திருமூலர் திருநட்சத்திரம்
ஐப்பசி 6 - அஸ்வினி
தமிழகத்தின் அறிவுச்சுடர்களான பதினெண் சித்தர்களில் முதலாமவர் திருமூலர். திருக்கயிலாய பரம்பரையைச் சேந்தவர். 63 நாயன்மார்களில் ஒருவர். 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்று 1500 ஆண்டுகளுக்கு முன்னமே அறிவித்தவர்.
9 தந்திரங்களுடன் கூடிய 3000 பாடல்கள் கொண்ட திருமந்திரம் திருமூலரின் தெய்வ வாக்கால் இயற்றப்பட்டது. இது சைவர்களின் பன்னிரு திருமுறைகளில் பத்தாவது திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. திருமந்திரமாலை என்னும் இத்திருமுறை, சைவசித்தாந்த சாத்திரமாகவும் இறைவன் திருவருளைப் போற்றிப் பரவும் தோத்திர மாகவும் விளங்கும் தனிச் சிறப்புடையது.
கூடுவிட்டு கூடு பாயும் சித்தர்களின் சித்து காரணமாக ஆட்டிடையன் உடலில் புகுந்து இவர் நடத்திய திருவிளையாடல் நாம் அறிய வேண்டியது. சமரச நாட்டமும், தெய்வீக ஆற்றலும் கொண்டதாக இவரது உபதேசங்கள் விளங்குகின்றன. தமிழுக்கு இவர் அளித்த அறிய கருவூலமான திருமந்திரம் உள்ளவரை தமிழின் தெய்வீகத் தன்மை நீடூழி வாழும்.
''என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே'' என்பது திருமூலர் வாக்கு.
காண்க: திருமூல நாயனார்
முழுசரிதம் அறிய: திருமூலர் (நாயன்மார் வரலாறு)
காண்க: திருமூலர்- பக்திக்கதை
காண்க: திருமூலர் வரலாறு
படிக்க: திருமந்திரம்
.
1 கருத்து:
திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.
Please follow
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)
(First 2 mins audio may not be clear... sorry for that)
(PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)
Online Books
http://www.vallalyaar.com/?p=409
Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454
கருத்துரையிடுக