நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

10.4.11

சிவத்தொண்டர் குறை தீர்த்தவர்

கணநாத நாயனார்
திருநட்சத்திரம்:
பங்குனி - 27 - திருவாதிரை
(ஏப். 10)

சோழநாட்டில் உள்ள சீர்காழியில் தோன்றியவர் கணநாதர். இவர் வேதிய குலத்தைச் சேர்ந்தவர். இல்லற வாழ்க்கையை ஏற்றுக் கொண்டவர். திருத்தோணி சிவபெருமானுக்கு திருத்தொண்டு செய்து வருபவர்.

திருநந்தவனப் பணி செய்வோர், மலர் கொய்வோர், திருமாலை கட்டுவோர்., திருமஞ்சனம் எடுப்போர், திரு அலகிடுவோர், திருமெழுகிடுவோர், திருவிளக்கேற்றுவோர், திருமறை எழுதுவோர், ஓதுவோர் முதலிய திருத்தொண்டர்களுக்கு குறைகள் ஏற்பட்டால் அவற்றை நீக்குவார்.

இத்தகைய திருத்தொண்டுகளில் மக்களை ஈடுபடுத்தி அவர்களையும் திருத்தொண்டர்களாக்குவார். மேலும், இவர் திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகளை எப்பொழுதும் பேரன்போடு வழிபட்டு வந்தார். அதனால் இவர் திருக்கயிலையை அடைந்து சிவகணங்களுக்குத் தலைவரானார். அன்று முதல் இவர், கணநாத நாயனார் என்றே அழைக்கப்படுகிறார்.

-அம்பை சிவன்.

காண்க:









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக