நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

31.10.10

வேத சமயம் காக்க வந்தவர்

 
சுவாமி தயானந்த சரஸ்வதி
 
மறைந்த  நாள்:  அக். 31
 
ஹிந்து மதத்தின் மூடப் பழக்க வழக்கங்களைப் போக்கி, வேத சமயத்தை நிலைநாட்ட 'ஆரிய சமாஜம்' என்ற அமைப்பை நிறுவியவர் சுவாமி தயானந்த சரஸ்வதி.
 
குஜராத் மாநிலம்- மோர்வியில்,  1824 , பிப்ரவரி 24ல் பிறந்தவர். இயற்பெயர் மூல சங்கர். சிறு வயதிலேயே சமய நம்பிக்கைகள்  குறித்து  பகுத்தறிவுடன் கேள்வி கேட்டு வளர்ந்த அவர், சடங்குகளில்  நமது தொன்மையான  மதம் வீழ்ந்து கிடப்பதை சரிசெய்ய எண்ணம் கொண்டார். பல்வேறு  துறவிகளிடம் வேத பாடம் பயின்ற அவர், வேதமே கடவுள் என்ற  பழமையான இந்து மதக் கருத்தினைப் பரப்பத் திட்டமிட்டார். அதற்காக  ''ஆரிய சமாஜம்'' என்ற அமைப்பை நிறுவினார். 
 
ஹிந்து மதத்திலிருந்து  கட்டாயமாக வேற்று மதங்களுக்கு மாற்றப் பட்டவர்களை தாய்மதம் திருப்ப அக்காலத்தில் எதிர்ப்பு இருந்தது.  தனது 'சுத்தி இயக்கம்'  மூலமாக அதை அவர் சாதித்துக் காட்டினார்.
 
வாழ்நாளின் பெரும்பகுதியை சமய மறுமலர்ச்சி பிரசாரத்துக்கே  செலவிட்ட தயானந்தர், 60க்கு மேற்பட்ட நூல்களை எழுதி இருக்கிறார். அதில் முதன்மையானது 'சத்தியார்த்த பிரகாஷ்' (உண்மையின் ஒளி) ஆகும். நமது நாட்டின் தேசிய மொழியாக ஹிந்தி உருவாக வேண்டும் என்று தயானந்தர் விரும்பினார்;  அதற்கான பிரசாரங்களிலும் ஈடுபட்டார்.
 
மகளிருக்கு சம உரிமை, பெண்கல்வி, தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்ட முற்போக்கு நடவடிக்கைகளும் தயானந்தர் தீவிரமாக பாடுபட்டார். ராஜஸ்தானின் ஜோத்பூரில், சமஸ்தான ராஜாவின் ஆடம்பரப் போக்கைக் கண்டித்த காரணத்தால், அங்கேயே 1883 , அக்டோபர் 31 ல் விஷமிட்டுக்  கொல்லப்பட்டார் தயானந்தர். 
 
விரிவாக அறிய: 
 
 
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக