நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

25.12.10

இரவல் 'டிரான்சிஸ்டர்'


ராஜாஜி
நினைவு: டிச. 25 (1972 )

1971 -ல் பொதுத்தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்தது. காமராஜுடன் சேர்ந்து ராஜாஜி அமைத்த கூட்டணி உடைந்து விழுந்து நொறுங்கிக் கொண்டிருக்கிறது. செய்திகளைக் கேட்க ஒரு சிறு ரேடியோ தேவைப்பட்டது. பேட்டரியால் இயங்கும் 'டிரான்சிஸ்டர்' ஒன்றை பக்கத்துவீட்டில் இருந்து வாங்கிக் கொண்டுவந்து ராஜாஜி அருகில் வைத்தார்கள். 'கடன் வாங்கிய டிரான்சிஸ்டரில் தேர்தல் செய்திகளை ராஜாஜி கேட்டார்' என்று ராஜாஜி சரித்திரத்தை எழுதிய ராஜ்மோகன் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

அறுபது ஆண்டுகள் பொதுவாழ்வில் இருந்த பிறகு- கவர்னர் ஜெனரல் பதவியில் இருந்த பிறகு - கவர்னராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த பிறகு, இரண்டு முறை முதல்வராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு- 'சக்கரவர்த்தி' என்ற பட்டப்பெயர் கொண்ட அந்த மாமனிதரிடம், சொந்தமாக ஒரு 'டிரான்சிஸ்டர்' கூட இல்லை. அதுவும் ஒரு ஆடம்பரம் என்று கருதிய மகான் அவர்; அவர்தான் ராஜாஜி!

-ஆர்.சீனிவாச மூர்த்தி
நன்றி: துக்ளக் (29.12.2010)
காண்க: ராஜாஜி

1 கருத்து:

windos xp சொன்னது…

வாழ்ந்த மகாத்மா, நெஞ்சில் வாழும் மகாத்மா.

கருத்துரையிடுக