நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

21.10.14

பட்டாசு வெடிப்போம் வாருங்கள்!




பட்டாசு வெடிப்போம் வாருங்கள் - தீய
பயங்கரவாதம் ஒழியட்டும்!
மத்தாப்பு கொளுத்திட வாருங்கள் - உலகில்
மகிழ்ச்சியே எங்கும் நிறையட்டும்!  
(பட்டாசு)

15.10.14

காந்திஜி காண விரும்பிய 'தூய்மை இந்தியா'!

-லா.சு.ரங்கராஜன்

“எனது பிறந்த தினத்தை விடுமுறை நாளாக அறிவிப்பது கடுந்தண்டனைக்குரிய குற்றமென விதி வகுக்கப்பட வேண்டும். முனைப்புடன் நூல் நூற்றல் அல்லது வேறு ஏதாகிலும் தேசப்பணி புரிதல் மட்டுமே அன்று அனுசரிக்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்.  அன்றைய தினம் முழுவதையும் நற்பணிக்கு அர்ப்பணிக்க வேண்டும். ஆட்டம் பாட்டம் கிஞ்சித்தும் வேண்டாம்”.

 - இவ்வாறு மகாத்மா காந்தி தமது ‘அரிஜன்’ (15.10.1938) இதழில் எழுதினார்.

10.10.14

தமிழமுது பருக வாருங்கள்!







 திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
200-வது ஜெயந்தி சொற்பொழிவு 


அன்பு சகோதரர்களுக்கு வணக்கம்!    

 தமிழகத்தின் தலைசிறந்த தமிழறிஞர்களில்  ஒருவரான ‘மகாவித்வான்‘ திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் 200-வது பிறந்த ஆண்டையொட்டி,  நமது  தேசிய சிந்தனைக் கழகம்  சொற்பொழிவு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. 

கீழ்க்கண்ட நிகழ்ச்சிநிரலின்படி நடைபெறும்  இந்நிகழ்வில் தாங்களும் தங்கள் நண்பர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். 


                                 நிகழ்ச்சி நிரல் 

நாள்  :  ஸ்ரீ  ஜய  வருஷம்,  புரட்டாசி 25
              (12.10.2014)  ஞாயிற்றுக்கிழமை.
நேரம் :  மாலை  05.30 மணி.
இடம்  :  12, எம்.வி.நாயுடு தெரு, 
                 சேத்துப்பட்டு (அஞ்சல் ) 
                பழைய  ஆர்.டி .ஓ. அலுவலகம்  அருகில்,   
                சென்னை-31.

உரை:  பேராசிரியர்  ம. வே. பசுபதி  அவர்கள் 
               முதல்வர் (பணிநிறைவு),   
               திருப்பனந்தாள்  தமிழ்க்  கல்லூரி. 


அனைவரையும்  நிகழ்ச்சிக்கு  அகமகிழ்வுடன்   அழைக்கின்றோம்!  

.

4.10.14

அரசே சாராயம் விற்கலாமா?

  • கேட்கிறார் ராஜாஜி 

     

     

முந்தைய சென்னை ராஜதானி மாகாணத்தின் சட்டசபையில் 1937-ஆம் ஆண்டு ராஜாஜி பிரதமராக இருந்தபோது மதுவிலக்குச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தொலைநோக்குப் பார்வையுடன் கொண்டுவரப்பட்ட அந்தச் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த வேளையில்,  அந்த அரசு ஆட்சியிலிருந்து விலகியது. தொடர்ந்து 1944  ஜனவரி முதல் தேதியிலிருந்து மீண்டும் கள்ளுக்கடைகளைத் திறப்பது என்று பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்தது.

2.10.14

காந்திஜி கண்ட சத்தியாக்கிரகம்!

-லா.சு.ரங்கராஜன்


 ‘உண்மையில் காந்தியிசம்' (காந்தியம்) என்றால் என்ன என்று எனக்கே தெரியாது. நாட்டிற்கு நான் புதிதாக ஏதும் வழங்கவில்லை. இந்தியாவின் பாரம்பரியம் மிக்க மெய்யறிவுக்கு ஒரு புது வடிவம் அளித்துள்ளேன். அவ்வளவு தான். ஆகவே, அதனை காந்தியம் என்று கூறுவது தவறு' - என்று 1940 பிப்ரவரி 20 அன்று மலிகண்டா (வங்க மாகாணம்)வில் காதி கண்காட்சியைத் திறந்துவைத்து ஆற்றிய உரையில் மகாத்மா காந்தி தன்னடக்கத்துடன் கூறியுள்ளார்.