நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

31.10.10

உலகின் முதல் மருத்துவர்



தன்வந்திரி பகவான்

தன்வந்திரி ஜெயந்தி
 ஐப்பசி 17  (நவ. 3)

பாரதத்தின் தொன்மையான   ஆயுர்வேத மருத்துவ  முறையின் பிதாமகர் தன்வந்திரி. மிகப் பழமையான, பக்க விளைவுகள் அற்ற, நோயின் மூலத்தை நீக்குவதுடன் உடலையும் போஷிக்கச் செய்யும் ஆற்றல் கொண்டது ஆயுர்வேதம். மூலிகைகள், தாதுக்கள், இயற்கையில் கிடைக்கும் மூலங்களை அடிப்படையாகக் கொண்டு, உடலின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது இதன் சிறப்பு. தமிழகத்திலும் கேரளத்திலும் தன்வந்திரிக்கு கோயில்கள் உள்ளன.  கேரளாவில்  ஆயுர்வேத  மருத்துவம் தனிச் சிறப்போடு பேணப்பட்டு வருகிறது.

விக்கிரமாதித்த மன்னனின் அரசவை நவரத்தினங்களில்  ஒருவராக இருந்தவர்; மயக்கவியல், ஒட்டறுவை சிகிச்சைகளின் முன்னோடி என்ற கருத்துக்களும் உண்டு. பாற்கடலில் அமுதம் கடைந்தபோது வெளியானவர் தன்வந்திரி என்று பாகவதம் கூறுகிறது. தீபாவளிக்கு முந்தைய திரயோதசி நாளில் இவரது ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

காண்க:
Dhanvantari  
Lord Dhanvantari 
Founder  of  Ayurveda 
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக