நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

18.2.11

கிருஷ்ண பக்தி இயக்கத்தின் முன்னோடி



ஸ்ரீ சைதன்ய 
மகா பிரபு

பிறப்பு: பிப். 18 

1486 ஆம் ஆண்டு,  மாசி மாத பௌர்ணமி தினத்தில் (பிப். 18 ) மேற்கு வங்காளத்தில் உள்ள நவதீப் என்ற இடத்தில் சைதன்ய மகாபிரபு பிறந்தார். ஆன்மீகவாதியான ஜகன்நாத் மிஸ்ரா - சாக் ஷி தேவிக்கு மகனாக பிறந்தார் . சைதன்யாவின் முதல் சகோதரர் விஸ்வரூப் சன்யாசம் வாங்கிக் கொண்டார் . சைதன்ய மகாபிரபு குழந்தைப் பருவத்தில் விச்வாம்பர் என்ற பெயரால் அழைக்கப்பட்டார் . அவரை மக்கள் செல்லமாக நிமாய் என்றும் அழைத்தார்கள் .

குழந்தைப் பருவத்தில் அவர் படிப்பில் மிகவும் புத்திசாலியாக இருந்தார். அவர் 12 வது வயதில் சட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றார் . அப்போது தான் அவருடைய தந்தை மரணம் அடைந்தார். அதன் பிறகு அவர் பண்டித் வல்லபாசாராவிடம் வாழ்க்கைக்குத் தேவையான பாடங்களைக் கற்றுக் கொண்டார் . அந்தச் சமயத்தில் தன்னுடைய குருவின் மகளான லக்ஷ்மியை மணந்து கொண்டார் . சைதன்ய மகாபிரபு தன்னுடையவயிற்றுப் பிழைப்பிற்காக ஒரு சம்ஸ்கிருத பாடசாலையைத் தொடங்கினார் . அந்தப் பாடசாலை நாளடைவில் வளர்ச்சி பெற்றதால் சைதன்யா அந்தப் பாடசாலை மீது முழு கவனத்தை செலுத்தினார் . குடும்பத்தின் மீது அக்கறை எடுத்துக் கொள்ளாததால் அவருடைய மனைவி லக்ஷ்மி திடீரென்று மரணமடைந்தார் .

தன்னுடைய அன்னையின் வற்புறுத்தலால் மீண்டும் சைதன்யா விஷ்ணுப்ரியா என்பவரை மணந்து கொண்டார் . ஒரு சமயம் சைதன்யா காயா சென்ற போது மாபெரும் தபஸ்வியைசந்தித்தார். அவரிடமிருந்து மந்திரங்களைக் கற்று கொண்டார் . இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது சைதன்யாவிடம் மாற்றங்கள் தோன்றின . அவர் நீண்ட நேரம் தியானம் செய்யத் தொடங்கினார் .

சைதன்யா அனுதினமும் கிருஷ்ண பரமாத்மாவை நினைத்து, அவர்மீது மோகம் கொண்டு பக்தி கானங்கள் பாடினார் . 1510 ஆம் ஆண்டில் சைதன்யா சந்நியாசம் எடுத்துக் கொண்டார் . பதினெட்டு வருடங்களுக்கு சைதன்யா ஜகன்நாத்பூரியில் தஞ்சமடைந்தார் . ஒரு நாள் ஜகன்நாதர் சின்ன மூர்த்தியை அரவணைத்துக் கொண்டிருந்த போது அவருடைய ஆத்மா பிரிந்து , அந்தச் சின்ன மூர்த்தியோடு கலந்தது .

ராதா - கிருஷ்ண மீது பல பாடல்களை இயற்றிய சைதன்ய மகாபிரபு என்றும் நம்முடைய நினைவில் இருந்துகொண்டே இருக்கிறார்.


காண்க:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக