நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

3.12.10

வங்கம் தந்த சிங்கம்



குதிராம் போஸ்
பிறப்பு: டிச. 3

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வெடிகுண்டு வீசி, 18 வயதில் தூக்குமேடை  ஏறியவர், வங்க இளைஞர் குதிராம் போஸ். அவரது வாழ்வு, சுயநலம் மலிந்த தற்போதைய இந்தியாவைப் பீடித்துள்ள நோய்களுக்கு அற்புதமான மருந்து.

வங்கத்தின் மிதுனப்பூர் மாவட்டத்தில், ஹபிப்பூர் என்ற கிராமத்தில், திரிலோகநாத் பாசு, லட்சுமிப்ரிய தேவி ஆகியோரின் மகனாகப் பிறந்தார் குதிராம் (1889, டிச. 3). சிறு வயதிலேயே நாட்டுப்பற்றுடன் வளர்ந்த குதிராம், 1902 ல் அப்போதைய வங்க சுதந்திரப் போராட்ட வீரர்களின்  குருவாக விளங்கிய அரவிந்தர், சகோதரி நிவேதிதை ஆகியோரின் சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்டார். அப்போது அவரது வயது 13 மட்டுமே.

1904 ல் மேதினிப்பூரில்  உள்ள கல்லூரியில் ஏறந்த குதிராம், அங்கும் தனது தேசப்பற்றால் மாணவர்களிடையே சுடராக ஜொலித்தார். அங்கு ஆசிரியர் சத்தியேந்திரநாத் போஸ் வழிகாட்டுதலும் பகவத்கீதை பரிச்சயமும் குடிராமை மேலும் மெருகூட்டின. அங்கு அவருக்கு பல புரட்சியாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டது.

1905 ல் வங்கம் பிளக்கப்பட்டது. வங்கப் பிரிவினைக்கு எதிராக நாடே கொந்தளித்தது. குடிராமும் இயல்பாகவே அந்தப் போராட்டத்தில் குதித்தார்; வங்கத்தில் இயங்கிய 'யுகாந்தர்' என்ற புரட்சிக் குழுவில் இணைத்து இயங்கினார். பல காவல் நிலையங்களை குடிராமின் குழு குண்டுகளால் தாக்கியது. யார் தாக்குகிறார்கள் என்று தெரியாமல் ஆங்கிலேய அரசு அரண்டது. 1908 ல் குதிராம் கைது செய்யப்பட்டபோதுதான், ௧௮ வயதே நிறைந்த இளைஞனின் கைங்கரியம் அது என்று அரசு உணர்ந்தது.

ஆங்கிலேய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வண்ணம்,  ஆங்கிலேய அதிகாரிகளைத்  தாக்கி பாடம் கற்பிக்க குதிராம் குழு திட்டமிட்டது. அதன்படி, வங்கத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்த கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது குண்டுவீச, குதிராம் போசும், அவரது நண்பர் பிரபுல்ல சாஹியும் முசாபர்பூர் ஐரோப்பிய கிளப் சென்றனர். 1908, ஏப். 30 ம் தேதி,  அங்கு வந்த மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் வாகனம் மீது இருவரும் வெடிகுண்டுகளை வீசினர். ஆனால், அதில் கிங்க்ஸ்போர்ட் வரவில்லை. அதில் வந்த அவரது மனைவியும் மகளும் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் ஆங்கிலேயரை உலுக்கியது.

குண்டுவீசி தப்பிய இளைஞர்களைப் பிடிக்க அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டது. புரட்சியாளர் கூத்த தகவல் தேர்விப்போருக்கு ஆயிரம் ரூபாய் சன்மானம் எட்ன்று அறிவிக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில், சமஸ்திப்பூரில் காவலர்களிடம்  சிக்கிய பிரபுல்ல சாஹி, தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். மே மாதம் முதல் தேதி குடிராமும் சிக்கினார். விடுதலை வீரர்களுக்கு கொடும் தண்டனை வழங்கி  வந்ததால்தான் மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்டைக் கொல்ல குண்டு வீசியதாகவும், அதில் அவர் தப்பியதும் அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இறந்ததும் வருத்தம் அளிப்பதாகவும் குதிராம் கூறினார்.  அதன் பிறகு நடந்த ராஜத்துரோக வழக்கில் குடிராமுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

அதன்படி, 1908, ஆக. 11 ம் தேதி குதிராம் போசுக்கு  முசாபர்பூர் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது அவரது வயது 18 மட்டுமே. அந்த மாவீரனின் உடலை எரித்த அஸ்தியை விபூதி போல எடுத்துச் சென்று, தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் பாலில் கலந்து புகட்டினார்கலாம், வங்கத் தாய்மார்கள்.
குடிராமின் தியாக மயமான வாழ்வை சரித்திரத்தில் குழைத்து மாணவர்களுக்குப்  புகட்டுவதே, தற்போதைய பாரதம் அனுபவிக்கும் ஊழல் நோய்களுக்கு மருந்தாக இருக்க முடியும்.
.
காண்க:
Khudiram Bose
Free India.org
Indian Freedom Fighters 
Incredible  People 
குடிராமின் கவிதை
வங்கத்தில் தோற்றிய ரகசிய இயக்கங்கள்
வீர இளைஞன் 
Revolutionary Movement 

---------------------------------------------------------------------------------------
படிக்க வேண்டிய புத்தகம்:
சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள்- சிவலை இளமதி.
(அலிப்பூர் சதி வழக்கு/  பக்:36).
.

1 கருத்து:

கருத்துரையிடுக