நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

17.10.10

ஜய ஜய பவானி!


கவிதை

ஜய ஜய பவானி! ஜய ஜய சங்கரி!
ஜய ஜய ஜய ஜய சாமுண்டேஸ்வரி!

(ஜய ஜய)

வில்லினில் ஒலியென, விஜயத் திருவென,
இல்லினில் ஒளியென, இருட்பகை சிதறிட,
நின்றிடும் உமையவளே!
நின்னடி பணிகின்றோம்!

(ஜய ஜய)

நீதி நிலைத்திட, நியமம் காத்திட,
சாதி ஒழித்திட, சதிகளை வென்றிட,
உன்னருள் வேண்டுகிறோம்!
விண்ணவர் தலைமகளே!

(ஜய ஜய)

அன்புடன் அனைவரும் இன்புற வாழ்ந்திட,
'தன்'னெனும் ஆணவ மாயை அகன்றிட,
எம் மனம் ஏங்கிடுதே!
இன்னருள் தந்திடுவாய்!

(ஜய ஜய)

பாரதம் உயர்ந்திட, பண்புகள் ஓங்கிட,
சாரணர் போற்றிடு தர்மம் பரவிட,
ஆசி அளித்திடுவாய்!
ஈசனின் இருதயமே!

(ஜய ஜய)
-குழலேந்தி
. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக