நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

25.10.10

தவறாத சந்தானமும் தவறிய சிந்தனையும்

                                        
"செல்வாக்கு மிகுந்த பணக்காரனின் நாயாய் இருப்பதை விட, வறுமையில் வளரும் சுதந்திரமான பிச்சைக்காரனாய் இருப்பதே மேல்"  என்ற பழமொழியை என்றோ படித்தது  ஞாபகத்திற்கு வருகிறது.
பல்லாயிரக் கணக்கான வருடங்களைக் கொண்ட நமது பாரத நாட்டின் வரலாற்றில் எத்தனையெத்தனை பதிவுகள்,  பாதைகள்! எல்லாம் புனிதமானவை; பார்வையே புதியவைகளாக நமது முன்னோர்கள் இலக்கியங்களாக வாழ்க்கையை எழுதியிருக்கிறார்கள்.

அறம், பொருள், வீடு, இன்பம் என்பதிலிருந்து,  ஈதல், இசைபட வாழ்தலே வாழ்வின் ஊதியம்,  இறைவனடி சேர்தலே பிறவியின் நோக்கமாய் கொண்டுள்ளதில் அவர்களின்  உன்னதம் நமக்கு புரிகின்றது.

வேத வியாசர்,  வால்மீகி தொடங்கி சமிபகாலத்து ஸ்ரீ ரமண மகரிஷி, ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ விவேகானந்தர், வள்ளலார் வரிசைகளில் இன்று ஸ்ரீ ரவிசங்கர்,  மாதா அமிர்தானந்தமாயி வரையிலும், நம் பாரத அன்னை 'தவறாத சந்தானத்தை'  புதல்வர்களை ஈன்றேடுத்துக் கொண்டுதான் வருகிறாள்.

என் மனக்குளத்தில் கல்லாய் விழுந்த கடந்த செப். 30 ம் தேதி 'அயோத்தி ராமஜென்மபூமி வழக்கில் தீர்ப்பு'  பல சலனங்களை நீரலைகளை என்னுள் ஏற்படுத்தியது. அவற்றில் கரைசேரும்  எழுத்துக்களை  உங்கள் முன் பகிர்ந்து கொள்கிறேன். 

நூறு கோடிக்கு மேல் இந்துக்களும், சுமார் 15 கோடி முஸ்லிம்களும், 5 கோடி கிறிஸ்தவர்களும் வாழும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் எல்லோரையும் திருப்திபடுத்தும், சமரசப்படுத்தும் நோக்கில் மத்தியஸ்த தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளது.    சற்றே நான் இதை வேறு கோணத்தில் சிந்திக்கிறேன்...

என்னுள் எழுந்த கேள்விகள் இரண்டு:

1 .  இதே போன்றதொரு நிலை  வேறு ஒரு ஐரோப்பா நாட்டிலோ, அரபு நாடுகளிலோ, ஆப்பிரிக்கா நாட்டிலோ ஏற்பட்டிருந்தால்?

2 .  நூறு கோடிக்கும் மேல் உள்ள இந்துக்கள் வழிபடும் ராமனுக்கு ஆலயம் கட்டப்படும் விதத்திலே இந்துக்கள் அமைதி கடைபிடிப்பதற்கு காரணம் தொன்றுதொட்டு வரும் நமது பண்பாடு காரணமா?  சகிப்புத்தன்மையா? அல்லது எது?

இதனை  உங்களது சிந்தனைக்கே  விட்டுவிடுவதற்கு முன்பு,  மீண்டும் ஒரு முறை இந்தக்  கட்டுரையின் தொடக்கத்திலுள்ள பழமொழியை மீண்டும் ஒரு முறை வாசிக்க வேண்டுகிறேன். உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

என,
அன்புடன்
ம.கொ.சி.இராஜேந்திரன்
மாநில அமைப்பாளர்,
தேசிய சிந்தனைக் கழகம்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக