நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

26.12.10

வில்லன்களாகிப் போன விடுதி மாணவர்கள்

                         
                      தலைநகர் சென்னையில் உள்ள அந்த பிரதான சாலையில் பரபரப்புடன் ஆயிரக் கணக்கான வாகனங்கள் பறந்து சென்றுகொண்டிருந்தன.
 
                     அலுவலகங்களுக்குச் செல்லும் ஊழியர்கள்....
                     பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள்....
                     என, பலதரப்பட்ட மக்களும் பேருந்துகளில்,  இரு சக்கர வாகனங்களில்,   பயணித்துக் கொண்டிருந்த நேரம்: காலை 9 .00 மணி. எங்கிருந்தோ கூட்டமாய் வந்த சுமார் 150 மாணவர்கள் அந்த பிரதான சாலையை ஆக்கிரமித்தனர்; வாகனங்களைச் செல்ல விடாமல் மறித்தனர். கொஞ்ச நேரத்தில் வாகனங்களின் அணிவரிசை சாலையை அடைத்தது .

                     மக்களின் உணர்வுகளில் ஆவேசம்,  பதட்டம்,  ஆதங்கம்....
                     ஆதி திராவிடர் மாணவர் விடுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட,  பழங்குடி மாணவர்கள் அடிப்படை வசதிகளைக் கோரியே இந்தப்  போராட்டம். 

                     தங்களது குறையை நீக்க நியாயமாக இவர்கள் அரசாங்கத்தை,  அரசியல் கட்சிகளை, ஆதி திராவிட நலவாரிய அதிகாரிகளை எதிர்த்து அல்லவா  போராடி இருக்க வேண்டும்?

                     4 மணி நேரத்துக்கும் மேலாக சாலையை-   அதுவும் காலை 9 .00 மணி முதல் மதியம் 1 .00 மணி வரை - ' பீக் ஹவர்'  என்று சொல்லப் படுகின்ற நேரத்தில்-   மாணவர்கள், அரசு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் , தொழிலாளர்கள் , வியாபாரிகள் என பல்வேறு தரப்பட்டவர்களின் பயணத்தை முடக்கிப்போட்ட மாணவர்களை,  தயக்கத்துடன் வேடிக்கை பார்த்துகொண்டிருந்த காவல் துறை அதிகாரிகளை, என்னவென்று சொல்வது?

                     கோடிக் கணக்கான நிதியை தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்குகின்ற மத்திய,  மாநில அரசுகள் நிதியை சரியாக, முறையாகப் பயன்படுத்தாததால் பாதிக்கப்பட்டது யார்?  மாணவர்கள் மட்டுமல்ல, அந்த மாணவர்களால் சமுதாயமும் தானே!

                    விடிந்தால் 'சமூக நீதி காத்த வீரர்கள்',  'இட ஒதுக்கீடு நாயகர்கள்',  'திராவிடத்தைக் காக்க வந்த தெய்வப் புதல்வர்கள்' என்றெல்லாம் தொண்டர்கள் மூலம் தங்களை புகழவைத்துப்  புளகாங்கிதமடையும் இன்றைய அரசியல் வாதிகளால் இளைய சமுதாயம், எதிர்காலத் தலைவர்களான மாணவர்கள் பொது அமைதிக்கு வில்லன்கள் ஆகலாமா?
 
-ம.கொ.சி.ராஜேந்திரன்
 
காண்க:
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக