நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

11.12.10

பாரதியைப் பார்






மகாகவி பாரதி
பிறப்பு: டிச. 11
.



காண்க:
சுப்பிரமணிய பாரதி (விக்கி)
Subramanya Bharathi
பாரதி (தமிழ் மரபு அறக்கட்டளை)
பாரதி - சீனி.விசுவநாதன்
பாரதி மகாகவி- கோவை ஞானி
பாரதி என்னும் பன்முக மேதை
பாரதி யார்? (என் பாரதி)
பாரதி (ஆறாம் திணை)
பாரதியார் பாடல்கள்  - காணி நிலம்
பாரதியார் பாடல் - மோகத்தைக் கொன்றுவிடு
பாரதி அமுதம்
உள்ளத்தில் உண்மைஒளி உண்டாகட்டும்!

எத்தனை புலவர்! எத்தனை கவிஞர்!
எத்தனையோ பேர் இத்தரணியிலே!
அத்தனை பேர்க்கும் ஆதவனாக,
அவதரித்தவனே பாரதியாவான்!

வாழ்ந்தது சிலநாள் - வறுமையின் பிடியில்!
வருந்திடவில்லை தேசியக் கவிஞன்!
தன்னது கடமை மறந்தானில்லை!
தவமென வாழ்ந்தே கவிதை செய்தான்!

'உலகினில் அனைவரும் மனிதர்கள் தானே!
உற்றவர், அற்றவர் என்றிடல் வேண்டா!
எல்லாம் சமமே எண்குணன் முன்னே!'
என்றிடும் பாவில் எத்துணை உண்மை!

வித்தக ஞானி விளைநிலம் நமது!
வித்தைகள் பலசெய் சித்தர்கள் தேசம்!
அத்தனை பேர்க்குள் முத்தென வந்தான் -
அன்னவனவனே பாரதியாவான்!

தாழ்ந்திடு நாட்டைத் தட்டியெழுப்ப
போர்க்கவி பாடும் பேரிகையாக,
பற்பல கவிதை ஆக்கிய அவனின்
பதமலர் பணிந்தால் பயமது தீரும்!

விலக்கிட வேண்டிய தீதினைச் சுட்டி,
விதியதன் வலிவை விளங்கிட வைத்து,
காளியின் நடமும் கண்ணனின் குழைவும்
கானமிழைத்திடு கவிஎனத் தந்தான்!

நித்திய தெய்வ நிலையறிந்தோர்கள்
நித்தில மீதில் சுடரொளி மிளிரும்!
மாபெரும் உலகில் மாதவர் சிலரே!
மாதவர் மணியே பாரதி ஆவான்!

பாழ்படு மதத்தின் தூசுகள் நீக்கி,
பார்புகழ் வரைசெய் தூரிகையாக,
மூச்சுள்ளளவும் முனைந்திருந்ததனை
மூடர்கள் காணில் திருந்திடு முள்ளம்!

திலகரை அரசியல் குருவாய்க் கொண்டான்,
திருவள்ளுவரை கர்த்தா என்பான்!
காந்தியை மிக்க பணிவுடன் கண்டான்,
காவியமாய் இதைக் கவியினில் சொன்னான்!

சித்தர்கள் பலரில் கடைசியும் இவனே!
சிறப்புறு தேசபக்தனும் இவனே!
காழ்ப்புகள் மிகுந்த அரசியலினிலே
காரியம் ஒன்றே உயிரெனக் கொண்டான்!

பலபேர் பிறந்து, இறந்து, மறைந்தும்
பலனெதுமில்லை! பாரதியைப் பார்!
பாரதியைக் கேள்! பாரதியாய் வாழ்!
பாரதியைச் சொல்! பாருள வரையில்
பாரதி போலே நிலைத்திட நிற்பாய்!
பாரதி ஆவாய்! பாரதன் ஆவாய்!
-வ.மு.முரளி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக