நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

10.10.14

தமிழமுது பருக வாருங்கள்!







 திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
200-வது ஜெயந்தி சொற்பொழிவு 


அன்பு சகோதரர்களுக்கு வணக்கம்!    

 தமிழகத்தின் தலைசிறந்த தமிழறிஞர்களில்  ஒருவரான ‘மகாவித்வான்‘ திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் 200-வது பிறந்த ஆண்டையொட்டி,  நமது  தேசிய சிந்தனைக் கழகம்  சொற்பொழிவு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. 

கீழ்க்கண்ட நிகழ்ச்சிநிரலின்படி நடைபெறும்  இந்நிகழ்வில் தாங்களும் தங்கள் நண்பர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். 


                                 நிகழ்ச்சி நிரல் 

நாள்  :  ஸ்ரீ  ஜய  வருஷம்,  புரட்டாசி 25
              (12.10.2014)  ஞாயிற்றுக்கிழமை.
நேரம் :  மாலை  05.30 மணி.
இடம்  :  12, எம்.வி.நாயுடு தெரு, 
                 சேத்துப்பட்டு (அஞ்சல் ) 
                பழைய  ஆர்.டி .ஓ. அலுவலகம்  அருகில்,   
                சென்னை-31.

உரை:  பேராசிரியர்  ம. வே. பசுபதி  அவர்கள் 
               முதல்வர் (பணிநிறைவு),   
               திருப்பனந்தாள்  தமிழ்க்  கல்லூரி. 


அனைவரையும்  நிகழ்ச்சிக்கு  அகமகிழ்வுடன்   அழைக்கின்றோம்!  

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக