டும் வழியில் நாம்நடந்து காலம் போற்ற வாழ்வமே!</b><br /><br />
<blockquote class="tr_bq">
<br />
குறிப்பு: </blockquote>
<blockquote class="tr_bq">
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4fO3ErkL3PWJqtspPh75w4g6c_FcoSDMwEnEMsb-6eUXKlOKkwk1S_3NglMD4YHjuSCvYH5Y3t9LxEWDLL85eqAC60wz9gizUBfvin-HFudXK2qHDFaPoa9Qdn2wzy5tDqhCa-0xCFOk/s1600/Isaikavi+Ramanan.jpeg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="400" data-original-width="400" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4fO3ErkL3PWJqtspPh75w4g6c_FcoSDMwEnEMsb-6eUXKlOKkwk1S_3NglMD4YHjuSCvYH5Y3t9LxEWDLL85eqAC60wz9gizUBfvin-HFudXK2qHDFaPoa9Qdn2wzy5tDqhCa-0xCFOk/s200/Isaikavi+Ramanan.jpeg" width="200" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="font-size: 12.8px;"><b style="font-size: medium; text-align: start;">இசைக்கவி ரமணன்</b></td></tr>
</tbody></table>
<br />
திரு. <b>இசைக்கவி ரமணன்</b>, ஆன்மிகச் சொற்பொழிவாளர்; எழுத்தாளர். தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலக் குழு உறுப்பினர்களுள் ஒருவர்.</blockquote>
<blockquote class="tr_bq">
இக்கட்டுரை <b>காண்டீபம்</b> (ஐப்பசி - 2017) இதழில் வெளியானது. </blockquote>
</div>
<div>
<br />
<br /></div>
</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1134172536605043424.post-37017901119762885582016-12-15T12:56:00.000+05:302016-12-15T12:56:00.360+05:30சோவுக்கு அஞ்சலி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b> <table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4LTEbVBCj8eZ6EMq2fDokVk9In75veAbRl18wDo_PgSMdWlWWnsEwCgYcgKXUJP4oiEv287kW2AXFwibqbW3idot7XKP8s5UUh4dub0TNJJASHxOXEwAQZb6NJVZdnS5m6BldncTqEkc/s1600/cho_.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="192" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4LTEbVBCj8eZ6EMq2fDokVk9In75veAbRl18wDo_PgSMdWlWWnsEwCgYcgKXUJP4oiEv287kW2AXFwibqbW3idot7XKP8s5UUh4dub0TNJJASHxOXEwAQZb6NJVZdnS5m6BldncTqEkc/s320/cho_.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><b><table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><b>சோ ராமசாமி</b> </td><td class="tr-caption" style="text-align: center;"> </td><td class="tr-caption" style="text-align: center;">(அக்டோபர் 5, 1934 - டிசம்பர் 7, 2016)</td></tr>
</tbody></table>
</b></td></tr>
</tbody></table>
</b><br />
<br />
<b>பிரபல</b> பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகரும், நடிகருமான ‘சோ’ ராமசாமி (Cho Ramaswamy) கடந்த டிச. 7-ம் தேதி காலை காலமானார். அவருக்கு வயது 82.<br /><br />கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சோ, சுவாசக் கோளாறு காரணமாக ஒரு சில முறை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.<br /><br />இந்த நிலையில், கடந்த வாரம் சுவாசப் பிரச்சினையினாலும், உணவு உட்கொள்ள முடியவில்லை என்பதாலும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.<br /><br />*சென்னை மயிலாப்பூரில் (1934) பிறந்தவர். பி.எஸ். உயர் நிலைப் பள்ளியில் பயின்றார். விவேகா னந்தா கல்லூரியில் பி.எஸ்சி. பட்டம் பெற்றார். இளம் வயதில் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆட்ட நுணுக்கங் கள் பற்றி நன்கு அறிந்திருந்தார். பத்திரிகைகளில் விளையாட்டு விமர்சனங்களும் எழுதியுள்ளார்.<br /><br />*சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டம் பெற்றார். உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பல நிறுவனங்களின் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.<br /><br />*20 வயதில் ஒரு நாடகம் பார்த்தபோது நடிப்பில் ஆர்வம் பிறந்தது. முதன்முதலாக ‘கல்யாணி’ என்ற நாடகத்தில் நடித்தார். ‘தேன்மொழியாள்’ என்ற நாடகத்தில் ‘சோ’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு, அதுவே இவரது பெயராக நிலைத்துவிட்டது.<br /><br />*நாடகங்கள் எழுதி, இயக்கி முக்கிய வேடத்தில் நடித்தார். இவரது ‘ஜட்ஜ்மென்ட் ரிசர்வ்டு’, ‘முகமது பின் துக்ளக்’, ‘சரஸ்வதி சபதம்’ உள்ளிட்ட நாடகங்கள் நாடு முழுவதும் 1,500 தடவைக்குமேல் மேடையேறின. ‘விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்’ என்ற நாடக நிறுவனத்தை 1954-ல் தொடங்கினார்.<br /><br />*திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக அடியெடுத்து வைத்தார். நாகேஷ், எம்ஜிஆர், ஜெயலலிதா, ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன், எம்.என்.நம்பியார் ஆகியோர் தனது நெருங்கிய நண்பர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ‘நாடகம் எனது மேடைக் கூச்சத்தைப் போக்கியது. என் எழுத்தாற்றலை பட்டை தீட்டியது. ஆண்டுக்கணக்கில் தொடரும் பல நட்புகளை எனக்கு பெற்றுத் தந்துள்ளது’ என்று பெருமையுடன் கூறுவார்.<br /><br />*‘துக்ளக்’ வார இதழை 1970-ம் ஆண்டும், ‘பிக்விக்’ என்ற ஆங்கில இதழை 1976-ம் ஆண்டும் தொடங்கினார். அனைத்து அரசியல் தலைவர்களுடன் நீண்டகால நட்புடன் இருந்தாலும், யாரைக் குறித்தும் விமர்சனம் செய்ய இவர் தயங்கியதே இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள், இல்லாதவர்கள், நண்பர்கள், நட்புறவு இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் துணிச்சலுடன் அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்.<br /><br />*தமிழக அரசியல், இந்திய அரசியல் மட்டுமல்லாமல் உலக அரசியல் ஞானமும் கொண்டவர். தமிழகம் மற்றும் இந்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த பல மாற்றங்களுக்குக் காரணமாக இருந்துள்ளார்.<br /><br />*20-க்கும் மேற்பட்ட நாடகங்கள், நாவல்கள் எழுதியுள்ளார். இவரது ‘இந்து மகா சமுத்திரம்’ நூல் 6 தொகுதிகளாக வெளிவந்தது. நாடகம், நாவல், அரசியல், கலை, சமூகம் என பல்வேறு துறைகள் குறித்து ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.<br /><br />*பல திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார். ‘யாருக் கும் வெட்கமில்லை’, ‘உண்மையே உன் விலை என்ன’ உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். 4 தொலைக்காட்சிப் படங்களுக்கு கதை எழுதி, இயக்கி, நடித்துள்ளார். பேச்சிலும் எழுத்திலும், நையாண்டியும், நகைச்சுவையும் இரண்டறக் கலந்திருப்பது இவரது தனிச்சிறப்பு.<br /><br />*மாநிலங்களவை உறுப்பினராக 1999-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். கோயங்கா விருது, நச்சிகேதஸ் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், நடிகர், அரசியல் விமர்சகர் என பன்முகப் பரிமாணம் கொண்டவர் ‘சோ’ ராமசாமி.<br />
<br />
<div style="text-align: right;">
<b>தகவல்: தி இந்து</b></div>
<br />
<div style="text-align: center;">
<span style="color: magenta;"><span style="font-size: x-large;">***</span></span></div>
<br />
<span style="color: blue;"><b>திரு. வண்ண நிலவனின் அஞ்சலி:</b></span><br />
<br />
<span style="color: purple;"><span style="font-size: large;">‘சோ’-கூர்மதியாளர்; ஆழ்ந்த மனிதாபிமானி</span></span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidirOyderRCUjWsqtiUnOKKP4B8zefCmwgyvF6G666GVUxq4TZyo4rkoyGvmtEH9XS0oYVo5fn7QDXzkptj7K4MmzTQPAQ6cTuVnLGxuYNA9LAU3yHWpYZDal5CZS3siUmDue2WZhWJSY/s1600/cho+2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="242" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidirOyderRCUjWsqtiUnOKKP4B8zefCmwgyvF6G666GVUxq4TZyo4rkoyGvmtEH9XS0oYVo5fn7QDXzkptj7K4MmzTQPAQ6cTuVnLGxuYNA9LAU3yHWpYZDal5CZS3siUmDue2WZhWJSY/s320/cho+2.jpg" width="320" /></a></div>
<br />
<b> சோ</b>வுடன் 1976-ம் ஆண்டு, ஜூன் மாதம் அவரது துக்ளக் பத்திரிகையில் பணிக்குச் சேர்ந்தேன். ஒரு பத்திரிகையாளனின் பணிகள் மற்றும் பொறுப்புகளை சோவுடன் பணியாற்றும்போதுதான் புரிந்து கொண்டேன்.<br /><br />துக்ளக்கில் 1990-ம் ஆண்டு வரை நிரந்தரப் பணியாளனாக இருந்தேன். அதற்குப் பிறகு விலகி, வெளியிலிருந்து துக்ளக் பத்திரி கைக்கு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன்.<br /><br />சோ, முப்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி உள்ளார். சினி மாவில் முன்னணி கலைஞர்களுடன் நடித்தவர். எழுத்தாளர், விமர்சகர், சட்ட நிபுணர், சினிமா இயக்குநர் என பலப் பரிமாணங்கள் கொண்டவர். அபாரமான நகைச்சுவைத்திறன் உள்ளவர். சோவின் நகைச்சுவை யாரையும் புண்படுத்தாது. எந்த அரசியல் தலைவர்களை அவர் கிண்டல் செய்தாலும், அவர்களே அதை ரசிப்பதாக அவரது எழுத்து இருக்கும்.<br /><br />துக்ளக்கில் வெளிவரும் கேள்வி- பதில் தொடங்கி ஒவ்வொரு கட்டு ரையையும் கண்ணில் விளக்கெண் ணெய் விட்டுப் பார்ப்பார்கள். அந்த மாதிரியான காலகட்டத்தில் அபாரமான துணிச்சலுடன் செயல் பட்டவராக சோ இருந்தார். ஏனெ னில் எந்த அரசியல்வாதியின் தய வையும் நாடாதவராக இருந்தார்.<br /><br /><b>மு.க.ஸ்டாலினுக்கு ஆறுதல்</b><br /><br />1970-களின் ஆரம்பத்தில் திராவிடர் கழக மாநாடு நடைபெற்றது. அதையொட்டி சென்ற ஊர்வலத் தில், இந்துக்கள் வணங்கும் ராமன், கிருஷ்ணன் போன்ற தெய்வங்களை கேலிச்சித்திரங்களாக வரைந்து எடுத்துச் சென்றனர். அந்த ஊர் வலத்தைப் பற்றிய செய்தியுடன் புகைப்படங்களையும் துக்ளக் பத்திரிகையில் சோ விமர்சித்து வெளியிட்டிருந்தார்.<br /><br />அப்போது கருணாநிதி தலைமையிலான அரசால், துக்ளக் பத்திரிகைப் பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே நேரத்தில் அவசரநிலைக் காலகட்டத்தில் கருணாநிதியின் மகன் ஸ்டாலின் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சித்திர வதைக்கு உள்ளாக்கப்பட்டபோது நேரடியாக போய் பார்த்து ஆறுதல் சொன்னவரும் அவர்தான். அந்த சமயத்தில் திமுக அரசு கலைக்கப்பட்டதையும் அவர் எதிர்த்தார்.<br /><br />கருணாநிதிக்கு பேச்சுரிமை யும் எழுத்துரிமையும் மறுக்கப் பட்டதால், அவரை இனி விமர்சிக்க மாட்டேன் என்ற நிலைப்பாட்டை எடுத்தார்.<br /><br />காமராஜர், மொரார்ஜி தேசாய், கருணாநிதி தொடங்கி ஜெயலலிதா வரை அவருக்கு நல்ல நட்பு இருந்தது. அவர்களது செயல்பாடு களில் ஏதாவது குறைபாடோ விமர்சனமோ இருந்தால் அதை காட்டமாக விமர்சிப்பார். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, அவர் தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு கொடுத்த ஒரே நேர்காணல் துக்ளக் பத்திரிகைக்குத்தான். மொரார்ஜி தேசாய், ராஜீவ் காந்தி, ஜெயவர்த் தனே என பல அரசியல் தலைவர் களின் விரிவான நேர்காணலைச் செய்தவர்.<br /><br />தனிப்பட்ட முறையில் அவருக்கு எவர் மீதும் காழ்ப்புணர்ச்சி இருந்த தில்லை. அரசியல் தலைவர்களின் குடும்ப விவகாரங்களையோ, தனிப் பட்ட விஷயங்களைப் பற்றியோ இதுவரை ஒரு செய்திகூட வெளி யிட்டதில்லை.<br /><br /><b>தடைகளைத் தகர்த்த படம்</b><br /><br />துக்ளக் வந்த காலகட்டத்தில் புலனாய்வு பத்திரிகைகள் இல்லை. சமூக அரசியல் இதழாக வெளி வந்த ஒரே இதழ் அப்போது துக்ளக் தான். கூவத்தைச் சீரமைக்கப் போவதாக திமுக அரசு அறிவித்த போது, அதுதொடர்பான ஆய்வுக் கட்டுரைகளையெல்லாம் முதல் முதலாக வெளியிட்ட இதழ் துக்ளக் தான்.<br /><br />சோ எழுதிய ‘முகமது பின் துக்ளக்’ நாடகத்தை சினிமாவாக எடுத்தனர். அந்தச் செய்தி தெரிந்த வுடன், திமுக ஆட்சியாளர்களால் படத்தில் வேலைசெய்த தொழில் நுட்பக் கலைஞர்கள் அச்சுறுத்தப் பட்டனர். அத்தனை இடைஞ்சல் களையும் மீறி படம் வெளியானது.<br /><br />இலங்கைத் தமிழர் பிரச்சினை உட்பட பல்வேறு அரசியல் விவ காரங்களில் அவர் சொன்ன வார்த் தைகள் தீர்க்கதரிசனமானவை.<br /><br />1977-ல் அவசரநிலைக் காலகட்டத்துக்குப் பிறகு ஜனதா ஆட்சி மத்தியில் வந்தபோது, அந்த ஆட்சி நிலைப்பட வேண்டுமென்று மிகவும் உழைத்தவர்களில் ஒருவர் சோ. ஆனால் சரண்சிங் போன்ற வர்களின் செயல்பாடுகளைப் பார்த்து சீக்கிரமே இந்த அரசு கவிழ்ந்துவிடும் என்பதைக் கணித்த வரும் அவர்தான்.<br /><br />கர்னாடக இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அருமையான புகைப்படக்கலைஞர் அவர். துக்ளக் கில் வெளிவரும் கார்ட்டூன் களுக்காக அவர் ஓவியர்களுக்கு கொடுக்கும் ஐடியாக்கள் வெவ் வேறு கோணத்தில் ஆச்சரியப் படும்படியாக இருக்கும்.<br /><br />அரசியல் தலைவர்கள் குறித்து எத்தனையோ விமர்சனங்களை வைத்திருந்தாலும் அவர்களுடன் தனிப்பட்ட நட்பையும் அக்கறை யையும் பேணி வந்தவர். எல்லா வற்றையும்விட அவர் பெரிய மனிதாபிமானி. அதனால் தான் அவரது விமர்சனங்களை யாரும் தவறாக எண்ணியதே இல்லை.<br />
<br />
<div style="text-align: center;">
<span style="color: blue;"><b><span style="font-size: x-large;">***</span></b></span></div>
<br />
<span style="color: blue;"><b> திரு. வ.ரங்காச்சாரியின் கட்டுரை:</b></span><br />
<span style="color: purple;"><span style="font-size: large;"> </span></span><br />
<span style="color: purple;"><span style="font-size: large;">தமிழ் இதழியலின் அங்கதக் குரல்! </span></span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNXK2QHQju2g1suaF_6ONvrA9m4Gx_VOf4nvP-KSExg8rAjdiqPjzm-F95G1UrSObnhiwWV-Hul6rWUgKUOtGB96QCK9E4MA5uECimfX-lv1PSswP1kpvVF_p5Qx0QgmSJ8S3VXTASjzY/s1600/cho+3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="212" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNXK2QHQju2g1suaF_6ONvrA9m4Gx_VOf4nvP-KSExg8rAjdiqPjzm-F95G1UrSObnhiwWV-Hul6rWUgKUOtGB96QCK9E4MA5uECimfX-lv1PSswP1kpvVF_p5Qx0QgmSJ8S3VXTASjzY/s320/cho+3.jpg" width="320" /></a></div>
<br />
<b>தமிழ்</b>ப் பத்திரிகையுலகில் ஒரு நபர் ராணுவம்போல ஆசிரியர்கள் செயல்பட்டு, நடத்தப்பட்ட பத்திரிகைகள் குறைவு. அதில் வெற்றிகரமான வெகுஜனப் பத்திரிகை 'துக்ளக்' மட்டுமே. அரசியல் என்றால் வெறும் அரசியல் மட்டுமே. நடுப்பக்கத்திலே, கடைசிப் பக்கத்திலே என்றுகூட சினிமா கவர்ச்சியைத் தொடாமல் பத்திரிகையைக் கொண்டுவர முடியும் என்று நிரூபித்தவர் சோ. லட்சக்கணக்கில் விற்பனையாகவில்லை என்றாலும், விசுவாசமான வாசகர்களை ஆயிரக்கணக்கில் தக்கவைத்துக் கொண்டது 'துக்ளக்'.<br />
<br />அங்கதச் சுவையைக் குழைத்து அவர் எழுதிய கட்டுரைகளை ஏற்காதவர்கள்கூட, நமட்டுச் சிரிப்போடு படித்துக் கடப்பதுண்டு. சோ இப்படித்தான் எழுதுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், அதை எப்படித் தர்க்கரீதியாகச் சொல்கிறார் என்று பார்ப்பதற்காகவே படிப்பார்கள். அவருடைய வாசகர்களில் சரிபாதிக்கும் மேல் அவர் கருத்தை ஏற்றவர்கள் அல்ல; என்றாலும் அந்நாட்களில் 'ஜெலுசில்', 'கேஸக்ஸ்', 'பைலக்ஸ்', 'டயானில்' மாத்திரைகளோடு பல பெரியவர்களுக்கு வாரந்தோறும் தேவைப்பட்டது 'துக்ளக்'.<br /><br />தேர்தல் நடப்பதற்கு முன்னால், சோவின் கணிப்பு என்ன என்று அறிய வாங்கிப் படிப்பார்கள். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தேர்தல் முடிவுகளுக்கு அவர் என்ன வியாக்கியானம் சொல்கிறார் என்று படிப்பார்கள். ஜெயேந்திரர் கைதா, ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கா, நரேந்திர மோடியை நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டமா சோ இதில் கூறும் அரசியல் வாதம் என்ன, சட்டப்பூர்வமான கணிப்பு என்ன என்று ஆர்வமாகப் படிப்பார்கள்.<br /><br />தமிழ்நாட்டில் தேசியக் கட்சிகள் வளர வேண்டும், அதிமுக தவிர மற்றவை செல்வாக் கிழக்க வேண்டும் என்று சோ மனதார விரும்பினார் என்றே தோன்றுகிறது. அதை அவர் மறைத்ததே இல்லை. காமராஜரின் பெருந்தன்மையை, நிர்வாகத் திறமையைக் காங்கிரஸ்காரர்களைவிட அதிகம் எழுதிக் குவித்தார். நேரு, காந்தி மீது மரியாதை கொண்டிருந்தார். ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய் மீது நன்மதிப்பை வாசகர்களிடையே ஏற்படுத்தினார். கம்யூனிஸ்ட் தலைவர்களைத் தனிப்பட்ட வகையில் பாராட்டிக்கொண்டே கம்யூனிஸக் கொள்கைகளைத் தாக்கி எழுதினார்.<br /><br />எப்பேர்ப்பட்ட தலைவரையும் கேலிசெய்ய 'துக்ளக்' தயங்கியதே இல்லை. தலையங்கம், கட்டுரைகளில் சொல்ல முடியாதவற்றைக் கேள்வி - பதிலில் அல்லது எச்சரிக்கையில் தெரிவித்துவிடுவார். 'துக்ளக்' விலை உயர்கிறது என்று அறிவிக்காமல், நல்ல தரத்துக்கேற்ப மதிப்பை அதிகம் பெறுகிறது என்று ஊசியைச் செருகுவார். 'துக்ளக்' வாசகர்கள் விழாவில் எல்லோரையும் கேள்வி கேட்க அனுமதிப்பார். ஆனால், தருமசங்கடமான கேள்விகள் என்றால் தொடங்கும்போதே, 'கடைசியில் பதில் சொல்கிறேன்' என்பார் அல்லது அந்தக் கேள்வி கேட்கும் வாசகரையே பகடித்து காலிசெய்துவிடுவார்.<br /><br />அவருடைய கேள்வி பதில் பகுதி 'துக்ளக்' பத்திரிகையில் பிரசித்தி பெற்றது. "சிக்கு மங்கு, சிக்கு மங்கு செச்ச பப்பா என்றால் என்ன?" என்று ஒரு கேள்வி. "சிக்கு என்ற அம்மாவுக்கும் மங்கு என்ற அப்பாவுக்கும் பிறந்த குழந்தை" என்று பதில் எழுதினார் சோ. "இந்த நேரத்தில் ராஜாஜி இருந்திருந்தால் என்ன கூறியிருப்பார்?" என்று ஒருவர் கேட்க, "குசே பசே தசே" என்று அர்த்தமற்ற கேள்விக்கு அர்த்தமற்ற பதிலைப் பொருத்தமாகத் தந்திருப்பார். "சுமை தாங்கி சாய்ந்தால் சுமை என்ன ஆகும்?" என்று ஒரு கேள்வி. "அதுவும் கொஞ்சம் சாயும்" என்பது பதில்.<br /><br />ஆளும்கட்சியின் வட்ட, மாவட்டச் செயலர்கள் அதிகார மையங்களாக அரசு நிர்வாகத்தை ஆட்டிப்படைத்தபோது அவர் களுடைய அரசியல், பொருளாதார அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் வட்டமும் மாவட்டமும் பேசிக் கொள்கிறார்போல குறுங்கட்டுரைகளை வெளி யிட்டார். "பணவீக்கத்தைப் போக்க என்ன செய்யலாம்?" என்று வட்டம் கேட்க, "அமிர் தாஞ்சனம் தடவலாம்" என்று பதில் தருவார் மாவட்டம். "ஏன் தவிட்டு ஒத்தடம் கொடுக்கக் கூடாதா?" என்று வட்டம் கேட்டதும், "நல்ல யோசனை தவிட்டு ஒத்தட வாரியம் தொடங்கலாம்" என்று பரபரப்பார் மாவட்டம்.<br /><br />வெறும் அரசியல் மட்டுமல்லாமல் உலக நடப்புகளையும் சுருக்கமான செய்திகளாகத் தந்தது 'துக்ளக்'. உலக சினிமாவில் ஏற்பட்டுவரும் மாற்றங்களையோ நல்ல திரைப்படங்கள் எது என்றோ அடையாளம் காட்டாவிட்டாலும் தமிழ்த் திரைப்படங்களை 'போஸ்ட்மார்ட்டம்' என்ற தலைப்பில் அலசினார். கூடவே இயக்குநரின் பதிலையும் வாங்கிப்போட்டார். ஒரு இயக்குநர் அவருடைய விமர்சனத்துக்குப் பதிலாக, "உங்களுடைய போஸ்ட்மார்ட்டம் என்ற பிணப் பரிசோதனைக்கு நான் பதில் தர விரும்பவில்லை" என்று தன்னுடைய ஆங்கிலப் புலமையை அப்பட்டமாக வெளிப்படுத்த, அதையும் ரசித்து அடுத்த வாரம் செய்தியாக்கினார் சோ.<br /><br />வழக்கமான நகைச்சுவை போதாது என்று கருதியபோது சிறப்பு நிகழ்வாக 'ஒண்ணரை பக்க நாளேடு, ஓசியில் படிக்க வேண்டிய ஒரே பத்திரிகை டூப் … கப்சா…' என்று போட்டுக் கலக்கினார். 'ஆனந்த விகடன்' அலுவலகத்திலிருந்துதான் 'துக்ளக்' வெளிவந்தது என்றாலும் 'ஆனந்த விகட'னையே கேலிசெய்து ஒண்ணரைப் பக்க நாளேட்டை வெளியிட்டு கலாய்த்தார். 'கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்திலிருந்து சம்ஸ்கிருத சுலோகங்கள்' என்று தொடர்ந்து வெளியிட்டுவிட்டு, கடைசியில், "அதெல்லாம் உண்மையல்ல" என்ற குண்டு போட்டார். எழுதுவது யார் என்று தெரிவிக்காமல் உலக நடப்புகளை எழுத வைத்து, அவற்றை எழுதியது ஜெயலலிதா என்று பிறகு அறிவித்தார். விளையாட்டாக பத்திரிகையைத் தொடங்கியிருந்தாலும் எந்தவிதச் சமரசங்களையும் செய்துகொள்ளாமல் அதைத் தொடர்ந்ததுடன் மாதம் இரு முறை என்பதை வாராந்தரியாக மாற்றினார். 'பிக்விக் பேப்பர்ஸ்' என்ற ஆங்கில சஞ்சிகையைத் தொடங்கினாலும் அது கையைக் கடிக்கும் என்று தெரிந்ததுடன் நிறுத்திக்கொண்டார்.<br /><br />தன்னுடைய வலிமை, வலிமையின்மை இரண்டையும் உணர்ந்து செயல்பட்டதும் அவருடைய வெற்றிக்கு ஒரு காரணம். அதிகம் அலட்டிக்கொள்ளாத வாழ்க்கைபோலத் தோன்றினாலும், அலட்டிக்கொள்ளாத மனம் அது என்று அவருடைய பணிகளைச் செய்யும் விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்களுக்குப் புரியும். தமிழ்ப் பத்திரிகையுலகில் மிகுந்த செல்வாக்கு மிக்க குரல் அது. சம்பிரதாயமான சொற் களாக இருக்கலாம்; உண்மையாகவே சோவின் குரல் யாராலும் பூர்த்திசெய்ய இயலாதது!<br />
<br />
<div style="text-align: center;">
<span style="color: magenta;"><span style="font-size: x-large;">***</span></span></div>
<br />
<span style="color: blue;"><b>திரு. அரவிந்தனின் கட்டுரை:</b></span><br />
<span style="color: purple;"><span style="font-size: large;"><br />சோ என்னும் ஒற்றைச் சொல்லின் இரட்டை அடையாளம்!</span></span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<b><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQo-7Jek9R1KGPzF-qHg8wwBL7HN-nsqkRqFN1sgviZNMqlqGHi55seRRJd2wiFa8PCosjxqRZCMrJM88LvdXj9UVCKBjFej-NIX7JxcndtaVlHXo-wEhoXLAIYA0TR2krWaSRxlQ9f0g/s1600/cho+4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="266" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQo-7Jek9R1KGPzF-qHg8wwBL7HN-nsqkRqFN1sgviZNMqlqGHi55seRRJd2wiFa8PCosjxqRZCMrJM88LvdXj9UVCKBjFej-NIX7JxcndtaVlHXo-wEhoXLAIYA0TR2krWaSRxlQ9f0g/s320/cho+4.jpg" width="320" /></a></b></div>
<br />
<br />
<b> சோ </b>'வந்தே மாதரம்' என்ற தொடர்கதையை 'துக்ளக்'கில் எழுதிவந்தார். ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் அதில் 'கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்திலிருந்து' என்று குறிப்பிடப்பட்டு ஒரு மேற்கோள் சம்ஸ்கிருதத்தில் தரப்பட்டு, அதன் தமிழாக்கமும் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த வாரத்தின் கதையோட்டத்தில் இந்த மேற்கோள் தகுந்த இடத்தில் எடுத்தாளப்பட்டிருக்கும். வாசகர்களைப் பெரிதும் கவர்ந்த இந்த மேற்கோள்களை எழுதியவர் சாணக்கியர் அல்ல என்பதையும் அவர் பெயரில் தானே எழுதியதையும் தொடர் முடிந்த பிறகு தெரிவித்து, வாசகர்களை அசடுகளாக்கி அழகு பார்த்தார் சோ.<br /><br />வேடிக்கையைத் தாண்டி, இந்தச் சம்பவத்தில் முக்கியமான ஒரு செய்தி உண்டு. சாணக்கியர், அரிஸ்டாட்டில், காந்தி என்று பிரபலமானவர்களின் பெயர்களைப் பார்க்கும்போது, மக்கள் அவற்றைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்கிறார்கள். அதே சமயம், ஒரு சாதாரண மனிதர் எவ்வளவுதான் முக்கியமான விஷயங்களைச் சொன்னாலும் மக்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்பதை இதன் மூலம் அம்பலப்படுத்தினார் சோ.<br /><br /><b>தனித்துவமான சாதனைகள்</b><br /><br />இப்படிக் கூர்மையும் விளையாட்டுத் தனமும் கொண்ட தண்டவாளங்களின் மீது தனது கருத்துலக இயக்கம் என்னும் வாகனத்தை வெற்றிகரமாக ஓட்டியவர் சோ. அவருடைய நாடகங்கள், திரைப்படங்கள், 'துக்ளக்' என எதுவும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த இரட்டை அடையாளமே அவரது ஆளுமை என்றுகூடச் சொல்லலாம்.<br /><br />விளையாட்டுத்தனமான சாகசமாகத் தொடங்கப்பட்ட 'துக்ளக்' பத்திரிகையின் மூலம் சோ செய்த சாதனைகள் தனித்து வமானவை. அவரது அரசியல் விமர்சனங்கள் எள்ளலும் கூர்மையும் நிறைந்தவை. அரசியல்வாதிகளின் விவரங்கெட்ட தன்மை யையும் நேர்மையின்மையையும் அவரைப் போல அம்பலப்படுத்தியவர் யாருமில்லை. அதிகாரத்தில் இருப்பவர்களைப் பகைத்துக்கொள்வது பற்றிய கவலையே அவருக்கு இருந்ததில்லை. நெருக்கடிநிலைக் காலத்தில் 'துக்ளக்' செயல்பட்ட விதம் தமிழ் இதழியலில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது.<br /><br /><b>கருத்துலகின் மையம்</b><br /><br />கருத்தளவில் மட்டுமல்லாது, இதழியலின் பிற பரிமாணங்களிலும் சோ கவனம் செலுத்தினார். நேரடியாகக் கள ஆய்வுசெய்து நிகழ்வுகளை அலசும் கட்டுரைகளை வெளியிட்டுவந்தார். கி.வீரமணி, ராஜீவ் காந்தி உள்ளிட்ட ஆளுமைகளுடனான விரிவான நேர்காணல்கள் ஒரு காலத்திய 'துக்ளக்' இதழின் சிறப்பம்சங்களில் ஒன்று. கறாரான திரை விமர்சனங்களை வெளியிட்டு, அந்த விமர்சனங்களுக்கு இயக்குநர்களின் பதில்களையும் கேட்டு வாங்கிப் பிரசுரித்தார். அதன் மூலம் ஆரோக்கியமான விவாதம் உருவாக வழி வகுத்தார். தீவிர இலக்கியப் பரப்பைச் சேர்ந்த ஆளுமைகளுக்கும் அவருடைய பத்திரிகையில் இடம் இருந்தது. அரசியல் பத்திரிகையாகவே அறியப்பட்டாலும் உடல் நலம், சட்டச் சிக்கல்கள் குறித்த கட்டுரைகளுக்கும் அதில் இடமுண்டு.<br /><br />வெகுஜனச் சிந்தனைகளுக்கு முரணாக இருப்பதுபோலத் தோன்றினாலும் மைய நீரோட்டச் சிந்தனைகளை அடியொற்றியே சோவின் கருத்துலகம் அமைந்திருந்தது. பொது வாழ்வில் நேர்மை, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, சட்டத்தின் ஆட்சி, தார்மிக உணர்வு ஆகியவையே அவரது கருத்துலகின் மையம். அவருடைய கருத்துக்களின் அடிப்படையை அனைவரும் அறிந்திருந்தாலும், அதை முன்வைக்க அவர் பயன்படுத்தும் வாதங்கள், ஆதாரங்கள் ஆகியவை வாசகர்களிடத்தில் அவருக்குத் தனி மதிப்பை ஏற்படுத்தித் தந்தன.<br /><br /><b>விமர்சனப் பார்வை</b><br /><br />விமர்சனங்களில் சமரசமற்ற கடுமையும் யாருக்கும் சலுகை அளிக்காத போக்கும் அவரது கருத்துக்களுக்கு நம்பகத்தன்மையை அளித்தன. தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிப்பதை முற்றாகத் தவிர்த்துவந்தார். பலருடன் நட்புப் பேணிவந்த அவர், விமர்சனம் என்று வரும்போது நட்பைக் குறுக்கே வர அனுமதிக்க மாட்டார். அதேசமயம், நட்பையும் அவர் இழந்ததாகத் தெரியவில்லை. அவரால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியுடனான நட்பை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.<br /><br />சோ மரபுவாதி. தேசியவாதி. இந்திய மரபைப் போற்றியவர். அவரது சிந்தனைகள் என்று புதிதாக எதையும் சொல்லிவிட முடியாது. தொடக்கத்தில் மனித உரிமைக் குழுவில் தீவிரமாகச் செயல்பட்டுவந்த சோ, பின்னாளில் காவல் நிலைய மரணங்கள், போலி மோதல் கொலைகள், ராணுவ, காவல் துறைகளின் அத்துமீறல்கள் ஆகிய பிரச்சினைகளில் மனித உரிமைகளின் பக்கம் நிற்காமல், அமைப்பின் சார்பில் நின்று வாதிடு பவராக மாறினார். அவரது மைய நீரோட்டச் சிந்தனை, நடுத்தர வர்க்கச் சார்பு ஆகியவற் றின் பின்னணியில் வைத்துத்தான் இந்தப் போக்கினைப் புரிந்துகொள்ள முடியும். இந்திய மரபைப் போற்றிய அவர் அதன் ஞான மரபை முன்னிறுத்தாமல், அதன் சமூகக் கட்டமைப்பு, சமயச் சடங்குகள், வாழ்வியல் அணுகுமுறை முதலானவற்றுக்கே அதிக முக்கியத்துவம் அளித்தார்.<br /><br /><b>பாதை மாறிய பார்வை</b><br /><br />தொண்ணூறுகளிலும் அதற்குப் பின்னும் அவரது விமர்சனக் கத்தியின் கூர்மை மழுங்கத் தொடங்கியது. விமர்சனங்களில் சார்பு நிலைகள் முளைத்துவிட்டன. பொது வாழ்வில் நேர்மை என்பதற்கு அதீத முக்கியத்துவம் கொடுத்த அவர், மைய நீரோட்ட தேசியவாதத்தை அந்த இடத்தில் வைத்து ஆராதிக்கத் தொடங்கினார். மாநில உணர்வுகள், உரிமைகள் ஆகியவற்றின் நியாயங்களை அவர் பேசவில்லை. விளிம்பு நிலைகளின் நியாயங்களைப் பேசவில்லை. திராவிட இயக்கத்தின் நாத்திகவாதத்தோடு, அவ்வியக்கம் முன்னிறுத்திய மாநில உரிமைக் குரலையும் புறமொதுக்கினார். மார்க்ஸியச் சித்தாந்தங்களைக் கொள்கை அளவில் எதிர்த்த அவர், மார்க்ஸிய இயக்கங்களின் மக்கள் சார்பு அரசியலுக்கான மரியாதையைக் கொடுக்கத் தவறினார். ஒரு கட்டத்துக்குப் பிறகு, தேசியவாதத்தை ஒரு மதமாகவே முன்னிறுத்தினார், பிற விழுமியங்களில் சமரசம் செய்துகொள்ளவும் தலைப்பட்டார். கறாரான அரசியல் விமர்சக ராக இந்திய அளவில் புகழ்பெற்ற அவர், ஒரு கட்டத்தில் அரசியல் பேரங்களை நடத்தித் தருவதில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.<br /><br />எனினும் தமிழ் இதழியலில் சோ ஆற்றிய பங்கு மிகவும் முக்கியமானது. பொழுதுபோக் கையே முதன்மைப்படுத்திய வெகுஜன இதழியலில் மாற்றுப் போக்குகளுக்கும் இடமுண்டு என்பதை நிரூபித்தவர் சோ. எம்.ஜி.ஆர்., கருணாநிதி முதலான சில ஆளுமைகளைப் பற்றி நடுத்தர வர்க்கத்தின் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் சில பிம்பங்களைக் கட்டமைத்ததில் அவரது எழுத்துகளுக்கு முக்கியமான பங்கு உண்டு. லட்சங்களில் விற்கும் பல இதழ் களுக்குச் சாத்தியமாகாத சாதனை இது. புதிய சிந்தனைகளை முன்வைத்ததன் மூலம் அவர் இதைச் சாதிக்கவில்லை. நடுத்தர வர்க்கத்தினரின் ஆழ்மன அபிலாஷைகளையும் கருத்துக்களையும் அழுத்தமான மொழியில் தர்க்கபூர்வமாக முன்வைத்ததன் மூலம் சாதித்தார். ஒரு தலைமுறையின் அறிவார்த்த அடையாளமாக 'துக்ளக்' பத்திரிகையை வளர்த்தெடுத்தார். தன் கருத்துக்களுக்கு அழுத்தம் தந்த அதே வேளையில், பல்வேறு விதங்களில் இதழியலின் வரையறைகளை விரிவுபடுத்தினார். விமர்சனங்களைத் தாண்டி அவரை வரலாற்றில் நிலைபெறச் செய்யும் அம்சமாக இது இருக்கும்!<br />
<div style="text-align: right;">
<span style="color: magenta;"><span style="font-size: x-large;"><br /></span></span></div>
<div style="text-align: center;">
<span style="color: magenta;"><span style="font-size: x-large;">***</span></span></div>
<span style="color: blue;"><b> திரு. மணாவின் கட்டுரை:</b></span><br />
<br />
<span style="color: purple;"><span style="font-size: large;"> சோ என்கிற மனிதர்</span></span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjdJQCTGnJZwKSbLviVSHXPwwRNJVF8V3Q5TCEaAS-YCmK3rI5XSuxRX2BtZi3zN7bWHKudGJ5Vn2ibmC2zwrYBxq7x5VdXBywqyIk9AZFru202r4Jx3sZzgSr-6EUnqij9CMVrLZ4wRw/s1600/cho+5.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="192" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjdJQCTGnJZwKSbLviVSHXPwwRNJVF8V3Q5TCEaAS-YCmK3rI5XSuxRX2BtZi3zN7bWHKudGJ5Vn2ibmC2zwrYBxq7x5VdXBywqyIk9AZFru202r4Jx3sZzgSr-6EUnqij9CMVrLZ4wRw/s320/cho+5.jpg" width="320" /></a></div>
<br />
"எந்த ஒரு மனிதரையும் நான் பார்த்ததும் நம்பிவிட மாட்டேன். அவரைத் தொடர்ந்து கவனிப்பேன். எந்தெந்தச் சமயங்களில் எப்படி நடந்துகொண்டிருக்கிறார் என்பதையெல்லாம் பார்த்து, அவரைப் பற்றி நான் ஒரு முடிவுக்கு வருவேன். அப்படியொரு முடிவுக்கு நான் வர ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடங்களோகூட ஆகலாம். ஆனால், அவரைப் பற்றி நானே சொந்த அனுபவத்தின் அடிப்படையில் ஒரு முடிவுக்கு வந்த பிறகு, அதை மாற்றிக்கொள்ள மாட்டேன். யார் வந்து அவரைப் பற்றி என்ன சொன்னாலும், சட்டென்று என்னுடைய முடிவை மாற்றிக்கொள்ள மாட்டேன். பெரும்பாலும் என்னுடைய இந்தக் கணிப்பு பொய்த்ததில்லை" - இது அவருடைய நண்பர்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது துக்ளக் ஆசிரியரான சோ சொன்னவை.<br /><br />அவருடைய உலகத்தில் நண்பர்களுக்குத் தனியிடம் இருப்பதைப் பார்க்க முடியும். சென்னை விவேகானந்தா கல்லூரியில் படித்தபோது, அவருக்குப் பழக்கமான நண்பர்கள் அவருடைய இறுதிக்காலம் வரை அதே நெருக்கம் மாறாமல் அவரைத் தொடர்ந்து வந்திருக்கிறார்கள். நண்பர்கள் ஒன்றுசேர்ந்தால் போதும் கேலி, கிண்டல் ரகளைதான்!<br /><br /><b>நண்பர்களுக்கு முதலிடம்</b><br /><br />துக்ளக் அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த போது, அதில் பப்ளிஷராக இருந்தவர் சோவுக்கு மிகவும் நெருங்கிய நண்பரான ரெங்காச்சாரி. ஒளிவு மறைவில்லாத அன்பான மனிதர்.<br /><br />ஒருமுறை துக்ளக் ஆண்டு விழா சென்னையில் நடந்தபோது, அதன் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தவர் சோவுக்கு நெருக்கமானவரான பிரதமர் சந்திரசேகர். மேடையில் விழா முடிந்து தேசியகீதம் இசைக்கப்பட்ட பிறகு, சந்திரசேகர் மேடையைவிட்டு இறங்கிக்கொண்டிருந்த சமயத்தில், உரத்த குரலில் சத்தம் போட்டுக் கூப்பிட்டார் ரெங்காச்சாரி.<br /><br />"டேய் சோ.. இங்கே பார்றா.."<br /><br />அவர் கவனிக்காததால் திரும்பவும் கூடுதல் சத்தத்துடன் கத்தினார்.<br /><br />அருகில் இருந்த நான் ரெங்காச்சாரியிடம் சொன்னேன்.. "என்னதான் பழக்கமாக இருந்தாலும், பொது இடத்தில் 'வாடா.. போடா' என்று கூப்பிடுவது நன்றாக இருக்கிறதா? அதிலும் சத்தம் போட்டு இப்படிக் கத்துகிறீர்களே?"<br /><br />கேட்டவுடன் 'சுருக்'கென்று கோபம் வந்துவிட்டது ரெங்காச்சாரிக்கு. மடமடவென்று என்னுடைய கையைப் பிடித்து மேடைக்கு அழைத்துப்போனார். அதற்குள் மேடையைவிட்டுக் கீழே இறங்கிச் சென்றிருந்தார் பிரதமர் சந்திரசேகர்.<br /><br />போனவுடன் "நான் உன்னை 'வாடா'ன்னு கூப்பிடுறதை, அதிலும் பொது இடத்தில் கூப்பிடுறதை 'அப்ஜெக்ட்' பண்றதை என்னால் தாங்க முடியலை. உன்னை எந்த இடத்திலும் அப்படிக் கூப்பிட எனக்கு உரிமை இருக்கா.. இல்லையா? நீ சொல்லு" என்று சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு ரெங்காச்சாரி சொன்னதும்... வழக்கமான குபீர் சிரிப்புடன் என்னைப் பார்த்துச் சொன்னார் சோ.<br /><br />"இவன்கிட்ட போய் ஏன் அப்படிக் கேட்டீங்க? இவனால் தாங்கிக்க முடியுமா? இங்கே மட்டுமில்லை.. எந்த இடத்தில், எங்கே இருந்தாலும் என்னோட ஃப்ரெண்ட்ஸ் 'வாடா.. போடா'ன்னு கூப்பிடுறதுக்கு அவங்களுக்கு முழு உரிமை இருக்கு. என்னப்பா.. போதுமா? இன்னும் ஏதாவது சொல்லணுமா?" என்று சொன்னபடி உதட்டைச் சுழித்ததும் ரெங்காச்சாரி முகத்தில் அப்படியொரு ஆனந்தம்!<br /><br /><b>சோவின் குரு</b><br /><br />"உங்க குருன்னு யாரையாவது சொல்வீங்களா?"<br /><br />"இருக்கான். அவன் பெயர் நானி. பெங்களூர்ல இருக் கான். அவனோட முழுப் பெயர் நாராயணசாமி" - இப்படி சோவால் குருபக்தியுடன் வர்ணிக்கப்பட்ட நானியை.. குமுதம் இதழில் நான் தொகுத்து எழுதிவந்த 'ஒசாமஅசா' தொடருக்காக பெங்களூரிலிருந்து வரவழைத்திருந்தார் சோ.<br /><br />நானியைப் பார்த்ததும் ஏக சந்தோஷம் அவருக்கு. மருத்துவமனையில் இருந்து திரும்பிய நிலையிலும், குஷியாகத் தானே காரை ஓட்டிக்கொண்டு வந்தார் சோ. பின் ஸீட்டில் நானியும் நானும். கடலோரத்தில் இருக்கிற வீட்டுக்கு நகர்ந்தது கார்.<br /><br />"டேய்.. நிஜமாவா சொல்றே. உன்னைப் பற்றி என் மனசில் இருக்கிறதெல்லாம் சொல்லிறவா? இவர் வேற டேப்ரெக்கார்டைக் கையில் வெச்சிருக்கார். அப்புறம் எல்லாம் ரெக்கார்டு ஆயிடும். சொல்லிறவா?" என்றார் நானி.<br /><br />அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த சில குறியீட்டுச் சொற்களைச் சொல்லி, "எல்லாத்தையும் சொல்லிறவா?" என்று பீடிகையும் போட்டார்.<br /><br />"நீ என்ன சொல்வேன்னு எனக்குத் தெரியாதா? எல்லாத்தையும் சொல்லிட்டு வா. இவர் ரெக்கார்டு பண்ணிப்பார். அப்புறம் அதை எடிட் பண்ணிக்கலாம். சரி.. ஆரம்பிப்பா" என்று சிரிப்பு பொங்க காரை ஓட்டியபடி சொன்னார் சோ.<br /><br /><b>தேன் பாய்ந்த அனுபவம்</b><br /><br />சோவின் குசும்புகள், சேட்டைகள் எல்லாவற்றையும் அவிழ்த்துவிட்டு, "இவன் அப்படி.. இப்படி" என்று அமர்க்களமாகப் போட்டுக் காய்ச்ச, காதில் தேன் பாய்ந்த அனுபவத்துடன் ஏகானந்தமாக அதை ரசித்துக்கொண்டே வந்தார் சோ.<br /><br />அப்புறம் அதை ஒருவழியாக 'எடிட்' பண்ணி, அந்த அனுபவங்கள் இரண்டு வாரங்கள் வெளியானது.<br /><br />இப்படிப்பட்ட நண்பர்கள் கிடைத்தது அவருக்குப் பெரும் பாக்கியம்! கிண்டலும், குத்தலும் அவருக்கு இயல்பின் ஒரு பகுதியைப் போலவே மாறிவிட்டிருந்தன. அலுவலகத்தில் வேலை பார்க்கிறவர்களிடமும் அது அடிக்கடி பீறிட்டபடி இருக்கும்.<br /><br /><b>இலவச இணைப்பும் சோவும்</b><br /><br />ஒரு சமயம், துக்ளக் ஆபீஸில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர், ஒரு வாரத் தாடியுடன் சோகமாக உட்கார்ந்திருந்தார். மதிய நேரத்தில் அவருக்குச் சின்ன பேப்பர். அதனுடன் ஓர் இலவச இணைப்பு.<br /><br />இணைப்பைப் பிரித்துப் பார்த்தால், பாதியாக ஒடிக்கப்பட்ட துண்டு பிளேடு. அந்த ஊழியர் பரபரப்புடன் பேப்பரைப் பிரித்தபோது, சிறு கோடுகள் ஒடிந்த மாதிரியான கையெழுத்தில் இப்படி எழுதியிருந்தார் சோ.<br /><br />'முகம் பார்க்கச் சகிக்கவில்லை. இத்துடன் இணைக்கப்பட்டிருக்கிற பிளேடால் நாளைக்கு மழுங்கச் சிரைத்துக்கொண்டு வரவும்.'<br /><br />ஜூவுக்குப் போனா விதவிதமாப் பார்க்கலாம்<br /><br />துக்ளக் ஆபீஸில் ஒரு சமயம் பத்திரிகை வேலைகளில் சோ மும்முரமாக இருந்த சமயம் பார்த்து, யாரோ ஒருவர் வெளியூரிலிருந்து வந்திருக்கிறார்.<br /><br />எழுதிக்கொண்டிருந்த சோ நிமிர்ந்து பார்த்திருக்கிறார். உட்காரச் சொல்லியிருக்கிறார்.<br /><br />"என்ன விஷயம்?"<br /><br />"மெட்ராஸுக்கு வேலையா வந்தேன். அப்படியே உங்களைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்" என்று இழுத்ததும்… சோவிடமிருந்து சுள்ளென்று பதில் வந்திருக்கிறது.<br /><br />"மெட்ராஸுக்கு வந்து என்னைப் பார்க்கிறதைவிட இங்கே உள்ள ஜூவுக்குப் போனீங்கன்னா விதவிதமாகப் பார்க்கலாம். உங்களுக்கும் நல்லாப் பொழுதுபோகும். சரி.. நான் என் வேலையைப் பார்க்கட்டுமா?"<br /><br />வந்தவருக்கு முகம் எந்தக் கோணத்தில் போயிருக்கும்?<br /><br /><b>எல்லாம் ஒரே கப்சா</b><br /><br />துக்ளக்கில் வெளியான என்னுடைய கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட நான் முடிவெடுத்ததும் சோவிடம் சொன்னேன்.<br /><br />"அதுக்கென்று தனியாக விழா நடத்திச் செலவழிக்காதீங்க. பேசாம துக்ளக் ஆண்டு விழாவிலேயே அதை வெளியிட லாம். நம்ம நாராயணன் சார் (பரந்தாமன் என்கிற பெயரில் நிறையக் கட்டுரைகள் எழுதியிருக்கிற இவர், கலைவாணருக்கு உதவியாளராகவும் இருந்தவர்) முதல் காப்பியை வாங்கிக்கட்டும்" - இப்படிச் சொல்லிவிட்டு, அந்தப் புத்தகத்துக்கு ஒரு முன்னுரையையும் கைப்பட எழுதித் தந்தார். முன்னுரையில் கட்டுரைகளுக்குப் பின்னால் இருக்கிற உழைப்பைப் பாராட்டியிருந்தவர், அந்தக் காகிதத்தை மடித்து மேலே சிறு பேப்பரை பேஸ்ட் பண்ணியிருந்தார்.<br /><br />அதில் இப்படி எழுதியிருந்தார், 'உள்ளே எழுதியிருப்பதெல்லாம் ஒரே கப்சா.'<br /><br /><b>சோ பாடிய பாடல்</b><br /><br />சீரியஸாக அவர் இருந்ததில்லையா என்கிற கேள்வி இந்த நேரத்தில் எழலாம். இருந்தாலும், அவர் அந்த நிலையிலேயே தொடர்ந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.<br /><br />துக்ளக்குக்கு ஒரு கட்டுரையை மதுரையிலிருந்து கூரியரில் அனுப்பியிருந்தேன். அது கிடைக்கச் சற்றுத் தாமதமாகியிருக்கிறது. போனில் அழைத்தவர் வழக்கத்தைவிட உரத்த குரலில் கத்தியபோது மனதுக்கு நெருடலாக இருந்தது.<br /><br />மறுநாள் காலை நேரம். வீட்டுத் தொலைபேசி அடித்தது. எடுத்தால் கர்னாடக இசையில் ஒரு பாடல். சோ சார்தான் பாடிக்கொண்டிருந்தார்.<br /><br />கொஞ்சம் கேட்டதும் பாடல் நின்றது.<br /><br />"நேத்து கூரியர் லேட்டா கிடைச்சது. ஆனா, அதுக்கு முன்னாடி உங்களைக் கூப்பிட்டு டோஸ் விட்டுட்டேன். மனசுல வெச்சுக்காதீங்க.. என்ன?"<br /><br />திரும்பவும் அந்தப் பாடலைத் தொடர்ச்சியாகப் பாடி முடித்தபோது காது குறுகுறுத்தது.<br /><b><br />கட்டுரைகளுக்காக </b><br />
<br />
வேறுவேறு ஊர்களுக்குப் போய், அதற்கான பில் தொகையை அனுப்பியபோது ஒருசமயம் பார்த்தவர் போனில் கூப்பிட்டார்.<br /><br />"என்ன.. இப்படிப் பில் அனுப்பியிருக்கீங்க?"<br /><br />"ஏன்.. என்ன சார்?"<br /><br />"ஊருக்குப் போறப்போ நீங்க தங்கின ஹோட்டல் பில்லைப் பார்த்தேன். இவ்வளவு கம்மியான ரேட்டில் இருக்கிற ஹோட்டல்களில் இனி தங்காதீங்க. நல்ல ஹோட்டல்களில் தங்குங்க. அதுதான் உங்களுக்கும் நல்லது, நம்ம நிறுவனத்துக்கும் நல்லது. பணத்தை நான்தாங்க கொடுக்கப்போறேன்" - போனை வைத்துவிட்டார்.<br /><b><br />நம்பிக்கையின் பெருமிதம்</b><br /><br />ராஜீவ் காந்தி கொலை நடந்த சமயம்.. மதுரையிலிருந்து சென்னை வந்திருந்த நான் ஸ்ரீபெரும்புதூருக்கு துக்ளக் கவரேஜுக்காகப் போனேன்.<br /><br />சென்னை துவங்கி, தமிழகத்தின் பல பகுதிகளில் கலவரச் சூழல், "கார்ல போனாலும் பார்த்துப் போங்க" - சொல்லியனுப்பினார் சோ.<br /><br />ராஜீவ் கொலையில், கைது செய்யப்பட்ட போட்டோகிராபர் சுபா சுந்தரத்தின் அலுவலகத்திலிருந்துதான் ஒரு போட்டோகிராபர் என்னுடன் காரில் வந்தார். சுபா சுந்தரம் தாங்கள் சென்ற காரில் 'பிரஸ்' ஸ்டிக்கரை ஒட்டி அனுப்பிவைத்தார்.<br /><br />நான் ஸ்ரீபெரும்புதூருக்குச் சென்று திரும்பியவுடன், கட்டுரை எழுதிவிட்டு மதுரைக்குச் சென்ற இரண்டு நாட்களில், சுபா சுந்தரம் கைதுசெய்யப்பட்டிருந்தார்.<br /><br />துக்ளக் இதழில் கட்டுரை வெளியானதும் ராஜீவ் கொலை பற்றி விசாரணை நடத்தி வந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவில் உள்ள ஒரு அதிகாரி துக்ளக் அலுவலகம் வந்திருக்கிறார்.<br /><br />துக்ளக் இதழில் வெளியான என்னுடைய கட்டுரையில் 'படங்கள்: சுபா' என்று வெளியானது குறித்த விசாரணைக்கு அந்தக் கட்டுரையை எழுதியவரை விசாரிக்க வேண்டும் என்று கேட்டபோது, அதற்குப் பதில் சொல்லி யிருக்கிறார் சோ.<br /><br />"நான்தான் அவரைக் கட்டுரைக்காக அனுப்பினேன். முடித்துக் கொடுத்துவிட்டு அவர் கிளம்பிவிட்டார். தேவையில்லாமல் அவரை விசாரணைக்கு அழைத்து பீதி ஏற்படுத்துவது சரியில்லை. அவரை அனுப்பியவன் என்கிற முறையில் அவரிடம் என்ன கேட்க வேண்டுமோ, அதை என்னிடம் கேளுங்கள். நானே பதில் சொல்கிறேன்" என்று ஆசிரியரான சோ பதில் அளித்திருப்பதை துக்ளக் அலுவலகப் பொறுப்பில் இருந்தவர் சொன்னபோது, அவருடைய நம்பிக்கையின்மீது பெருமிதம் ஏற்பட்டது.<br /><br /><b>ஒசாமஅசா…</b><br /><br />மிகவும் தயங்கித் தயங்கித் தொடர்ந்து முயற்சித்து, அவருடைய வாழ்க்கை அனுபவங்களைத் தொகுத்து குமுதம் இதழில் வெளியான 'ஒசாமஅசா' தொடரைத் துவக்குவதற்கு சோ ஒப்புக்கொண்டதும் அவர் போட்ட கண்டிஷன், "நான் சொல்றேன்.. நீங்க எழுதுங்க. ஆனால், 'எழுத்தும் தொகுப்பும்' என்று உங்க பெயர்தான் வரணும்."<br /><br />அதன்படியே 76 வாரங்கள் வரை குமுதத்தில் வெளியான தொடருக்குப் பெரும் வரவேற்பு. அதற்காகவே அவரை நூறு தடவைக்கு மேல் சந்தித்தேன்.<br /><br />துக்ளக்கில் ஏற்கெனவே பதினான்கு ஆண்டுகள் நான் பணியாற்றியிருந்தாலும் அவருடைய அந்திமக் காலத்தில் நிகழ்ந்த இந்தச் சந்திப்புகள் மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்தின. கேலியும் கிண்டலுமாகப் பல்வேறு இடங்களில் நகர்ந்த அந்தச் சந்திப்புகள், அவருடைய மனதில் உறைந்திருந்த பல நினைவுகளை அந்தரங்க சுத்தியுடன் வெளிப்படுத்தின.<br /><br />"இதுதான் கடைசியாகக் கொடுக்கிற தொடர்னு வெச்சுக்குங்க. நான் எல்லாத்தையும் கொட்டிடுறேன். எது தேவையோ அதைப் பிறகு எடிட் பண்ணிக்கலாம். சில சென்ஸிட்டிவ்வான விஷயங்களை நான் பேசி நீங்க டேப் பண்ணியிருந்தாலும், அவை இந்தச் சமயத்தில் வெளியாவதை நான் விரும்பலை. ஒருவேளை, நான் இல்லாமல் போனபிறகு, அதை நீங்க வெளியிடணும்னு நினைச்சா வெளியிடலாம்" என்று மிகுந்த உரிமையுடனும் நம்பிக்கையுடனும் அவர் குரல் பிசிறச் சொன்னார். மிகுந்த நெகிழ்வுடன் நான் மென்மையாக அவர் காதோரம் பதில் சொன்னபோது, என்னுடைய குரலும் தாழ்ந்திருந்தது.<br /><br />"ரொம்பவும் நம்பிக்கையோடு என்கிட்டே பகிர்ந்திருக்கீங்க.. நீங்க விரும்பாத எதையும் நான் எப்போதும் வெளியிட மாட்டேன் சார்.."<br /><br />சொன்னதும் சாய்வான படுக்கைக்கு அருகில் அழைத்து, மிகவும் மெலிந்து போயிருந்த உறைந்த மெழுகைப் போன்ற கை விரல்களால் என்னுடைய கையை அழுத்தியபோது, அவருடைய கண்களிலும் உதட்டோரத்திலும் சிறு புன்னகை ஒட்டியிருந்தது.<br /><br />அந்த அழுத்தமான நம்பிக்கை வெளிப்பட்ட தொடுதல் என்றைக்கும் உயிர்ப்புடன் உடனிருக்கும்!<br /><br />- மணா, முப்பத்தாறு நூல்களை எழுதியிருக்கிறார். 'துக்ளக்'கில் பதினான்கு வருடங்கள் பணியாற்றியிருக்கிறார். சோவின் வாழ்வனுபவங்களைத் தொகுத்துத் தொடராகவும் எழுதியிருக்கிறார். <br />
<br />
<div style="text-align: right;">
நன்றி: <a href="http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article9414232.ece?homepage=true" target="_blank"><b>தி இந்து</b></a> </div>
<br />
<br />
<br />
<br /></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1134172536605043424.post-64218634842622394312016-08-21T23:25:00.000+05:302016-08-21T23:25:19.537+05:30புதிய கல்விக் கொள்கை மிக அவசியம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /><span style="color: #990000;"><span style="font-size: large;">இன்றைய சூழலில் புதிய கல்விக் கொள்கை மிக அவசியம்</span></span><br /><span style="color: blue;"><b>அண்ணா பல்கலைக்கழக </b></span><br />
<span style="color: blue;"><b>முன்னாள் துணைவேந்தர்</b></span><br />
<span style="color: blue;"><b>ஏ.கலாநிதி திட்டவட்டம்</b></span><br />
<br />
<br />
<span style="color: blue;"><b> <table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxUBUOYMdUoUBNWv3qAR_Gh3Eub2-3BjIa93Rc73yafNqri5PxZZIU2ZFMjJ11Gv1p63csBnwwVzVf4DjggRyDBvSzbk70SpbEZQfbLCbhN5cI6b3Z1FXRMlhKVbRq5vpDEcjdzy4ifjQ/s1600/hindu+tamil+210816.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="195" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxUBUOYMdUoUBNWv3qAR_Gh3Eub2-3BjIa93Rc73yafNqri5PxZZIU2ZFMjJ11Gv1p63csBnwwVzVf4DjggRyDBvSzbk70SpbEZQfbLCbhN5cI6b3Z1FXRMlhKVbRq5vpDEcjdzy4ifjQ/s400/hindu+tamil+210816.jpg" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">சென்னையில் நடந்த தேசிய கல்விக் கொள்கை -2016 குறித்த கருத்தரங்கில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஏ.கலாநிதி பேசுகிறார்</td></tr>
</tbody></table>
</b></span><br />
<br />
<b>சென்னை, ஆக. 20: </b>இன்றைய சூழலில் புதிய கல்விக் கொள்கை மிக அவசியம் என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஏ.கலாநிதி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.<br /><br />அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி), வித்யா பாரதி, சம்ஸ்க்ருத பாரதி, காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி ஆராய்ச்சி மையம், தேசிய சிந்தனைக் கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பில், தேசிய கல்விக் கொள்கை -2016 குறித்த கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது.<br />
<br />
இதில் அண்ணா பல் கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், காமன்வெல்த் அறிவியல் தொழில்நுட்பக் கல்வி ஆராய்ச்சி மைய இயக்கு நருமான ஏ.கலாநிதி பேசியதாவது:<br /><br />பண்டைய கல்விமுறையை ஒழித்தால்தான் இந்தியர்களை அடிமைகளாக்க முடியும் என்று கருதி, 1835-ம் ஆண்டு மெக்காலே வேறொரு கல்விக் கொள்கையை உருவாக்கினார். அதைத்தான் நாம், மாற்றியும் திருத்தியும் பின்பற்றி வருகிறோம். அதைக் கைவிட வேண்டிய நேரம் வந்துள்ளது.<br />
<br />
இன்றைய சூழலில் புதிய கல்விக் கொள்கை மிகவும் அவசியமானது. 8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெறலாம் என்பதை 5-ம் வகுப்பு வரை என்று மாற்றுவது நல்ல விஷயம். பொறியியல் கல்வி கற்பவர்களில் 87 சதவீதம் பேர்தான் வேலைக்கு செல்வதற்கு தகுதியான அளவுக்கு உள்ளனர். இதற்கு காரணம் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இல்லாததுதான். மாணவர்களுக்கு சிறந்த பண்பு நலன்களையும் கற்றுத்தர வேண்டும்.<br /><br />-இவ்வாறு கலாநிதி கூறினார்.<br /><br /><b>வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன்:</b><br /><br />இந்தியாவில் 35 கோடிக்கும் அதிகமானோர் படிக்கும் வயதில் உள்ளனர். எனவே, இந்தியாவுக்கு கல்வி என்பது மிக முக்கியமானது. பள்ளிக் கல்வி என்ற அஸ்திவாரம் சரியாக இருந்தால்தான் உயர்கல்வி தரமானதாக இருக்கும். ஆனால், நம் நாட்டில் பள்ளிக் கல்வி குறிப்பாக அரசுப் பள்ளிகள் கவலை அளிக்கும் வகையிலேயே செயல்படுகின்றன.<br /><br />உலக அளவில் பள்ளிக் கல்வியில் சிறந்து விளங்கும் தென்கொரியா, பின்லாந்து நாடுகளில் வகுப்பறைகள் டிஜிட்டல் மயமாகிவிட்டன. வை-பை இணையதள வசதி இல்லாத வகுப்பறைகளே இல்லை என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில் அரசுப் பள்ளிகளில் நாற்காலிகள், தண்ணீர், கழிவறை, சுற்றுச்சுவர் போன்ற அடிப்படை வசதிகள்கூட இல்லை. கல்விக்காக அரசு அதிகமாக செலவு செய்ய வேண்டும். அப்போதுதான் பொதுமக்கள் கல்விக்காக செலவு செய்வது குறையும்.<br /><br />நம் நாட்டில் ஒரு பல்கலைக்கழகத்தின் கீழ் நூற்றுக்கணக்கான கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் உயர் கல்வியின் தரம் குறைகிறது. பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்பிக்கப்பட்டால்தான் தரமும், ஆராய்ச் சியும் அதிகரிக்கும். பல்கலைக்கழகங் கள் இல்லாவிட்டாலும் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அதிகாரமாவது வழங்க வேண்டும்.<br /><br />அரசுப் பள்ளிகள், பள்ளிக் கல்வி, கல்லூரி கல்வியில் இருக்கும் பல்வேறு குறைபாடுகள் தேசிய கல்விக் கொள் கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. 8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி என்பது 5-ம் வகுப்பாக குறைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் மட்டுமே இருக்க நினைப்பவர்களுக்கு சமச்சீர் கல்வி இருக்கலாம், ஆனால், வெளிமாநிலங்கள், வெளிநாட்டுக்கு செல்ல வேண்டுமானால் சிபிஎஸ்இ போன்ற கல்வித் திட்டங்கள் வேண்டும்.<br /><br />பின்லாந்து போன்ற நாடுகளில் கல்விக் கொள்கையில் தொடர்ச்சி இருக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சியுடன் கலந்து ஆலோசித்த பிறகே கல்விக் கொள்கையை உருவாக்குகிறார்கள். தரமான பள்ளிக் கல்வி, பல்கலைக்கழக கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும்.<br /><br />ஐஐடி நுழைவுத் தேர்வு போன்ற அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாத நிலைக்கு தமிழக மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.<br /><br />கல்வி என்பது வெறும் படிப்பு, அறிவுக்காக மட்டுமாக இல்லாமல் நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாணவர்களை தயார்படுத்துவதாக இருக்க வேண்டும். அதற்கேற்ற மாற்றங்களுடன் புதிய கல்விக் கொள்கை இருக்க வேண்டும்.<br /><b><br />மூத்த பத்திரிகையாளர் மாலன்:</b><br /><br />புதிய கல்விக் கொள்கைக்கான எதிர்ப்புகள் அரசியல் தளத்தில் இருந்துதான் வருகிறது. அறிவார்ந்த தளத்தில் இருந்து வரவில்லை. கேள்வியே கேட்காமல் கீழ்படியச் செய்வது புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் என்று எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். மாணவர்களை படைப்பாற்றல் மிக்கவர்களாகவும், கண்டுபிடிப்புகளை நிகழ்த்துபவர்களாகவும் உருவாக்க வேண்டும் என்பது புதிய கல்விக் கொள்கைக்கான நோக்கம் என்று கூறப்பட்டுள்ளது.<br /><br />8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்பதால் போட்டி மனப்பான்மை குறைந்துள்ளது. புதிய கல்விக் கொள்கைக்கான பரிந்துரையில், வேண்டுமென்றால் சமஸ்கிருதத்தை 3-வது மொழியாக கற்கலாம் என்று ஒரே ஒரு இடத்தில்தான் கூறப்பட்டுள்ளது. 10 லட்சம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது. அதை 50 லட்சம் மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.<br /><br /><b>சென்னை விவேகானந்தா கல்லூரி தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் பேராசிரியர் ஆர்.ராமசந்திரன்:</b><br /><br />புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதத்தைத் திணிப்பதாக எல்லோரும் கூறுகின்றனர். சமஸ்கிருதம் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்பது தவறான கருத்து. சமஸ்கிருதத்தில் 5 சதவீதம் அளவுக்குதான் ஆன்மிகக் கருத்துகள் உள்ளன. புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதத்தையும் படிக்கலாம் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.<br /><br /><b>விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் முதல்வர் பிரேமா மகாதேவன்:</b><br /><br />தரமான கல்வியின் மூலமே இந்தியா சிறந்த நாடாக மாற முடியும். மெக்காலே கல்விக் கொள்கையின் தொடர்ச்சியாகவே தற்போதைய கல்விக் கொள்கை உள்ளது. மாணவர்கள் ஆசிரியர்களைத் தேடிச் சென்ற காலம் மாறி, தற்போது மாணவர்களைத் தேடி ஆசிரியர்கள் செல்கின்றனர். இந்தக் கல்வி முறை நிச்சயம் மாற்றப்பட வேண்டும்.<br /><br />புதிய கல்விக் கொள்கை பற்றி பலரும் நிறை குறைகளைச் சொல்கின்றனர். அதில் எந்தக் குறையும் இல்லை. மனிதனை முழு மனிதனாக்கக் கூடிய அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.<br /><br /> மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்வியியல் துறை முன்னாள் இயக்குநர் சதானந்தன், ஏபிவிபி துணைத் தலைவர் எஸ்.சுப்பையா, சாஸ்த்ரா பல்கலைக்கழக டீன் எஸ்.வைத்திய சுப்பிரமணியம், பேராசிரியர் பி.கனகசபாபதி உள்ளிட் டோரும் பேசினர். <br />
<br />
நன்றி: <a href="http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article9014170.ece?ref=relatedNews" target="_blank"><b>தி இந்து</b></a> (21.08.2016)<br />
<span style="color: white;">.</span></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1134172536605043424.post-72979329064320265372016-06-28T23:42:00.003+05:302016-06-28T23:42:43.641+05:30ஓர் இனிய அழைப்பிதழ்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://desamaedeivam.files.wordpress.com/2014/11/thanjai-ve-gopalan.jpg?w=132&h=174" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://desamaedeivam.files.wordpress.com/2014/11/thanjai-ve-gopalan.jpg?w=132&h=174" width="152" /></a></div>
<br />
<br />
<b>தேசிய </b>சிந்தனைக் கழகத்தின் மாநில துணைத் தலைவரும், திருவையாறு பாரதி இலக்கியப் பயிலக இயக்குநருமான திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்களின் 80-வது பிறந்த நாள் விழாவும் அவரது இரு நூல்களின் வெளியீட்டு விழாவும் இணைந்து 03.07.2016, ஞாயிற்றுக்கிழமை, மாலை 3.30 மணியளவில் திருவையாறு சரஸ்வதி அம்மாள் தொடக்கப் பள்ளியில் கொண்டாடப்பட உள்ளன.<br />
<br />
விழா அழைப்பிதழ் இத்துடன் உள்ளது. அனைவரும் வருக!<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2377jx-g-DvTk_qImmWW7PM4NJ6vqXRzHFT_z5gM6wxII-wA9Ve8wmoP2I2Lz_VVfOvF5Jr2uC7bwwcGKVc8R0IkPBWMoerbl4OiR0_N6ZJxJR-1_Pkv89uahinfQ2smOSJJCQggn7kA/s1600/Invitation.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="292" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2377jx-g-DvTk_qImmWW7PM4NJ6vqXRzHFT_z5gM6wxII-wA9Ve8wmoP2I2Lz_VVfOvF5Jr2uC7bwwcGKVc8R0IkPBWMoerbl4OiR0_N6ZJxJR-1_Pkv89uahinfQ2smOSJJCQggn7kA/s400/Invitation.jpg" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">அழைப்பிதழின் மீது சொடுக்கினால் பெரிதாக்கிப் படிக்கலாம்...</td></tr>
</tbody></table>
<br />
<b><br /></b>
<b>அன்னாருக்கு தேசிய சிந்தனைக் கழகத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்!</b><br />
<br />
<span style="color: white;">.</span><br />
<br />
<br /></div>
Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1134172536605043424.post-5374826575679464662016-06-19T18:06:00.002+05:302016-06-19T18:34:28.293+05:30தேசமும் தேகமும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b><span style="color: blue; font-size: large;">-திருநின்றவூர் ரவிக்குமார்</span></b><br />
<div>
<span style="color: blue; font-size: large;"><b><br /></b></span></div>
<div>
<div style="text-align: right;">
<b style="font-size: x-large;"><span style="background-color: black; color: yellow;">சிந்தனைக்களம்</span></b></div>
<div style="text-align: right;">
<b><br /></b></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhahEaXbxcG6brm2RQxFvAw7OiCDH4u3nSxNKvcNvQkyiqIjWavivfjHepoKq6IC5YEzSj5gR4Edspl6qOEte5X8rgprS9M0bCoh5O_7K6NG-6kXjZx4OS8SddiyiJIICNTjJh01VEsO0k/s1600/India.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhahEaXbxcG6brm2RQxFvAw7OiCDH4u3nSxNKvcNvQkyiqIjWavivfjHepoKq6IC5YEzSj5gR4Edspl6qOEte5X8rgprS9M0bCoh5O_7K6NG-6kXjZx4OS8SddiyiJIICNTjJh01VEsO0k/s320/India.jpg" width="294" /></a></div>
<div>
<b><br /></b></div>
<div>
<b>தேசமென்றால் </b> நம் பாரத மணித்திருநாடு. அதில் பிறந்து வாழ்ச்சி பெற தர்ம சாதனமான தேகத்தை ஸ்ரீமந் நாராயணன் கருணையுடன் நமக்கு அளித்துள்ளான். வழிகாட்டியாக தர்ம சாத்திரங்களைத் தந்தருளினான்.<br />
<br />
ஆனால் இங்கு தேகம் என்பது பகவான் உவந்து எழுந்தருளியுள்ள அர்ச்சாஸ்தலமாகிய திவ்யதேசம். தேகம் என்பது ஞானமும் ஞானத்தினால் பக்குவம் பெற்ற பக்தியும் உடைய சம்சாரியுடைய உடம்பு.<br />
<a name='more'></a><br />
<br />
பகவான் ஜீவனை அனுபவிக்கிறான். பகவான் அனுபவிப்பவன். ஜீவன் அனுபவிக்கப்படுவது. பகவான் செய்யும் அனுபவத்திற்கு தடையாக ஜீவன் எதையும் பற்ற கூடாது. அவனுக்கு நாம் போக்கியமாக அமைய வேண்டும். மற்றொருவனுக்கு நாம் போக்கியமாக அமைவதோ அல்லது மற்றொன்றை நாம் போக்கியமாக கொள்வதோ கூடாது என்பர் பெரியோர்.<br />
<br />
இதையே,<br />
<blockquote class="tr_bq">
<b>உண்ணி எழந்த என் தடமுலைகள்</b><b>மானுடருக்கு பேச்சுப் படில்</b><b>வாழக்கில்லேன் கண்டாய்....</b></blockquote>
<div>
-என்கிறாள் ஆண்டாள் நாச்சியார்.<br />
<br />
பகவானிடத்தில் பக்தனான ஞானி பெண்டுபிள்ளைகளையோ சொத்துக்களையோ பிராத்திக்கக்கூடாது என்று பெரியோர் கூறக்கேட்டிப்போம். வைணவ சித்தாந்தத்தின்படி இப்படி பிராத்திப்பது தவறில்லை என்று கூறலாம். <br />
<br />
பகவான் பக்தனை விரும்புகிறார். பக்தன் பகவானை விரும்புகிறான்.இங்கு கவனிக்க வேண்டியது, பகவத் சொரூபம் (உண்மை தன்மை ) வேறு. பகவத் ரூபம் (வடிவம் ) வேறு. அதே போல் ஜீவ சொரூபம் வேறு. ஜீவ சரீரம் வேறு.<br />
<br />
ஞானிகளான ஆழ்வார்கள் பரமாத்ம சொரூபத்தைக் காட்டிலும் பகவத் விக்கிரகத்திலேயே ஆழக்கால் பட்டிருந்தனர். பகவானும் ஆழ்வார்களின் ஆத்ம சொரூபத்தைக் காட்டிலும் அவர்களது திருமேனியையே விரும்புவான்.<br />
<blockquote class="tr_bq">
<b>பச்சை மாமலை போல்மேனி<br /> </b><b>பவளவாய் கமலச் செங்கண்</b><b>அச்சுதா அமரர் ஏறே என்னும்</b><b>என்னும் இச்சுவை தவிர யான்போய்.....,.......</b><b>அச்சுவை பெரினும் வேண்டேன்...</b></blockquote>
-என்று ஆழ்வார் பகவத் ரூபமான அர்ச்சையில் ஆழ்கிறார்.<br />
<blockquote class="tr_bq">
<b>"பொய் கலவாது என் மெய் கலந்தானே"</b></blockquote>
<blockquote class="tr_bq">
<b>"மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை"</b></blockquote>
<blockquote class="tr_bq">
<b>"பனிக்கடலில்.....,.....விட்டு ஓடி வந்து<br /> </b><b>என் மனக்கடலில் வாழவல்ல<br /> </b><b>மாய மணாள நம்பீ"</b></blockquote>
-என்று பகவான் ஜீவனுடைய இதய வாசத்தை விரும்பி அதற்காகவே திவ்ய தேசங்களில் எழந்தருளி உள்ளான் என்பது ஆழ்வார்கள் வாக்கால் தெளிவாகிறது.<br />
<br />
மீண்டும் முதல் பத்திக்குச் செல்வோம். <br />
<br />
தேசத்திற்காக தேகத்தை விடுதல் நல்லதுதான். ஆனால் தேசத்திற்காகவே வாழ்வது அதனினும் மேலானது என்று கூறுகிறார் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார்.</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
</div>
</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1134172536605043424.post-76184561251340433302015-02-27T01:38:00.002+05:302016-06-19T18:28:24.032+05:30கண்ணனைத் துதிபாடியவர் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h3 class="body" style="text-align: right;">
<span style="color: blue;">-<span class="author">ஜி.கிருஷ்ணமூர்த்தி </span></span></h3>
<div class="body">
<b> <table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7i_EZR3Cm5S3KseVBWW9pUox-q10yw3DDMkfLbqIzS8Z5w_2KCzuid5CnFjS_kAUmJvlta9JibMa7YIwRezuf-gF1SCWwfavm9t0UxS2XEvgbLlhhriqRk7MH4W8D-ca1MJmk5rVLzik/s1600/NarayanaThirthar.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7i_EZR3Cm5S3KseVBWW9pUox-q10yw3DDMkfLbqIzS8Z5w_2KCzuid5CnFjS_kAUmJvlta9JibMa7YIwRezuf-gF1SCWwfavm9t0UxS2XEvgbLlhhriqRk7MH4W8D-ca1MJmk5rVLzik/s1600/NarayanaThirthar.jpg" width="235" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><h2>
<span style="color: #990000;"><b>சுவாமி நாராயண தீர்த்தர்</b></span></h2>
</td><td class="tr-caption" style="text-align: center;"><b><br /></b></td></tr>
</tbody></table>
</b></div>
<div class="body" style="text-align: center;">
(ஆராதனை நாள்: மாசிமாத சுக்ல அஷ்டமி)</div>
<div class="body" style="text-align: center;">
(பிப். 26) </div>
<div class="body">
<br /></div>
<div class="body">
<b>நாமசங்கீர்த்தன</b> வைபவங்களில் இசைக்கப்படும் பாடல்கள் அனைத்தும் பல
பெரியோர்களால் இயற்றப்பட்டவை. சங்கீத மும்மூர்த்திகள், தமிழ் மும்மணிகள்,
ராமதாசர், புரந்தரதாசர், அன்னமய்யா, கபீர்தாசர், மீராபாய் முதலிய
இசைமகான்களின் பாடல்களை மனமுருகிப் பாடும்போது பாடுபவர்களுக்கும்
கேட்பவர்களுக்கும் ஆனந்தத்தையும் மனநிறைவையும் தருபவை. </div>
<div class="body">
<br /></div>
<div class="body">
இத்தகைய பாகவத பெரியோர்களின் வரிசையில் ஸ்ரீ நாராயண தீர்த்த ஸ்வாமிகளின்
பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இவர் இயற்றிய ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கணி
பாடல்கள் நாமசங்கீர்த்தனங்களிலும் மேடைக்கச்சேரிகளிலும் தவறாமல்
இடம்பெறுகின்றன.<br />
<a name='more'></a></div>
<div class="body">
<br /></div>
<div class="body">
ஆந்திர மாநிலம் குண்டூருக்கு அருகிலுள்ள காஜா என்னும் ஊரில் 1675-இல் இவர்
பிறந்தார். தம் தந்தையாரிடம் வேதம், சாஸ்திரம், சங்கீதம், தர்க்கம்
முதலியவற்றைக் கற்றுத்தேர்ந்தார். இவர் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த
போது ஒரு திருப்பம் நிகழ்ந்தது. </div>
<div class="body">
<br /></div>
<div class="body">
அவரது மனைவி தன் பிறந்த வீட்டுக்குப் போயிருந்தார். தன் மனைவியைப்
பார்ப்பதற்காகத் தன் மாமனார் வீட்டுக்குக் கிளம்பிய நாராயண தீர்த்தரின்
வழியில் கோதாவரி குறுக்கிட்டது. ஆற்றைக் கடந்து அக்கரைக்குச் செல்ல
முயல்கையில் பெருவெள்ளம் வந்து அடித்துச் செல்லப்பட்டார் நாராயண தீர்த்த
ஸ்வாமிகள். </div>
<div class="body">
<br /></div>
<div class="body">
தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு ‘ஆவத் சன்யாஸம்’ மேற்கொண்டார்.
அதனால் உயிர்பிழைத்த நாராயணதீர்த்தர் தனது வீடு, இல்லறம் ஆனைத்தையும்
துறந்து ஸ்ரீசிவராமாநந்த தீர்த்தர் என்பவரிடம் தீட்சை பெற்றார். </div>
<div class="body">
<br /></div>
<div class="body">
<b>வேங்கடவன் தரிசனம் </b></div>
<div class="body">
<b> </b>
</div>
<div class="body">
குருவின் ஆணைப்படி இறைவனின் நாமங்களைப் பாடி பல ஊர்களில்
சுற்றித்திரிந்தவர் திருப்பதி வந்தார். திருப்பதியில் பகவத் பிரசாதத்தைச்
சாப்பிடும் சமயம் வேங்கடவனே குழந்தை வடிவில் வந்து பிரசாதத்தைத் தனக்குத்
தரும்படி கேட்டார். </div>
<div class="body">
<br /></div>
<div class="body">
நாராயண தீர்த்த சுவாமிகள் மிகுந்த பசியோடு இருந்ததால் பிரசாதத்தைத் தர
மறுத்தார். திடீரென்று குழந்தை மறைந்துவிட, அவருக்கு உண்மை புலப்பட்டது.
அதே நேரத்தில் வயிற்றுவலி என்னும் சோதனை ஏற்பட்டது. </div>
<div class="body">
குருவின் ஆணைப்படி இறைவனின் நாமங்களைப் பாடி பல ஊர்களில்
சுற்றித்திரிந்தவர் திருப்பதி வந்தார். திருப்பதியில் பகவத் பிரசாதத்தைச்
சாப்பிடும் சமயம் வேங்கடவனே குழந்தை வடிவில் வந்து பிரசாதத்தைத் தனக்குத்
தரும்படி கேட்டார். </div>
<div class="body">
<br /></div>
<div class="body">
நாராயண தீர்த்த சுவாமிகள் மிகுந்த பசியோடு இருந்ததால் பிரசாதத்தைத் தர
மறுத்தார். திடீரென்று குழந்தை மறைந்துவிட, அவருக்கு உண்மை புலப்பட்டது.
அதே நேரத்தில் வயிற்றுவலி என்னும் சோதனை ஏற்பட்டது. </div>
<div class="body">
அன்று இரவு தூங்கிக்கொண்டிருக்கையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவர் முன்
தோன்றி, “ உன் நோய் விரைவில் நீங்கும். இங்கிருந்து திருவையாற்றுக்குச்
செல்” என்று கூறி மறைந்தார். </div>
<div class="body">
<br /></div>
<div class="body">
அவ்வாறே காலையில் கண்விழித்து திருவையாற்றை நோக்கிப் பயணத்தைத்
தொடங்கினார். நடுக்காவிரி என்னும் இடத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில்
இரவு தங்கினார். அங்கே திருமலைநாதன் கனவில் தோன்றி, அடுத்த நாள் முதலில்
கண்ணுக்குப் படும் உருவத்தைத் தொடர்ந்து செல் என்று உத்தரவிட்டார். </div>
<div class="body">
<br /></div>
<div class="body">
அவ்வாறே காலையில் கண்விழித்ததும் ஒரு வெண்பன்றியைப் பார்த்தார். அதைப்
பின்தொடர்ந்தார். நாராயண தீர்த்தர் பூபதிராஜபுரம் என்னும் ஊரில் உள்ள
வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தை அடைந்தார். வராகம் மறைந்தது. நாராயண
தீர்த்தரின் வயிற்றுவலியும் குணமாயிற்று. </div>
<div class="body">
<br /></div>
<div class="body">
வராக (பன்றி) வடிவத்தில் மறைந்த அந்த பூபதிராஜபுரம் என்னும் ஊர் அன்று
முதல் வரகூர் என்று அழைக்கப்படலாயிற்று. வரகூர் என்னும் ஊரில் ஸ்ரீநாராயண
தீர்த்தர் தங்கி ஸ்ரீகிருஷ்ணரின் லீலைகளை விவரித்துப் புனைந்த பாடல்களின்
தொகுப்பே ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி என்று அழைக்கப்படுகிறது. </div>
<div class="body">
<br /></div>
<div class="body">
இவரது பாடல்களைக் கேட்டு பாலகோபாலனே நர்த்தனமாடினான் என்று கூறப்படுகிறது.
பகவான் ஸ்ரீகிருஷ்ணன் இவரது கனவில் கூறிய உத்தரவுப்படி இவர் வரகூரிலிருந்து
திருப்பூந்துருத்தி என்னும் ஊரில் சிலகாலம் தங்கினார். அப்போது தான்
முக்தியடைய வேண்டிய தருணம் நெருங்கிவிட்டதை அறிந்தார். </div>
<div class="body">
<br /></div>
<div class="body">
‘சிவ சிவ பவ பவ சரணம்’ என்னும் சிவகீர்த்தனை பாடி முக்தி நிலை அடைந்தார்.
இம்மகானின் ஆராதனை இவர் முக்திபெற்ற நாளான மாசிமாத சுக்ல அஷ்டமியன்று பல
இடங்களில் குறிப்பாகத் திருப்பூந்துருத்தியில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு
வருகிறது. </div>
<div class="body">
<br /></div>
<div class="body" style="text-align: right;">
நன்றி: <a href="http://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/article6936335.ece" target="_blank"><b>தி இந்து (ஆனந்த ஜோதி) </b></a></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1134172536605043424.post-27516837050140108802015-01-17T14:48:00.002+05:302016-06-19T18:34:00.359+05:30ஆசான்களின் ஆசான், புலவர்களின் புலவர்…<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h3 style="text-align: left;">
<span style="color: blue;"> -வ.மு.முரளி </span></h3>
<h3 style="text-align: left;">
</h3>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://i0.wp.com/www.tamilheritage.org/kidangku/tamilperiyar/images/mina.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="303" src="https://i0.wp.com/www.tamilheritage.org/kidangku/tamilperiyar/images/mina.jpg" width="320" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<span style="color: blue;"><span style="font-size: large;">திரிசிரபுரம் மகாவித்துவான்<br />மீனாட்சிசுந்தரம் பிள்ளை</span></span><br />
<br />
<span style="color: red;">(பிறப்பு: 1815 ஏப். 6 – மறைவு: , 1876 பிப். 1)</span></div>
<br />
.<br />
<b><br />இன்று</b> தமிழ் மொழிக்கு அணிகளாகக் கருதப்படும் பல காப்பியங்களை ஓலைச்சுவடிகளிலிருந்து நூல் வடிவுக்கு மாற்றியவர் ‘தமிழ்த் தாத்தா’ எனப்படும் உ.வே.சாமிநாதையர். அவர் மட்டும் பாடுபட்டு, தேடிக் கண்டறிந்து அவற்றைப் பதிப்பித்திருக்காவிடில் நமக்கு மணிமேகலையும் சிலப்பதிகாரமும் கிடைக்காமலே கரையானுக்கு உணவாகி இருக்கும். எனவேதான்,<br />
<br />
“பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்<br />
<div style="text-align: left;">
காலமெல்லாம் புலவர் வாயில்</div>
துதியறிவாய், அவர் நெஞ்சில் வாழ்த்தறிவாய், <br />
இறப்பின்றித் துலங்குவாயே.”<br />
<br />
-என்று மகாகவி பாரதி, உ.வே.சாமிநாதையரைப் போற்றுகிறார்.<br />
<br />
ஓலைச் சுவடிகளிலிருந்த பழந்தமிழ் நூல்களைத் தேடித் தொகுத்து அச்சிட்டுப் பெரும்புகழ் பெற்றார் உ.வே.சா. எனில், அத்தகைய உ.வே.சா.வுக்கு அருந்தமிழ் போதித்து அவரைக் கற்றோரவையில் முந்தியிருக்கச் செய்த பெருமைக்குரியவர் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆவார்.<br />
<a name='more'></a><br />
<br />
அதற்கு நன்றி பாராட்டும் முகமாக உ.வே.சா, தனது குருநாதர் குறித்து இரு பாகங்களாக எழுதி தமிழுக்கு அளித்த ‘ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்’ என்ற நூல் (1933-34-ல் பதிப்பிக்கப்பட்டது), அக்காலத்தைய தமிழகத்தையும், மிகுந்த வறுமையிலும் தமிழ் காத்த மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் சிறப்பினையும் எடுத்தியம்புகிறது.<br />
<br />
‘கற்றல், கற்பித்தல், கவி புனைதல் எனும் இவற்றை நற்றவமாய் மேற்கொண்ட நற்புலவர் மகாவித்துவான் எனக் கூறுதல் மிகையன்று’ என்பார் தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவனர் சுபாஷினி டிரெம்மில்.<br />
<br />
தகுதியுடைய பெரியோரிடம் தமிழ் கற்க இரந்து நிற்கவும் பிள்ளையவர்கள் தயங்கியதில்லை. தாளாத வறுமையிலும், தமிழ் கற்க தன்னை நாடி வந்த சீடர்களுக்கு உணவும் அறிவும் ஒருங்கே அளிக்கவும் அவர் தயங்கியதில்லை. தமிழின் எந்த யாப்பு வடிவிலும் தயக்கமின்றி நினைத்தவுடன் செய்யுள் (கவிதை) புனையும் அவரது ஆற்றலுக்கு நிகரானவர் எவரும் இதுவரை பிறக்கவும் இல்லை.<br />
<br />
தனது வாழ்வில் திருவாவடுதுறை ஆதீனத்தின் பெரும்புலவராக விளங்கியமை தவிர (அதுவும் சொற்ப ஊதியமே) வேறெந்தப் பதவியிலும் அவர் இருந்ததில்லை. எந்தப் பதவி மோகமும் பணத்தின் மீதான பற்றும் அவரை ஆட்கொண்டதில்லை. இன்றும் இவர் பெயர் தெரியாத பலருண்டு. ஆனால், இவரது சீடர்களான, மகா வித்துவான் உ.வே.சாமிநாதையர், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, பூவாளூர் வித்துவான் தியாகராஜ செட்டியார் ஆகியோரை தமிழகமே ஒருகாலத்தில் கொண்டாடியது.<br />
<br />
இவரிடம் கல்வி கற்றவர்கள் பலர் அக்காலத்தில் உயர் பதவி அடைந்தனர்; தமிழுக்கு பலர் தொண்டாற்றினர். 200 ஆண்டுகளுக்கு முன்னம் தேக்கத்தில் கிடந்த தமிழ் மொழியை உயிர்ப்பித்த சஞ்சீவியாகவே பிள்ளையவர்கள் அவதரித்தார். இவரது அடியொற்றி ஒரு தலைமுறையே தமிழுக்காக அருந்தொண்டாற்றியது. அதில் ஒருவர் தான் உ.வே.சா.<br />
<br />
‘பலர்க்கும் இன்ன காலமென்னாது எத்தகைய பெருநூலும் எளிதுணர்த்திப் பயனுறுத்தும் இணையிலா ஆசான்’ என்று தம் ஆசானைப் பற்றி சாமிநாதையர் குறிப்பிடுவார். ஆசானின் மற்றொரு மாணாக்கர் சி.தியாகராச செட்டியார், பிள்ளையவர்கள் எழுதிக்கொடுத்த நூல்கள் பற்றிக் கூறுகையில், “எத்தனையோ கோவைகள், எத்தனையோ புராணங்கள், எண்ணிலடங்கா நூல்கள் அத்தனையும் இத்தனையென்று எத்தனை நாவிருந்தாலும் இயம்ப இயலாது” என்பார்.<br />
<br />
<span style="color: magenta;"><b>பிறப்பும் கல்வியும்…:</b></span><br />
<br />
மீனாட்சி அருள்மழை பொழியும் மதுரையில் வாழ்ந்தவர்கள் சிதம்பரம் பிள்ளை – அன்னத்தாச்சி தம்பதியர். சிதம்பரம் பிள்ளை மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் மீன் முத்திரையிடும் பணி செய்துவந்தார். திருக்கோயில் நிர்வாகத்தோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அங்கிருந்து கிளம்பி, திருச்சிக்கு மேற்கே காவிரியின் தென்பாலுள்ள எண்ணெய் மாகாணம் என்னும் ஊரில் வந்து தங்கினார்.<br />
<br />
தமிழறிவு நிரம்பப் பெற்றிருந்த சிதம்பரம் பிள்ளை, அவ்வூர் மக்களுக்கு எண் கணக்கு தமிழ் நூல்களும் கற்பித்து கணக்காயன் (திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர்) ஆனார். சிறிது காலத்துக்குப் பின் அங்கிருந்து அதவத்தூர் சென்று அங்கும் ஆசிரியப் பணியை மேற்கொண்டார்.<br />
<br />
குடும்பம் அதவத்தூரில் இருந்தபோது, ஸ்ரீபவ ஆண்டு பங்குனித் திங்கள் 26-ம் நாள் (06.04.1815), வியாழக்கிழமை, அபர பட்சம் துவாதசி திதியும் பூரட்டாதி நட்சத்திரமும் கூடிய நன்னாளில், மகர லக்கினத்தில், அன்னத்தாச்சி ஓர் ஆண் மகவை ஈன்றெடுத்தார்.<br />
<br />
ஆலவாய் அண்ணலின் பெயரையே குழந்தைக்குச் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர். அதன் பின் குடும்பம் சோமரசம்பேட்டைக்குக் குடிபெயர்ந்தது. இவருக்கு ஓர் இளையவரும் தங்கையும் பிறந்ததாகவும், அவர்களைப் பற்றி வேறெதுவும் தெரியவில்லை என்றும் கூறுவார் உ.வே.சா.<br />
<br />
அவர் பிறந்த கணத்தை சோதித்த சோதிட வல்லுனர்கள், ‘இக்குழந்தையால் தமிழ்நாட்டுக்குப் பெரும் பயன் விளையும்’ என்று கணித்தனர். இது பிற்காலத்தில் நிதர்சனமாயிற்று.<br />
<br />
தனயனுக்கு தந்தையே குருவும் ஆனார். அவரிடம் மீனாட்சிசுந்தரம், நெடுங்கணக்கு, ஆத்திச்சூடி, அந்தாதிகள், கலம்பகங்கள், பிள்ளைத்தமிழ் நூல்கள், சதகங்கள், நிகண்டுகள், கணிதம் ஆகியவை மட்டுமல்லாது, நன்னூல் போன்ற இலக்கண நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். இளமையிலேயே நன்னூல் முழுவதும் அவருக்கு மனனம் ஆகி இருந்தது.<br />
<br />
யாப்பிலக்கணத்துக்கு தக்கபடி, செய்யுள் புனையும் ஆற்றல் அவரிடம் இருந்ததை தந்தை கண்டுகொண்டார். அதை தன்னால் இயன்றவரை மேலும் வளப்படுத்தினார். தந்தை அறிவுறுத்தியபடி பிறகு மலைக்கோட்டை மெளனமடம் வேலாயுத முனிவரிடம் பாடம் கேட்டார்.<br />
<br />
திருவாவடுதுறை ஆதீனம் 14-வது பட்டம் வேளூர் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர், ஸ்ரீ சிவாக்கிர யோகிகள் மடத்தின் தலைவராக பிற்காலத்தில் ஆனவரான அம்பலவாண முனிவர், கீழ்வேளூர் சுப்பிரமணிய பண்டாரம், காஞ்சிபுரம் சபாபதி முதலியார், ‘தண்டியலங்கார’ பரதேசியார் ஆகியோரிடம் பல்வேறு காலகட்டங்களில் பாடம் கேட்டார்.<br />
<br />
திருவம்பலம் தின்னமுதம் பிள்ளை, மழவை மகாலிங்கையர் போன்ற தமிழ்ப் புலவர்களை அணுகி தக்க மரியாதை செலுத்தி அவர்களிடம் அளவளாவி தமிழ் இலக்கணம், இலக்கியம் தொடர்பான சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டார்.<br />
<br />
துறை மங்கலம் சிவப்பிரகாசர், காசிமடம் குமரகுருபரர், சிவஞான முனிவர், அதிவீரராம பாண்டியர் ஆகியோரின் பாடல்களில் மனதைப் பறிகொடுத்த அவர், கம்ப ராமாயணம், கல்லாடம், சேக்கிழாரின் பெரிய புராணம், சைவத் திருமுறைகள் ஆகியவற்றிலும் ஆழ்ந்து அனுபவித்தார். தனது இலக்கண, இலக்கியத் தேர்ச்சியை மாணவர்களுக்கு அள்ளி வழங்கினார்.<br />
<br />
<span style="color: magenta;"><b>மண வாழ்க்கை:</b></span><br />
<br />
இவரது 15-வது வயதில் தந்தை காலமானார். அதன் பின் உறவினர்கள், காவேரியாச்சி என்ற பெண்ணை இவரது வாழ்க்கைத் துணைவியாக அமைத்தனர். இவர்களது மகன் சிதம்பரம் பிள்ளை.<br />
<br />
தமிழ்ப் புலவர்களைக் கண்டு உரையாடுவதற்கும், தம் ஐயங்களைப் போக்கிக் கொள்வதற்கும் வாய்ப்பாகத் திரிசிரபுரம் (தற்போதைய திருச்சி) செல்லத் தீர்மானித்தார். திருச்சி மலைக்கோட்டை கீழவீதியில் குடியேறினார். அங்கு, முத்துவீரியம் என்னும் இலக்கண நூலைச் செய்த முத்துவீர வாத்தியார், திரிசிரபுரம் சோமசுந்தர முதலியார் முதலான புலவர்களுடன் அளவளாவும் வாய்ப்பைப் பெற்றார். வெளியூர்ப் புலவர்கள் இவரைத் ‘திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை’ எனக் குறிப்பிட்டனர்.<br />
<br />
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்திலக்கணங்களையும் தக்கவரிடம் பாடங்கேட்ட அவர், தமிழ் கற்பிப்பதையே தனது தொழிலாகக் கொண்டார். பலருக்குக் கற்பித்த காலத்திலும் தன்னைவிட புலமையானோரிடம் பாடம் கேட்பதை அவர் தொடர்ந்தார்.<br />
<br />
திருவாவடுதுறை அம்பலவாண முனிவரிடம் கம்பரந்தாதியையும் கீழ்வேளூர் சுப்பிரமணிய தேசிகரிடம் குட்டித் தொல்காப்பியம் என்று அழைக்கப்படும் இலக்கண விளக்கத்தையும் பாடங்கேட்டார். இதனால் அவர் தமிழ்ப் புலமை மேலும் சிறப்புற்றது.<br />
<br />
தனது 21-வது வயதில், திரிசிரபுரம் செட்டி பண்டாரத்தையா என்பாரிடம் சிவ தீட்சையும் க்ஷணிகலிங்க தாரணமும் பெற்றார். அன்று முதல் அவரை வெண்ணீறு வேந்தராகவே தமிழகம் வாழ்நாள் முழுவதும் கண்டது.<br />
<br />
நூல்களைக் கற்றுணர்ந்தவர்களிடம் முழுமையாகப் பாடம் கேட்டல் என்ற நியதி இருந்த காலம் அது. அக்காலத்தில் வாழ்ந்த பிள்ளையவர்கள், மாணவர்களுக்கு உண்ணும் நேரமும், உறங்கும் வேளையும் தவிர, நாளின் எல்லா நேரங்களிலும் பாடம் சொல்வதையே வாழ்வின் பயனாகக் கருதினார். பண்டைய குருகுல முறையில், மாணவர்களிடமிருந்து கட்டணம் ஏதும் பெறாமல் அவர்களுக்கு உணவும், உறையுளும் வழங்கி தமிழ்க் கல்வியைத் தழைக்கச் செய்து, தமிழுணர்வைச் செழிக்கச் செய்தார்.<br />
<br />
தன்னிடம் பாடம் கற்கும் மாணவர்களை தனது புதல்வர்களாகவே கருதி பாடம் கற்பிப்பார் பிள்ளையவர்கள். இவரது அறிவுத்திறன் அறிந்து உதவிய நல்லோரின் உதவியால் தனது ஆசான் பணியைக் குறைவறச் செய்தாலும், இவரால் குடும்பம் வசதியாக வாழ முடிந்ததில்லை. அதைப் பற்றி அவரும் அக்கறை கொண்டதில்லை.<br />
<br />
<span style="color: magenta;"><b>தல புராணங்கள் இயற்றல்:</b></span><br />
<br />
அக்காலத்தில் புகழ் பெற்ற கோயில்களுக்கு தல புராணம் எழுதும் வழக்கம் இருந்தது. அதை அடியொற்றி, பிள்ளையவர்களும், நெருங்கியவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி பல திருக்கோயில்களுக்கு தல புராணங்களை இயற்றினார்.<br />
<br />
அதுவரை வழக்கத்தில் இருந்த தல புராணங்களுக்கு மாற்றாக, அற்புதமான தமிழ் நடையில், கற்பனைச் செழிப்பும், கருத்து வளமும், உவமை நயமும், திருத்தலப் பெருமையை தெளிவாக விளக்கும் நூல்நயமும் கொண்டதாக இவர் எழுதிய தல புராணங்கள் அமைந்தன. இதனால் பிள்ளையவர்களின் புகழ் பரவியது.<br />
<br />
சிற்றிலக்கியம் எனப்படும் பிரபந்தங்களில் சிறந்த தேர்ச்சி பெற்றவரான பிள்ளையவர்கள், தனது காலத்தில் அருகிய இந்த இலக்கியங்களுக்கு புத்துயிருட்டினார். பல சிவத்திருத்தலங்களுக்குச் சென்று, அத்தலங்களைப் பற்றித் தலபுராணங்களும், பதிகங்களும், அந்தாதிகளும், அங்குள்ள இறைவன்- இறைவி மீது பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, உலா, தூது, குறவஞ்சி முதலான நூல்களும் இயற்றினார்.<br />
<br />
பிள்ளையவர்கள் எழுதியவற்றில், ‘குசேலோபாக்கியானம்’ என்ற காப்பியமும், ‘சேக்கிழார் பிள்ளைத் தமிழ்’ என்ற பிரபந்தமும், ‘ஆதி குமரகுருபர சுவாமிகள் சரித்திரம்’ என்ற வாழ்க்கை வரலாறும் பிரதானமானவை.<br />
<br />
1851-ல் திரிசிரபுரத்திலிருந்தவர்கள் விரும்பிய வண்ணம் சைவ எல்லப்ப நாவலர் இயற்றிய ‘செவ்வந்திப்புராணம்’ என்னும் நூலைப் பதிப்பித்தார். இதன்மூலம் பதிப்பாசிரியருக்கும் இலக்கணமானார்.<br />
<br />
<span style="color: magenta;"><b>மயிலாடுதுறை வாசம்:</b></span><br />
<br />
பிறகு தமிழார்வம், ஆசிரியத் தொழில் நிமித்தமாக, 1860 முதல் மாயூரம் எனப்படும் மயிலாடுதுறையில் வசிக்கத் தொடங்கி, அங்கிருந்து அடிக்கடி திருவாவடுதுறை மடத்துக்குச் சென்று வந்தார் மீனாட்சிசுந்தரம் பிள்ளை.<br />
<br />
இவரது அறிவுத் திறனை அறிந்த திருவாவடுதிறை ஆதீனத்தால் அங்கு வித்துவானாக நியமிக்கப்பட்டார். ஆதீனகர்த்தர் அம்பலவாண தேசிகர் மீது கலம்பகம் பாடினார். ஆதீனகர்த்தர் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு ‘மகாவித்துவான்’ என்ற பட்டத்தை வழங்கி மகிழ்ந்தார். அன்றுமுதல் ‘மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை’ என்று அழைக்கப்பட்டார்.<br />
<br />
1871-ல் உ.வே.சாமிநாதையர் மகாவித்துவானின் மாணாக்கரானார். அவர் இறுதிவரை தம் ஆசானோடிருந்து பல்வேறு நூல்களைப் பாடங்கேட்டார். அதன் விளைவாகவே தமிழ்ப் பற்றும் நூல்கள் மீதான நேசமும் பெற்றவரானார் உ.வே.சா. தமிழின் முதல் புதினமான ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ எழுதிய வேதநாயகம் பிள்ளையும் பிள்ளையவர்களின் அறிவமுதைப் பெற்றவரே.<br />
<br />
மகாவித்துவான் பிள்ளையவர்கள், பட்டீஸ்வரம், திருப்பெருந்துறை, குன்றக்குடி முதலிய தலங்களுக்குச் செல்வது வழக்கம். இது அவரது பக்திக்கு உதாரணமாக இருந்தது. செல்லுமிடம் எல்லாம் தலபுராணம், பதிகம் பாடுதல் அன்னாரது இயல்பு. எனவே பல தலங்க்கள் இவரால் பாடல் பெற்றன.<br />
<br />
பிள்ளையவர்கள் 1876-ல் நோய்வாய்ப்பட்டார். மாணாக்கர் புதுச்சேரி சவேரிநாத பிள்ளை மார்பில் சாய்ந்த வண்ணம், திருவாசத்தின் அடைக்கலப்பத்தை உ.வே.சா பாட, தை மாதம் 20-ஆம் நாள், செவ்வாய்க்கிழமை, 01.02.1876-ல் தம் 61-ஆம் வயதில் சிவன் சேவடி சேர்ந்தார்.<br />
<span style="color: magenta;"><b><br />எழுத்தில் அடக்க இயலாச் சிறப்பு:</b></span><br />
<br />
பத்தொன்பதாம் நூற்றாண்டின் கம்பன், இணையிலாப் புலவன், புலவர்களின் புலவன், மெய்ஞானக் கடல், நாற்கவிக்கிறை, சிரமலைவாழ் சைவசிகாமணி முதலிய முப்பதுக்கு மேற்பட்ட பட்டங்களையும் விருதுகளையும் பெற்றவர் பிள்ளையவர்கள்.<br />
<br />
இவர் வாழ்ந்த காலத்தில் செல்வம் பெறவில்லையே தவிர, செல்வாக்கு குறைந்ததில்லை. தமிழுக்கு இவரால் மரியாதையும் அபிமானமும் பெருகியது. அவர் செல்வம் நாடாதவராக இருந்ததே, அவரது குடும்பத்தின் வறிய நிலைக்குக் காரணம் ஆனது. ஆனால், அதை பிள்ளையவர்கள் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. தனது குடும்பம் வறுமையில் உழன்றபோதும் நாடி வந்த மாணாக்கர்களுக்கு உறைவிடத்துடன் உணவும் அளித்து தமிழ் போதித்த பெருந்தகை அவர்.<br />
<br />
அவரை நாடி செல்வம் சேர்க்கும் பல வாய்ப்புகள் வந்தன. அவர் நினைத்திருந்தால், சம்மதித்திருந்தால், அவர் காலடியில் பொன்னைக் கொட்ட பலர் தயாராகவே இருந்தனர். ஆனால், பொன்னுக்கு அவர் மயங்கவில்லை. அவர் மனம் (மனம் என்றே கூற வேண்டும், மனது என்று கூறக் கூடாது எனபது பிள்ளையவர்களின் விளக்கம்) முழுவதும் தமிழ் வளர்ச்சியிலும், சைவ நாட்டத்திலும் தான் ஆழ்ந்திருந்தது.<br />
<br />
தனது குறுகிய வாழ்நாளில், இவர் இயற்றிய நூல்களின் எண்ணிக்கை மலைக்க வைக்கும் அதன் பட்டியல்:<br />
<br />
தலபுராணங்கள்- 22<br />
சரித்திரம்- 3<br />
மான்மியம்- 1<br />
காப்பியங்கள்- 2<br />
பதிகம்- 4<br />
பதிற்றுப்பத்தந்தாதி- 6<br />
யமக அந்தாதி- 3<br />
மாலை- 7<br />
பிள்ளைத்தமிழ்- 10<br />
கலம்பகம்- 2<br />
கோவை- 3<br />
உலா- 1<br />
தூது- 2<br />
குறவஞ்சி- 1<br />
பிறநூல்கள்- 7<br />
<br />
-என இவர் செய்துள்ள மொத்த நூல்கள் ஏறத்தாழ 80.<br />
<br />
மேலும் இவர் இயற்றிய தனிச் செய்யுள்களின் எண்ணிக்கை அளவிடற்கரியது. எந்தப் பொருளைக் கொடுத்துப் பாடச் சொன்னாலும், சில நிமிடங்களில் யாப்பமைதி கெடாமல், தெளிவாகப் புரியும் வண்ணம் பாடுபவர் என்பதால், அவரது அன்பர்களும், நண்பர்களும் இவரால் பாடப்பெற்றுள்ளனர். அவற்றின் தொகுப்பு பல்லாயிரத்தைத் தாண்டக் கூடும்.<br />
<br />
பிள்ளையவர்கள் பாடிய பல பாடல்கள் பதிப்பிக்காமல் மறைந்து போயின. ஆயினும் அவர்தம் முதன்மைச் சீடரான தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிள்ளையவர்களின் 5,021 பாடல்களைப் பாதுகாத்து வழங்கி உள்ளார்.<br />
<br />
“பார்கொண்ட புகழ் முழுதும் ஒருபோர்வை<br />
எனப் போர்த்த பண்பின்மிக்க<br />
ஏர்கொண்ட மீனாட்சி சுந்தரவேள்.”<br />
<br />
-என்று சி.சாமிநாத தேசிகர் இவரைப் பாராட்டுவார்.<br />
<br />
பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த தலைசிறந்த தமிழறிஞர் பிள்ளையவர்கள். ‘கருவிலே திருவுடையார்’ எனக் கூறுவது போல பிள்ளையவர்கள் கருவிலே தமிழுடையார்.<br />
<br />
தமிழ் இலக்கிய வரலாற்றில் கவிச்சக்கரவர்த்தி கம்பருக்குப் பின் ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்த பின்னர், வாராது வந்துதித்த புலமைக் கதிரவன் பிள்ளையவர்கள்.<br />
<br />
இவரால் வளமுற்ற தமிழ் பிற்காலத்தில் மகாகவி பாரதியால் மறுமலர்ச்சி கண்டது. அவ்வகையில், பக்தி இலக்கியத்துக்குப் பிந்தைய தமிழை தனது சீடன் உ.வே.சா. வாயிலாக பாரதிக்கு மடைப்படுத்திக் கொடுத்தவர் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களே.<br />
<br />
தனது ஆசான் பிள்ளையவர்கள் மீது சீடர் உ.வே.சா. எழுதிய கீழ்க்காணும் பாடல் (ஆசிரிய விருத்தம்), குருவின் பெருமையை தரணி உள்ள வரை நிலைக்கவைக்கும்:<br />
<br />
சுத்தமலி துறைசையிற்சுப் பிரமணிய<br />
தேசிகமெய்த் தூயோன் றன்பால்<br />
வைத்தமலி தருமன்பின் வாழ்ந்தினிய<br />
செந்தமிழை வளர்த்தென் போல்வார்க்<br />
கத்தமலி நூல்கணவின் மீனாட்சி<br />
சுந்தரப்பேர் அண்ண லேநின்<br />
புத்தமுத வாக்கினையு மன்பினையு<br />
மறவேனெப் போது மன்னோ.<br />
<br /></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1134172536605043424.post-57075324749608259082015-01-01T01:44:00.001+05:302016-06-19T18:29:02.521+05:30கோவில்கள்- அன்றும் இன்றும் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h3 style="text-align: left;">
<span style="color: blue;">-ஜெகதீஸ்வரன் நடராஜன்</span></h3>
<div>
<span style="color: white;">.</span></div>
<div style="text-align: right;">
<span style="background-color: #134f5c; color: white; font-size: large;">சிந்தனைக்களம்</span></div>
<div style="text-align: right;">
<span style="background-color: white; color: white; font-size: large;">.</span></div>
<div>
<h4 style="text-align: left;">
<span style="color: magenta;">அந்தக் காலத்தில் கோவில்கள்</span></h4>
<div>
<span style="color: magenta;"><br /></span></div>
<div>
கோயில், வழிபாட்டுக்கு உரிய இடம் மட்டுமல்ல. அதன்மூலமாக இசை, கலை, மருத்துவம், சிறுவணிகம் என்பவையும் ஒன்றோடு ஒன்றாகக் கலந்திருக்கின்றன. போக்கிடம் இல்லாதவர்களுக்கான இடமாகவும், மக்கள் கூடும் வெளியாகவும் ஒரு காலத்தில் கோயில்கள் இருந்திருக்கின்றன. காலத்தின் சாட்சியாய், கோடிக் கணக்கான மனிதர்களின் ஆசைகளை சமர்ப்பிக்கும் இடமாக இருந்துள்ளன கோயில்கள்.<br />
<a name='more'></a><br />
<br />
ஓதுவார்களின் தேவாரப் பாடல்களும், நடன மங்கைகளின் நாட்டியங்களும், நாதஸ்வர, மேளதாளங்களின் சங்கம இசையும், படப்படக்கும் புறாக் கூட்டங்களும், காணக் காணத் திகட்டாத சிற்பக் கலைகளும், பண்டாரங்களின் ஞானப்பாடல்களும் நிறைந்திருக்க, எண்ணெய் விளக்கின் மஞ்சள் வெளிச்சத்தில் தெரியும் மயக்கமான தோற்றமும், மனதை நிறைக்கும் மணி ஓசையும், சந்தன விபூதி மணமும், வீதியில் அசைந்துபோகும் தேரும் , திருவிழாவும், மக்களோடு மக்களாய் ஒன்றி இருந்தன.<br />
<br />
ஒவ்வொரு கோவிலுக்கும் சொந்தமாக பல ஆயிரக் கணக்கான ஏக்கரில் நிலம் உண்டு, நேந்து விடுபவர்களால் மாடுகளும், ஆடுகளும், கோல்களும் நிரம்பி வழிய அதை விவசாயிகளும், ஆடு மாடு மேய்ப்பவர்களும் பார்த்துக் கொண்டார்கள். அந்தக் கால வாழ்க்கை முறையில் ஒரு சிறந்த கணக்கியல் வல்லுனராகக் கூட கோவில் இருந்துள்ளது.<br />
<br />
மாடுகளை மேய்ப்பவனுக்கு அதற்கான நிலமும் கோவிலில் கொடுக்கப்பட்டது. அந்த மனிதன் கடவுளுக்கு நைவேத்யம் செய்ய வேண்டிய பாலை மட்டும் கொடுத்துவிட்டு, மாட்டையும், நிலத்தையும் அனுபவிக்கலாம். அவன் சரியாக பாலைக் கொடுக்காத பட்சத்தில் அந்த நிலமும், மாடுகளும் பறிக்கப்படும். இது ஒரு எடுத்துக்காட்டு மட்டும் தான். இப்படி ஏகப்பட்ட நுட்பமான கோட்பாடுகள் உண்டு.<br />
<br />
ஓதுவார்கள், பண்டாரங்கள், நாட்டியக் கலைஞர்கள், சிற்பிகள், ஓவியர்கள், இசை மேதைகள், புலவர்கள், சுத்தம் செய்பவர்கள், மாடு மேய்ப்பவர்கள், விவசாயிகள், பூ வியாபாரிகள் என கோடி, கோடியான மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கியுள்ளன அந்தக் கால கோவில்கள். </div>
<div>
<br /></div>
<div>
இங்கு வியாபாரிகளில் பூ வியாபாரிகள் என குறிப்பிட்டுச் சொல்ல ஒரு காரணம் இருக்கிறது. அது என்னவென்றால் நம்முடைய பூஜை முறையே பூவினை கடவுள் மீது அர்ச்சித்து வணங்குவது தான். <br />
<br />
ஒட்டுமொத்தமாக சமூகம் முழுமைக்கும் பயன்பட்டுவந்த இந்தக் கோயில்களி்ன் இன்றைய நிலையைப் பற்றி அடுத்து காண்போம்.</div>
<div>
<br />
<h4 style="text-align: left;">
<span style="color: magenta;">இந்தக் காலத்தில் கோவில்கள்</span></h4>
<div>
<span style="color: magenta;"><br /></span></div>
<div style="text-align: center;">
<img height="284" src="https://2.bp.blogspot.com/_lqVJsyltMrU/S80y6IVKagI/AAAAAAAABhA/Y1mfw8N_dsU/s400/tblfpnnews_27822077275.jpg" width="400" /></div>
<div>
<br /></div>
பல்வேறு சிறப்புகளைக் கொண்ட அந்தக் கால கோயில்களைப் பற்றி பார்த்தோம். மேலே இருக்கும் இந்தப்படத்தைப் பார்த்தாலே இன்றைய கோயில்களின் நிலைமை பலருக்கும் புரியும். மிகப் பெரிய கோயில்களைப் பராமரிக்க இப்போது நம்மால் முடிவதில்லை. அதனால் நமக்கு ஏற்றவாறு கோயில்களை மாற்றிக் கொண்டோம். <br />
<br />
அந்த மாறுதல்களில் பழமையான விஷயங்கள் அனைத்தையுமே நாம் மறந்து விட்டோம். கடவுள் இருக்கும் இடமாக மட்டும் அந்தக் காலத்தில் கோயில்கள் உருவாக்கப்படவில்லை. மக்களுக்கு வாழ்வாதாரம் தரவும், பொழுது போக்கிற்கிற்காவும், நம்பிக்கை ஊட்டுவதற்காகவும் என அடுக்கிக் கொண்டே போகலாம்.</div>
<div>
<br /></div>
<div>
பழங்காலக் கோயில்களைப் பராமரிக்க இயலாமல் போனாலும், இந்த அடிப்படை விஷயங்களையாவது நாம் பாதுகாத்து இருக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் நாம் தவறவிட்டுவிட்டோம். <br />
<br />
<div style="text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/_lqVJsyltMrU/S800xfoFVNI/AAAAAAAABhI/M2k72t_rqao/s1600/1.1254490675.inside-a-small-temple.jpg"><img border="0" src="https://2.bp.blogspot.com/_lqVJsyltMrU/S800xfoFVNI/AAAAAAAABhI/M2k72t_rqao/s400/1.1254490675.inside-a-small-temple.jpg" /></a></div>
<br />
ஒரு சிறிய அறை. அந்த அறையில் ஏதேனும் ஒரு கடவுள் உருவம். இது தான் இன்றைய நவீனக் கோயில்கள். அதுவும் அந்தக் கோயில்களுக்கென தனியான நிலம் ஒதுக்கி கட்டுவதில்லை. சாலைகளில் மக்கள் நடப்பதற்கென உள்ள பாதையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்படுகின்றது. மக்களுக்கு உதவுவதற்காக கட்டப்பட்டுகின்ற கோயில்களின் அடிப்படையே இங்கு சிதறிப் போய்க் காணப்படுகிறது.<br />
<br />
பல ஆயிரம் மக்களுக்கு பயன்படுகின்ற இடமாக இருந்த கோயில்கள், இன்று மக்களின் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கின்றன. அடிப்படையான விஷயமே பாதிக்கப்பட்டுவிட்டதால், கோயில்களில் வாழ்ந்த கலைகளும், அதனை நம்பி வந்த கலைஞர்களும் இன்று காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள்.<br />
<br />
பழம்பெருமை வாய்ந்த கோயில்களேனும் இன்றும் இயங்கிக் கொண்டு தானே இருக்கின்றன என்று எண்ணுகிறீர்களா?. அடுத்த பகுதி, அந்தக் கோயில்களில் நடக்கும் கொடுமைகளைப் பற்றிதான்.</div>
<div>
<br />
<h4 style="text-align: left;">
<span style="color: magenta;">இன்றைய கோவில்களின் நிலைமை</span></h4>
<div>
<span style="color: magenta;"><br /></span></div>
இன்று பெரிய கோயில்கள் ஒரு வணிக நிறுவனம். வாசலில் செருப்பை அவிழ்த்துப் போடுவதில் துவங்கி, ஒவ்வொரு பத்தடிக்கும் ஏதோ காரணம் சொல்லிப் பணம் கறக்கும் வித்தையை ஒரு கூட்டமே தெரிந்து வைத்திருக்கிறது. அர்ச்சனை, அபிஷேகம் எனத் தொடங்கி, மாதம் முழுவதும் செய்ய, வருடம் முழுதும் செய்ய என பணம் பிடுங்குவதில் குறியாக இருக்கிறது.<br />
<br />
மக்களிடமிருந்து காசுகளை வாங்கிக் கொண்டு அவர்களையே வேலி வைத்துக்கொண்டு வரிசைப்படுத்துன்றது அறநிலையத் துறை. விழாக் காலங்களில் எறும்புகளைப் போல வரிசையாக கோவில் வாசலிலிருந்து கருவறை வரையும், பின்பு கருவறையிலிருந்து வாசல் வரையிலும் வேலியில் நகர்கிறார்கள் மக்கள். தரிசனத்திற்கு முதல், இரண்டாம் வகுப்புக் கட்டணங்கள், சிபாரிக் கடிதங்கள், கையூட்டு, பல்லிளிப்பு என நடைமுறைத் தந்திரங்களின் கூடாரமாகி விட்டது கோவில்.</div>
<div>
<br />
<div style="text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/_lqVJsyltMrU/S9b-sX6aKBI/AAAAAAAABhQ/C69A02SMF0I/s1600/Tharasuram004.jpg"><img border="0" src="https://4.bp.blogspot.com/_lqVJsyltMrU/S9b-sX6aKBI/AAAAAAAABhQ/C69A02SMF0I/s400/Tharasuram004.jpg" /></a></div>
<br />
இப்போது பிரார்த்தனைகள் என்பவை வெறும் சடங்கு அவ்வளவு தான். எனவே தெய்வத்தைத் தவிர அங்கு கவனிப்பதற்கு ஏதுமில்லாமல் போய்விட்டது. கோயிலுக்குச் செல்லும் ஒரு சதவீத மக்கள் கூட சிற்பங்களையோ, ஓவியங்களையோ, பிரகாரச் சுவர் முழுக்க செதுக்கியிருக்கும் கல்வெட்டுகளையோ பார்ப்பதேயில்லை. சில இடங்களில் ஒழுங்கு வேலி அமைக்க நல்ல கலைப் படைப்புகள் சிதைக்கப்பட்டிருக்கின்றன. மற்ற சில இடங்களிலோ பாதுகாப்பு என்று பெயரில் இரும்புச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றன.<br />
<br />
பலரும் பார்க்க வேண்டுமென எண்ணி எண்ணிச் செதுக்கிய அந்தச் சிற்பிக்கும், உயிர் கொடுத்த வரைந்த ஓவியனுக்கும் செய்யும் நன்றி இது தானோ? இது போதாதென சில வள்ளல்கள் செய்யும் கொடுமை அளவிடமுடியாது. எல்லா கோயில்களிலும் எரியும் டியூப் லைட்டிலிருந்து மின்சார மணி வரை உபயதாரர்களின் பெயர்கள் முழு முகவரியோடு, முடிந்தால் கைப்பேசி எண்களோடும் காணப்படுகின்றன. சில கோவில்களில் கருவறையில் இருக்கும் கடவுளைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் உபயதாரர்களின் பெயர்களே இருக்கின்றன. <br />
<br />
கலையும், மனிதர்களும் வாழ்ந்த இடமாக இருந்த கோயில்கள், இன்று பணம் பறிக்கும் சுயநலமிகளாலும், எதைக் கொடுத்தாவது தங்கள் பிராத்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கும் இரக்கமற்றவர்களாலும் நிரம்பிக் கிடக்கிறது. இதையெல்லாம் பார்க்கும் போது கடவுள் கோயிலிருந்து வெளியேறி வேறு இடம் தேடிக் கொண்டிருக்கின்றானோ எனத் தோன்றுகிறது.</div>
<div>
<br /></div>
<blockquote class="tr_bq">
காண்க: <b><a href="http://hindutreasure.blogspot.in/2010/04/blog-post_27.html" target="_blank">இந்து மதம் ஒரு பொக்கிஷம்</a></b></blockquote>
<div>
<br />
<br /></div>
</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1134172536605043424.post-85899882966681810962014-12-19T16:40:00.000+05:302016-06-19T18:29:18.035+05:30தே.சி.க. மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlTbyHSUxfL3kYUiCuRK5HT1N13YF3t71E3T_ATwIoeDAwrcvTVzWQ7cpvzRsOEXjGoDI6ovpOUYAgMjm_da_TAxWVZFoQATJu4Vzayljc3-026uUW21u5f1_XU7S2p5ANZIReH4bXe1E/s1600/DCK1.png" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlTbyHSUxfL3kYUiCuRK5HT1N13YF3t71E3T_ATwIoeDAwrcvTVzWQ7cpvzRsOEXjGoDI6ovpOUYAgMjm_da_TAxWVZFoQATJu4Vzayljc3-026uUW21u5f1_XU7S2p5ANZIReH4bXe1E/s1600/DCK1.png" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><div dir="ltr">
<br /></div>
<div dir="ltr">
</div>
<div dir="ltr">
மாநில துணைத்தலைவர் .திரு.சா<wbr></wbr>.சிவானந்தம்,அகில
பாரத அமைப்பாளர் திரு. பேரா.சதானந்த சப்ரே, மாநிலத் தலைவர் திரு
ம.வே.பசுபதி, மாநில துணைத் தலைவர் திரு.தஞ்சை வெ.கோபாலன் ஆகியோர்
அமர்ந்திருக்கும் காட்சி .</div>
</td></tr>
</tbody></table>
<br />
<b>தமிழத்தில்</b>
தேசிய, தெய்வீக சிந்தனைகளைப் பரப்பும் பணியில் சங்க குடும்ப அமைப்புகளில்
ஒன்றான 'தேசிய சிந்தனை கழகம்' செயல்பட்டு வருகிறது. தேசிய சிந்தனைக்
கழகத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் கடந்த கார்த்திகை மாதம் 28-ம்
தேதி (2014, டிசம்பர் 14) ஞாயிற்றுக் கிழமை அன்று சென்னை, சேத்துப்பட்டு,
மகரிஷி வித்யாமந்திர் பள்ளி அரங்கில் நடைபெற்றது.<br />
<a name='more'></a> <br />
<br />
காலை 10.00
மணியளவில் துவங்கிய நிகழ்ச்சிக்கு சென்னையைக் சேர்ந்த தமிழறிஞர் பேரா.
ம.வே.பசுபதி தலைமை வகித்தார். எழுத்தாளர் தஞ்சை வே.கோபாலன், ஈரோடு
செங்குந்தர் கல்வி அறக்கட்டளையின் செயலாளர் சா.சிவானந்தன் ஆகியோர்
முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக 'பிரக்ஞா பிரவாஹ்' அமைப்பின்
அகில பாரத அமைப்பாளர் முனைவர் பேரா. சதானந்த சப்ரே
அவர்கள் கலந்துகொண்டார்.<br />
<div dir="ltr">
<br />
திருப்பனந்தாள் கல்லூரி முன்னாள்
முதல்வரும், டாக்டர் உ.வே.சா. நூலகத்தின் முன்னாள் நிர்வாகியும் மூத்த
தமிழறிஞருமான பேரா. ம.வே.பசுபதி அவர்கள் தனது தலைமையுரையில் , "தமிழகம்
என்றும் தேசியத்தின் வலுவான வேராக இருந்துள்ளது. இதனை மேலும் வலுப்படுத்த
மாதம் ஒருமுறை சந்திப்புகளை நடத்த வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை
அறிஞர்களை அழைத்து ஆய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும்" என்று
குறிப்பிட்டார் .</div>
<br />மேலும் அவர் பேசுகையில்,
"இந்த ஆண்டு தமிழின் மிகச் சிறந்த அறிஞரும், புலவருமான திரிசிரபுரம்
மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் 200-வது பிறந்த ஆண்டான 2014-15ஐ தேசிய சிந்தனை
கழகம் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறது. இதை அறிந்த
திருவாவடுதுறை ஆதீனம் தனது மடத்திலேயே அவருக்கு விழா எடுக்கத்
தீர்மானித்துள்ளது" என்றார். தேசிய சிந்தனைக் கழகத்தின்
ஆரம்பகால உறுப்பினரான புலவர் ராமமூர்த்தி, தேசிய சிந்தனைக் கழகத்தின்
தோற்றம் குறித்தும், இதுவரை எவ்வாறு தேசிய சிந்தனைக் கழகம் இயங்கி வந்தது
என்பதையும் சுருக்கமாக எடுத்துரைத்தார். இதையடுத்து தேசிய சிந்தனைக்
கழகத்தின் மாநில, கோட்ட, மாவட்ட பொறுப்பாளர்களை பேரா. சதானந்த சப்ரே,
பேரா. ம.வே.பசுபதி ஆகியோர் அறிவித்தனர். <b>(காண்க: பட்டியல்) </b><br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiN65-KI69Mnnt0ye8ZUlse50IjI2wKB5t31fisJ8QsOZHoQif3M81oox2xdY16kf28ZRdByctjA24cb-V9EElh77YMUgA569EomlX1RF4WFpd7pQNVwmVFikePQDvvTfFAorJLJ7PAtSs/s1600/DCK2.png" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiN65-KI69Mnnt0ye8ZUlse50IjI2wKB5t31fisJ8QsOZHoQif3M81oox2xdY16kf28ZRdByctjA24cb-V9EElh77YMUgA569EomlX1RF4WFpd7pQNVwmVFikePQDvvTfFAorJLJ7PAtSs/s1600/DCK2.png" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">கலந்துகொண்டோரில் ஒரு பகுதி </td></tr>
</tbody></table>
<br />
நிறைவாக
'பிரக்ஞா பிரவாஹ்' அமைப்பின் அகில பாரத அமைப்பாளர் மா.ஸ்ரீ பேரா.சதானந்த
சப்ரே அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர தனது உரையில் கூறியதாவது:<br /><br />"எந்த
ஒரு சமுதாயத்திலும் அறிவுலகினர் எனப்படும் சிந்தனையாளர்கள் முதன்மை
பெறுகிறார்கள். அவர்கள் தங்கள் அறிவுத் திறத்தை சமுதாய மேம்பாட்டுக்கு
பயன்படுத்த வேண்டும். அதிலும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு உதவும் வகையில்
அவர்கள் பணிபுரிய வேண்டும். தேசம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு
காணவும் ஆலோசனைகளை அளிக்கவும் அறிவுலகினர் முன்வர வேண்டும்."அறிவுலகினர்
மத்தியில் இக்கருத்துக்களைப் பரப்பவும், அவர்களை தேசிய நீரோட்டத்தில்
இணைக்கவும் 'பிரக்ஞா பிரவாஹ்' செயல்புரிந்து வருகிறது. பிரக்ஞா பாரதி,
மந்தனா, பாரதீய விசார் மன்ச் என, இது ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு
பெயரில் இயங்குகிறது. தமிழகத்தில் '<b>தேசிய சிந்தனைக் கழகம்</b>''என்ற
பெயரில் நாம் இயங்கி வருகிறோம். அறிவுலகினர் பேசுவதற்கு மட்டுமே தயாராக
உள்ளனர்; அவர்கள் பிறர் கூறுவதை செவிகொடுக்க வருவது கடினம் என்ற பொதுவான
கருத்து உண்டு. அது முன்னேற்றத்துக்கு உதவாது. அதற்கு மாறாக நமது நாட்டின்
இயல்பான தன்மைக்கு ஏற்றதாக அறிவுலகினர் சிந்திக்க வேண்டும்.<br />
<br />
"தேசிய
சிந்தனைக் கழகம் மூன்று விதமான பணிகளில் கவனம் கொடுக்க வேண்டும்.
முதலாவதாக, சமூக, தேசிய அம்சங்களில் பொதுமக்களின் சிந்தனைகளை தரம் உயர்த்த
வேண்டும். அடுத்ததாக தேசிய சிந்தனைக் கழகத்தில் உள்ளவர்கள் பல துறைகளிலும்
நிபுணர்களாக மாற வேண்டும். நாட்டின் ஒவ்வொரு பிரச்னை குறித்தும் ஆழ்ந்த
அறிவுள்ள குழுக்கள் உருவாக வேண்டும். மூன்றாவதாக, கல்வித்துறையிலும்
அவர்களின் சுவடுகள் பதிக்கப்பட வேண்டும். <br />
<br />கல்வித்துறையில்
தற்போதுள்ள தேர்ச்சி மனநிலை மாற்றப்பட வேண்டும். மாணவர்கள் படிப்பது
வகுப்புத் தேர்ச்சிக்காக மட்டுமல்ல, அவர்களின் ஞானம் விரிவடைய வேண்டும்.
அப்போது தான் மாணவர்களுக்கும் இளைய சமுதாயத்தினருக்கும் தாங்களும்
சமுதாயத்தின் அங்கமே என்ற எண்ணம் ஏற்படும். நமது பெருமிதம் மிக்க
பாரம்பரியச் சிறப்பு குறித்து மாணவ்ர்கள் அறிந்திருக்க வேண்டும். அதற்காக
நமது தேசத்தின் சிறப்புகளையும் தேசிய சிந்தனையையும் அறிவுலகினர்
மத்தியிலும் கல்வித் துறையிலும் பரப்ப வேண்டும்.<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuILC_VhljXnM188YIgzReXdJYh0lvAdH7jITHRhzx7BONZSBvI9UniQwQRuZck2z8oLpJ1X3n9Kk-wvivcM_GxUheV8Y_PiGIZ1Mtb6dj-h4evKVe-M3fLoiQSI0zM0A4CW4MytQe0-g/s1600/DCK3.png" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuILC_VhljXnM188YIgzReXdJYh0lvAdH7jITHRhzx7BONZSBvI9UniQwQRuZck2z8oLpJ1X3n9Kk-wvivcM_GxUheV8Y_PiGIZ1Mtb6dj-h4evKVe-M3fLoiQSI0zM0A4CW4MytQe0-g/s1600/DCK3.png" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">கலந்துகொண்டோரில் இன்னொரு பகுதி </td></tr>
</tbody></table>
கல்வித்துறையில்
மூன்று படிநிலைகளில் நாம் செயல்பட வேண்டும். முதலில் கல்வித் திட்டத்தில்
இடம் பெறாத நல்ல அம்சங்கங்களை மாணவர்களுக்கு தனிப்பட்ட முயற்சியால் அளிக்க
வேண்டும். அடுத்து கல்வித் திட்டத் தயாரிப்புக் குழுவில் சேர்ந்து
பணியாற்ற வேண்டும். இறுதியாக, மாணவர்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு
வித்திடும் வகையில் கல்வித் திட்டம் மாற்றப்பட வேண்டும். <br /><br />முதலாளித்துவமும்,
பொதுவுடைமை தத்துவமும் சமுதாய நலனுக்கு முழுமையாக ஏற்றவையல்ல என்பதை உலகம்
உணர்ந்துவிட்டது. இந்த வெற்றிடத்தை பாரதீய சிந்தனைகளைக் கொண்டு நிரப்ப
நாம் தயாராக வேண்டும்" என்றார் பேரா. சதானந்த சாப்ரே.இந்நிகழ்ச்சியில்,
சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் விவேகானந்தா இளைஞர்
அமைப்பு துவக்கப்பட்டது. அதன் நிர்வாகிகளாக ஆசிரியர்கள் ராஜேந்திரன்,
அருண்குமார், பள்ளியின் துணை முதல்வர் ஞானப்பிரியா இளங்கோவன் ஆகியோர்
அறிவிக்கப்பட்டனர் . நிறைவில் மதிய உணவுடன் நிகழ்ச்சி முடிவுற்றது . <br />
<br />
<div style="text-align: right;">
<div style="text-align: right;">
<b>-முத்துவிஜயன் </b></div>
</div>
<br />
<blockquote class="tr_bq">
<h3 style="text-align: left;">
<span style="color: red;">தேசிய சிந்தனைக் கழகம், தமிழ்நாடு</span></h3>
<h3 style="text-align: left;">
<span style="color: red;">மாநில நிர்வாகிகள் பட்டியல்:</span></h3>
<h3>
</h3>
<br />
<b>மாநிலத் தலைவர்:</b><br />
<br />
திரு. முனைவர் ம.வே.பசுபதி, சென்னை <br />
<br />
<b>மாநில துணைத் தலைவர்கள்:</b><br />
<br />
1. திரு. சா.சிவானந்தன், ஈரோடு.<br />
<br />
2. திரு. தஞ்சை வெ. கோபாலன், தஞ்சாவூர்.<br />
<br />
<b>மாநில அமைப்புச் செயலாளர்:</b><br />
<br />
திரு. ம.கொ.சி.இராஜேந்திரன்.<br />
<br />
<b>மாநில பொதுச் செயலாளர்:</b><br />
<br />
திரு. கவிஞர் குழலேந்தி, திருப்பூர்.<br />
<br />
<b>மாநிலச் செயலாளர்கள்:</b><br />
<br />
1. திரு. இரா. சத்தியப்பிரியன், சேலம்.<br />
<br />
2. திரு. ஆதலையூர் த.சூரியகுமார், மதுரை.<br />
<br />
3. திரு. பொன். பாண்டியன், குடியாத்தம்.<br />
<br />
<b>மாநிலப் பொருளாளர்:</b><br />
<br />
திரு. முனைவர் தா. இராஜகுமார், சென்னை.<br />
<br />
இவர்களைத் தவிர, மாநிலக் குழு உறுப்பினர்கள் 25 பேரும், கோட்ட, மாவட்ட நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டனர்.</blockquote>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1134172536605043424.post-13786089335869569042014-12-15T14:23:00.001+05:302016-06-19T18:30:19.800+05:30ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் எது? <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://www.tamil.com/wp-content/uploads/2013/10/Rajandra_Chola_I.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://www.tamil.com/wp-content/uploads/2013/10/Rajandra_Chola_I.jpg" width="215" /></a></div>
<br />
<b>2014</b> ஜூலை மாதம் 24, 25-ம் தேதிகளில் மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழன் பேரரசராக முடிசூடிய ஆயிரமாவது ஆண்டையும், அவர் பிறந்த ஆடி மாதத்துத் திருவாதிரை நாளையும் ‘கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம்’ மிகச் சிறப்பாகக் கொண்டாடி உலகத் தமிழ் மக்களையும் வரலாற்று ஆர்வலர்களின் கவனத்தையும் கங்கை கொண்ட சோழ புரத்தின்பால் ஈர்த்தனர்.<br />
<br />
விழா நடந்து முடிந்த பிறகு, சில வரலாற்று ஆர்வலர்கள் ‘சோழர் வரலாறு’என்ற நூலை எழுதிய கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியும், ‘பிற்காலச் சோழர் வரலாறு’ என்ற நூலை எழுதிய சதாசிவப் பண்டாரத்தாரும் முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் மார்கழி மாதத்து ஆதிரை என்று கூறியிருக்கும்போது, இவர்கள் எப்படி ஆடி மாதத்துத் திருவாதிரை நாளை அவருடைய பிறந்த நாள் விழாவாகக் கொண்டாடலாம் எனக் குற்றம் கூறுவதோடு, அது வரலாற்றுப் பிழை என்றும் சாட முற்பட்டுள்ளனர்.<br />
<br />
வரலாறு என்பது எழுதி முடிக்கப்பெற்ற ஒன்று அல்ல. இந்தியத் தொல்லியல் துறையால் படி எடுத்துப் பதிவு செய்யப்பட்ட கல்வெட்டுகள் அத்தனையும் இதுவரை அச்சில் வெளிவரவில்லை. மேலும், ஆண்டுதோறும் பல நூற்றுக் கணக்கான கல்வெட்டுச் சாசனங்களும் சில செப்பேட்டுச் சாசனங்களும் கண்டுபிடிக்கப்பட்டு வெளிவந்துகொண்டிருக்கின்றன. புதிய தரவுகள் கிடைக்கும்போது பழைய கருத்துக்களும் முடிவுகளும் நிச்சயம் மாற்றம் பெறும்.<br />
<a name='more'></a><br />
<br />
<span style="color: blue;">திருவொற்றியூர் கல்வெட்டு:</span><br />
<br />
சாஸ்திரியாரும் பண்டாரத்தாரும் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் மார்கழித் திருவாதிரையாக இருக்கலாம் எனக் கணிக்க, அவர்கள் கண்ட சான்று திருவொற்றியூர் சிவாலயத்தில் உள்ள ஒரு கல்வெட்டுச் சாசனமே. ராஜேந்திர சோழனின் 31-ம் ஆட்சியாண்டான கி.பி.1043-ல் சதுரானன பண்டிதர் என்பவர் அந்தக் கோயிலில் 150 காசுகளை முதலீடு செய்து, மார்கழித் திருவாதிரை நாள் விழா கொண்டாட ஏற்பாடு செய்தார். அதுபற்றிக் கூறும் அந்தக் கல்வெட்டு, ‘திருவொற்றியூருடைய மகாதேவர்க்கு உடையார் ராஜேந்திர தேவர் திருநாள் மார்கழித் திருவாதிரை நாளன்று நெய்யாடி அருள வேண்டும் மிடத்துக்குச் சதுரானன பண்டிதன் தேவர் பண்டாரத்து வைத்த காசு நூற்று ஐம்பது’ என்று கூறுகிறது.<br />
<br />
சிவபெருமான் ஆதிரை நாளுக்கு உரியவன் என்பதைச் செம்மொழித் தமிழ் நூலான முத்தொள்ளாயிரம் வாழ்த்துப் பாடலில், ‘ஆதிரையான் ஆதிரையான் என்றென்று அயருமால் ஊர்திரை மேலி உலகு’ என்று கூறுகிறது.<br />
<br />
பண்டு முதல் இன்றளவும் எல்லா சிவாலயங்களிலும் மார்கழித் திருவாதிரை நாளை ஆருத்ரா தரிசனம் என்ற பெயரில் ஆடவல்லான் உலா செல்லும் திருநாளாகக் கொண்டாடிவருவது சேய்மையான மரபாகும். திரு ஞானசம்பந்தர் மயிலாப்பூரில் தேவாரப் பதிகம் பாடும்போது ‘ஆதிரைநாள் காணாதே போதியோ பூம்பா வாய்’ எனக் கூறி மார்கழி மாதத்து ஆதிரை நாளின் சிறப்பை எடுத்துரைத்துள்ளார். மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்பதைப் பல கல்வெட்டுச் சாசனங்கள் உறுதிசெய்கின்றன. எந்த மாதத்து ஆதிரை என்பதே ஆய்வுக்குரிய கேள்வி. திருவொற்றியூர் சாசனத்தில் மார்கழி ஆதிரை நாளை ராஜேந்திர சோழன் திருநாளாகச் சதுரானன பண்டிதர் கொண்டாடினார் என்ற செய்தியை மட்டுமே அறிய முடிகிறதே அன்றி, அதுதான் அவன் பிறந்த மாதம் என்ற எந்தவொரு குறிப்பும் அந்த சாசனத்தில் இல்லை.<br />
<br style="color: blue;" />
<span style="color: blue;">தக்கோலம், திருமழபாடி கல்வெட்டுகள்</span><br />
<br />
சென்னைக்கு அருகே தக்கோலம் என்ற ஊர் உள்ளது. இவ்வூரின் பழைய பெயர் திருவூறல். அங்கு இருக்கும் சிவாலயத்தில் உள்ள ராஜேந்திர சோழனின் மூன்றாமாண்டுக் கல்வெட்டு ஒன்று உடையார் ராஜேந்திர சோழ தேவர் திருநாள் திருவாதிரை நாள் எழுந்தருளும் திங்கட் திருவிழாக்களுக்குரிய (12 மாதத் திருவிழாக்களுக்கும் உரிய) நிவந்தங்கள் பற்றி விவரிக்கிறது. இந்தக் கல்வெட்டு ‘தென்னிந்தியக் கல் வெட்டுச் சாசனங்கள்’ தொகுதி 5-ல் 1378-ம் சாசனமாக இந்திய அரசின் கல்வெட்டுத் துறையால் வெளி யிடப்பட்டுள்ளது.<br />
<br />
இதனை நோக்கும்போது மாதந்தோறும் வரும் ஆதிரை நாளை ‘ராஜேந்திர சோழன் திருநாள்’ என்ற பெயரில் கொண்டாடியதை அறிகிறோம். இதே போன்று அரியலூர் மாவட்டம் திருமழபாடி கோயிலில் உள்ள ராஜாதிராஜ சோழனின் 4-ம் ஆண்டு கல்வெட்டில் மாதந்தோறும் ‘ராஜேந்திர சோழ தேவர் திருநட்சத்திரத்துத் திருவாதிரைத் திருநாள்’ என்ற பெயரில் அவ்விழா கொண்டாடப்பட்ட குறிப்பு உள்ளது.<br />
<br />
இச் செய்தியை ‘தென்னிந்தியக் கல்வெட்டுச் சாசனங்கள்’ தொகுதி 5-ல் உள்ள 633-ம் சாசனம் விவரிக்கின்றது. எனவே, ஒரு ஆண்டுக்குரிய 12 மாத ஆதிரை நாட்களும் ‘ராஜேந்திர சோழன் திருநாள்’ என்ற பெயரில் கொண்டாடப்பட்டதால் நாம் முதலில் கண்ட திருவொற்றியூர் சாசனம் குறிப்பிடும் மார்கழி மாதத்துத் திருவாதிரை ராஜேந்திர சோழன் திருநாளாகக் கொண்டாடப்பட்டது என்ற குறிப்பைக் கொண்டு அதுதான் அவர் பிறந்த மாதம் எனக் கொள்ள முடியாது. பேரறிஞர்கள் கூறிய அக்கூற்று ஓர் ஊகமேயன்றி உறுதியன்று.<br />
<br />
<span style="color: blue;">திருவாரூர் கல்வெட்டுக்கள்</span><br />
<br />
திருவாரூரில் உள்ள வீதிவிடங்கப் பெருமான் (தியாகேசர் திருக்கோயில்) திருக்கோயில் மூலட்டானத்தைக் கற்றளியாக எடுப்பித்து, அதற்குப் பொற்றகடுகளைப் போர்த்தியவர் ராஜேந்திர சோழன் என்பதை அக்கட்டுமானத்தில் உள்ள கல்வெட்டுச் சாசனங்கள் எடுத்துரைக்கின்றன. அவருடைய தொடர் கல்வெட்டுச் சாசனங்களின் இடையே உள்ள அந்த மன்னரின் 31-ம் ஆட்சியாண்டின் 244-ம் நாளில் பொறிக்கப்பட்ட அவருடைய ஆணையைக் குறிப்பிடும் சாசனத்தில், அவர் பிறந்த மாதமும் நட்சத்திரமும் அவருடைய தந்தை ராஜராஜ சோழன் பிறந்த மாதமும் நட்சத்திரமும் குறிக்கப்பட்டுள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கல்வெட்டை இந்திய தொல்லியல் துறையினர் 1919-ம் ஆண்டில் எண்:674-ம் சாசனமாகப் பதிவுசெய்து, ஆங்கிலத்தில் ஆண்டறிக்கைக் குறிப்பும் வெளியிட்டுள்ளனர். அதில் மாமன்னர் ராஜராஜன் ஐப்பசி மாதத்து சதய நாளிலும், அவருடைய மகன் ராஜேந்திரன் ஆடி மாதத்துத் திருவாதிரையிலும் பிறந்தவர் என்ற குறிப்பு அந்த மன்னராலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளனர்.<br />
<br />
திருவாரூர் தியாகராஜர் கோயில் அதிட்டானத்து குமுதப் படையில் மேற்குத் திசையிலும், தென்திசையிலும் உள்ள அக்கல்வெட்டை இக்கட்டுரையின் ஆசிரியரும், அரியலூர் அரசுக் கல்லூரியின் முன்னாள் வரலாற்றுத் துறைத் தலைவருமான பேராசிரியர் இல. தியாகராஜனும் இணைந்து படி எடுத்தனர். அது, கட்டுரையாளரின் ‘திருவாரூர் திருக்கோயில்’ என்ற பெருநூலில் 70-ம் எண் கல்வெட்டாகப் பதிப்பிக்கப்பட்டது. அந்த சாசனம் ராஜேந்திர சோழனின் ஆணையை வெளியிடு வதாகும். அதில் திருவாரூர் கோயிலின் மூலஸ்தான முடையாரான புற்றிடங்கொண்டாருக்கு மார்கழித் திருவாதிரை நாள், திருப்பூரநாள், ஆவணி அவிட்ட நாள், ஆண்டுப் பெருவிழா ஆகிய நான்கு நாட்களுக்குச் செய்ய வேண்டிய பூஜை முறைகளைக் கூறி, பின்பு தன் ‘அய்யர் பிறந்து அருளிய ஐப்பிகைச் சதயத் திருவிழா வரைவுக்குத் திருமுளையட்டவும், தீர்த்தத்துக்கு திருச்சுண்ணம் இடிக்கவும், நாம் பிறந்த (ராஜேந்திர சோழன் பிறந்த) ஆடித் திருவாதிரை நாளில் திருவிழா வரைவு குருமுளையட்டவும், தீர்த்தத்துக்குத் திருச்சுண்ணம் இடிக்கவும்…’ கொடுத்த நிவந்தங்கள் குறிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தக் கல்வெட்டுச் சான்றால், ஐயம்திரிபற ராஜராஜன் ஐப்பசி சதயத்தில் பிறந்தவர் என்பதும், ராஜேந்திரன் ஆடித் திருவாதிரையில் பிறந்தவர் என்பதும் உறுதியாகின்றன. இங்கு மார்கழி ஆதிரை நாள் ஆரூர் இறைவனுக்குரிய நாளாகச் சுட்டப்படுகிறது.<br />
<br />
<span style="color: blue;">மேல்பாடி சொல்லும் செய்திகள்</span><br />
<br />
கடந்த 2009-ம் ஆண்டு தமிழக அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் ‘மேல்பாடி’ என்ற ஆய்வு நூலை வெளியிட்டுள்ளனர். அந்நூலின் ஆசிரியரான கல்பனா, மைசூர் கல்வெட்டு ஆவணக் காப்பகத்திலிருந்து மேல்பாடி கோயிலிலிருந்த ராஜேந்திர சோழனின் வெளி வராத கல்வெட்டொன்றை ஆய்வுசெய்து தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில், அந்த விழா நாள் பூஜை கள்பற்றிய விரிவான செய்திகள் கூறப்பட்டுள்ளன.<br />
<br />
காமரசவல்லியில் உள்ள ராஜேந்திர சோழனின் கல்வெட்டு வைகாசி மற்றும் மார்கழி ஆதிரை விழாக்களைப் பற்றிக் கூறுகிறது. எனவே, 12 மாத ஆதிரை விழாக்களும் ராஜேந்திர சோழன் திருநாளாகக் கொண்டாடப்பட்டாலும் அவர் பிறந்தது ஆடி மாதத்துத் திருவாதிரையே என்பது அவரே கூறியுள்ள கூற்று. இந்தக் கருத்துக்களை மறுக்க முற்படும் ஆய்வாளர்கள் இங்குக் குறிப்பிடப்படும் திருவாரூர் மற்றும் மேல்பாடி கல்வெட்டுக்களை நேரில் பார்த்த பின்பு அவை ராஜேந்திர சோழனின் ஆணைகள் இல்லை என்பதைச் சான்றுகளுடன் மறுத்துக் காட்டிவிட்டுப் பின்பு, அவை யாருடையவை என்பதை மெய்ப்பித்தாலன்றி மாறுபட்ட கருத்துக்களுக்கு இடமே இல்லை.<br />
<br />
<blockquote class="tr_bq">
<br />
<br />
<b>குறிப்பு: </b><br />
<br />
<br />
திரு. <b>குடவாயில் பாலசுப்ரமணியன்</b>, தொல்பொருள், கல்வெட்டுத் துறை அறிஞர், ‘ராஜராஜேஸ்வரம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்,<br />
<br />
<br />
நன்றி: <a href="http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81/article6375377.ece" target="_blank"><b>தி இந்து</b></a> (03.09.2014)</blockquote>
<blockquote class="tr_bq">
தொடர்புக்கு: kudavayil@yahoo.com </blockquote>
<br />
<br />
<br />
<br />
<br /></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1134172536605043424.post-24832819537074533682014-11-19T15:47:00.003+05:302016-06-19T18:30:41.002+05:30வினோபா பாவே - காந்தியம் உருவாக்கிய அதிசயம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="photo-caption">
<span class="photo-source"></span>
</div>
<div class="body">
<span style="color: blue;"><span style="font-size: large;"><b><b>- பி.ஏ.கிருஷ்ணன்</b></b></span></span></div>
<div class="body">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="font-size: large;"><b><b><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3IC7h53M7DyWB5vtIQ95Bft9EVy2tROkxeUcFnNGtAwoB9Aw-8Y9TzN3BiwBuFuAZAImzdrGame4xm5XFQvytcQelNUueblcx4Ko6EeFE09sMAQ6o1F0hkj0XXE1qFGMlu71nx_6WrrM/s1600/vinoba.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3IC7h53M7DyWB5vtIQ95Bft9EVy2tROkxeUcFnNGtAwoB9Aw-8Y9TzN3BiwBuFuAZAImzdrGame4xm5XFQvytcQelNUueblcx4Ko6EeFE09sMAQ6o1F0hkj0XXE1qFGMlu71nx_6WrrM/s1600/vinoba.jpg" width="248" /></a></b></b></span></div>
<br />
<div class="body">
<br /></div>
<div class="body" style="text-align: center;">
<b><b> </b>வினோபா பாவே மறைந்த தினம்: 15 நவம்பர், 1982 </b></div>
<div class="body">
<b> </b>
</div>
<div class="body">
<b><i>லட்சக் கணக்கான எளிய மக்களின் வாழ்க்கை ஓரளவு சீரடைந்திருப்பதற்கு வினோபாவும் ஒரு காரணம். </i></b></div>
<div class="body">
<br /></div>
<div class="body">
“விமானங்களும் மற்றைய போக்குவரத்துச் சாதனங்களும் தேவைதான். ஆனால்,
மனிதனுக்குக் கால்கள்தான் முக்கியம்.” இதைச் சொன்னவர் சொன்னதோடு
நின்றுவிடவில்லை, 14 ஆண்டுகளில் 70,000 கிலோ மீட்டர் நடந்தார். நடந்ததோடு
நின்றுவிடவில்லை. இந்தியாவின் கிராமங்கள்தோறும் சென்று, 42 லட்சம் ஏக்கர்
நிலத்தை நிலவுடைமையாளர்களிடமிருந்து பெற்று, நிலம் இல்லாதவர்களுக்கு
வாங்கித் தந்தார்.<br />
<a name='more'></a></div>
<div class="body">
<br /></div>
<div class="body">
இன்று இணையத்தில் நிலங்களை விற்கும் எந்த வலைத்தளத்தையும் பாருங்கள்.
இந்தியாவின் ஏதோ ஒரு கோடியில், தண்ணீருக்கும் சாலைகளுக்கும்
ஏங்கிக்கொண்டிருக்கும் இடங்களில்கூட நிலத்தின் விலை குறைந்தபட்சம்
ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாயாவது இருக்கும். இவர் ஏழைகளுக்குப்
பெற்றுத்தந்த நிலங்களின் மதிப்பு இன்று 42,000 கோடி ரூபாய். இது 2014-15-ல்
தமிழக அரசுக்குக் கிடைக்கும் வருவாயில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு.
ஆனால், இவர் நாள் ஒன்றுக்கு இரண்டு அணாக்கள் (பன்னிரண்டு பைசா) மாத்திரம்
உணவுக்காகச் செலவிட்டு, ஒரு வருடம் கழித்தவர். பணம், பதவி, புகழ்
போன்றவற்றைத் துச்சமாக மதித்தவர். உயிர்கூட இவருக்குப் பெரிதல்ல. இறுதி
நாட்களில் பட்டினி கிடந்து நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டவர். </div>
<div class="body">
<br /></div>
<div class="body">
இவர் இருந்த இந்தியா வேறு. இன்று நாம் கனவில்கூட இவர் சாதித்தது நடக்கும்
என்று எதிர் பார்க்க முடியாது. இவர் பெற்றுத்தந்த நிலங்களின் பரப்பளவைவிடக்
குறைவான பரப்பளவைக் கொண்ட நாடுகள் உலகில் தொண்ணூறுக்கும் மேல்
இருக்கின்றன. </div>
<div class="body">
<br /></div>
<div class="body">
<b>முதல் சத்தியாக்கிரகி </b></div>
<div class="body">
<b> </b>
</div>
<div class="body">
1940-ம் ஆண்டு தனிநபர் சத்தியாக்கிரகத்தை காந்தி அறிவித்தபோது, முதல்
சத்தியாக்கிரகியாக வினோபா பாவே சிறை செல்வார் என்று சொன்னபோது, நாட்டில்
மிகச் சிலரைத் தவிர, மற்றவர்களுக்கு வினோபா பாவே என்றால் யார் என்றுகூடத்
தெரியாது. ஆனால், காந்தி அவரைச் சரியாக அறிந்து வைத்திருந்தார். 1895-ம்
ஆண்டு பிறந்த வினோபா, காந்தி மந்திரத்துக்குக் கட்டுப்பட்டு இயங்கத்
தொடங்கியது 1916-ம் ஆண்டு. துறவியாக வேண்டும் என்று நினைத்த அவர், காசி
ஹிந்துப் பல்கலைக்கழகத்தில் அதே வருடம் காந்தி நிகழ்த்திய உரையைப்
படித்தார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த உரையில் காந்தி,
“பயமின்மை இல்லாவிட்டால், அகிம்சை இருக்க முடியாது” என்று கூறியது அவரைச்
சிந்திக்க வைத்தது. காந்தியின் சீடராக இருப்பதுதான் தனது வாழ்க்கையின்
மையப்புள்ளி என்ற முடிவுக்கு அவர் வந்தார். </div>
<div class="body">
<br /></div>
<div class="body">
<b>எந்தத் தொழிலையும் செய்யலாம் </b></div>
<div class="body">
<b> </b>
</div>
<div class="body">
வார்தா ஆசிரமத்தின் பொறுப்பை 1921-ம் ஆண்டு ஏற்றுக்கொண்ட அவர், அதற்கு
முன்னால் சபர்மதி ஆசிரமத்தில் இருந்தார். அங்கு நடந்த சம்பவம் ஒன்றைப்
பற்றி அவர் தனது வாழ்க்கைக் குறிப்பில் எழுதுகிறார்: “எங்களது ஆசிரமத்தில்
மலம் அள்ளும் தொழிலைச் செய்துகொண்டிருந்தவர் உடல்நலக் குறை வால் வேலைக்கு
வர முடியவில்லை. அவர் தனது மகனை - அவன் சிறுவன் - தனக்குப் பதிலாக அனுப்
பினார். சிறுவனால் மலவாளியைத் தூக்க முடிய வில்லை. அவன்
அழுதுகொண்டிருந்ததைப் பார்த்த எனது சகோதரர் ‘நான் உதவி செய்கிறேன்’
என்றார். என்னையும் கூட அழைத்தார். இவ்வாறாக மலம் அள்ளும் தொழிலை
ஆரம்பித்தோம். அன்னை கஸ்தூரி பாவுக்கு ஒரே வருத்தம், பிராமண இளைஞர்கள் மலம்
அள்ளுவதா என்று. ஆனால் காந்தி, ‘பிராமணர்கள் மலம் அள்ளுவதைவிடச் சிறந்தது
எதுவாக இருக்க முடியும்?’ என்றார்.” </div>
<div class="body">
<br /></div>
<div class="body">
1949-ம் ஆண்டு தெலங்கானாவில் கம்யூனிஸ்ட்டுகள் தீவிரமாக
இயங்கிக்கொண்டிருந்தார்கள். அவர் பொச்சம்பள்ளி கிராமத்தில் இருந்தபோது,
நிலம் இல்லா விவசாயிகள் அவரைச் சந்திக்க வந்தார்கள். எங்களுக்குச் சிறிதளவு
நிலம் இருந்தால் போதும், நாங்கள் உழைத்துப் பாடுபட்டு எங்கள் வாழ்க்கையைக்
கழித்துக்கொள்வோம் என்றார்கள். எவ்வளவு நிலம் வேண்டும் என்று வினோபா
கேட்டார். 80 ஏக்கர் இருந்தால் போதும் என்ற பதில் வந்தது. அப்போது
அங்கிருந்த நிலவுடைமையாளர் ஒருவர் நான் 100 ஏக்கர் இலவசமாகத் தருகிறேன்
என்றார். இந்தச் சம்பவம்தான் அவரை கிராமம் கிராமமாக நடந்து பூமியைத் தானம்
செய்யுங்கள் என்று, பூமி தங்களுக்குச் சொந்தம் கொண்டாடியவர்களைக் கேட்க
வைத்தது. கம்யூனிஸ்டுகள் அவருக்கு எதிராகப் பிரச்சாரம் செய் தாலும், இவர்
புதிதாக ஏதோ செய்கிறார் என்ற நம்பிக்கை மக்களிடையே இருந்தது. </div>
<div class="body">
<br /></div>
<div class="body">
<b>வினோபாவும் பெரியாரும் </b></div>
<div class="body">
<b> </b>
</div>
<div class="body">
தமிழகத்தில் வினோபா ஒரு நாளைக்கு நான்கு ஏக்கர்களுக்கு மேல் பெற
முடியவில்லை என்று குறிப் பிடுகிறார். ஆனால், தமிழ்நாட்டில் அவரது சர்வோதயா
இயக்கம் ஒரு லட்சம் ஏக்கர் தானமாகப் பெற்றது என்று ஒரு புள்ளிவிவரம்
கூறுகிறது. </div>
<div class="body">
<br /></div>
<div class="body">
தமிழகத் தலைவர்களுக்கு, குறிப்பாக பெரியாருக்கு, வினோபா மீது மிகுந்த
மதிப்பு இருந்தது. 1957-ம் ஆண்டு இருவருக்கிடையே நடந்த உரையாடல் குறிப்
பிடத் தக்கது. </div>
<div class="body">
<br /></div>
<div class="body">
பெரியார்: நீங்கள் ஏழெட்டு மாதங்களாக எங்கள் சமுதாய மக்களுக்குச் சாதி ஒழிய
வேண்டும் என்ற கருத்தைச் சொல்லிவருவதைக் காண மகிழ்ச்சி யடைகிறேன். </div>
<div class="body">
<br /></div>
<div class="body">
வினோபா: தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நீங்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்டு செய்ய வேண்டும். அதிக நிலதானம் கிடைக்க உதவி செய்ய வேண்டும.</div>
<div class="body">
<br /></div>
<div class="body">
பெரியார்: என்னால் கூடுமான உதவிகளைச் செய்கிறேன். ஆனால், நான் கொண்டுள்ள வேலை, சாதி ஒழிப்பு முக்கியமானது. </div>
<div class="body">
<br /></div>
<div class="body">
<b>மகத்தான வாழ்வு </b></div>
<div class="body">
<b> </b>
</div>
<div class="body">
வினோபா பாவேயின் சர்வோதய இயக்கத்தைத் தமிழ்நாட்டில் முன்னின்று
நடத்தியவர்கள் கிருஷ்ணம் மாள்-ஜெகந்நாதன் தம்பதியினர். இவர்களது முயற்சி
யால்தான் கீழவெண்மணியின் 74 தலித் குடும்பங்களுக்கு 74 ஏக்கர் விளைச்சல்
நிலம் கிடைத்தது. தொடர்ந்து பல நூறு விவசாயிகளுக்கு நிலம் கிடைக்க அவர்கள்
உதவினார்கள். </div>
<div class="body">
<br /></div>
<div class="body">
வினோபா தன்னை வானத்து அமரர் என்று நினைத்ததில்லை. கொள்கைப் பிடிப்போடு
கட்சி அரசியல் செய்யும் அரசியல்வாதியும் இல்லை. அவசர நிலையின்போது இந்திரா
காந்தியை ஆதரித்து அவர் ஏன் அறிக்கை விட்டார் என்பது இன்று வரை புரியாத
புதிர். ஆனால், தன் வாழ்நாள் முழுவதும் காந்தி காட்டிய பாதையே சரி என்று
நினைத்து அந்தப் பாதையிலிருந்து கூடிய மட்டும் விலகாமல் தன் வாழ்நாளைக்
கழித்தவர் அவர். இவரைப் போன்ற தனிமனிதரால், கருத்தியல் வாதியால், மொத்த
சமுதாயமும் மாறச் சாத்தியம் இல்லை என்பது உண்மைதான். ஆனால், மாற வேண்டும்
என்ற முனைப்போடு அவர் உழைத்தது அப்பழுக்கற்றது. அவரது உழைப்பினால் பல
கிராமங்கள் உயர்ந்திருக் கின்றன. பல லட்சக் கணக்கான எளிய மக்களின் வாழ்க்கை
ஓரளவு சீரடைந்திருக்கிறது. புரட்சியின் வாள் இவரால் மழுங்கியது என்பது
உண்மையாக இருக்கலாம். ஆனால், இவர் வாழ்ந்த வாழ்க்கை எந்தப் புரட்சி
வாழ்வுக்கும் குறைவில்லாதது. </div>
<div class="body">
<br /></div>
<div class="body">
இந்தியாவாலும் காந்தியாலும் மட்டுமே வினோ பாக்களை உருவாக்க முடியும். </div>
<div class="body">
<br /></div>
<div class="body">
<b>- பி.ஏ. கிருஷ்ணன், ‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ ஆகிய நாவல்களின் ஆசிரியர். </b></div>
<div class="body">
<br /></div>
<div class="body">
<b>நன்றி: <a href="http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/article6601832.ece" target="_blank">தி இந்து </a> </b>
</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1134172536605043424.post-25372424688199457982014-10-21T14:00:00.000+05:302016-06-19T18:31:08.925+05:30பட்டாசு வெடிப்போம் வாருங்கள்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<b><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2pZ9xgPRUX22Pl0HogncKveG749zBONHaipdjTYzXfyJDjVWFtqDcwBpKP2tuYTO4Eyd7pSmHQ05mJm_P_hDGYnM76oEUFEhYQH34Tw1khzaTILtc_Xo7IZKiSng6KgoZm80n65YVPl4/s1600/diwali221014.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2pZ9xgPRUX22Pl0HogncKveG749zBONHaipdjTYzXfyJDjVWFtqDcwBpKP2tuYTO4Eyd7pSmHQ05mJm_P_hDGYnM76oEUFEhYQH34Tw1khzaTILtc_Xo7IZKiSng6KgoZm80n65YVPl4/s1600/diwali221014.jpg" /></a></b></div>
<br />
<br />
<b>பட்டாசு </b>வெடிப்போம் வாருங்கள் - தீய<br />
பயங்கரவாதம் ஒழியட்டும்!<br />
மத்தாப்பு கொளுத்திட வாருங்கள் - உலகில்<br />
மகிழ்ச்சியே எங்கும் நிறையட்டும்!<b> </b><b> </b><br />
<div style="text-align: center;">
<b><span class=""><b>(பட்டாசு)</b></span></b><br />
<a name='more'></a><b> </b></div>
<br />
இல்லம் தோறும் தீப ஒளி<br />
இருளை விரட்டி ஓட்டட்டும்!<br />
<span class="">உள்ளம் தோறும் இறையருளின் </span><br />
<span class="">உயர்வுத்தன்மை ஓங்கட்டும்!<b> </b></span><br />
<div style="text-align: center;">
<span class=""><b>(பட்டாசு)</b></span></div>
<span class=""></span><br />
<span class="">மதத்தின் பெயரால் போர் புரியும் </span><br />
<span class="">மடையர்கள் உள்ளம் திருந்தட்டும்!</span><br />
<span class="">நிதமும் கலகம் செய்கின்ற</span><br />
<span class="">நீசர்கள் மனமும் திருந்தட்டும்! </span><br />
<div style="text-align: center;">
<span class=""><b>(பட்டாசு)</b></span></div>
<span class=""></span><br />
<span class="">புத்தாடைகளைப் புனைந்திடுவோம்!</span><br />
<span class="">புன்சிரிப்போடு வலம் வருவோம்!</span><br />
<span class="">தித்திக்கின்ற இனிப்புகளை </span><br />
<span class="">திசைகள் தோறும் பகிர்ந்திடுவோம்! </span><br />
<div style="text-align: center;">
<span class=""><b>(பட்டாசு)</b></span></div>
<span class=""></span><br />
<span class="">வேற்றுமை பரப்பும் அரசியலும் </span><br />
<span class="">வேதனை ஊட்டும் பிரிவினையும் </span><br />
<span class="">ஊற்றெனக் கிளம்பும் உட்பகையும் </span><br />
<span class="">உருத் தெரியாமல் ஒழியட்டும்! <b> </b></span><br />
<div style="text-align: center;">
<span class=""><b>(பட்டாசு)</b></span></div>
<span class=""></span><br />
<span class="">சாதிப் பிரிவுகள் மறையட்டும்!</span><br />
<span class="">சமத்துவம் எங்கும் ஓங்கட்டும்!</span><br />
<span class="">சாதித்திடுவோர் பெருகட்டும்!</span><br />
<span class="">சத்தியம் உலகில் நிலைக்கட்டும்! <b> </b></span><br />
<div style="text-align: center;">
<span class=""><b>(பட்டாசு)</b></span></div>
<span class=""></span><br />
<span class="">வாழ்த்துகள் கூறி மகிழ்ந்திடுவோம்!</span><br />
<span class="">வாணவேடிக்கை நடத்திடுவோம்!</span><br />
<span class="">ஆழ்த்தும் இன்பக் கடலினிலே </span><br />
<span class="">அனைவரும் ஒன்றாய் நீந்திடுவோம்! </span><br />
<div style="text-align: center;">
<span class=""><span class=""><b>(பட்டாசு)</b></span></span></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
<span class=""><span style="color: blue;"><span class=""><b>-வ.மு.முரளி </b></span></span></span></div>
<div style="text-align: center;">
<span class=""><span style="color: blue;"><span class=""><b>(<a href="http://kuzhalumyazhum.blogspot.in/2009/10/29.html" target="_blank">குழலும் யாழும்</a>) </b></span></span></span></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
<span class=""><span style="color: blue;"><span class=""><b> </b></span></span> </span></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1134172536605043424.post-73157662848784840962014-10-15T11:40:00.000+05:302016-06-19T18:31:28.187+05:30காந்திஜி காண விரும்பிய 'தூய்மை இந்தியா'! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h3 style="text-align: right;">
<span style="color: blue;">-லா.சு.ரங்கராஜன்</span></h3>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQfOkXd2ToFbslP3yObWyxKDnsLRpY6xzgci9WdP2DdA1RIhQIOdA" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="251" src="https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQfOkXd2ToFbslP3yObWyxKDnsLRpY6xzgci9WdP2DdA1RIhQIOdA" width="320" /></a></div>
<h3 style="text-align: right;">
<span style="color: blue;"></span></h3>
<b>“எனது</b> பிறந்த தினத்தை விடுமுறை நாளாக அறிவிப்பது கடுந்தண்டனைக்குரிய குற்றமென விதி வகுக்கப்பட வேண்டும். முனைப்புடன் நூல் நூற்றல் அல்லது வேறு ஏதாகிலும் தேசப்பணி புரிதல் மட்டுமே அன்று அனுசரிக்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். அன்றைய தினம் முழுவதையும் நற்பணிக்கு அர்ப்பணிக்க வேண்டும். ஆட்டம் பாட்டம் கிஞ்சித்தும் வேண்டாம்”.<br />
<br />
- இவ்வாறு மகாத்மா காந்தி தமது ‘அரிஜன்’ (15.10.1938) இதழில் எழுதினார்.<br />
<a name='more'></a><br />
<br />
“காந்திஜியின் ஜன்ம தினத்தை சம்பளத்தோடு கூடிய விடுமுறை நாளாக பிகார் மாகாண காங்கிரஸ் அரசு அறிவித்திருப்பது தகுமா?” என்று பிகார் இளைஞன் ஒருவன் கேட்டெழுதிய கடிதத்திற்குத் தமது பதிலாக காந்திஜி மேற்சொன்ன தமது பதிலைப் பிரசுரித்திருந்தார்.<br />
<br />
தேசப்பிதாவின் அறிவுரையை 76 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முதலாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பின்பற்றி, சென்ற அக்டோபர் 2 காந்திஜி பிறந்த நாளாயொட்டி, நாடு தழுவிய ‘தூய்மை இந்தியா’ (ஸ்வச் பாரத்) திட்டத்தை அறிவித்துள்ளார்.<br />
<br />
தில்லி வால்மீகி சதன் வளாகத்தில் அவரே கையில் துடைப்பம் ஏந்தித் துப்புரவுப் பணியைத் துவக்கினார். “இது இன்றைய தினத்தோடு முடிந்துவிட்ட சமாசாரம் அல்ல. நாட்டு மக்களனைவருமே கட்சி பேதமின்றி ஆண்டுக்கு நூறு நாள்கள், வாரம் இரண்டு மணி நேரம் தன்னார்வத்துடன் தூய்மைப் பணியில் ஈடுபட வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.<br />
<br />
“2019-ஆம் ஆண்டு வரவிருக்கும் காந்திஜியின் 150-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, பூரண பரிசுத்த பாரதத்தை இந்திய மக்கள் மகாத்மா காந்திக்குக் காணிக்கையாக அர்ப்பணிப்பார்கள்” எனும் மோடியின் அறைகூவலை நிறைவேற்ற வேண்டியது இந்திய மக்கள் அனைவரது கடமையாகும்.<br />
<br />
‘சுத்தம் சுகம் தரும்' என்கிற எளிய தமிழ்ப் பழமொழிக்கேற்ப, சுற்றுச்சூழலைத் தூய்மைப்படுத்துதல் பற்றி அண்ணல் காந்தி பல தருணங்களில் பேசியும் எழுதியும் வந்துள்ளார்.<br />
<br />
பிப்ரவரி 11, 1938 அன்று ஹரிபுரா காங்கிரஸ் மாநாட்டு வளாகத்தில் துப்புரவுப் பணி மேற்கொள்ள வந்த தொண்டர்களின் கூட்டம் நடைபெற்றது.<br />
<br />
மாநாட்டுப் பந்தல் வெளியையும், பிரதிநிதிகள் தங்கியிருந்த இடங்களையும், கழிப்பறைகளையும் அவ்வப்போது சுத்தம் செய்வதற்காக ஜகஜீவன் ராம் தலைமையில் இயங்கிய 1,200 நபர்கள் கொண்ட தொண்டர் கூட்டத்தில் மகாத்மா காந்தி பேசுகையில், அவர்களது பணியின் உயர்வை சிலாகித்து உரையாற்றினார். அதில் சில பகுதிகள்:<br />
<br />
“பங்கிகளின் (தோட்டிகளின்) வேலை இழிவானது என்ற எண்ணம் நிலவுவது வருந்தத்தக்கது. நாம் குழந்தைகளாக இருந்தபோது நமது தாய்மார்கள் நம்மைக் குளிப்பாட்டி, மலஜலங்களைக் கழுவித் துடைத்து சுத்தம் செய்தார்கள்.<br />
<br />
அதனால் அன்னையின் பணியை இளப்பமாகக் கருதுகிறோமா? அதேபோன்றுதான் பங்கிகளின் பணியும். நீங்கள் இன்று தோட்டி வேலை புரியத் திரண்டு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நானே ஒரு கைதேர்ந்த பங்கி.<br />
<br />
சென்ற 35 ஆண்டு காலமாக நான் துப்புரவுப் பணியை என் ஆசிரமங்களில் நேரிய மனப்பான்மையுடன் மேற்கொண்டு வந்துள்ளேன். அதில் தொடர்ந்து ஈடுபட விரும்புகிறேன்.<br />
<br />
என்னைப் பொருத்த வரை, ராட்டையில் நூல் நூற்பது, கிராமியத் தொழில்களை ஊக்குவிப்பது, தெருப் பெருக்குவது, சுகாதார விஸ்தரிப்பு ஆகிய தூய்மைப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதே போதுமானது.<br />
<br />
கடவுள் என்னை இப்பூவுலகில் வாழ்ந்துவர அனுமதிக்கும் வரையில், நான் இப்பொது சுகாதாரப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதன் பொருட்டு ஒரு குக்கிராமத்தில் இருந்து வர நிச்சயித்துள்ளேன்.”<br />
<br />
தனது உரையை இவ்வாறு முடிக்கிறார். “தன்னையும் தனது சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமையாகும். பங்கி வேலையில் ஈடுபடுவோர் முதலாவதாக அவரவரது பங்கிகளாக இருத்தல் அவசியம்.”<br />
<br />
1945-ஆம் ஆண்டு காந்திஜி பதினெட்டு அம்சங்கள் கொண்ட நிர்மாணத் திட்டமொன்றைத் தீட்டி வெளியிட்டார். வகுப்பு ஒற்றுமை, தீண்டாமையை அகற்றுதல், மதுவிலக்கு, கிராமக் கைத்தொழில் வளர்ச்சி போன்ற சமூக மேம்பாட்டிற்கு அத்தியாவசியமான அம்சங்கள் அத்திட்டத்தில் அடக்கம்.<br />
<br />
அவற்றுள் கிராம சுகாதாரம், உடல் நலம் பற்றிய கல்விப் பயிற்சி ஆகிய இரு அம்சங்கள் முக்கிய இடம் பெற்றுள்ளன. கிராமியச் சுற்றுச்சூழலைத் துப்புரவாக வைத்துக் கொள்வதன் அவசியத்தை அதில் காந்திஜி வலியுறுத்தியுள்ளார். காந்திஜி எழுதிய வாசகத்தின் மொழி பெயர்ப்பு இதோ:<br />
<br />
“கிராமப்புறங்களில் அழகழகான குடியிருப்புகளுக்கு பதிலாக சாணக்குவியல்களையும் குப்பை மேடுகளையும்தான் இன்று காண்கிறோம். கிராமங்களுக்குச் செல்லும் அனுபவம் புத்துணர்ச்சி தரக்கூடியதாக இல்லை.<br />
<br />
ஒருவர் அடிக்கடி கண்களை மூடி முக்கைப் பிடித்துக்கொள்ள வேண்டிவரும். அந்த அளவுக்குச் சுற்றிலும் தூசியும் துர்நாற்றமும் பரவியிருக்கும். காலைக் கடன்களை கண்ட கண்ட இடங்களில் கழிப்பதால் கிணறு, குளம், குட்டை, ஆற்றங்கரைகள் அசுத்தமாவதைப் பற்றிக் கிராமவாசிகள் கவலை கொள்வதில்லை.<br />
<br />
இதன் விளைவாக நமது கிராமங்களும், புனித குளங்கள் மற்றும் ஆற்றோரங்களும் வெட்கக் கேடான நிலையையடைந்துள்ளன. தொற்று நோய்கள் பரவுகின்றன. இத்துர்ப்பழக்கங்கள் பெருத்த அநியாயம் என்றே நான் கருதுகிறேன்...”<br />
<br />
'Mens sana in corpore sano' என்பது ஒருவேளை மானுடத்தின் முதல் சட்டமாக இருக்கக்கூடும். அதாவது, “ஆரோக்கிய சூழலும், மனமும் படைத்தவரின் உடலும் ஆரோக்கியமானதாகவே இருக்கும்” என்ற பொருள் கொண்ட இந்த லத்தீன் மொழி வாசகம் விளக்கம் தேவையற்ற நித்திய உண்மையல்லவா?<br />
<br />
புனிதமான கங்கை நதி மாசுபடுவதை 1929-ஆம் ஆண்டு வாக்கிலேயே கண்ணுற்ற மகாத்மா காந்தி மனம் வருந்தி பின்வருமாறு தமது வேதனையைக் கொட்டித் தீர்த்துள்ளார்:<br />
<br />
“நீர் நிலைகள், ஆற்றங்கரைகள், சாலைகள் மற்றும் பொது இடங்கள் எவற்றிலும் எவ்விதமாகவும் மாசுபடுத்தலாகாது என அனைத்து மதங்களும் போதிக்கின்றன. <br />
<br />
மேற்சொன்ன இடங்களில் மலஜலம் கழிப்பதும் மாசு உண்டாக்குவதும் மானிட வர்க்கத்திற்கு விரோதமான குற்றச் செயல் என உடல் நல வல்லுநர்கள் கருதுகிறார்கள். ஆனால், மதத்தின் பெயராலும்கூட கங்கை நதி அசுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. ஹரித்துவாரில் வழக்கப்படி சடங்கு புரிய நான் அந்நதிக்கரைக்கு இட்டுச் செல்லப்பட்டேன்.<br />
<br />
சடங்கின்போது, மலர்கள், நூல், தயிர், சாயம் தோய்ந்த அரிசி, கஞ்சி போன்றவை நதியில் வீசப்படுகின்றன. அதே நதியின் நீரைத் தான் லட்சோப லட்சம் மக்கள் புனிதத் தீர்த்தமாக நம்பி அருந்துகிறார்கள்.<br />
<br />
இவற்றைக் காட்டிலும் மோசமாக, ஊர்ச் சாக்கடைக் கழிவுநீரை பெருங்குழாய்கள் மூலம் அந்நதியில் வெளியேற்றுகிறார்கள் என்றும் கேள்விப்படுகிறேன். இது மகத்தான அக்கிரமம்.”<br />
<br />
காதி பிரசாரத்திற்காக 1927-இல் தென்னிந்தியச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட காந்திஜி, அவ்வாண்டு அக்டோபர் 2-ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற்ற வரவேற்புக் கூட்டத்தில் பேசுகையில்,<br />
<br />
“உள்ளூர்வாசி ஒருவர் அவருக்கு அண்மையில் எழுதிய கடிதத்தைப்பற்றிக் குறிப்பிட்டார். அவர்களது தாமிரவருணி ஆற்று நீரை ஊர் மக்கள் அசுத்தப்படுத்தி வருவதாக அக்கடிதத்தில் புகார் கூறப்பட்டுள்ளது. திருநெல்வேலி முனிசிபாலிடியும் இன்று எனக்கு வரவேற்பு அளிக்கும் அமைப்புகளில் ஒன்று என்று அறிகிறேன்.<br />
<br />
அப்படியானால் உங்கள் முனிசிபல் கவுன்சிலர்களை ஒன்று கேட்டுக் கொள்கிறேன். காலை முதல் மாலை வரை ஆற்றங்கரையில் போடப்படும் குப்பை கூளங்களையும் கழிவுப் பொருள்களையும் உடனுக்குடன் அகற்றிச் சுத்தம் செய்து, குப்பை சேராமல் இருப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளுங்கள் என்பதே அவர்களுக்கு எனது வேண்டுகோள்”<br />
<br />
- இவ்வாறு தமது உரையை முடித்தார் அண்ணல் காந்தி.<br />
<br />
காந்தியைப் பொருத்த வரை, புறத்தூய்மை மட்டும் போதாது, அகத்தூய்மையும் அத்தியாவசியமானது. இதனைத் தொடக்க காலத்திலிருந்தே அவர் தொடர்ந்து அறிவுறுத்தி வந்துள்ளார். அரசியலிலும் தூய்மை நிலவவேண்டும் என்பதும் அண்ணல் காந்தியின் லட்சியங்களில் ஒன்றாகும்.<br />
<br />
தென்னாப்பிரிக்காவில் இருந்த காலகட்டத்திலேயே பாரிஸ்டர் காந்தி தமது அரசியல் ஆசானாக வரித்த கோபாலகிருஷ்ண கோகலேயின் “அரசியலை ஆன்மிக மயமாக்குதல்” (Spritualising Politics) என்ற கருத்தை உள்வாங்கிக் கொண்டார். அரசியலில் ஆன்மிகம் இழைந்தால் ஆட்சியில் தூய்மை துலங்கும் என்பதே காந்திஜியின் எதிர்பார்ப்பாக இருந்தது.<br />
<br />
<div style="text-align: right;">
நன்றி: <a href="http://www.dinamani.com/editorial_articles/2014/10/15/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D/article2478204.ece" target="_blank"><b>தினமணி</b></a> (16.10.2014)</div>
<br />
<br />
<br /></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1134172536605043424.post-27262817260954876682014-10-10T12:06:00.003+05:302016-06-19T18:31:53.571+05:30தமிழமுது பருக வாருங்கள்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="font-family: "arial" , sans-serif; font-size: 12px;"><br /></span>
<br />
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://www.filepicker.io/api/file/coZRJRtiSPu09pavX9xW+meenatchisundarampillai.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://www.filepicker.io/api/file/coZRJRtiSPu09pavX9xW+meenatchisundarampillai.jpg" /></a></div>
<br />
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: center;">
<span style="color: blue;"><span style="font-size: large;"><span style="font-family: "arial" , sans-serif;"> </span><span style="font-family: "arial" , sans-serif;">திரிசிரபுரம்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை</span></span></span></div>
<div style="text-align: center;">
<span style="color: blue;"><span style="font-size: large;"><span style="font-family: "arial" , sans-serif;">200-வது ஜெயந்தி சொற்பொழிவு </span></span></span></div>
<div style="text-align: center;">
<span style="font-family: "arial" , sans-serif; font-size: 12px;"><br /></span></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="font-family: "arial" , sans-serif; font-size: 12px;"><b><span style="font-family: "arial" , sans-serif; font-size: 12px;">அன்பு சகோதரர்களுக்கு வணக்கம்! </span></b></span></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="font-family: "arial" , sans-serif; font-size: 12px;"><span style="font-family: "arial" , sans-serif; font-size: 12px;"> </span>தமிழகத்தின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவரான ‘மகாவித்வான்‘ திரிசிரபுரம்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் 200-வது பிறந்த ஆண்டையொட்டி, நமது </span><b><span style="font-size: x-small;"><span style="font-family: inherit;">தேசிய சிந்தனைக்
கழகம்</span></span></b><span style="font-family: "arial" , sans-serif; font-size: 12px;">
சொற்பொழிவு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. </span></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="font-family: "arial" , sans-serif; font-size: 12px;">கீழ்க்கண்ட நிகழ்ச்சிநிரலின்படி நடைபெறும் இந்நிகழ்வில் தாங்களும் தங்கள் நண்பர்களும்
கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். </span>
</div>
<br />
<div>
<span style="font-family: "arial" , sans-serif; font-size: 12px;"><br /></span></div>
<div>
<span style="font-family: "arial" , sans-serif;"><span style="font-size: 12px;">
<span style="font-size: small;"> </span></span><span style="font-size: small;"><b>நிகழ்ச்சி
நிரல் </b></span></span></div>
<div>
<span style="font-family: "arial" , sans-serif; font-size: 12px;"><br /></span></div>
<div>
<span style="font-family: "arial" , sans-serif; font-size: 12px;">நாள் : ஸ்ரீ ஜய வருஷம், புரட்டாசி 25</span></div>
<div>
<span style="font-family: "arial" , sans-serif; font-size: 12px;"> <b>(12.10.2014)
</b>ஞாயிற்றுக்கிழமை.</span></div>
<div>
</div>
<div>
<span style="font-family: "arial" , sans-serif; font-size: 12px;">நேரம் : மாலை 05.30 மணி.</span></div>
<div>
</div>
<div>
<span style="font-family: "arial" , sans-serif; font-size: 12px;">இடம் : 12, எம்.வி.நாயுடு தெரு, </span></div>
<div>
<span style="font-family: "arial" , sans-serif; font-size: 12px;"> சேத்துப்பட்டு (அஞ்சல் ) </span></div>
<div>
<span style="font-family: "arial" , sans-serif; font-size: 12px;"> </span><span style="font-family: "arial" , sans-serif; font-size: 12px;"> பழைய ஆர்.டி .ஓ. அலுவலகம் அருகில்,</span><span style="font-family: "arial" , sans-serif; font-size: 12px;"> </span></div>
<div>
<span style="font-family: "arial" , sans-serif; font-size: 12px;"> சென்னை-31.</span><span style="font-family: "arial" , sans-serif; font-size: 12px;"></span></div>
<br />
<div>
</div>
<span style="font-family: "arial" , sans-serif; font-size: 12px;">உரை: பேராசிரியர்<b> ம. வே. பசுபதி </b>அவர்கள் </span><br />
<div>
<span style="font-family: "arial" , sans-serif; font-size: 12px;"> முதல்வர் (பணிநிறைவு), </span></div>
<div>
<span style="font-family: "arial" , sans-serif; font-size: 12px;"> திருப்பனந்தாள் தமிழ்க் கல்லூரி. </span></div>
<div>
<span style="font-family: "arial" , sans-serif; font-size: 12px;"><br /></span></div>
<div>
<span style="font-family: "arial" , sans-serif; font-size: 12px;"><br /></span></div>
<div>
<span style="font-family: "arial" , sans-serif; font-size: 12px;">அனைவரையும்
நிகழ்ச்சிக்கு அகமகிழ்வுடன் அழைக்கின்றோம்! </span></div>
<div>
<span style="font-family: "arial" , sans-serif; font-size: 12px;"><br /></span></div>
<div>
<span style="font-family: "arial" , sans-serif; font-size: 12px;"><span style="color: white;">.</span></span></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1134172536605043424.post-29476994901402520192014-10-04T13:33:00.002+05:302016-06-19T18:32:04.367+05:30அரசே சாராயம் விற்கலாமா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<ul style="text-align: left;">
<li><h3>
<span style="color: blue;">கேட்கிறார் ராஜாஜி </span></h3>
<h3 style="text-align: center;">
<span style="color: blue;"> </span><a href="https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSQq2RU1A967hiydRZKxtuAIYVCsUjUivgkFbEbOFbRnTKG3QH4IQ" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSQq2RU1A967hiydRZKxtuAIYVCsUjUivgkFbEbOFbRnTKG3QH4IQ" /></a></h3>
<h3>
<span style="color: blue;"> </span></h3>
</li>
</ul>
<b>முந்தைய</b> சென்னை ராஜதானி மாகாணத்தின் சட்டசபையில் 1937-ஆம் ஆண்டு ராஜாஜி பிரதமராக இருந்தபோது மதுவிலக்குச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தொலைநோக்குப் பார்வையுடன் கொண்டுவரப்பட்ட அந்தச் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், அந்த அரசு ஆட்சியிலிருந்து விலகியது. தொடர்ந்து 1944 ஜனவரி முதல் தேதியிலிருந்து மீண்டும் கள்ளுக்கடைகளைத் திறப்பது என்று பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்தது.<br />
<a name='more'></a><br />
<br />
‘சட்டத்திற்கு விரோதமாக கள்ளச்சாராயம் வடிக்கும் குற்றங்கள் அதிகமாகிக வருவதாலும், நாட்டிலுள்ள நாணயப் பெருக்கத்தையும் விலைவாசி உயர்வையும் தடுக்க, கள் வரியைக் கொண்டு ஜனங்களுக்கு நன்மை செய்யக்கூடும் என்பதாலும், மதுவிலக்கை ரத்து செய்வதாக’ பிரிட்டிஷ் அரசு அப்போது அறிவித்தது. <br />
<br />
மதுவிலக்கை ரத்து செய்வதற்கு அரசுத் தரப்பு கூறிய காரணங்களை மறுதலித்த ராஜாஜி எழுதிய கட்டுரைகள் ‘மதுவிலக்கு (கள் ஒழிக)' என்கிற தலைப்பில் கமலா பிரசுரத்தாரால் நூலாக வெளியிடப்பட்டது.<br />
மதுவிலக்கிற்கு ஆதரவாகவும், அரசுத் தரப்பின் மதுக்கொள்கையை விமர்சித்தும் ராஜாஜி அந்த நூலில் முன்வைக்கும் ஆணித்தரமான வாதங்கள், இன்றைக்கும் பொருத்தமானதாக இருக்கின்றன. <br />
<br />
மதுபானங்கள் பற்றிய எல்லா விவரங்களையும் ராஜாஜி துல்லியமாகப் பட்டியலிடுவதுடன், மருத்துவ ரீதியாக அதனால் ஏற்படும் தீமைகளையும், பொருளாதார ரீதியாக ஏற்படும் இழப்புகளையும், சமுக ரீதியாக ஏற்படக்கூடிய சீரழிவுகளையும் தர்க்கரீதியாக இந்நூலில் விவாதித்திருக்கிறார்.<br />
<br />
"சர்க்கார் தாமே கலால் வியாபாரம் நடத்தியும், மேற்பார்வை பார்த்தும் வந்தாலும்கூட, சட்ட விரோதமாக ரகசியமாய் மதுபானங்களை உற்பத்தி செய்து விற்பவர்கள் இருக்கின்றனர். அவர்களோடு சர்க்காருக்கு எப்போதும் போட்டி. திருட்டு வியாபாரத்தோடு எப்போதும் போட்டியாகவே சர்க்கார் திட்டங்கள் ஏற்படுத்திக் கொண்டுபோக வேண்டும். கள்ளச் சாராயத்தை ஒழிப்பதற்காகப் போடப்பட்ட திட்டம், கடைசியில் சாதாரண வியாபார முறையில் நடத்த வேண்டியதாகிறது...<br />
<br />
சர்க்கார் எடுத்துக் கொண்டிருக்கும் வேலை, இவ்வாறு மிகவும் கஷ்டமாகிறது. இதற்காக ஒரு பெரிய சிப்பந்திக் கூட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. மாகாணம் முழுவதும் நடக்கும் மதுபான வியாபாரத்தின் தலைமையை சர்க்கார் வகித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக மிகவும் திறமையான அதிகாரிகளை நியமித்து அவர்களை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதர்மமான ஒரு வியாபாரத்தை ஒழித்துவிடாமல் தாக்குப்பிடிக்க முயற்சித்தால் இவ்வாறு தான் முடியும்...<br />
<br />
"மதுபானத்திலிருந்து சமுதாயச் செலவுக்காக எடுக்கக்கூடிய வரிப்பணத்தை ஏன் வீணில் இழக்க வேண்டும்? வரிப்பணம் இருந்தால்தானே ஜனங்களுக்கு வேண்டிய நன்மைகளைச் சர்க்கார் செய்ய முடியும்?' என்று கேட்கிறார்கள். உண்மையில் கலால் வருமானமானது வருமானமே அல்ல. இப்போது சர்க்கார் கஜானாவில் செலுத்தப்படும் வருமானத்தை விட மதுவிலக்கு ஏற்பட்டால், ஐந்து மடங்கு அதிகமாக மக்கள் வீடுகளில் பணம் மிஞ்சும். மதுவினால் விருத்தியாகும் (அதிகரிக்கும்) குற்றங்களும் குறையும்.<br />
<br />
சமுதாயத்திற்கு பெரும் நஷ்டத்தை உண்டாக்கக் கூடிய ஒரு வியாபாரத்தை நடக்கச் செய்து அதில் ஒரு பங்கை சமுதாயம் மறுபடி பெறுவதைக் காட்டிலும் வேறு வரிகள் போட்டுக்கொண்டு அரசாங்க நிர்வாகம் நடத்துவது மேன்மையான வழி. ஏழைக் குடும்பங்களைக் கெடுக்கும் ஒரு வியாபாரத்தை அரசாங்கமே நடத்தி, மற்றவர்கள் அதிலிருந்து வரும் லாபத்தில் ஒரு பங்கை எடுத்துக்கொண்டு சுகம் பெறுவது தருமமல்ல, ராஜ நீதியுமல்ல!”<br />
<br />
-என்கிறார் ராஜாஜி.<br />
<br />
ஆணித்தரமான வாதங்கள், எளிமையான நடையில் விளக்கங்கள். மூதறிஞர் என்பதை வார்த்தைக்கு வார்த்தை நிரூபிக்கிறார் ராஜாஜி. இன்றைய ஆட்சியாளர்களும், அரசியல் தலைவர்களும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல் இது.<br />
<br />
<br /></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1134172536605043424.post-104452537238471222014-10-02T03:14:00.001+05:302016-06-19T18:32:23.060+05:30காந்திஜி கண்ட சத்தியாக்கிரகம்! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: right;">
<span style="color: blue;"><span style="font-size: large;"><span class="authorName">-லா.சு.ரங்கராஜன்</span></span></span></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioSQ_Gjafsm94SFkfZ_52lnB4w7md5foH4wmb3TUeRjuhNH8xn059ypYMfWRiUp4xtmdyEzGib4lSn4cnUOPm1Sr_Wr9z6G_44LnEhOHnfmNjkjbXrecD-LwMSAZIdZ1u0yVeZ3UlJg9c/s1600/Mahatma+Gandhi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="245" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioSQ_Gjafsm94SFkfZ_52lnB4w7md5foH4wmb3TUeRjuhNH8xn059ypYMfWRiUp4xtmdyEzGib4lSn4cnUOPm1Sr_Wr9z6G_44LnEhOHnfmNjkjbXrecD-LwMSAZIdZ1u0yVeZ3UlJg9c/s1600/Mahatma+Gandhi.jpg" width="320" /></a></div>
<br />
<span class="authorName"><b> ‘உண்மையில் </b>காந்தியிசம்' (காந்தியம்) என்றால் என்ன என்று எனக்கே தெரியாது. நாட்டிற்கு நான் புதிதாக ஏதும் வழங்கவில்லை. இந்தியாவின் பாரம்பரியம் மிக்க மெய்யறிவுக்கு ஒரு புது வடிவம் அளித்துள்ளேன். அவ்வளவு தான். ஆகவே, அதனை காந்தியம் என்று கூறுவது தவறு' - என்று 1940 பிப்ரவரி 20 அன்று மலிகண்டா (வங்க மாகாணம்)வில் காதி கண்காட்சியைத் திறந்துவைத்து ஆற்றிய உரையில் மகாத்மா காந்தி தன்னடக்கத்துடன் கூறியுள்ளார்.</span><br />
<a name='more'></a><span class="authorName"><br />1936-இல் காந்தி சேவா சங்க அமைப்பாளர் கூட்டத்தில் காந்திஜி பேசுகையில், "காந்தியிசம் என்று நான் எதையும் உருவாக்கவில்லை. எந்த ஒரு சமய உள்பிரிவையும் விளக்க முற்படவில்லை. எந்த ஒரு தனி சித்தாந்தத்தையும் தோற்றுவித்ததாக உரிமை கொண்டாடவில்லை. அவ்வாறு தோற்றுவிக்க முயற்சி செய்யவும் விரும்பவில்லை. எவ்விதப் பொருள் கூறுகளையும் விரிவாகத் திட்டமிட்டு ஆய்வு செய்யாமல், சத்தியம், அகிம்சை எனும் நிரந்தர நியதிகளை நமது அன்றாட வாழ்வில் அனுசரிப்பதற்கும், எதிர்கொள்ளும் பிரச்னைகளின் தீர்வுக்குப் பயன்படுத்துவதற்கும் என் வழியில் முயற்சி செய்து வருகிறேன்” என்றார்.<br /><br />இந்து மதத்திலும், புத்த, ஜைன சமயங்களிலும் அகிம்சை வெவ்வேறு விதமாக அடிப்படைத் தத்துவமாகப் போதிக்கப்பட்டுள்ளது. ‘அகிம்ஸா பரமோ தர்மஹ' (அகிம்சையே தலையாய நெறி) என்பது மகாபாரத வாக்கியம். அதனை காந்திஜி அடிக்கடி மேற்கோள் காட்டுவார்.<br /><br />ஆயினும், முனிவர்கள், சாதுக்கள், துறவிகள் போன்ற புனிதர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய தர்மமாகவே அகிம்சை பண்டைய காலத்தில் கருதப்பட்டு வந்தது. இந்த மனப்பான்மையை மாற்றி, அகிம்ஸா தர்மத்தைச் சமூகமும், நாட்டு மக்களும் பின்பற்றுவதற்கான வழிமுறையாக வகுத்தளித்ததுதான் காந்திஜி புகுத்திய மகத்தான புரட்சியாகும்.<br /><br />"அரசாங்கமே கூட அகிம்சை அடிப்படையில் அமையப் பெறலாம், மக்கள் மனம் வைத்தால்” என்றார் அண்ணல் காந்தி. "பெருவாரியான மக்கள் அகிம்சையைப் பின்பற்ற முடியும் என்கிற என் முயற்சி, உலக வரலாற்றிலேயே ஒரு புதிய பரிசோதனை ஆகும்” என்று காந்திஜி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.<br /><br />ஆயினும், ஒரு அரசாங்கம் முற்றிலுமாக அகிம்சை அடிப்படையில் அமைவது என்பது இயலாத காரியம் என்பதை அவர் பின்னர் உணர்ந்தார். "அரசாங்கம் அகிம்சையாளர்களின் தனியுரிமை ஆட்சி அல்ல. ஆகவே, முழுமையான அகிம்சாபூர்வ ஆட்சி முறை என்ற பொற்காலத்தை நான் இன்று கனவு காண்பதற்கில்லை. அவ்வாறாயினும், ஒரு சமூகம் பெருமளவில் அகிம்சையைப் பின்பற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. அத்தகைய சமூகத்தினரை ஆளும் அரசாங்கமும், சட்டம் - ஒழுங்கை அமல்படுத்துவதன் பொருட்டு, மிகக் குறைந்த அளவே வன்முறையைக் கையாளும். ஏனெனில், எந்த அரசும் அராஜகத்தை அனுசரிப்பதற்கில்லை அல்லவா?” என்றார்.<br /><br />காந்திஜி ஒரு யதார்த்தவாதி. ஆகவே தான், தாம் வகுத்த அகிம்சை நியதிக்கு விதிவிலக்குகளையும் அளித்தார். "எந்த ஒரு உன்னதக் கொள்கையையும் எவராலும் நூற்றுக்கு நூறு சதவீதம் அனுஷ்டிக்க இயலாது. உடலோடு கூடிய இக வாழ்வில் இம்சையை அடியோடு தவிர்க்க முடியாது” என்றும் கூறியுள்ளார்.<br /><br />அவ்வப்போது அவர் அளித்த விதி விலக்குகளின் பட்டியல் வெகுநீளம்! உதாரணமாக, "கள்வர்கள், கொள்ளையர்கள், அத்துமீறி அக்கிரமாக நடந்து கொள்பவர் யாராயினும் அது அகிம்சையா, ஹிம்சையா என்ற கேள்விக்கு அத் தருணங்களில் இடமில்லை” என்றார்.<br /><br />"பெண்கள் தமது மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, பற்கள், நகங்கள், ஏன், கத்தியால்கூட அந்த அயோக்கியர்களைத் தாக்கலாம்” என்றார்.<br /><br />"விஷ ஜந்துக்களையும், பாம்புகளையும், குரங்குகளையும், எலிகளையும், மக்களை அச்சுறுத்தும் தெருநாய்களையும் கொல்லலாம். விலங்குகளைக் காப்பாற்றும் பொருட்டு மனித உயிருக்கு ஆபத்து விளைவிப்பதை நான் ஒருபோதும் ஒப்ப மாட்டேன்” என்று கூறினார்.<br /><br /> ‘சத்தியாக்கிரகம்' எனும் தத்துவம் காந்திஜியின் கண்டுபிடிப்பு. ‘சத்தியாக்கிரகம்', ‘சத்தியாக்கிரகி' என்ற சொற் பிரயோகங்கள் பண்டைய வடமொழி நூல்களில் கூடக் கிடையாது.<br /><br />ஸ்ரீராமர், பீஷ்மர், அரிச்சந்திரன் போன்றவர்களை ‘சத்திய விரதன்', ‘சத்திய சந்தன்' என்றெல்லாம் கூறுவதுண்டு. ஆனால், ‘சத்தியாக்கிரகி' (சத்தியத்தை நிலைக்களனாகக் கொண்டவர்) என்பது காந்திஜி உருவாக்கிய சொற் பிரயோகம்.<br /><br />"தீமையைத்தான் எதிர்க்க வேண்டும், தீமை விளைவிப்பவனை அல்ல” என்பதே காந்திஜியின் சத்தியாக்கிரகக் கொள்கை.<br /><br />சத்தியாக்கிரகம் என்பதன் கருத்தை காந்தி மகான் தோரோ நூலிலிருந்து கிரகித்தார் என்று கூறுவோர் உண்டு. ஹென்றி டேவிட் தோரோ (1817-1862) என்ற அமெரிக்க நூலாசிரியர் எழுதிய நூலில் அரசாங்கத்திற்கு எதிராகத் தனி மனிதனின் உரிமைகளைப் பற்றி அலசியுள்ளார்.<br /><br />மக்கள் தங்களின் உரிமைகளை வலியுறுத்தவும், மக்கள் விரோத சட்டதிட்டங்களை எதிர்க்கவும் சட்ட மறுப்பு மேற்கொள்ளலாம் என்பது போன்ற கருத்துகளை முன்வைத்துள்ளார்.<br /><br />ஆனால், காந்திஜி இந்திய ஊழியர் சங்க முக்கிய உறுப்பினரான பி. கோதண்டராவ் என்பவருக்கு 1935 செப்டம்பர் 10 அன்று எழுதிய கடிதத்தில் "நான் தோரோவின் நூல்களிலிருந்து சத்தியாக்கிரகக் கருத்தை கிரகித்தேன் என்று கூறுவது தவறு. தென்னாப்பிரிக்காவில் எனது சத்தியாக்கிரக இயக்கம் வெகுவாக முன்னேறிய பிறகே நான் தோரோவின் ‘சிவில் டிஸ்ஒபீடியன்ஸ்' என்கிற கட்டுரைத் தொகுப்பைப் படித்தேன். அதன் பிறகு ஆங்கிலேய வாசகர்களுக்குப் புரிவதற்காக, குஜராத்தி சொல்லான சத்தியாக்கிரகத்தை, ‘சிவில் டிஸ்ஒபீடியன்ஸ்' என்று குறிப்பிடத் தொடங்கினேன். ஆனால், அந்த சொல் எனக்கு அவ்வளவாகத் திருப்தியளிக்கவில்லை. ஆகவே, பின்னர், ‘சிவில் ரெஸிஸ்டன்ஸ்' (சட்ட மறுப்பு) என்ற சொல்லை உபயோகிக்கத் தொடங்கினேன்' என்று விளக்கியுள்ளார்.<br /><br />நந்தனார் சரித்திரத்தை 1927-இல் ‘யங் இந்தியா' வார இதழில் படித்த காந்திஜி, "நந்தனார் தன்னை வருத்திக் கொண்டாரே தவிர, தன்னை இழிவு செய்தவர்களை எதிர்க்கவோ, கடிந்துரைக்கவோ இல்லை. தனது தூய பக்தியால் இறுதியில் வெற்றி பெற்றார் என்பது சத்தியாக்கிரகிக்கு ஓர் எடுத்துக்காட்டு” என்றார்.<br /><br /> ‘சத்தியாக்கிரகம், நியாயமான கோரிக்கைகளுக்காக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். சத்தியாக்கிரகிகளுக்குக் கடவுள் பக்தி மிக அவசியம். சத்தியாக்கிரகிகளுக்குக் கடவுள்தான் துணை' என்றெல்லாம் காந்திஜி வலியுறுத்தியுள்ளார்.<br /><br />19.2.1925 தேதியிட்ட ‘யங் இந்தியா' வார இதழில் பின்வருமாறு முத்திரை குத்துகிறார்: "நான் படித்தறிந்த தமிழ்ப் பாடங்களில் ஒரே ஒரு பழமொழி மட்டும் என் மனதில் இன்றும் பசுமையாகப் பதிந்துள்ளது. ‘திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை' என்பதே அப் பழமொழி. சத்தியாக்கிரகம் எனும் எனது தத்துவம் அந்தப் பழமொழி உணர்த்தும் உண்மையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதே ஆகும்”.</span><br />
<span class="authorName"><br />‘ஒத்துழையாமை' என்ற சொல்லை முதன்முதலாக அரசியலில் புகுத்திப் புதுமை விளைவித்தவரும் மகாத்மா காந்திதான்.<br /><br />1919 நவம்பரில் தில்லியில் ஒரு கிலாபத் முஸ்லிம் மாநாட்டில் பங்கேற்றியபோது, பிரிட்டிஷ் அநீதி அரசுடன் இனி ஒத்துழைக்க மாட்டோம் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது தான் அதற்கு ‘ஒத்துழையாமை இயக்கம்' என்று பெயர் சூட்ட வேண்டுமெனத் தமக்குத் திடீரென்று தோன்றியதாக காந்திஜி தமது சுயசரிதையில் கூறியுள்ளார்.<br /><br /> ‘ஒத்துழையாமை என்பது சத்தியாகிரகத்தின் ஒரு கிளை' என்றும், "சத்தியாக்கிரக ஆயுதக் கிடங்கில் ஒத்துழையாமை ஒரு முக்கிய ஆயுதம்” என்றும் காந்திஜி விளக்கம் அளித்துள்ளார்.<br /><br />பொருளியல் பற்றித் தமக்கு அதிகம் தெரியாது என்று காந்திஜி கூறிவந்த போதிலும் பொருளாதார மேதை பெந்தாம் அறிவித்த ‘பெரும்பாலான மக்களின் அதிகபட்ச நலன்’ (The greatest good of the greatest number) என்கிற குறிக்கோளை காந்திஜி கண்டனம் செய்தார். "அவ்வாறெனில், பெரும்பாலானோரின் நலன் பொருட்டு சிறுபான்மையினரின் நலன் பாதிக்கப்படினும் அக்கறையில்லை என்றாகிறது” என்றார்.<br /><br />அனைத்து மக்களும் நலன் பெறுதல், ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்' என்ற மாற்றுக் கருத்தை முன்வைத்தார். நலன் பெறுதல் என்றால் வெறும் உலகாயத பொருள் குவிப்பும், தேவைகளை அளவுக்கு மீறி பெருக்கிக் கொண்டே போவதும் அல்ல. அரசியல், சமூக, குறிப்பாக, ஆன்மிக ரீதியில் அனைவரும் உய்வு எய்த வேண்டும் என்பதே காந்தி மகானின் லட்சியக் கனவான சர்வோதய சமுதாயம்!</span><br />
<br />
<div style="text-align: center;">
<span class="authorName"> <span style="color: magenta;">***</span></span></div>
<span class="authorName">இன்று மகாத்மா காந்தியின் 146-ஆவது பிறந்த நாள். </span><br />
<span class="authorName"><br /></span>
<span class="authorName">நன்றி: <a href="http://www.dinamani.com/editorial_articles/2014/10/02/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0/article2458627.ece" target="_blank"><b>தினமணி</b></a> (02.10.2014)</span><br />
<span class="authorName"><br /></span>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1134172536605043424.post-41360560818445514592014-09-11T14:56:00.002+05:302016-06-19T18:32:36.082+05:30ஆச்சார்ய தேவோ பவ!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h3 style="text-align: center;">
<span style="color: blue;"><b>-சு.சத்தியநாராயணன் </b></span> </h3>
<h3 style="text-align: center;">
</h3>
<h3 style="text-align: right;">
<span style="color: white;"><span style="background-color: black;"><b>சிந்தனைக்களம்</b></span></span></h3>
<h2 style="text-align: left;">
</h2>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQ0zyEdBLrY8V2YP8kMY08aulpuVCiNWQdCcwXEkCT_uOoIXrZCXA" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="232" src="https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQ0zyEdBLrY8V2YP8kMY08aulpuVCiNWQdCcwXEkCT_uOoIXrZCXA" width="320" /></a></div>
<br />
<b><span style="font-size: x-small;">திருப்பூர் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி பள்ளிகள் சங்கமும் திருப்பூர் மெல்வின் ஜோன்ஸ் மற்றும் திருப்பூர் நிட் சிட்டி அரிமா சங்கமும் ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர் தினவிழாவில் (செப். 5), திருப்பூர் அறம் அறக்கட்டளையின் நிர்வாகிகளுள் ஒருவரான </span></b><span style="font-size: x-small;"><span style="color: blue;">திரு.</span></span><b><span style="color: blue;"><span style="font-size: x-small;">சு.சத்தியநாராயணன்</span></span><span style="font-size: x-small;"> ஆற்றிய உரை இது...</span></b><br />
<a name='more'></a><b><span style="font-size: x-small;"> </span></b><br />
<br />
அன்பிற்குரிய ஆசிரியர்களே, <br />
<br />
உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன். நான் எனது சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன். எதையும் நான் கூறும் அறிவுரையாக எடுத்துக்கொள்ள வேண்டாம். <br />
<br />
<br />
நேற்றைய தி ஹிந்து (தமிழ்) நாளிதழில் திரு. பி.ஏ. கிருஷ்ணன் எழுதியுள்ள ஆசிரியர்களே நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ஒரு செய்தி என்னவெனில், “இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்திய சர்வேயில் 66% பட்டதாரிகள் எந்த வேலைக்கும் லாயக்கில்லாதவர்கள்; இவர்களில் பொறியியல் மாணவர்களை ஒதுக்கிவிட்டால் இந்த அளவு 85% லிருந்து 90%” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியத் தொழில் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு தொழில் துறைக்குத் தேவையான வசதிகளைப் பற்றிய ஆலோசனைகளைக் கூறக்கூடிய அமைப்பு. இவ்வமைப்பு இவ்வாறு ஒரு செய்தி வெளியிட்டிருக்குமானால் அதன் விளைவு என்ன? நம் தேசத்தின் நிலையென்ன என்ற எண்ணம் எழுகிறதல்லவா? இதனை ஆசிரியர்களாகிய நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? இதனைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? <br />
<br />
<br />
(ஒரு ஆசிரியை இன்று உள்ள கல்வித்திட்டம் தவறானது; இது மாற்றப்பட வேண்டும்; சுய சிந்தனை உள்ள மாணவர்களை உருவாக்குமாறு கல்வித் திட்டம் அமைய வேண்டும் என்றார். இந்த கருத்தையே பெரும்பாலான ஆசிரியர்கள் வலியுறுத்தினர்) <br />
<br />
<br />
இன்றைய கல்வித்திட்டம் சரியல்ல என்கிற நீங்கள் இதை மாற்றுவதற்கு என்ன முயற்சி எடுத்துள்ளீர்கள்? இதற்கான பதில் நிர்வாகம் என்ன சொல்கிறதோ அதைத்தானே நாங்கள் செய்ய முடியும் என்றவாறு அமைந்தது. நீங்கள் இந்த பணியை ஒரு வேலையாகப் பார்க்கிறீர்களா, அல்லது வேறு எவ்வாறாவாது காண்கிறீர்களா என்றேன். உடனே ஒட்டு மொத்தமாக சேவையாகச் செய்கிறோம் என்ற பதில் கிடைத்தது. <br />
<br />
<br />
நான் இந்தியத் தொழில் கூட்டமைப்பின் சர்வேயை கல்வித் திட்டத்தின் குறைபாட்டை உணர்த்துவதாக மட்டுமல்லாமல் ஆசிரியர்கள் தவறவிட்டுவிட்ட ஒரு செயலையும் சுட்டுவதாகவும் உணர்கிறேன். ஏனெனில் இங்கு லாயக்கில்லாதவர்கள் என்று இவர்கள் குறிப்பிடும் அனைவரும் முட்டாள்களல்ல. பெற்றோராலோ, சமுதாயத்தாலோ ஏதோ ஒன்றைப் படிக்கத் தள்ளிவிடப்பட்டவர்களேத் தவிர, தங்கள் விருப்பம், திறமையைக் கொண்டு தங்கள் படிப்பினைத் தீர்மானிக்கவில்லை. <br />
<br />
<br />
பெற்றோரும் ஆசிரியரும் மட்டுமே, தங்கள் பிள்ளைகளின் தனித் திறமையை, ஆர்வத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றவர்கள். இதில் அதனை அறிந்து கொண்டு ஊக்குவிக்க வேண்டிய கடமை ஆசிரியருக்கு மிக அதிகமாக உள்ளது. இதனை நீங்கள் எத்தனை பேர் செய்திருக்கிறீர்கள்? இதனைச் செய்திருந்தாலே பல மானவர்களின் எதிர்காலம் புதிய பாதையில் பயணப்பட்டிருக்கும். உங்களின் சேவை என்ற ஒரு சொல் முழுவடிவம் கண்டிருக்கும். அப்துல் கலாமடைந்த இன்றைய நிலை அவரின் ஆசிரியர் அவருக்களித்த ஒன்று. அன்று அந்த ஆசிரியர் அவரது திறமையை ஊக்குவிக்காமல் இருந்திருந்தால் இன்று அவரும் அந்த லாயக்கில்லாதவர் பட்டியலிலே இடம் பெற்றிருந்திருக்கலாம். <br />
<br />
<br />
கல்வித் திட்டம் சரியில்லை, மாற்றுக்கல்வி வேண்டும் என்று சமுதாயத்தின் பல தரப்பிலிருந்தும் குரல்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. ஆலோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை இல்லை முழுமையாக என்று கூட சொல்லிவிடலாம் கல்விக்கூடங்களுக்கு வெளியிலிருந்துதான் எழுகிறது. உண்மையில் இது ஆசிரியர்களாகிய உங்களிடமிருந்து எழ வேண்டும். நீங்கள் உங்கள் நிர்வாகத்துக்கும், அரசுக்கும் இதனைத் தெரியப்படுத்த வேண்டும். <br />
<br />
<br />
இந்த மாற்றுக் கல்வித் திட்டம் வருவதற்கு முன்னர் உங்களால் உங்கள் வகுப்பறைக்குள், உங்கள் கல்விக் கூடத்திற்குள் உங்களால் என்னென்ன மாறுதலை ஏற்படுத்த முடியுமென்று யோசியுங்கள். அதற்கு உத்வேகத்துடன் தயாராகுங்கள். <br />
<br />
அதற்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ள சில ஆலோசனைகள். <br />
<br />
<b><br /> எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் <br /> எண்ணுவம் என்பதி ழுக்கு </b><br />
<br />
- என்பது வள்ளுவன் வாக்கு. இங்கு நீங்கள் ஆசிரிய சேவையை துணிந்து எடுத்துள்ளீர்கள். உங்களது எண்ணமும் துணிவும் எவ்வாறு அமைய வேண்டும்? <br />
<br />
<br />
<span style="color: blue;"><b>எண்ணுக; </b></span><br />
<br />
<br />
* பெரிதாகச் சிந்தியுங்கள் - உங்கள் இலக்குகளை பெரிதாக அமைத்துக் கொள்ளுங்கள்; உங்கள் கனவுகள் பெரிதாக அமையட்டும். <br />
<br />
<br />
* <b>உங்கள் தெய்வீக சக்தி குறித்து சிந்தனை செய்யுங்கள்</b> - ஆசிரியப் பணி என்பது மிக மகத்தானது. ஒரு சமுதாயத்தை சிற்பி போல செதுக்க வேண்டிய பணி. எனவே நீங்கள் தெய்வீகமானவர்கள். உங்கள் சக்தியின் அருமையை எண்ணுங்கள். <br />
<br />
<br />
* <b>வித்தியாசமாகச் சிந்தியுங்கள்</b> - ஒரு எல்லையை வகுத்துக் கொண்டு இப்படித்தான் கற்பித்தல் நிகழவேண்டும் என்றில்லாமல் அதன் எல்லையை விரிவு படுத்துங்கள். ஒவ்வொரு முறையும் வித்தியாசத்தை உணரச் செய்யுங்கள். வகுப்பறை என்றில்லாமல் மாணவன் கற்றுக் கொள்ள நீங்கள் விரும்பினால் அது மரத்தடியில் கூட நிகழட்டும். இடமும் சூழலும் வித்தியாசமாய் அமையட்டும். <br />
<br />
<br />
* <b>தடைகளை வெல்லும் முறைகளைப் பற்றிச் சிந்தியுங்கள்</b> - இவையெல்லாம் செய்யமுடியாமல் உங்களுக்கு ஏற்படும் தடைகளை எவ்வாறு அகற்றுவது என்று சிந்தியுங்கள். நீங்கள் அதனைச் சிந்திக்கையில் நிச்சயம் புத்தம் புதிய ஒரு வழி பிறக்கும். மாணவர்களுக்கு கற்றலில் ஏற்படும் தடைகளை அகற்ற புதிய வழிமுறைகளைச் சிந்தியுங்கள். <br />
<br />
<br />
<span style="color: blue;"><b>துணிக </b></span><br />
<br />
<br />
* <b>வெற்றிக்குத் தேவையான அளவு பணி செய்க </b><br />
<br />
<br />
* <b>தொடர்ந்து வேலை செய்க </b> - தொடர்ச்சியான ஒரு செயலே நல்ல பலனைக் கொடுக்கும். ஆரம்ப நிலையிலேயே ஒரு செயலின் முடிவை நாம் தீர்மானித்து விட இயலாது. தொடர்ச்சியான முயற்சி வெற்றியை உறுதி செய்யும். <br />
<br />
<br />
* <b>மன உறுதியுடன் வேலை செய்க </b>- கடின உழைப்பும், தொடர்ச்சியான பணியும் அயர்ச்சியை உண்டாக்கிவிடக்கூடும். வரும் சோதனைகளும் அதிகமாகக் கூடும். இவையனைத்தையும் எதிர்கொள்ள மன உறுதி மிக அவசியம். <br />
<br />
<br />
* <b>சமுதாயத்திற்காக வேலை செய்க</b> - ஏற்கனவே நான் கூறினேன், நீங்கள் சமுதாயத்தைச் செதுக்கும் சிற்பிகள் என்று. எனவே உங்கள் பணியில் சமுதாயத்தின் நலன் முக்கியமான குறியீடாக அமைய வேண்டும். இன்று இங்கு தனி மனித உரிமை பேசப்படுகிறது. இது இந்தியாவுக்கான வார்த்தை அல்ல. இங்கு சமுதாய உரிமைதான் முக்கியம். உரிமை என்பதை விட கடமை என்ற வார்த்தை முக்கியம். தனி மனித உணர்வு ஐரோப்பியர்களுக்குச் சரியாக அமையலாம். நம்மைப் பொறுத்தவரை குடும்ப உணர்வுடன் செய்ல்படுபவர்கள். நாம் நம் சமுதாயம் மேம்பட உழைப்போம். தனி மனிதனின் தியாகம் சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக அமைய வேண்டுமே ஒழிய சமுதாயம் தனி மனிதனுக்காக தியாகம் செய்வதாக அமையக்கூடாது. <br />
<br />
<br />
ஆதிசங்கரரின் வாக்காக ஒன்றைக் கூறுவார்கள்; <br />
”கர்த்தும் அகர்த்தும் அன்யதா வா கர்த்தும் ஷக்யதே” - ஒன்றைச் செய்யவும் செய்யாதிருக்கவும், வேறு விதமாகச் செய்யவும் வேண்டிய சுதந்திரமான படைப்பாற்றல் மனிதனுக்கே உள்ளது. எனவே நீங்கள் செய்ய வேண்டிய செயல்களையும், செய்யும் விதங்களையும் தீர்மானியுங்கள். <br />
<br />
<br />
இதற்காக மேலும் உங்கள் தனித்திறனை மதிப்பிற்குரியதாக ஆக்கிக் கொள்ள சில ஆலோசனைகள். <br />
<br />
<br />
<b>உள்ளார்ந்த நேயம் </b>- நேயம் என்பது வெறும் நாடகமாகிவிடக்கூடாது. நமது உள்ளத்திலிருந்து வெளிப்படவேண்டும். இரு உதாரணங்களைக் கூறலாம். <br />
<br />
<br />
ஒன்று மகாபாரதத்தில் கண்ணன், யுதிஷ்டிரன் செய்த ராஜசூய யாகத்திற்கு வந்த அனைவரையும் பாதங்கழுவி அழைத்தது. இதன் பலன் யாகத்தின் முதல் பூஜை அவன் வசமானது. இங்கு தென்னகத்தே ராஜராஜசோழன் தஞ்சைப் பெருவுடையார் கோவிலை நிர்மாணிக்கும் சிற்பிக்கு வெற்றிலைச் சாறு உமிழ பாத்திரம் தாங்கி நின்றது. மிகபெரிய கலைப் பொக்கிஷம் அமைத்த பெருமை அவன் வசமானது. இந்த நிகழ்வுகளை பணிவு எனக் குறிப்பிடாமல் நேயம் என்று குறிப்பிடுவதே சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். <br />
<br />
<br />
ஒரு ஆசிரியையின் உள்ளார்ந்த நேயத்தின் உண்மைக் கதை ஒன்றக் காண்போம். ஒரு ஆசிரியை, மிகவும் கண்டிப்பானவர், நல்ல அறிவுக் கூர்மையுள்ளவர். ஆனால் அவரால் தத்தி மாணவர்களைச் சகித்துக் கொள்ள இயலாது. அந்த கல்வி வருடம் அவர் வகுப்பாசிரியை; அந்த வகுப்பிலிருந்து ஒரு மாணவனைத் தவிர அனைவரும் மிகச் சுட்டியாகச் தெரிந்தார்கள். அவன் மட்டும் ஏதோ பறிகொடுத்ததைப் போல இருந்தான். பாடங்கள் நடந்தன, வகுப்புத் தேர்வுகள் நடந்தன. அந்த ஒரு மாணவனைத் தவிர அனைவரும் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தார்கள். அவன் மீது தன் கோபத்தைக் கக்கினார் அந்த கண்டிப்புக்குப் பேர்போன ஆசிரியை. அடுத்த தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்ற மிரட்டலோடு அது நிறைவுற்றது. <br />
<br />
<br />
அதற்கடுத்த தேர்வில் அந்த மாணவனது நிலை மேலும் மோசமானது. அவனது ஒவ்வொரு அசைவிலும் சோகம் இழைந்தோடிக் கிடந்ததது. ஆனால் அந்த ஆசிரியையின் கண்களும், காதுகளும் பாடத்தைத் தாண்டி சென்றதேயில்லை. அவன் தேர்வு எழுதிய தாள்கள் அவனது மதிப்பெண்களை அள்ளித் தரவில்லை;ஆனால் அந்த ஆசிரியையிடமிருந்து வசவுகளை அள்ளி அள்ளித் தந்தது. இந்த வசவுகள் அவனுள் எந்த விளைவையும் உண்டாக்கியதாகத் தெரியவில்லை. ஆனால் அவனது சோகம் இழைந்தோடும் முகத்தில் மேலும் சோக இழைகளை அதிகரித்தவண்ணம் இருந்தது. <br />
<br />
<br />
அந்த கண்டிப்பான ஆசிரியைக்கு தலைமை ஆசிரியரிடமிருந்து அழைப்பு வந்தது. அந்த குறிப்பிட்ட மாணவனின் மதிப்பெண்கள் பற்றிய விசாரிப்பாகவே அது அமைந்தது. ஆசிரியை அந்த தத்தி மாணவனைப் பற்றி குறைகளை அடுக்கினார். அமைதியாக அனைத்தையும் கேட்ட தலைமை ஆசிரியை தான் முன்பே எடுத்து வைத்திருந்த அம்மாணவனது சென்ற வருட மதிப்பெண் பட்டியலையெல்லாம் எடுத்து இந்த வகுப்பாசிரியைப் பார்க்குமாறு கூறினார். மிக நல்ல மதிப்பெண்களை எடுத்திருந்தான். இது அந்த ஆசிரியைக்கு அதிசயமாக இருந்தது. இந்த தத்தி மாணவனுக்கு இது எப்படி சாத்தியமென எண்ணினார். தலைமையாசிரியை இந்த மாணவன் நன்கு படிக்கக்கூடிய மாணவனென்றும் அவனுக்குள்ள பிரச்சினை என்ன என்பதை கண்டுணர்ந்து அதனைக் களைந்து அவனுக்கு உதவுமாறும் கேட்டுக் கொண்டார். <br />
<br />
அன்று பள்ளி வேலைநேரம் முடிந்து அனைவரும் வீடு திரும்பும் தருணத்தில் ஆசிரியை அந்த மாணவனிடம் தனித்து பேசத் துவங்கினார். பேசத் துவங்கிய சிறிது நேரத்தில் அவன் சென்ற வருட விடுமுறையில் அவனக்கு எல்லாமாக இருந்த தாயை இழந்தது அவனை மிகப் பெரிய துயரத்தில் தள்ளியுள்ளது என்பதை உணர்ந்தார். அப்பொழுது அவருக்குள்ளிருந்த நேயம் தூண்டப்பட, கவலைப்படாதே, இனி நான் உனக்கு தாய் என்று எண்ணிக் கொள். உனது கவலைகளை, பிரச்சினைகளை என்னோடு பகிர்ந்து கொள் என ஆதரவோடு கூறினார். இதுகாறும் அவர் மாணவர்களோடு பேசி வந்த தோரணைக்கு முற்றிலும் மாறானது இது. ஆசிரியையின் இந்தப் பேச்சு ஓரளவுக்கு மாணவனது மனத்தினில் மாற்றத்தை உண்டு பண்ணியது. <br />
<br />
<br />
மறுநாள் காலை பள்ளிக்கு வந்த மாணவன், தான் கொண்டு வந்திருந்த ஒரு பழைய கடிகாரத்தை ஆசிரியைக்கு அன்பளிப்பாக அளித்தான். அது தன் தாய் அணிந்திருந்ததாகவும், இதனைக் கண்ணுறும்போதெல்லாம் தன் தாயை காணும் உணர்வு ஏற்படுவதாகவும் அவன் கூறினான். எனவே நீங்கள் இதனை அணிந்து கொண்டால் நான் உங்களிடம் முழுமையாக என் தாயை காண்பேன் என்றான்.உடனே ஆசிரியை தான் அணிந்திருந்த நல்ல கடிகாரத்தைக் களைந்துவிட்டு, அவனளித்த அந்த பழைய கடிகாரத்தை அணிந்து கொண்டாள். மாணவனின் மனம் எவ்வளவு ஆனந்தப்பட்டிருக்கும் எனச் சொல்ல வார்த்தையில்லை. உங்களால் உணரமுடியும். இங்கு தாய்மை என்ற உணர்வு பேசும் நிகழ்வு ஏற்பட்டது. <br />
<br />
<br />
பின்னர் அந்த மாணவன் தனது கற்றலில் நல்ல முன்னேற்றம் கண்டான். அவன் தனது பள்ளிக் கல்வியை முடித்து வெளிநாட்டுக்கு வேலைக்கும் சென்றுவிட்டான். ஆனால் அந்த ஆசிரியை தான் அணிந்திருந்த அந்த பழைய கடிகாரத்தை களையவில்லை. அந்த மாணவனின் தொடர்பு இல்லாதிருந்த போதும் அவளுக்கு அந்த கடிகாரம் மிக முக்கியமானதாக இருந்தது. ஆசிரியைக்குத் தேவையான தாய்மை உணர்வை தூண்டியது மட்டுமல்லாமல் அவளது ஆசிரியைப் பணி மிகச் சிறப்பாக அமைய காரணமாக அமைந்த ஒன்றல்லவா அது. <br />
<br />
பல வருடங்கள் சென்று பணி ஓய்வு பெற்றுவிட்ட அந்த ஆசிரியைக்கு ஒரு திருமண அழைப்பிதழ், விமானப் பயணச்சீட்டுடன் வந்து சேர்ந்தது. அழைப்பிதழைப் படித்த ஆசிரியை மாணவன் தன்னை நினைவு கொண்டுள்ளதை எண்ணி சந்தோஷப்பட்டாள். திருமணத்திற்கு சென்ற ஆசிரியைக்கு விமான நிலையத்திலிருந்து மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல முன்னேற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தது. மண்டபத்திற்குச் சென்ற அவருக்குச் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. அன்றும் அந்த ஆசிரியையின் கையில் அந்தப் பழைய கடிகாரமே இருந்தது. இதனைக் கண்ட மாணவன் மிகவும் நெகிழ்ந்து போனான். தாயின் ஸ்தானத்திலிருந்து அந்தத் திருமணத்தை நடத்திவைத்தார் அவர். இந்தக் கதை மாணவர்களிடம் மட்டுமல்ல அனைவரிடமும் உங்களது உள்ளார்ந்த நேயம் எப்படி வெளிப்படவேண்டும் என்பதைப்புரிந்து கொண்டிருப்பீர்கள். <br />
<br />
<br />
இரண்டாவதாக <b>கர்வமற்ற தன்மை</b> - ஒரு மராத்தி வாசகம் உண்டு. கர்வம் சாதாரண மனிதனை எதுவும் செய்யாது; உறுதியாக அது அறிவுள்ளவர்களையும், அதிகாரத்திலுள்ளவர்களையும் அழித்து விடும். அது அன்பையும், ஈர்க்கும் தன்மையும் உங்களிடமிருந்து அகற்றிவிடும். கர்வமில்லாத தன்மை மிக உயர்ந்த நிலையாகும். <br />
<br />
<br />
மூன்றாவதாக <b>வயப்படுத்தும் தன்மையும் பரவவிடும் தன்மையும்</b> - மாணவர்களை உங்களிடத்தே ஈர்த்து வயப்படுத்தும் தன்மை உங்களிடம் இருக்க வேண்டும். உங்களிடமிருந்து பல உயர்ந்த விஷயங்கள் மாணவர்களிடம் பரவச் செய்பவராக நீங்கள் இருக்க வேண்டும். <br />
<br />
<br />
நான்காவதாக <b>நேர்மறை எண்ணம்</b> - நேர்மறை எண்ணம் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள். அது உங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாறுதல்களை உருவாக்கும். <br />
<br />
<br />
ஐந்தாவதாக <b>அணுகும் முறை </b>- ஒவ்வொருவரிடமும் அணுகும் முறை அற்புதமான நிகழ்வாக அமைய வேண்டும். மூத்த ஆசிரியர்கள் புதிய ஆசிரியர்களிடம் இடைவெளி இருக்க வேண்டும், அப்பொழுதுதான் மரியாதை கிடைக்கும் என்ற எண்ணத்தினைக் கைவிட வேண்டும். கரியும், வைரமும் கார்பன் என்ற ஒரே பொருளாலானது. ஆனால் இரண்டையும் அணுகும் விதம் வேறுவேறானது. இளையவர்கள் உங்களிடம் வைரத்தை அணுகுதல் போல அணுகும் அளவு நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறல்லாமல் இடைவெளியை நீங்கள் கைக்கொண்டால் நாட்செல்ல வெறும் இடைவெளி மட்டுமே இருக்கும்;மரியாதை என்பது இருக்காது. <br />
<br />
<br />
<b>மூத்தவர்களை மதிக்கும் தன்மை</b> - முக்கியமாக மூத்த ஊழியர்களிடம் பழகும்பொழுது அவர்களது அர்ப்பணிப்பையும், நிறுவனத்துக்கு அவர்கள் கொடுத்துள்ள உழைப்பு, ஒத்துழைப்பு ஆகியவற்றை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இந்த நினைப்பு அவர்களிடம் ஒரு வித மரியாதையை உங்களுக்கு ஏற்படுத்தும். இந்நிலை மூத்தவர்களுக்கும், இளையவர்களுக்குமிடையே ஒரு நல்ல சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும். <br />
<br />
<br />
இன்னுமொரு குட்டிக்கதை. ஒரு நல்ல அரசன் இருந்தான். அவனது ஆட்சியில் மக்கள் நல்ல வாழ்க்கையைப் பெற்றார்கள். பொற்காலம் என்றே அதனை அழைக்கலாம். இந்த சூழ்நிலையில் அயல்நாட்டு அரசன் இந்த நாட்டின் மீது படையெடுத்து கைப்பற்றி அவனை நாட்டைவிட்டு ஓடும்படி செய்து விட்டான். நாட்டிலிருந்து தப்பிய அந்த அரசன் காட்டையடைந்து அலைந்து திரிந்தான். ஆடைகள் கிழிந்து, பசியால் வாடி மிகவும் களைப்புடன் ஒரு பராரியைப் போல அலைந்து கொண்டிருந்தான். நல்ல உணவுக்கும், ஆடைக்கும் அவனது மனது ஏங்கியது. <br />
<br />
<br />
களைத்த அவன் கால்கள் ஒரு ரம்மியமான சூழலை அடைந்தன. அங்கு கிழிந்த ஆடையணிந்த பல தபஸ்விகள் தியானத்தில் இருந்தனர். மெலிந்த உடல்களைக் கொண்ட அவர்கள் பல நாட்களாக சரியான உணவில்லாதவர்கள் போலக் காணப்பட்டனர். மிகுந்த பசி கொண்ட அரசனுக்கு அவர்களது நிலையும், அரசனாக இருந்த இவனது நிலையும் அவர்களிடம் உணவினை யாசிக்க தயக்கம் கொள்ள வைத்தது. ஆனால் பசி அவன் தயக்கத்தைத் தள்ளி அவர்களிடம் யாசிக்க வைத்தது. <br />
<br />
<br />
மூத்த தபஸ்வி அருகிலிருந்த மரத்தைக் காட்டி, இது கல்ப விருக்ஷம்; இதனிடம் உனக்குத் தேவையானதைக் கேள் என்றார். தயங்கினாலும் அவன் நிலை அவனை மரத்திடம் யாசிக்கச் செய்தது. அது அவனுக்குத் தேவையான உணவினை அளித்தது. பசி நீங்கிய அவன் நல்ல ஆடையினை யாசித்துப் பெற்றான். அமைதியடைந்த மனது யோசித்தது. ஏன் நமது அரசினை யாசித்தால் என எண்ணி அதனைச் செய்தான். <br />
<br />
<br />
உடனே நாட்டைக் கைப்பற்றிய அரசன் அவன் முன்னே தோன்றி, மக்கள் உன் மீது மிக நேசமாக உள்ளனர்; நீ மிகுந்த நல்லாட்சி செய்துள்ளாய்; மக்கள் நீ ஆட்சி புரிவதையே விரும்புகின்றனர்; எனவே நீ உனது நாட்டை மீண்டும் பெற்றுக் கொண்டு ஆட்சி புரிவாயாக எனக் கூறினான். <br />
<br />
<br />
நாடு திரும்பிய அரசன் ஒரு வாரத்திற்கும் மேலாக நின்று போயிருந்த அலுவல்களை செய்து நிர்வாகத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வந்தான். நிர்வாக அலுவல்கள் அவனுக்கு சிறிது ஓய்வளித்த போது அவனது மனம் பழைய நிகழ்ச்சிகளை அசை போடத் துவங்கியது. எல்லாவற்றையும் அளிக்கவல்ல கல்ப விருக்ஷம் இருந்தும் ஏனிந்த தபஸ்விகள் நல்ல ஆடையில்லாமலும், அதிக உணவில்லாமலும் வாழ்கின்றனர் என அவன் மனம் எண்ணி அதிசயத்தது. விடை கிடைக்காமல் தவித்த அவன் தபஸ்விகளின் இருப்பிடம் நோக்கிச் சென்றான். <br />
<br />
<br />
மூத்த தபஸ்வியிடம் தன் கேள்வியை முன்வைத்தான். நாங்களனைவரும் செய்த, செய்கின்ற தபஸினால் இந்த விருக்ஷம் இந்த சக்தியைப் பெற்றுள்ளது. இது இல்லாதோருக்கும் தேவையிருப்போருக்கும் கிடைக்கவே செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து நாங்கள் பெற்றுக் கொண்டு வாழ்ந்தால் இவ்விருக்ஷம் அந்த சக்தியை இழந்து விடும் என்றார். தபஸ்விகளின் தன்னலமற்ற அர்ப்பணிப்பினை எண்ணி அரசன் மிகவும் மகிழ்ந்தான். தனது ஆட்சியில் இன்னும் சிறப்பாகத் தன்னலமற்று நல்லாட்சி செய்தான். <br />
<br />
இந்த ஆசிரியர் சமுதாயம் அந்த தபஸ்விகளைப் போலிருந்து, கல்பவிருக்ஷமாக மாணவர்களை உருவாக்கி, இந்த தேசத்தினை எல்லா துறையிலும் மேம்படச் செய்ய உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். <br />
<br />
காண்க: <a href="http://sathya031271.blogspot.in/" target="_blank"><b>கட்டுரையாளரின் வலைப்பூ</b></a></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1134172536605043424.post-61391767076921167722014-07-23T13:15:00.001+05:302016-06-19T18:33:00.967+05:30இப்படியும் இருந்தார்கள்... <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b> <table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifyqDNHgqIsNnEAbOsWvCB_n6VDf-xOrLbG-Clxaw2XvfSj0U76_nHEbMDuNqPvG5bPY30LGUp_0Vwbfcy9MxYXF9aR08m7Jw1VdxV93jo7QizZK5eEKJXpMn5vOAhGJFZWuxNw2sqlRo/s1600/Gopinath_Bordoloi.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="266" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifyqDNHgqIsNnEAbOsWvCB_n6VDf-xOrLbG-Clxaw2XvfSj0U76_nHEbMDuNqPvG5bPY30LGUp_0Vwbfcy9MxYXF9aR08m7Jw1VdxV93jo7QizZK5eEKJXpMn5vOAhGJFZWuxNw2sqlRo/s1600/Gopinath_Bordoloi.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><b>கோபிநாத் பர்தோலாய் (06.06.1890 - 05.08.1950)</b></td></tr>
</tbody></table>
</b><br />
<b>ஆகஸ்ட் 5, 1950</b>. அப்போது பிரிக்கப்படாத அசாம் மாநில முதல்வர் கோபிநாத் பர்தோலாய் 60-ம் வயதில் திடீரென உயிர் நீத்தார். மாநில ஆளுநர் ஜயராம்தாஸ் தௌலத்ராம் துக்கம் விசாரிக்க அவரது வீட்டிற்குச் சென்றார்.<br />
<br />
கட்டிட வேலைகள் பாதியிலேயே நிற்கின்ற வீடு. பர்தோலாய்க்கு ஐந்து மகள்கள். நான்கு மகன்கள். மூத்த இரு மகள்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது. மீதமுள்ள மகள்களும் கடைசி மகனைத் தவிர மற்ற மகன்களும் பள்ளிக்கும் கல்லூரிக்கும் சென்றுகொண்டிருந்தார்கள். கடைசி மகன் இனிமேல்தான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். ஒரு விதவைத் தங்கையும் மற்ற மூன்று சகோதரர்களும் ஒன்றாக வசிக்கும் கூட்டுக் குடும்பம். பர்தோலாய் இறக்கும்போது அவரிடம் எந்தவிதச் சேமிப்பும் இல்லை. துக்கம் விசாரிக்க வந்த ஆளுநர் மெதுவாகத் துக்கத்தில் ஆழ்ந்திருந்த சகோதரர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்ட தகவல் இது. அவரது இறுதிச் சடங்குகளுக்குக்கூடப் போதிய பணம் இல்லாத நிலை.<br />
<a name='more'></a><br />
<br />
சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் இருந்தபடி ஒன்றுபட்ட அசாம் மாநிலத்தை இந்தியாவுடன் ஒன்றிணைக்கப் பாடுபட்ட மகத்தான தலைவர் அவர். அத்தகைய தலைவரின் குடும்ப நிலைதான் அவரது மறைவிற்குப் பிறகு இப்படி இருந்தது. அந்தக் குடும்பத்திற்கு ஏதாவது உதவ வேண்டுமே என்ற எண்ணத்தில் ஆளுநர் மற்ற அதிகாரிகளுடனும், அமைச்சர்களுடனும் விவாதித்தார். அதிகபட்சம் அவரது குழந்தைகளின் படிப்பிற்கு உதவித்தொகை வேண்டுமானால் அரசு வழங்க முடியும் என்று அதிகாரிகள் கூறினார்கள். சரி. அன்றாடச் செலவிற்கு அந்தக் குடும்பம் என்ன செய்யும்?<br />
<br />
ஆளுநர் ஜயராம்தாஸ் மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கும், பிரதமர் நேருவிற்கும் பர்தோலாய் குடும்ப நிலைமை குறித்துக் கடிதம் எழுதினார். குடும்பச் செலவைச் சமாளிக்கும் வகையில் ஓய்வூதியம் ஏதாவது கொடுக்க வகையுண்டா என்றும் அவர் வினவியிருந்தார்.<br />
<br />
மற்ற சில மாநிலங்களில் தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உதவித்தொகை ஏற்பாடு இருக்கிறது என்றும் அதே போன்று ஏற்பாடு செய்யலாம் என்றும் உடனே தன்னால் தனிப்பட்ட முறையில் அந்தக் குடும்பத்திற்கு ரூ. 5,000 கொடுக்க முடியும் என்றும் நேரு தெரிவித்தார். பட்டேலும் அசாம் மாநிலம்தான் ஓய்வூதியம் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறினார்.<br />
<br />
ஆளுநர் மீண்டும் விவாதித்தார். மற்ற அமைச்சர்கள் ஓய்வூதியம் குறித்து எதிர்ப்புத் தெரிவித்தார்கள். பர்தோலாய் இறப்பதற்கு முன்பு மற்றொரு அமைச்சர் உயிர் நீத்தபோது இத்தகைய ஏற்பாடு எதுவும் செய்யப்படாத நிலையில் பர்தோலாயின் குடும்பத்திற்கு மட்டும் உதவுவது சரியாக இருக்காது என்பதுதான் அவர்களின் கருத்து.<br />
<br />
அதிகாரிகள் தரப்பில் இருந்து ஓர் ஆலோசனை வந்தது. பர்தோலாய் நாடு விடுதலைக்கு முன்பாக அசாமின் பிரதமராகவும் பின்னர் மாநில முதல்வராகவும் இருந்தபோது அவரது மாத சம்பளமான ரூ. 2,000த்தில் ரூ. 1,500 மட்டுமே வாங்கிக் கொண்டு மீதத்தை அரசிடமே திருப்பிச் செலுத்தியிருந்தார். அந்த வகையில் அவருக்குச் சட்டப்படி உரிமையான தொகையாக அதுநாள் வரை சேர்ந்துள்ள தொகை ரூ 10,000 என்றும் அதை அவரது குடும்பத்திற்குக் கொடுப்பதில் சட்டப்படி எவ்விதத் தடையும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.<br />
<br />
இவ்வகையில் மாநில அரசிடமிருந்து ரூ 10,000மும், நேரு வழங்கிய ரூ 5,000மும் மட்டுமே பர்தோலாயின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. ஆளுநர் ஜயராம்தாஸ் பர்தோலாய்க்கு லோகப்ரியா (மக்கள் நேசன்) என்ற பட்டத்தையும் வழங்கினார்.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="http://tamil.thehindu.com/multimedia/dynamic/01901/564xNxss_1901756g.jpg.pagespeed.ic.P0u-4fOjE-.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="224" src="https://tamil.thehindu.com/multimedia/dynamic/01901/564xNxss_1901756g.jpg.pagespeed.ic.P0u-4fOjE-.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">1991-ம் ஆண்டு கோபிநாத் உருவப்படம் திறப்பு </td></tr>
</tbody></table>
<br />
<br />
<b>பின்குறிப்பு: </b>விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கான உதவித்தொகைத் திட்டம் 1972-ம் ஆண்டில்தான் தொடங்கப்பட்டது. கோபிநாத் பர்தோலாய்க்கு 1999-ம் ஆண்டில் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.<br />
<br />
<div style="text-align: right;">
<span style="color: blue;"><b>-<span class="author">வீ.பா.கணேசன் </span></b></span> </div>
<br />
நன்றி: <a href="http://tamil.thehindu.com/general/education/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6024534.ece" target="_blank"><b>தி இந்து நாளிதழ்</b></a><br />
<br />
காண்க: <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D" target="_blank"><b>கோபிநாத் போர்டோலோய் (விக்கி)</b></a><br />
<br />
<br />
<br /></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1134172536605043424.post-14960042798083080242014-06-25T02:30:00.000+05:302016-06-19T18:33:17.840+05:30தொழிற்சங்க இயக்க வழிகாட்டி <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b> <table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGTzWrs6ERkNZCPq_eQwXU6CkvuKcQ9hg5OZNlZlLrxl5wSAYPvTolNZ1gQrxeY7jboKc38crpWB5XSXKo5qOc3VEhK6HvNYjBPLl0TD7xRGOPqboTKpBvJi3cWd059Dfq-DWrEKmFIRo/s1600/JP.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGTzWrs6ERkNZCPq_eQwXU6CkvuKcQ9hg5OZNlZlLrxl5wSAYPvTolNZ1gQrxeY7jboKc38crpWB5XSXKo5qOc3VEhK6HvNYjBPLl0TD7xRGOPqboTKpBvJi3cWd059Dfq-DWrEKmFIRo/s1600/JP.jpg" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><div class="MsoNormal" style="line-height: normal; margin: 0in 0in 0pt; text-align: center;">
<strong><span style="font-size: medium;"><span style="color: #e69138;"><span lang="TA" style="font-family: "latha"; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";">ஜெயப்பிரகாஷ்</span><span lang="TA" style="font-family: "arial" , "sans-serif"; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="font-family: "latha"; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";">நாராயணன்</span></span></span></strong><span lang="TA" style="font-family: "arial" , "sans-serif"; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span></div>
<div class="MsoNormal" style="line-height: normal; margin: 0in 0in 0pt; text-align: center;">
<strong><span style="color: blue;"><span lang="TA" style="font-family: "arial" , "sans-serif"; font-size: 10pt;">(</span><span lang="TA" style="font-family: "latha"; font-size: 10pt;">பிறப்பு</span><span lang="TA" style="font-family: "arial" , "sans-serif"; font-size: 10pt;">: 1902, </span><span lang="TA" style="font-family: "latha"; font-size: 10pt;">அக்</span><span lang="TA" style="font-family: "arial" , "sans-serif"; font-size: 10pt;">. 11 - </span><span lang="TA" style="font-family: "latha"; font-size: 10pt;">மறைவு</span><span lang="TA" style="font-family: "arial" , "sans-serif"; font-size: 10pt;">: 1979, </span><span lang="TA" style="font-family: "latha"; font-size: 10pt;">அக்</span><span lang="TA" style="font-family: "arial" , "sans-serif"; font-size: 10pt;">. 8)</span></span></strong></div>
</td></tr>
</tbody></table>
</b><br />
<br />
<b>ஜெயப்பிரகாஷ் நாராயண்</b> பிஹார் மாநிலம் சரண் மாவட்டத்திலுள்ள சிடப்பியாரா என்ற சிற்றூரில் எளிய குடும்பத்தில் 11.10.1902இல் பிறந்தவர். படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் மாலை 6 மணியிலிருந்து இரவு 11 மணி வரை, சிற்றுண்டி சாலையில் பாத்திரங்களை கழுவி, அதன் வருவாயை வைத்து கல்வி கற்றவர்.<br />
<a name='more'></a><br />
<br />
பிற்காலத்தில் தேசத்திற்கு சேவை செய்ய, பொது வாழ்வில் பிரவேசிப்பதற்கு, பிரகாசிப்பதற்கு அடித்தளம் அமைத்தது கல்வி மட்டுமல்ல அவருடைய உறுதியான அயரா உழைப்புமாகும்.<br />
<br />
உழைத்து வாழ விரும்புவோருக்கு கடமை உணர்வுகளை போதித்து, அவர்களுக்கான உரிமைகள் உரிய முறைகளில் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்கும் அமைப்பே தொழிற்சங்க இயக்கம்.<br />
<br />
அதில், தன்னலமற்று சேவைகள் செய்து, சாதித்து முத்திரை பதிப்பவரே, தொழிற்சங்க தலைவராகவும், வழிகாட்டியாகவும் திகழும் தகுதியை பெறுகிறார்.<br />
<br />
தொழிலாளர்களுக்கு வழிகாட்டியாக வாழ்ந்தவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன். மனித நேயமும், மத நல்லிணக்கமும், ஒருங்கே பெற்ற ஒப்பற்ற தலைவராகத் திகழ்ந்தவர். இரயில்வே, அஞ்சல் துறைகளின் சம்மேளனங்களுக்கு ஒரே சமயத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர் ஒருவரே.<br />
<br />
இவர், அரசு நிர்வாகத்திற்கும், சம்மேளனங்களுக்கும் ஏற்படும் பிரச்னைகளை சுமுகமாக தீர்வு கொள்ள, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்த பேச்சுவார்த்தை குழுவை உருவாக்கியவர்.<br />
<br />
கருத்து வேற்றுமைகள் காரணமாக பிரிந்த சங்கங்களை, சம்மேளனத்துடன் இணைத்த பெருமை இவரையே சேரும். இவரால் இவர் வகித்த பதவிகளுக்கு பெருமை சேர்ந்தன.<br />
<br />
1946இல், அகில இந்திய அஞ்சல் ஊழியர்களின் வேலை நிறுத்த நாள்களுக்கான ஊதியத்தை தருவதாக அப்போதைய அமைச்சர் ரவி அகமது கித்வாய், சம்மேளன தலைவரான ஜெய்பிரகாஷ் நாராணன் அவர்களிடம் தெரிவித்ததை அமல் நடத்த கோரியபோது கித்வாய் பின் வாங்கியதால் அதிர்ச்சி அடைந்து எழுத்து மூலமாக அமைச்சரின் வாக்குறுதியை பெறாதது, தனது தவறு என்று மனம் நொந்து, புணேயில் 21 நாள்கள் உண்ணாநோன்பிருந்து, தனக்குத்தானே தண்டனை அளித்துக் கொண்டவர்.<br />
<br />
அதேபோல், ரயில்வே ஊழியர்களுக்காக நியமிக்கப்பட்ட நீதிபதி சீனிவாச வரதாச்சாரி தலைமையில் அமைக்கப்பட்ட முதல் ஊதிய குழுவின் பரிந்துரைகள் முறையாக செயல்படுத்தாமல், காலம் கடத்தப்பட்டதால் ரயில்வே குழுமத்தின் செயலாளருடன் பேசி, அமல் நடத்தச் செய்தவர்.<br />
<br />
இரயில்வே ஊழியர்களின் கோரிக்கைகள், குறிப்பாக ஊதிய உயர்வு, விலைவாசிகளுக்கு ஏற்ப ஈட்டுத் தொகை, காலி பணி இடங்களை நிரப்புவது ஆகியவற்றை முன்வைத்து காலவரம்பற்ற வேலை நிறுத்தத்திற்கு சம்மேளனம் முடிவு எடுக்க பொதுக்குழுவை கூட்ட நாள் குறிப்பிட்டபோது, அப்போதைய சம்மேளனத்தின் மூத்த துணை தலைவர் ஜோதிபாசு தனது கட்சிக்காக போராடி, கைது செய்யப்பட்டு கொல்கத்தா சிறையில் இருந்தார்.<br />
<br />
அவரது கருத்துகளை பொதுக்குழுவில் தெரிவிக்க வசதியாக ஜெயப்பிரகாஷ் நாராயணன், அன்றைய மேற்கு வங்க முதல்வர் டாக்டர் பி.சி. ராயுடன் தொடர்பு கொண்டு ஜோதிபாசுவை "பரோலில்' எடுத்து பொதுக்குழுவில் பங்கு பெறச் செய்தார். அவரது முயற்சியை கண்டு கம்யூனிஸ்டுகள் வியந்தனர்.<br />
<br />
மூன்று சம்மேளனங்களுக்கும் தக்க தலைவர்களை தேர்ந்தெடுக்கச் செய்தபின் முற்றிலும் தொழிற்சங்க தொடர்பினை துண்டித்துக் கொண்டவர்.<br />
<br />
சோஷலிஸ்ட் இயக்கத்தை தோற்றுவித்தவர்களில் முதல்வராக இருந்தும், சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க திருப்புமுனையான ‘வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் கலந்து கொண்டு நாடு முழுதும் மக்களை எழுச்சி பெறச் செய்த தீரர். அரசியல் வேறு, தொழிற்சங்கப் பணி வேறு என்ற கருத்துடையவர்.<br />
<br />
‘நமது இலக்கு மட்டும் தூயதாக இருந்தால் போதாது, அதை அடையும் வழியும் தூய்மையாக இருத்தல் வேண்டும்' என்ற காந்திய நெறியில் வழுவாது வாழ்ந்தவர்.<br />
<br />
1952இல் நடைபெற்ற முதல் தேர்தலுக்குப்பின், அரசியலில் போட்டி பொறாமை தலை தூக்கி வளர்வது கண்டு வருந்தி, கட்சி அரசியலில் இருந்து விலகி, முழுமையான சர்வோதயத் தொண்டரானார். அப்போது மூதறிஞர் ராஜாஜி ‘தாங்கள் நம்பிக்கை நட்சத்திரமாக எதிர்காலத்தில் பிரகாசிக்கப் போகிறீர்கள், இந்த நாடு தங்களை விடாது' என்று எழுதினார்.<br />
<br />
அஃதே போல் இருண்ட இந்தியா என்று கருதப்படும் 26.6.1975 முதல் 20.1.1977 வரையிலான நெருக்கடிநிலை காலகட்டத்தில் சர்வாதிகாரத்தை எதிர்த்து அதனை அடியோடு வேரும் வேரடி மண்ணுமெல்லாம் அகற்றி, தனி மனித சுதந்திரத்தை நிலைநாட்டிய பெருமை ஜே.பி. அவர்களின் உரிமை.<br />
<br />
தொழிற்சங்க இயக்க வழிகாட்டியான ஜெயப்பிரகாஷ் நாராயண், 8.10.1979 அன்று தனது 77ஆவது வயதில் மறைந்தார்.<br />
<br />
<div style="text-align: right;">
<span style="color: blue;"><b>-<span class="authorName">க.வெங்கடராமன்</span></b></span> </div>
<br />
<div style="text-align: right;">
நன்றி: <b><a href="http://www.dinamani.com/editorial_articles/2014/06/21/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/article2291196.ece" target="_blank">தினமணி</a><span style="color: #666666;"> (21.06.2014)</span></b></div>
<div style="text-align: right;">
<b><span style="color: #666666;"><span style="color: white;">. </span></span></b></div>
<div style="text-align: left;">
<b><span style="color: #666666;">காண்க: <a href="http://desamaedeivam.blogspot.in/2011/10/blog-post_4281.html" target="_blank">ஜனநாயகத்தை மீட்ட தபஸ்வ</a>ி </span></b></div>
<span style="color: white;">.</span></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1134172536605043424.post-35636791511368216802014-06-24T01:00:00.000+05:302014-06-24T01:00:00.156+05:30பண்டைய இந்தியப் பொருளாதாரம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b><span style="color: white;"><span style="background-color: purple;">சிந்தனைக்களம்</span></span> </b><br />
<h3 style="text-align: right;">
<span style="color: blue;"><b>-பேராசிரியர் ப.கனகசபாபதி </b></span></h3>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTmAapPLwn_JmFFqvClURDGDhLJtoJ7e2MR4h1cn8PP9pb3NwPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTmAapPLwn_JmFFqvClURDGDhLJtoJ7e2MR4h1cn8PP9pb3NwPG" /></a></div>
<b>நமது</b> நாட்டுக்கு என பொருளாதாரம் போன்ற மிகவும் அடிப்படையான துறையில் நல்ல பின்னணி எதுவும் இருக்க முடியாதென நாமே கருதிக் கொள்கிறோம். கடந்த இருநூறு வருடங்களாக உலகப் பொருளாதார அரங்கில் ஐரோப்பாவும், அதைத் தொடர்ந்து அமெரிக்காவும் முன்னிலையில் இருந்து வருகின்றன. ஆகையால், அதை வைத்துக் கொண்டு வரலாற்றுக்காலம் முழுவதும் அப்படியே இருந்திருக்கலாம் என எண்ணிக் கொள்கிறோம். ஏனெனில், நாம் படிக்கும் வரலாறு ஐரோப்பாவின் தொழிற் புரட்சியில் தொடங்கியே உலகில் பொருளாதார வளர்ச்சி ஆரம்பித்ததாகப் போதிக்கிறது.<br /><br />மேலும், நாம் சுதந்திரம் பெறும்போது இந்தியா ஏழை நாடாகவே இருந்தது. எனவே, நமது மனக் கண்ணில் அந்த வறுமையான சித்திரமே நம் முன் காட்டப்படுகிறது. அதற்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்தான் நமது பொருளாதாரம் சிதைக்கப்பட்டு வீழ்ச்சியடைந்தது. ஆனால் அது பற்றி நமக்கு விரிவாகப் போதிக்கப்படுவதில்லை. <br /><br />இந்தியப் பொருளாதாரத்தின் முந்தைய நிலைகள் குறித்து பண்டைய காலம் தொடங்கி, தொடர்ந்து வெளிவந்த பல இலக்கியங்கள் பேசியுள்ளன. விவசாயம், தொழில்கள், வியாபாரம் பற்றிய பல விஷயங்களை அவை குறிப்பிடுகின்றன. உதாரணமாக "சிலப்பதிகாரம்' அப்போது தமிழ் நாட்டில் சர்வதேச வணிகம் எவ்வாறு சிறப்பாக நடைபெற்று வந்தது; எப்படி பல நாடுகளிலிருந்தும் வணிகர்கள் வந்து சென்றார்கள் என்பது பற்றியெல்லாம் விவரிக்கிறது.<br /><br />உலகத்தின் முதல் பொருளாதார மற்றும் அரசியல் புத்தகமாக "அர்த்த சாஸ்திரம்' கருதப்படுகிறது. அது சுமார் 2,300 வருடங்களுக்கு முன்னால் மெளரிய சாம்ராஜ்ய காலத்தில் எழுதப்பட்டது. விவசாயம், ஜவுளி, பிற தொழில்கள், வியாபாரம், ஏற்றுமதி, இறக்குமதி, வரிக் கொள்கை, ஊதியம், நுகர்வோர் நலன் எனப் பல விஷயங்களைப் பற்றியும், அவற்றை முறைப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், அவற்றுக்குத் தேவையான நிர்வாக முறைகள் ஆகியவை பற்றியும் அந்த நூல் விவரிக்கின்றது.<br /><br />பொருளாதாரம் பற்றிய சரியான அறிவும் அனுபவமும் இல்லாமல் அப்படிப்பட்ட ஒரு நூல் எழுதப்பட்டிருக்க முடியாது. மேற்குலகத்தில் முதல் பொருளாதார நூல் பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பகுதியிலேயே வந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.<br /><br />ஆயினும் அண்மைக்காலம் வரையிலும் உலக நாடுகளின் தொடர்ச்சியான பொருளாதாரப் பின்னணி குறித்து ஒரு சரியான வரலாற்றுப் பார்வை இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் 1980களில் தொடங்கி கடந்த முப்பது ஆண்டுகளாக மேற்கத்திய அறிஞர்கள் உலகப் பொருளாதாரம் குறித்து சில முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டு வந்துள்ளனர். அவை மேற்கு நாடுகளின் பொருளாதார வரலாற்றை மட்டுமின்றி, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பிற நாடுகளின் வரலாறு குறித்தும் முக்கியமான விஷயங்களைச் சொல்கின்றன.<br /><br />அவை உலகப் பொருளாதாரம் என்பது ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆரம்பித்தது என்பதை மறுக்கின்றன. ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்துக்கான அடித்தளம் காலனியாதிக்க காலத்தில் அவை ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் மேற்கொண்ட சுரண்டல்கள் மூலமே என்பது குறித்து பல விவரங்கள் சொல்லப்பட்டுள்ளன. மேற்கண்ட ஆய்வுகள், உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவும் சீனாவுமே முதன்மையான பங்கு வகித்து வந்துள்ளன என்பதை நிறுவுகின்றன.<br /><br />முக்கியமாக, உலகிலுள்ள பணக்கார நாடுகளின் கூட்டமைப்பான "பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் முன்னேற்றத்துக்கான அமைப்பு' (Organisation for Economic Cooperation and Development)வெளியிட்டுள்ள ஆய்வுகள் குறிப்பிடத் தக்கவையாகும். அவை பிரபல பொருளாதார வரலாற்றாசிரியரான ஆங்கஸ் மாடிசன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டவை.<br /><br />உலகப் பொருளாதாரம் குறித்த கடந்த இரண்டாயிரம் வருட வரலாற்றை புள்ளி விவரங்களுடன் அவை முன்வைக்கின்றன. அது புத்தகமாக 2001ஆம் வருடம் வெளியிடப்பட்டது. இன்று வரை அந்த ஆய்வுகள் யாராலும் மறுக்கப்படவில்லை. அவற்றின் மூலம் உலகப் பொருளாதாரம் குறித்த ஒரு தெளிவான சிந்தனைக்கு வழி கோலப்பட்டுள்ளது.<br /><br />அவை இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், உலகப் பொருளாதாரத்தின் முதன்மையான சக்தியாக இந்தியா விளங்கி வந்துள்ளதை எடுத்துச் சொல்கின்றன. அப்போது உலகின் ஒட்டு மொத்த பொருளாதார உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவிடம் இருந்துள்ளது.<br /><br />இரண்டாவது நிலையில் சீனா 26.2 விழுக்காடு பங்குடன் இருந்துள்ளது. இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகள் மட்டும் சுமார் அறுபது விழுக்காடு அளவு பொருளாதார பலத்தை வைத்திருந்துள்ளன. அதே சமயம் மேற்கத்திய நாடுகள் அனைத்தும் சேர்ந்து மொத்தமாக 15 விழுக்காட்டுக்கும் குறைவான அளவே பங்களித்துக் கொண்டிருந்தன. <br /><br />உலகப் பொருளாதாரத்திற்கு மூன்றில் ஒரு பங்கினை அப்போதே இந்தியா அளித்துக் கொண்டிருந்தது என்பது அசாத்தியமானது. அந்த அளவுக்கு பொருளாதார வரலாற்றில் உலகின் எந்த மேற்கத்திய நாடும் இன்று வரை பங்களித்ததில்லை. எந்த ஒரு நாடும் திடீரென உலகப் பொருளாதாரத்தின் முதல் நிலைக்கு செல்ல முடியாது.<br /><br />அப்படியெனில், பொது யுகம் தொடங்குவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்னரே முன்னேற்றத்துக்கான அடித்தளங்கள் இந்தியாவில் போடப்பட்டிருக்க வேண்டும். மேலும் வளர்ச்சிக்கு ஏதுவான வழிமுறைகளும் இருந்திருக்க வேண்டும்.<br /><br />சுமார் ஐயாயிரம் வருடங்களுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிக காலத்தை ஆய்வு செய்த நிபுணர்கள்கூட அப்போதிருந்த திட்டமிட்ட நகரமைப்பு, வளர்ச்சிக்கான அடையாளங்கள் குறித்து மிகவும் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளனர்.<br /><br />பொது யுக காலத்துக்கு முந்தைய பல நூற்றாண்டுகளில் நிலவிய சர்வதேச வணிகம், வியாபாரம், தொழில்கள் உள்ளிட்டவை குறித்த விவரங்கள் உள்ளன. ஆனால் தொடர்ச்சியாக நாடு முழுமைக்கும் பொருந்தக்கூடிய அளவில் தற்போது கிடைத்துள்ளது போன்ற புள்ளி விவரங்கள் அப்போதைய காலங்களுக்கு இல்லை.<br /><br />இந்தியப் பொருளாதாரத்தின் மற்றொரு தனிச் சிறப்பு அதன் நீடித்த தன்மையாகும். பொது யுகம் தொடங்கிய காலத்தில் இருந்து 1600ஆம் ஆண்டுவரை இந்தியாவே உலகப் பொருளாதாரத்தில் வல்லரசாக முதல் நிலையில் இருந்து வந்துள்ளது. சீனா தொடர்ந்து இரண்டாமிடத்தில் இருந்துள்ளது.<br /><br />1600இல் சீனா முதலிடத்தை அடைய, பின்னர் 1700இல் மீண்டும் இந்தியா முதலிடத்தைப் பிடிக்கிறது. மறுபடியும் ஒரு முறை 1820இல் சீனா முதலிடத்தைப் பிடிக்க இந்தியா இரண்டாம் நிலையை அடைகிறது. எனவே, கடந்த இரண்டாயிரமாண்டு கால பொருளாதார வரலாற்றில் மிகப் பெரும்பான்மையான காலம் இந்தியாவே முதலிடத்தில் இருந்துள்ளது. இந்தியாவும் சீனாவுமே உலகப் பொருளாதாரத்தின் இரண்டு வலுவான சக்திகளாக இருந்து வந்துள்ளன.<br /><br />பின்னர் அவை இரண்டும் வலுவிழந்ததற்கு முக்கியக் காரணமே காலனி ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட சிதைவுகளாகும். ஐரோப்பியர்களின் ஆட்சிக் காலத்தில் உலக வரலாறே கண்டிராத கொடுமைகளை இந்தியா எதிர் கொண்டது என அமெரிக்க வரலாற்றாசிரியர் வில் துரந்த் விவரித்துள்ளார்.<br /><br />அப்போதுதான் முதல்தரமான பொருளாதாரமாக விளங்கி வந்த இந்தியா, வறுமையும் பிணிகளும் நிறைந்த ஏழை நாடாக மாறிப் போனது. ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட பஞ்சங்கள் பல லட்சக்கணக்கானோரின் உயிரைப் பறித்துக் கொண்டன. தொன்றுதொட்டு ஏற்றுமதிக்குப் பெயர் பெற்றிருந்த நாடு, இறக்குமதியைச் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.<br /><br />1750இல் உற்பத்தித் துறைக்கு உலக அளவில் கால் பகுதியைக் கொடுத்துக் கொண்டிருந்த இந்தியா, 1900ஆம் வருடத்தில் வெறும் 1.7 விழுக்காடு மட்டுமே கொடுக்கக் கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டது. 1800 முதல் 1850 வரைக்குமான ஐம்பது வருட காலத்தில் சென்னை பிரசிடென்சியில் மூன்றில் ஒரு பங்கு விவசாயிகள் அரசாங்கத்தின் கொடுமையான வரிகளால் தொழிலை விட்டுச் சென்று விட்டனர் என பொருளாதார நிபுணர் ரமேஷ் தத் தெரிவிக்கிறார். எனவே, பத்தொன்பதாம் நூற்றாண்டில் தனிநபர் ஆண்டு வருமானம் மிகவும் குறைவாகப் போனதாக தாதாபாய் நெüரோஜி குறிப்பிட்டுள்ளார்.<br /><br />உலகப் பொருளாதார வரலாற்றின் முக்கியமான கால கட்டத்தில் நாம் இப்போது இருந்து வருகிறோம். மேற்கத்திய சித்தாந்தங்கள் பெருமளவு தோற்று வருகின்றன. அதே சமயம், நமது நாட்டுக்கென வலிமைகளும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளதை ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.<br /><br />இந்த சமயத்தில் நமது பொருளாதார வரலாறு, அதன் அடிப்படைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த சரியான உண்மைகளைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. இதில் குறிப்பாக நமது நிபுணர்கள், பல்கலைக் கழகங்கள் மற்றும் அறிவு ஜீவிகளின் பங்கு அதிகமாக உள்ளது.<br /><br />வரலாறு குறித்த தெளிவான பார்வையில்லாத சமூகத்தைக் கொண்ட எந்த நாடும் எதிர் காலத்துக்கான கொள்கைகளை உறுதியாக வகுக்க இயலாது.<br />
<br />
<div style="text-align: right;">
நன்றி: <b><a href="http://www.dinamani.com/editorial_articles/2014/06/17/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE/article2284556.ece" target="_blank">தினமணி</a> <span style="color: #666666;">(17.06.2014)</span></b></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1134172536605043424.post-39757978084888251522014-06-22T14:07:00.002+05:302014-06-22T14:07:46.131+05:30தமிழில்தான் பேசுவோம் எனச் சூளுரைப்போம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h3 class="" style="text-align: right;">
<span style="font-weight: normal;"><span style="color: blue;">தினமணி ஆசிரியர்<b> கே.வைத்தியநாதன் </b>பேச்சு </span></span></h3>
<div class="" style="text-align: right;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://media.dinamani.com/2014/06/22/editor.jpg/article2292703.ece/alternates/w460/editor.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://media.dinamani.com/2014/06/22/editor.jpg/article2292703.ece/alternates/w460/editor.jpg" height="198" width="320" /></a></div>
<div class="" style="text-align: right;">
<span style="color: blue;"></span></div>
<div class="" style="text-align: left;">
<br /></div>
<div class="" style="text-align: left;">
<b>சென்னை, ஜூன் 21: </b>தமிழில் பேசுவோம், தமிழில்தான் பேசுவோம் எனத் தமிழர்கள் சூளுரைப்போம் என்றார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.<br /><br />சென்னைப் பல்கலைக்கழகத்தில் தினமணி, சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில் சனிக்கிழமை (ஜூன் 21) காலை நடைபெற்ற இரு நாள் இலக்கியத் திருவிழாவின் தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது:<br /><br />இலக்கிய அமைப்புகளை ஒருங்கிணைப்பதாலோ, தீர்மானங்கள் போடுவதாலோ, போராட்டம் நடத்துவதாலோ எதையுமே சாதித்துவிட முடியாது. முதலில் நாம் தமிழை வளர்ப்பதிலும், பாதுகாப்பதிலும் அக்கறை செலுத்துகிறோமா என்பதை, நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.<br /><br />தமிழைப் பாடமொழியாகக் கொண்ட பள்ளிகளுக்கு எத்தனை பேர் தங்கள் குழந்தைகளை அனுப்புகின்றனர்? நமது குழந்தைகள் நம்மை அப்பா, அம்மா என அழைக்காமல், டாடி, மம்மி என அழைப்பதில் பெருமைப்படுகிறவர்கள்தான் அதிகம். அப்படி யார் வீட்டிலாவது குழந்தைகள் அழைத்தால், அப்பா, அம்மா என அழைக்க வேண்டும் எனச் சம்பந்தப்பட்ட பெற்றோர்களுக்கு வழிகாட்ட நம்மில் எத்தனை பேர் முன் வருகிறோம்?<br /><br />அப்பா, அம்மா மட்டுமா சித்தி, சித்தப்பா, மாமன், மாமி, அத்தை என ஒவ்வொரு உறவுக்கும் ஒரு பெயர் சூட்டி மகிழ்ந்த சமூகம் அல்லவா நமது இந்திய சமூகம். இப்போது யாரைப் பார்த்தாலும் அங்கிள், ஆன்ட்டி என்றாகிவிட்டது.<br /><br />செல்பேசி எண் என்ன எனக் கேட்டால், நம்மில் எத்தனை பேர் தமிழில் எண்களைக் கூறுகிறோம் ?<br /><br />இதனால், என்ன ஆபத்து எனக் கேட்கலாம். எந்தவொரு மொழியும் வழக்கொழிந்து போவதற்கு மூல முதல் காரணம், அளவுக்கு அதிகமான அன்னிய மொழிக் கலப்புதான். சற்று யோசித்துப் பார்த்தால் இன்னொரு உண்மையும் புரியும்.<br /><br />இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வடமொழி இருந்திருக்கிறது. 1100 ஆண்டுகளாக உருது இங்கே பேசப்பட்டு வருகிறது. 700 ஆண்டுகளாக தெலுங்கு பரவலாகவே வழக்கத்தில் இருந்து வருகிறது. 500 ஆண்டுகளாக மராட்டியம் தமிழகத்தில் நுழைந்து அரசவை மொழியாகவே இருந்திருக்கிறது.<br /><br />ஆனால், இந்தக் காலகட்டத்தில் தமிழ் அழிந்துவிடவில்லை. மாறாகத் தழைத்தோங்கி இருக்கிறது. சமய இலக்கியங்கள், தோன்றின. சிலம்பும், மேகலையும், சீவக சிந்தாமணியும், ராமகாதையும், வில்லி பாரதமும், அருணகிரியாரும், குமரகுருபரரும் இயற்றிய அற்புதமான படைப்புகளும் இந்தக் காலகட்டத்தில்தான் தமிழுக்கு உரமூட்டின.<br /><br />வெறும் 250 ஆண்டுகள்தான் ஆங்கிலேயர் நம்மை ஆண்டனர். தமிழ் தன் அடையாளத்தையே இழந்துவிட்டது. வடமொழிக் கலப்பில்லாத, உருது கலப்பில்லாத, தெலுங்கின் தாக்கமில்லாத, மராட்டியத்தின் வாடையே இல்லாத தமிழை நாம் பேசிவிட முடியும். ஆங்கிலக் கலப்பில்லாத தமிழை நம்மில் எத்தனை பேரால் பேச முடியும்? இந்த உண்மைதான் பயமுறுத்துகிறது. இப்படிப்பட்ட மொழிக் கலப்புதான் மெல்ல, மெல்லப் புற்றுநோயாகத் தமிழை அழித்து அடையாளம் தெரியாமல் சிதைத்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.<br /><br />ஆங்கில வழிக் கல்வி கூடாது என்பதல்ல நமது கருத்து. ஆனால், தமிழின் அழிவில் ஆங்கில வழிக் கல்வி தேவையில்லை என்பதுதான் நமது வாதம். உலகமே வியக்கும் வகையில் விஞ்ஞான சாதனை படைத்திருக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தாய்மொழியில் தமது பள்ளிக் கல்வியைப் பயின்றவர். தாய் மொழிக் கல்விதான் அவரது அறிவியல் மேல்படிப்புக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது என்பதே உண்மை.<br /><br />ஆங்கிலேயர்களும், அமெரிக்கர்களும் அறிவியல் சாதனைகளைப் படைத்திருக்கின்றனர் என்றால் அவர்கள் அவர்களுடைய தாய்மொழியிலான ஆங்கிலத்தில் பயில்கின்றனர். சாதனை படைக்கின்றனர். ஜெர்மானியர்கள், ஜப்பானியர்கள், பிரெஞ்சு நாட்டவர், ரஷியர்கள் என யாரை எடுத்துக் கொண்டாலும், அவர்களும் அமெரிக்காவுக்கு நிகரான முன்னேற்றம் கண்டவர்கள்தான். காரணம், அவர்கள் தாய் மொழியில்தான் படிக்கின்றனர்.<br /><br />சின்ன நாடான சிங்கப்பூரில் பாட மொழியாக ஆங்கிலம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, சீனப் பெற்றோர்கள் அதற்கு எதிராகப் போராடி வெற்றி கண்டனர். அடிப்படைக் கல்வி சீன மொழியில்தான் இருக்க வேண்டும் என்றும், எங்களது குழந்தைகள் தாய்மொழியான சீனம் தெரியாத குழந்தைகளாக வளரக்கூடாது எனவும் பிடிவாதமாக இருந்தனர்.<br /><br />இங்கே தமிழில் பேசினால் தரக்குறைவு, அவமானம் எனக் கருதும் மனநிலை மாற வேண்டும், மாற்றப்பட வேண்டும். மொழியை வளர்ப்பது பத்திரிகைகளின் கடமை. தமிழ் வாழ்ந்தால்தான் தமிழ்ப் பத்திரிகைகள் வளர முடியும். ஊடகங்கள்தான் ஒரு மொழியின் வளர்ச்சிக்கும், மொழியின் சிதைவுக்கும் காரணமாக அமையும். ஊடகங்கள் மொழியைக் கொச்சைப்படுத்தினால், அதுவே மொழியின் வீழ்ச்சிக்கு மேலதிகமான காரணமாகிவிடும். இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் அதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.<br /><br />கலப்படத் தமிழை நல்ல தமிழாக மாற்றியாக வேண்டும். அதற்காகத்தான் இந்த விழா. தமிழில் பேசுவோம். தமிழில்தான் பேசுவோம் எனச் சூளுரைப்போம். இந்த விழாவில் பங்கேற்றுச் செல்லும் ஒவ்வொருவரும் தமிழில்தான் பேசுவோம் என்ற இயக்கத்தை அந்தந்த ஊருக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றார் வைத்தியநாதன்.</div>
<div class="" style="text-align: left;">
<br /></div>
<div class="" style="text-align: left;">
</div>
<div style="text-align: right;">
நன்றி:<b> <a href="http://www.dinamani.com/tamilnadu/2014/06/22/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A/article2292704.ece" target="_blank">தினமணி</a> <span style="color: #666666;">(22.06.2014)</span></b></div>
<div class="" style="text-align: left;">
<br /></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1134172536605043424.post-22871082355917145972014-06-21T13:17:00.002+05:302014-06-21T13:20:11.113+05:30ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் நடத்தும் சிறப்பு சிறுகதைப் போட்டி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<b><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhc1FxDIpRzt5YEgnD91Vb4R1b4Xhf2I0gYK0hjBxKMHoNkVrzlC2mc8B-xeof7KUSWKWJTybGAyZ8UOCLaFY6pa6Nef2emFDRD6RjBc1QwN_fm6v9aj-ZWO5JWPVgG7gUeskSNEDoVdew/s1600/story+com.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhc1FxDIpRzt5YEgnD91Vb4R1b4Xhf2I0gYK0hjBxKMHoNkVrzlC2mc8B-xeof7KUSWKWJTybGAyZ8UOCLaFY6pa6Nef2emFDRD6RjBc1QwN_fm6v9aj-ZWO5JWPVgG7gUeskSNEDoVdew/s1600/story+com.jpg" height="320" width="318" /></a></b></div>
<br />
<span style="color: blue;"><b>உங்கள் சிறுகதை 175 ஆயிரம் பிரதிகளில் அச்சாகி நீங்கள் பரிசு வெல்ல வேண்டுமா?</b></span><br />
<br />
<b>பகவான்</b> ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை ஸ்ரீசாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் மற்றும் மனிதநேய மகான்கள், அருளாளர்களின் சரித்திரங்கள், அவர்களது உபதேசங்கள் மற்றும் நமது சாஸ்திரங்கள் யாவும் இன்றும் மக்களுக்கு வழிகாட்டி வருகின்றன; சிக்கலான சமயங்களில் அவர்களுக்கு ஆறுதலையும் தைரியத்தையும் வழங்கி வருகின்றன. <br />
<br />
அந்த அடிப்படையில், சிறந்த சிந்தனைகள் எப்படியெல்லாம் நடைமுறையில் செயல் வடிவம் பெறுகின்றன என்பதைக் காட்டும் வகையில் தொண்டு, தியாகம், பக்தி, மனிதநேயம், தேசபக்தி, சமுதாயப் பொறுப்பு, சமய நல்லிணக்கம் போன்றவற்றைக் கூறும் சிறுகதைகளைப் படைப்பாளிகள், எழுத்தாளர்களிடமிருந்து வரவேற்கிறோம். <br />
<br />
படைப்பாளிகளே, 1,75,000 பிரதிகள் அச்சாகும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் உங்களது சிறுகதைகளும் வெளிவர இன்றே எழுதி அனுப்புங்கள்.<br />
<br />
முதல் பரிசு ரூ.10,000/- * இரண்டாம் பரிசு ரூ. 8,000/-<br />
மூன்றாம் பரிசு ரூ. 6,000/-<br />
5 ஊக்கப் பரிசுகள் ரூ. 2,000/- வீதம் ரூ. 10,000/-<br />
<br />
எல்லோரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் மூன்று பக்கங்களுக்கு மிகாமல் சிறுகதைகள் இருக்க வேண்டும். <br />
<br />
முடிவுகள் செப்டம்பர் மாத ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் வெளியிடப்படும்.<br />
<br />
சிறுகதைகளை அனுப்ப கடைசித் தேதி: 25.7.2014<br />
<br />
மின்னஞ்சல்: sriramakrishnavijayam@gmail.com<br />
<br />
<div style="text-align: center;">
<span style="color: magenta;"><span style="font-size: x-large;">***</span></span></div>
<br />
நூற்றாண்டை நோக்கிப் பயணிக்கும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் நடத்தும்<br />சிறப்புச் சிறுகதைப் போட்டி<br />மொத்தப் பரிசுத் தொகை ரூ. 34,000<br /><br />பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை ஸ்ரீசாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் மற்றும் எண்ணற்ற மகான்கள், உலகளாவிய மனிதநேய அருளாளர்களின் சரித்திரங்கள், அவர்களது உபதேசங்கள் மற்றும் நமது சாஸ்திரங்களின் அடிப்படையில் கரு உண்மை; உரு கற்பனை என்ற வடிவில் ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் பல சிறுகதைகள் வெளியாகி வருகின்றன. <br />
<br />இந்த வகையில் சேவை, தியாகம், பக்தி, மனிதநேயம், தேசபக்தி, சமுதாயப் பொறுப்பு, சமய நல்லிணக்கம் போன்றவற்றை விளக்கும் சிறுகதைகளைப் படைப்பாளிகள் மற்றும் எழுத்தாளர்களிடமிருந்து வரவேற்கிறோம்.<br />
<br />சிறந்த சிந்தனைகள் எவ்வாறு நடைமுறையில் செயல்வடிவம் பெறுகின்றன என்பதைக் காட்டும் சிறுகதைகளை எழுதி அனுப்பிப் பரிசினைப் பெறுங்கள்.<br />
<br />உங்களது சிறுகதைகளை அனுப்பும்போது,<br />
* சாஸ்திரங்களின் கருத்துகளையோ, மகான்களின் சம்பவங்களையோ கூறும்போது ஆதாரத்துடன் குறிப்பிடுங்கள்.<br />* எல்லோரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.<br />* ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் மூன்று பக்கங்களுக்கு மிகாமல் சிறுகதைகள் இருக்க வேண்டும். <br />* கதைகளை தபாலிலோ, இ-மெயிலிலோ அனுப்பலாம். <br />* இணையதளத்திலோ, வேறு பத்திரிகையிலோ ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டவற்றை ஏற்க இயலாது. <br />* தேர்வாகாத கதைகளைத் திருப்பி அனுப்ப இயலாது.<br />* போட்டிக்கு அனுப்பப்பட்ட கதை முடிவு தெரியும்வரை வேறெந்தப் பத்திரிகைக்கும் அனுப்பப்படவில்லை என்ற உத்தரவாதம் தேவை.<br />* பரிசுக்குரிய கதைகளை நடுவர் குழு தேர்ந்தெடுக்கும். ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது. <br />* முடிவு வெளியாகும் வரை கடிதம், தொலைபேசி, இ-மெயில் விசாரிப்புகளைத் தவிர்க்கவும். <br />
<br />முடிவுகள் செப்டம்பர் மாதத்து ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் வெளியிடப்படும்.<br />
<br /> -ஆசிரியர்<br />
ஸ்ரீராமகிருஷ்ணவிஜயம்<br />
<br />கதைகளை அனுப்ப கடைசித் தேதி : 25.7.2014<br /><br />அனுப்ப வேண்டிய முகவரி : ஸ்ரீராமகிருஷ்ண விஜயம், 31, ஸ்ரீராமகிருஷ்ண மடம் சாலை,<br />மயிலாப்பூர், சென்னை - 600004. <br />
<br /></div>
Unknownnoreply@blogger.com0