நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

29.10.10

தேசியமும் தெய்வீகமும் இவரது கண்கள்


பசும்பொன்
முத்துராமலிங்க
தேவர்

பிறந்த நாள் மற்றும்
நினைவு நாள்:
அக். 30

முத்து ராமலிங்க  தேவர் (அக்டோபர் 30, 1908  அக்டோபர் 30, 1963) தென் தமிழகத்தில்  பசும்பொன்  எனும் சிற்றூரில் பிறந்தவர் முத்துராமலிங்கம். தலைசிறந்த சுதந்திரப் போராட்டத் தியாகியாக விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பரங்கியரை எதிர்த்த இந்திய தேசிய ராணுவத்திற்கு  தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தேசமும்  தெய்வீகமும் தனது  இரு கண்கள் என்று முழங்கியவர். நேதாஜி துவக்கிய 'பார்வர்ட் பிளாக்' கட்சியை தமிழகத்தில் வளர்த்தவர்.

பத்தாம் வகுப்பு வரை படித்த தேவர், ஆங்கிலத்திலும், தமிழிலும் மணிக்கணக்கில் பேசக் கூடிய ஆற்றல் படைத்தவர். தமிழ்நாட்டின் தலைசிறந்த பேச்சாளர் களில் ஒருவராகத் திகழ்ந்தார். விடுதலைப் போராட்டத்தில் பலமுறை சிறை சென்றார். அவர் வாழ்ந்த நாட்கள் 20,075. அதில் சிறையில் கழித்த நாட்கள் 4,000. ஜமீன் பரம்பரையில் பிறந்தாலும், எளிய வாழ்க்கை நடத்தினார். 33 கிராமங்களுக்கு சொந்தக்காரர் என்றாலும், வருமானத்தில் பெரும் பகுதியை ஏழை மக்களுக்காக செலவிட்டார்.

பொதுத்தொண்டு செய்வதை முழு நேரப்பணியாக மேற்கொள்ள விரும்பி திருமணம் செய்து கொள்ளாமல் துறவிபோல் வாழ்ந்தார். இந்நாட்டிற்காக வாழ்க்கையில் நான்கில் ஒரு பங்கை சிறையில் கழித்தவர். இவரது பிறந்த நாள் தமிழக அரசு விழாவாக பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடப் பட்டு வருகின்றது. 

மேலும் அறிய:

 .

1 கருத்து:

Thaniyan Pandian சொன்னது…

நல்ல பணி.
உங்களின் தேசத் தொண்டு சிறக்க,
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்!

கருத்துரையிடுக