நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்
வெண்முரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெண்முரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

8.1.14

ஜெயமோகனின் வெண்முரசு!


தமிழின் முன்னணி எழுத்தாளர் திரு. ஜெயமோகன், தனது இணையதளத்தில் ஜனவரி 1 முதல் மகாபாரதத்தை புதுவடிவில் ‘வெண்முரசு’ என்ற தொடராக எழுதி வருகிறார். தொடர்ந்து பத்தாண்டுகள் இதனை எழுதி, மாபெரும் தொகுப்பாக வெளியிடவும் திரு.ஜெயமோகன் திட்டமிட்டுள்ளார்.

மகாபாரதம் இயல்பிலேயே மாபெரும் இலக்கியம். பாரதத்தின் பண்பாட்டு உருவாக்கத்தில் பேரிடம் வகிக்கும் மகாபாரதம் நம் ஒவ்வொருவரின் நாடியிலும் கலந்துள்ளது. இதனை பின்நவீனத்துவத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில்; நவீன வடிவில்  மீளுருவாக்க திரு.ஜெயமோகன் எடுத்துள்ள முயற்சி மிகவும் போற்றுதலுக்குரியது. இறைவன் அவருக்கு அதற்கான முழு ஆற்றலையும் அளிக்க பிரார்த்திக்கிறோம்.

இந்தத் தொடரை கீழ்க்கண்ட இணையதளங்களில் தினசரி படிக்கலாம். தனது தொடர் குறித்த விவாதங்களையும் திரு. ஜெயமோகன் வரவேற்றுள்ளார்.


...வெண்முரசு தொடரைப் படிக்க, 
கீழ்க்கண்ட தளங்களை அணுகவும்:
.