நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

27.2.15

கண்ணனைத் துதிபாடியவர்

-ஜி.கிருஷ்ணமூர்த்தி

 

சுவாமி நாராயண தீர்த்தர்


 (ஆராதனை நாள்: மாசிமாத சுக்ல அஷ்டமி)
(பிப். 26)

நாமசங்கீர்த்தன வைபவங்களில் இசைக்கப்படும் பாடல்கள் அனைத்தும் பல பெரியோர்களால் இயற்றப்பட்டவை. சங்கீத மும்மூர்த்திகள், தமிழ் மும்மணிகள், ராமதாசர், புரந்தரதாசர், அன்னமய்யா, கபீர்தாசர், மீராபாய் முதலிய இசைமகான்களின் பாடல்களை மனமுருகிப் பாடும்போது பாடுபவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் ஆனந்தத்தையும் மனநிறைவையும் தருபவை. 

இத்தகைய பாகவத பெரியோர்களின் வரிசையில் ஸ்ரீ நாராயண தீர்த்த ஸ்வாமிகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இவர் இயற்றிய ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கணி பாடல்கள் நாமசங்கீர்த்தனங்களிலும் மேடைக்கச்சேரிகளிலும் தவறாமல் இடம்பெறுகின்றன.

17.1.15

ஆசான்களின் ஆசான், புலவர்களின் புலவர்…

 -வ.மு.முரளி


திரிசிரபுரம் மகாவித்துவான்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை


(பிறப்பு: 1815 ஏப். 6 – மறைவு: , 1876 பிப். 1)

.

இன்று
தமிழ் மொழிக்கு அணிகளாகக் கருதப்படும் பல காப்பியங்களை ஓலைச்சுவடிகளிலிருந்து நூல் வடிவுக்கு மாற்றியவர்  ‘தமிழ்த் தாத்தா’ எனப்படும் உ.வே.சாமிநாதையர். அவர் மட்டும் பாடுபட்டு, தேடிக் கண்டறிந்து அவற்றைப் பதிப்பித்திருக்காவிடில் நமக்கு மணிமேகலையும் சிலப்பதிகாரமும் கிடைக்காமலே கரையானுக்கு உணவாகி இருக்கும். எனவேதான்,

“பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
    காலமெல்லாம் புலவர் வாயில்
துதியறிவாய், அவர் நெஞ்சில் வாழ்த்தறிவாய், 
    இறப்பின்றித் துலங்குவாயே.”

 -என்று மகாகவி பாரதி, உ.வே.சாமிநாதையரைப் போற்றுகிறார்.

ஓலைச் சுவடிகளிலிருந்த பழந்தமிழ் நூல்களைத் தேடித் தொகுத்து அச்சிட்டுப் பெரும்புகழ் பெற்றார் உ.வே.சா. எனில், அத்தகைய உ.வே.சா.வுக்கு அருந்தமிழ் போதித்து அவரைக் கற்றோரவையில் முந்தியிருக்கச் செய்த பெருமைக்குரியவர் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆவார்.

1.1.15

கோவில்கள்- அன்றும் இன்றும்

-ஜெகதீஸ்வரன் நடராஜன்

.
சிந்தனைக்களம்
.

அந்தக் காலத்தில் கோவில்கள்


கோயில், வழிபாட்டுக்கு உரிய இடம் மட்டுமல்ல. அதன்மூலமாக இசை, கலை, மருத்துவம், சிறுவணிகம் என்பவையும் ஒன்றோடு ஒன்றாகக் கலந்திருக்கின்றன. போக்கிடம் இல்லாதவர்களுக்கான இடமாகவும், மக்கள் கூடும் வெளியாகவும் ஒரு காலத்தில் கோயில்கள் இருந்திருக்கின்றன. காலத்தின் சாட்சியாய், கோடிக் கணக்கான மனிதர்களின் ஆசைகளை சமர்ப்பிக்கும் இடமாக இருந்துள்ளன கோயில்கள்.