நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

25.10.10

தேசபக்தியைக் கற்றுக் கொடுத்தவர்



சகோதரி நிவேதிதை

(அக். 28, 1867 - அக். 13,1911)

ஐரிஷ்  நாட்டில் பிறந்த மார்கரெட் எலிசபெத் நோபில், பாரதத்தையே  தாயகமாக   சுவீகரித்துக் கொண்டவர்.  உலகம் முழுவதும் திக்விஜயம் செய்து ஹிந்து தர்மத்தின் மேன்மையைப்  பறைசாற்றிய சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்ட மார்கரெட், அவரது பிரதம சிஷ்யையாகி சகோதரி நிவேதிதை என்று பெயர் பெற்றார்.

ஆன்மிகப் பணி மட்டுமல்லாது, நாட்டு விடுதலைக்காகவும் உழைத்தார் நிவேதிதை. ரவீந்திரநாத் தாகூர், ஜெகதீச சந்திர போஸ், மகரிஷி அரவிந்தர், மகாகவி பாரதி ஆகியோருடனும் நல்ல தொடர்பு கொண்டிருந்தார். இவரது சந்திப்பால், மகாகவி பாரதி, பெண்மையின் உயர்வு குறித்து அதிகமான கருத்துக்களை எழுதினார். தனது  ஞான குரு என்று பாரதி  இவரை வரித்திருக்கிறார்.

எளிய மக்களின் கல்விக்காக கொல்கத்தாவில் பள்ளியை நடத்தியவர். ஜெகதீச சந்திர போஸ் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக கெளரவம் பெறக் காரணமாக இருந்தவர். இந்தியர்களுக்கு தேசபக்தியைப் புரியவைக்கவே ஐரிஷ் நாட்டிருந்து (அதுவும் ஆங்கிலேயனால் அடிமைப்பட்ட நாடு தான்) வந்தவராக வாழ்நாள் முழுவதும் பாரத நலனுக்காக உழைத்தார்.

காண்க: சகோதரி நிவேதிதை
காண்க: பாரதியின் வழிகாட்டி
காண்க: குருவின் ஆசி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக