நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

28.2.11

அசரீரி


பாபு ராஜேந்திர பிரசாத்
நினைவு: பிப். 28

.
''ஒரு தேசத்தின் நல்வாழ்வு என்பது அந்த நாட்டை நிர்வகிக்கும் ஆட்சியாளர்களின் நேர்மையையும் திறமையையும் பொறுத்துத்தான் அமையும். 
அரசியல் சட்டம் என்பது ஓர் உயிரற்ற இயந்திரம்தான். அதை இயக்குபவர்களின் திறமையைப் பொறுத்துத் தான் விளைவுகளை எதிர்பார்க்க முடியும். இந்தியாவின் இன்றியமையாத தேவை ஒழுக்கமும், நேர்மையும், மக்கள் நல்வாழ்வுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் தன்னலமற்ற தலைமையும்தான்''
.
- அரசியல் நிர்ணய சபையில் பாபு ராஜேந்திர பிரசாத் பேசியது.
ஆதாரம்: தினமணி தலையங்கம் (26.01.2010)
.
காண்க:
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக