நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

26.1.11

இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்



நாட்டைக் காப்போம்!

நாடு இன்றுள்ள மோசமான ஊழல் மலிந்த, கறை படிந்த சூழலை  மாற்ற நாம் இன்று சபதம் ஏற்போம்!

நாட்டின் ஒருமைப்பாடு பல மாநிலங்களில் கேள்விக்குறியாகி இருக்கும் நிலையை மாற்ற நாம் இன்று சபதம் ஏற்போம்!

நாட்டின் அனைத்து மக்களும் அடிப்படைத்  தேவைகளைப் பெற்றிட, அனைவருக்கும் சமச்சீரான வாழ்க்கை கிட்டிட, நாம் இன்று சபதம் ஏற்போம்!

சுயநலம் மிகுந்த அரசியல்வாதிகளின் கெடுமதியால் நாடு சீரழியாமல் இருக்க நாம் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒருவகையில் பணி புரிவோம்!

நாடு என்பது நாமே என்று உணர்வோம்! உணர்த்துவோம்! நமது நாட்டை நாமே காப்போம்!

-குடியரசு தின உறுதிமொழி

கார்ட்டூன்: மதி
நன்றி: தினமணி (26.01.2011)
காண்க: காஷ்மீரில் தேசியக்கொடி: சில சிந்தனைகள் 
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக