நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

14.4.11

சித்திரை மாத மலர்கள்


ஆன்றோர்- திருநட்சத்திரங்கள்:


மகாவீரர் ஜெயந்தி
(ஏப். 16)

இசைஞானியார்
(சித்திரை - 4 - சித்திரை)

மதுரகவி ஆழ்வார்
(சித்திரை - 5 - சித்திரை)

திருக்குறிப்புத் தொண்டர்
(சித்திரை - 5 - சுவாதி)
(மறைவு: ஏப். 24 )


திருநாவுக்கரசர்
(சித்திரை - 15 - சதயம்)

வடுக நம்பி
(சித்திரை - 19 -அஸ்வினி)

சிறுத்தொண்டர்
(சித்திரை - 20 - பரணி)

உய்யக் கொண்டார்
(சித்திரை - 21 - கார்த்திகை)

தியாகராஜ சுவாமிகள்
(சித்திரை - 21 - கார்த்திகை)

மங்கையர்க்கரசியார்
(சித்திரை - 22 - ரோகிணி)

விறன்மிண்டர்
(சித்திரை - 24 - திருவாதிரை)

ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி
(சித்திரை - 24 - திருவாதிரை)

ஸ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி
(சித்திரை - 25 - புனர்பூசம்)

முதலி ஆண்டான்
(சித்திரை - 25 - திருவாதிரை)


சிவஞான சுவாமிகள்
(சித்திரை - 27 - மகம்)

உமாபதி சிவாச்சாரியார்
(சித்திரை - 31 - ஹஸ்தம்)


-----------------------------

சான்றோர்- மலர்வும் மறைவும்:

அண்ணல் அம்பேத்கர்
(பிறப்பு: ஏப். 14)

விஸ்வேஸ்வரய்யா
(நினைவு: ஏப். 14)

தீரன் சின்னமலை
(பிறப்பு: ஏப். 17)

(பிறப்பு: ஏப். 18 )

தாமோதர சாபேக்கர்
(பலிதானம்: ஏப். 18)

 மு.வரதராசனார்
(பிறப்பு: ஏப். 28)

கணிதமேதை ராமானுஜன்
(நினைவு: ஏப். 26)

தமிழ்த்தாத்தா உ.வே.சா.
(நினைவு: ஏப். 28)

வீரன் அழகுமுத்துக்கோன்
(நினைவு: ஏப். 29)

கவிஞர் பாரதிதாசன்
(பிறப்பு: ஏப். 29)

சகஜானந்தர்
(நினைவு: மே 1)

தளவாய் வேலுத்தம்பி
(பிறப்பு: மே 6)

(பிறப்பு: மே 7)

கோபாலகிருஷ்ண கோகலே
(பிறப்பு: மே 9)

கஸ்தூரிபா காந்தி
(பிறப்பு: மே 9)

மொரார்ஜி தேசாய்
(நினைவு: மே 10)

சுத்தானந்த பாரதியார்
(பிறப்பு: மே 11)

அண்ணலின் அமுத மொழி

அண்ணல் அம்பேத்கர்
பிறப்பு: ஏப். 14

  

ஜனநாயக அரசு வேண்டுமெனில்  

சமூகம் ஜனநாயகமாக்கப்பட வேண்டும்


- பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

பல்வேறு வகையான அரசு முறைகளை வரலாறு கண்டிருக்கிறது. முடியாட்சி, பிரபுக்கள் ஆட்சி, மக்களாட்சி என்பவற்றுடன் சர்வாதிகார ஆட்சியையும் இணைத்துக் கொள்ளலாம். தற்காலத்தில் மிகவும் பரவலாகக் காணப்படுவது ஜனநாயகம். இருப்பினும், ஜனநாயகம் என்றால் என்ன என்பது பற்றிய கருத்தொற்றுமை இல்லை. ஒரு சமூகம் தனது வடிவிலும் அமைப்பிலும் ஜனநாயக முறையில் இல்லை என்றால், அந்த சமூகத்திற்காக செயல்படும் அரசு ஜனநாயக அரசாக இருக்க முடியாது. ஜனநாயகம் என்பது தேர்தல்கள் தவிர வேறொன்றும் இல்லை என்று நினைப்பவர்கள் மூன்று தவறுகளை செய்கிறார்கள்.

முதல் தவறு : அரசு என்பது சமூகத்திலிருந்து முற்றிலும் வேறானது, தனிப்பட்டது என்று நம்புவது. உண்மையில் அரசு, சமூகத்திலிருந்து வேறானதும், தனிப்பட்டதும் அல்ல. அரசு என்பது சமூகத்தின் பல அமைப்புகளில் ஒன்று. சமூகத்தின் கூட்டு வாழ்க்கைக்குத் தேவையான கடமைகளில் சிலவற்றைச் செய்யுமாறு சமூகம் அரசுக்கு குறிப்பிட்டுக் கொடுக்கிறது.

இரண்டாவது தவறு, ஓர் அரசு சமூகத்தின் இறுதி நோக்கங்களையும் குறிக்கோள்களையும் பிரதிபலிக்க வேண்டும் என்பதையும், அரசு வேரூன்றியிருக்கும் சமூகம் ஜனநாயக சமூகமாக இருந்தாலன்றி இது நடவாது என்பதையும் உணரத் தவறுவது. சமூகம் ஜனநாயக முறையில் இல்லையென்றால், ஓர் அரசு ஜனநாயக அரசாக ஒருபோதும் இருக்க முடியாது. சமூகம் இரண்டு வர்க்கங்களாக, ஆளுவோர் என்றும் ஆளப்படுவோர் என்றும் பிரிக்கப்பட்டிருந்தால், அரசு ஆளும் வர்க்கத்தின் அரசாகத்தான் இருக்கும்.

மூன்றாவது தவறு! அரசு நல்லதாக இருக்குமா, கெட்டதாக இருக்குமா, ஜனநாயகமாக இருக்குமா, அல்லது ஜனநாயகமற்றதாக இருக்குமா என்பது, சட்டத்தைச் செயல்படுத்துவதற்கு எல்லா அரசுகளும் சார்ந்திருக்கின்ற அமைப்புகளை, குறிப்பாக சிவில் சர்வீஸ் அமைப்பைப் பொறுத்தது என்பதை மறந்துவிடுவதாகும். சிவில் சர்வீஸ் பணியில் உள்ளவர்கள் எத்தகைய சமூகச் சூழலில் வளர்ந்தார்கள் என்பதைப் பொறுத்தே இது அமையும். சமூகச் சூழல் ஜனநாயகமற்றதாக இருந்தால், அரசும் ஜனநாயகமற்றதாகவே இருக்கும்.

ஜனநாயக வடிவிலான அரசு நல்ல பலனைக் கொடுக்குமா என்பது, சமூகத்தில் உள்ள தனி நபர்களின் மனப்பான்மையைப் பொறுத்தது. சமூகத்தில் உள்ள தனி நபர்களின் மனப்பான்மை ஜனநாயகப் பண்புள்ளதாக இருந்தால், ஜனநாயக வடிவிலான அரசு நன்மையைத் தரும் என்று எதிர்பார்க்கலாம். இல்லையென்றால் ஜனநாயக வடிவிலான அரசு ஆபத்தான அரசாக மாறிவிடக்கூடும்.

ஒரு சமூகத்தில் உள்ள தனி நபர்கள் தனித்தனி வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தால், ஒவ்வொரு வகுப்பும் மற்ற வகுப்புகளிலிருந்து தனிமைப்படுத்தப் பட்டிருந்தால், ஒவ்வொரு தனி நபரும் தன்னுடைய விசுவாசம் வேறெதையும் விட, முதன்மையாகத் தன் வகுப்புக்கே அளிக்கப்பட வேண்டும் என்று நினைத்தால், தனிமைப்பட்ட தன் வகுப்பில் வாழ்ந்து கொண்டு, வகுப்பு உணர்வு பெற்று, தன்னுடைய வகுப்பின் நலனை மற்ற வகுப்புகளின் நலனுக்கு மேலாகக் கருதினால், தன்னுடைய வகுப்பின் நலனை முன்னேற்றுவதற்காக சட்டத்தையும் நீதியையும் வக்கிரமாகப் பயன்படுத்துவதற்குத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தினால், இந்த நோக்கத்துக்காகத் தன்னுடைய வகுப்பைச் சாராத மற்றவர்களுக்கு எதிராக வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் எப்போதும் பாரபட்சத்துடன் செயல்பட்டால், ஒரு ஜனநாயக அரசு என்ன செய்ய முடியும்? வகுப்புகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு, சமூக விரோத உணர்வும், ஆதிக்க மனப்பான்மையும் அதிகமாக இருந்தால் அரசு நீதியுடனும் நியாயத்துடனும் ஆட்சி செய்யும் கடமையை நிறைவேற்றுவது கடினம்.

இப்படிப்பட்ட சமூகத்தில், அரசு தன் வடிவத்தில் மக்களால் நடத்தப்படும் மக்களுடைய அரசாக இருந்தாலும், ஒருபோதும் மக்களுக்கான அரசாக இருக்க முடியாது. அது ஒரு வகுப்பால், ஒரு வகுப்புக்காக நடத்தப்படும் அரசாகவே இருக்கும். ஒவ்வொரு தனி நபரின் மனப்பான்மையும் ஜனநாயக ரீதியில் இருந்தால்தான், அதாவது ஒவ்வொருவரும் மற்றவர்களில் ஒவ்வொருவரையும் தனக்குச் சமமாக நடத்தி, தான் உரிமை கொண்டாடும் அதே சுதந்திரத்தை மற்றவர்களுக்கும் கொடுக்கத் தயாராக இருந்தால் தான் மக்களுக்காக நடைபெறும் அரசாக அது இருக்க முடியும்.

இந்த ஜனநாயக மனப்பான்மை, தனி நபர்கள் சமூகத்தில் கலந்து பழகுவதன் விளைவாக உருவாவது. எனவே ஜனநாயக அரசு வேண்டுமென்றால், முதலில் ஜனநாயக சமூகம் வேண்டும். ஜனநாயக அரசுகள் வீழ்ச்சியடைந்துள்ளன என்றால் அதற்கு முக்கிய காரணம், அந்த அரசுகள் அமைந்திருந்த சமூகங்கள் ஜனநாயக சமூகங்களாக இல்லை என்பதேயாகும். நல்ல அரசின் பணி எந்த அளவுக்கு அதன் குடிமக்களின் மனப்பான்மையையும், அறநெறிப்பண்பையும் பொறுத்துள்ளது என்பது உணரப்படாதது வருந்தத்தக்கது. ஜனநாயகம் ஓர் அரசியல் எந்திரம் மட்டும் அல்ல; அது ஒரு சமூக அமைப்பு மட்டும் கூட அல்ல; அது ஒரு மனப்பான்மை அல்லது வாழ்க்கைத் தத்துவம் ஆகும்.

ஒவ்வொரு தனி நபரின் மனப்பான்மையும் ஜனநாயக ரீதியில் இருந்தால்தான், அதாவது ஒவ்வொருவரும் மற்றவர்களில் ஒவ்வொருவரையும் தனக்குச் சமமாக நடத்தி, தான் உரிமை கொண்டாடும் அதே சுதந்திரத்தை மற்றவர்களுக்கும் கொடுக்கத் தயாராக இருந்தால்தான் மக்களுக்காக நடைபெறும் அரசாக அது இருக்க முடியும். இந்த ஜனநாயக மனப்பான்மை, தனி நபர் ஜனநாயக சமூகத்தில் கலந்து பழகுவதன் விளைவாக உருவாவது. எனவே ஜனநாயக அரசு வேண்டுமென்றால், முதலில் ஜனநாயக சமூகம் வேண்டும்.


(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 4, பக்கம் : 282 )
.
நன்றி: கீற்று

13.4.11

ஜனநாயகக் கடமை ஆற்றுவோம்!


நிலப்பரப்பில் உலகிலேயே மிகப் பெரிய நாடு ரஷ்யா; மக்கள் தொகையில் மிகப் பெரிய நாடு சீனா;  வல்லரசு அமெரிக்கா. ஆனால், உலகிலேயே  மிகப் பெரிய  ஜனநாயக நாடு  இந்தியா தான்.  இந்தப் பெருமை  நமக்கே  உரித்தானது. 

எத்தனை ஏமாற்றங்கள் இருந்தபோதும், சர்வாதிகாரிகளின் பிடியில் இந்திய ஜனநாயகம்  சிக்கிக்கொள்ளவில்லை;   ராணுவம் இந்திய அரசின் காவலனாக மட்டுமே இருக்கிறது; வாக்குச்சீட்டுகளால் ஆட்சிகளை சத்தமின்றி மாற்றுவது இந்தியாவின் பலம். இதை உலகம் வியப்புடன் பார்க்கிறது.

நமது நாடு விடுதலை பெற்று 64  ஆண்டுகள் முடிந்தபோதும், வறுமை, கல்லாமை, தீண்டாமை உள்ளிட்ட அரக்கர்களை அழிக்க முடியவில்லை என்பது உண்மையே. ஆனால், அதற்கான முயற்சியில் நாம் பல படிகள் முன்னேறி இருக்கிறோம்.

நமது அரசியல்வாதிகள் ஊழலில் திளைக்கிறார்கள்; பல லட்சம் கோடி ஊழல் இப்போது சாதாரணமாகிவிட்டது.  உலக அளவில் ஊழலில் முதல் பத்து  நாடுகளில்  ஒன்றாக இந்தியா இருக்கிறது. இவை நமது ஜனநாயகத்தின் கரும்புள்ளிகள். ஆனால், இதே நாட்டில்தான் குஜராத்தின் நரேந்திர மோடியும் பிகாரின் நிதிஷ்குமாரும், ஒரிசாவின் நவீன் பட்நாயக்கும் ஊழலற்ற மக்கள்நல ஆட்சி செய்கிறார்கள்.

எந்த ஒரு அரசியல் தத்துவத்துக்கும் இருக்கும் நன்மை, தீமைகள் ஜனநாயகத்திற்கும் உண்டு. அதே சமயம், அதிகபட்ச நன்மைகளும் குறைந்தபட்ச தீமைகளும் கொண்டது ஜனநாயகம் மட்டுமே. மக்களின் விழிப்புணர்வு அதிகரிக்கும்போது நன்மைகள் கூடுதலாகும்; மக்களின் விழிப்புணர்வு குறையும்போது தீமைகள் அதிகரிக்கும்.

ஆக, நமது ஜனநாயகத்தின் குறைபாட்டிற்கு காரணம் அமைப்பு அல்ல; அதை கடைபிடிக்கும் மக்களே என்பது தெளிவாகிறது. 'மக்கள் எவ்வழி; மன்னன் அவ்வழி' என்பதுதானே குடியாட்சிக் காலத் தத்துவமாக இருக்க முடியும்?

மக்கள் தூய்மையும் ஒழுக்கமும் நேர்மையும் மிகுந்தவர்களாக இருந்தால் அவர்களின் பிரதிநிதிகளும் அவ்வாறே தேர்வாவார்கள். அந்தப் பிரதிநிதிகளால் அமையும் ஆட்சி உண்மையான மக்கள்நல ஆட்சியாக விளங்கும். தமிழகமும் ஆந்திரமும் கர்நாடகமும் கேரளமும் ஊழல், வன்முறை, ஜாதி அரசியல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதற்கு காரணம் அரசியல் கட்சிகள் அல்ல; மக்களே.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி சிறையில் இருக்கும் ஆண்டிப்பட்டி ராசா பிறந்த இதே தமிழகத்தில் தான் தியாகி கக்கன் வாழ்ந்திருக்கிறார்.  அதிகார அத்துமீறல்களுக்கு உதாரணமாகக் கூறப்படும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஆண்ட இதே மாநிலத்தில் தான் ஓமந்தூர் ராமசாமியும் காமராஜரும் ராஜாஜியும் ஆண்டனர். இன்றும் கூட, பொதுநலனே   உயிர்மூச்சாகக் கொண்ட தலைவர்கள் பல கட்சிகளில் இருக்கின்றனர். ஆனால் ஊடக வெளிச்சம் அவர்கள் மீது விழாததால், நாம் நம்பிக்கை இழந்திருக்கிறோம்.

இன்று தமிழகத்தின்  14  வது சட்டசபைத் தேர்தல். ஆட்சி மாற்றம் நிகழுமா. அதே ஆட்சி தொடருமா, தொங்கு சபை அமையுமா, புதிய கட்சிகள் வெல்லுமா போன்ற பல கேள்விகளுக்கு மக்கள் இன்று தங்கள் வாக்குப்பதிவில் விடை அளிக்க இருக்கிறார்கள். அவர்களை விலைபேச முக்கிய கட்சிகள் முண்டி அடிக்கின்றன. இலவச வாக்குறுதிகளால் மக்களை கட்சிகள் பிச்சைக்காரகள் ஆக்குகின்றன. சாதிரீதியாகவும் மதரீதியாகவும் மக்களைப் பிளவுபடுத்தி வாக்கு சேர்க்கவும் முயற்சிகள் நடக்கின்றன.

இந்நிலையில் மதிப்பிற்குரிய வாக்காளர் என்ன செய்ய வேண்டும்?

முதலில், நமது மக்களாட்சிமுறையின் சிறப்பை உணர்ந்து கட்டாயமாக வாக்களிக்க வேண்டும். வாக்களிக்க விருப்பம் இல்லாதவர்களுக்கு '49 - ஓ' ஏற்பாடும் இருக்கிறது. யாருக்கு வாக்களிப்பது என்பது வாக்காளரின் உரிமை; வாக்களிப்பது கடமை.

இன்றைய நிலையில் நாட்டு ஒற்றுமை, பொருளாதார நிலை, வேட்பாளரின் பண்புநிலை, போட்டியிடும் கட்சிகளின் தராதரம் ஆகியவற்றை ஒப்பிட்டு, விலைவாசி, ஊழல், மக்கள்நலத் திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்டவற்றை பரிசீலித்து, வாக்களிக்க வேண்டும். 

இது வாக்காளரின் கடமை. நமது ஜனநாயகக் கோயிலில் தேர்தலே பூஜை. இந்த தேர்தல் நல்லவர்களை கோயிலில் கொண்டுவந்து இருத்தட்டும்!


வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திருநாடு!

-குழலேந்தி



.

பங்குனி மாத மலர்கள்


ஆன்றோர்- திருநட்சத்திரங்கள்:


(சுவாதி - பங்குனி 8)

(சதயம் - பங்குனி 17)

நேசனார்
(ரோகிணி - பங்குனி 25)

(திருவாதிரை - பங்குனி 27)

(பூசம் - பங்குனி 29)

ஸ்ரீ ராம நவமி
(பங்குனி 29)

-----------------------------

சான்றோர்- மலர்வும் மறைவும்:


(பிறப்பு: மார்ச் 23)

(பலிதானம்: மார்ச் 23)

(பிறப்பு: மார்ச் 23)

(பிறப்பு: மார்ச் 27)

(நினைவு: மார்ச் 28)

வ.வே.சு.ஐயர்
(பிறப்பு: ஏப். 2)

(நினைவு: ஏப். 3)

(பிறப்பு: ஏப். 3)

பக்கிம் சந்திர சட்டர்ஜி
(நினைவு: ஏப். 8)

(பிறப்பு: யுகாதி - ஏப். 4)

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை
(பிறப்பு: ஏப். 4)

மங்கள் பாண்டே
(பலிதானம்: ஏப். 8)

-----------------------------

பிறர்:

(பிறப்பு: ஜூலை 6) 

(பிறப்பு: ஜன. 15)


-

12.4.11

போரும் தொண்டிற்கே என வாழ்ந்தவர்



முனையடுவார் நாயனார்

திருநட்சத்திரம்:
பங்குனி - 29 - பூசம் 
(ஏப். 12)

சோழநாட்டில் உள்ள திருநீடுர் என்னும் ஊரில் சிவனடியார் ஒருவர் இருந்தார். இவர்  வேளாள குலத்தைச் சார்ந்தவர். முனை என்றால் போர்முனை என்று பொருள். இவர், போர்க்களத்தில் நின்று எதிரிகளை வெல்வதில் வல்லவர். எனவே இவரை, 'முனையடுவார்' என்றே அழைத்தனர்.

சிவபெருமானிடத்தில் மாறாத காதல் கொண்டு உள்ளம் உருக, கண்ணீர் மல்க வழிபடுவார். சிவனடியார்களுக்கு திருத்தொண்டுகள் புரிந்து வந்தார்.

போரிலே எதிரிகளிடம் தோற்றவர்கள் முனையடுவாரிடம் வருவர். அவருடைய உதவியை கேட்பர். முனையடுவார், தோல்வியடைந்தவர்கள் சார்பாக போரிட்டு வெற்றி பெறுவார். அந்த வெற்றியில் கிடைக்கும் பொருளைக் கொண்டு சிவனடியார்களுக்கு உணவு ஏற்பாடு செய்து படைப்பார்.

அடியார்களுக்குத்  தேவையான எல்லா உதவிகளையும் செய்வார். இவ்வாறு பல காலம் வாழ்ந்து சிவனடியார்களுக்கு தொண்டு செய்து மகிழ்ந்தார். இறுதியில் சிவபெருமான் திருவடிகளை அடைந்தார்.

அன்றுமுதல் இவர் முனையடுவார் நாயனார் என அழைக்கப்படுகிறார்.

-அம்பை சிவன்

காண்க:










.