நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்
திருநின்றவூர் ரவிக்குமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருநின்றவூர் ரவிக்குமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19.6.16

தேசமும் தேகமும்

-திருநின்றவூர் ரவிக்குமார்

சிந்தனைக்களம்


தேசமென்றால்  நம் பாரத மணித்திருநாடு. அதில் பிறந்து வாழ்ச்சி பெற தர்ம சாதனமான தேகத்தை ஸ்ரீமந் நாராயணன் கருணையுடன் நமக்கு அளித்துள்ளான். வழிகாட்டியாக தர்ம சாத்திரங்களைத் தந்தருளினான்.

ஆனால் இங்கு தேகம் என்பது பகவான் உவந்து எழுந்தருளியுள்ள அர்ச்சாஸ்தலமாகிய திவ்யதேசம். தேகம் என்பது ஞானமும் ஞானத்தினால் பக்குவம் பெற்ற பக்தியும் உடைய சம்சாரியுடைய உடம்பு.