நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

30.8.12

12 மணிநேரம் நடைபெற்ற சுதந்திர தினத் திருவிழா

தேசிய சிந்தனைக் கழகம் திருப்பூரில் உள்ள பல்வேறு அன்மைப்புகளுடன் இணைந்து இந்த ஆண்டு சுதந்திர தினத் திருவிழாவை சிறப்பாக கொண்டாடியது.

இந்நிகழ்வில் தேசிய சிந்தனைக் கழகத்தின் திருப்பூர்  நகரத் தலைவர் திரு. அரிமா எம் ராமகிருஷ்ணன் அவர்களும் ஆலோசகர் குழலேந்தியும் பங்கேற்றனர்.

இவ்விழா குறித்த செய்தித் தொகுப்பு இது.... 

(நன்றி: IDCC அமைப்பின் 'சுதந்திரம் காப்போம்' வலைப்பூ)


------------------------------------------------------
சுதந்திர தினத் திருவிழாவில் பேசுகிறார் தேசிய கல்விக் கழகத்தின் முன்னாள் செயலர் திரு. கிருஷ்ண ஜெகநாதன்.

 சுதந்திர தின விழாவை சம்பிரதாயமான விழாவாகக் கொண்டாடாமல், புத்துணர்ச்சி ஊட்டும் வகையிலும் ஆக்கப்பூர்வமாகவும் கொண்டாட திருப்பூர் சுதந்திர தினத் திருவிழா ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்தது. இதற்கென 50க்கு மேற்பட்ட பொதுநல அமைப்புகள் தொடர்பு கொள்ளப்பட்டன. அனைவரது உதவி, ஒத்துழைப்புடன் சுதந்திர தினத் திருவிழா ஆக. 15 ,  புதன்கிழமை, திருப்பூர், டவுன்ஹாலில் சிறப்பாக நடந்தேறியது. அந்த விழாவின்  நிகழ்வுகளின் சுருக்கமான தொகுப்பு இது:

தேசியக் கொடியேற்றம்:

காலை 9 மணியளவில் டவுன்ஹாலில் அமைக்கப்பட்டிருந்த 30 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியேற்றும் நிகழ்வுடன் விழா துவங்கியது. இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தியாளர சங்கத்தின் தலைவர் K.P.G. கோவிந்தசாமி தலைமை வகித்தார்.

D.K.T. கல்வி நிறுவனங்களின் தலைவரும் தொழிலதிபருமான 'லிங்க்ஸ்' D.சவுகத் அலி, காந்திய மக்கள் இயக்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் A. ராதாகிருஷ்ணன், திருப்பூர் டம்பிள் டிரையர் சங்கத்தின் தலைவர் தாமு.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருப்பூரைச் சேர்ந்த முதுபெரும் சுதந்திரப் போராட்ட வீரரும் (வயது: 88) அனைத்திந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் சமிதியின் செயல் தலைவருமான தியாகி G.முத்துசாமி அய்யா தேசியக் கொடியேற்றி வைத்தார்.

அடுத்து டவுன்ஹாலில் விழா துவக்க நிகழ்ச்சி நடந்தது. செங்கோட்டையில் பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக் கொடி மேடையின் பின்புறத்தை அலங்கரித்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்கள் தங்கள் சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

தொழிலும் பொருளாதாரமும்- கருத்தரங்கம்:

அடுத்து காலை 9.30 மணியளவில் முதல் கருத்தரங்கம் துவங்கியது. திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் M.P.முத்துரத்தினம் தலைமை வகித்தார். திருப்பூர் சாய ஆலை  உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் S.முருகசாமி முன்னிலை வகித்தார். திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவின் செயலாளர் T.R. விஜயகுமார், தொழிலதிபர் ஆர்ம்ஸ்டிராங் பழனிசாமி ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரியின் தலைவரும் வார்சா ஏற்றுமதி நிறுவனத் தலைவருமான ராஜா சண்முகம், கோவையில் உள்ள தழ்நாடு நகரில் பயிற்சி மையத்தின் இயக்குனர் பேராசிரியர் ப.கனகசபாபதி ஆகியோர் கருத்துரை வழங்கினர். கருத்தரங்கின் இறுதியில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு இருவரும் பதில் அளித்தனர்.

காண்க:

1 . பனியன் தொழிலில் உள்முகக் கோளாறுகளை சரி செய்ய வேண்டும்- ராஜா சண்முகம்.

2 . கலாசாரம் சார்ந்த பொருளாதாரத்தால்  இந்தியா முன்னேறி வருகிறது- பேராசிரியர் ப. கனகசபாபதி


இளம் சிறுவனின் இனிய இசை நிகழ்ச்சி:

அடுத்து 'வளரும் செல்வன்' சு.மகிழன் பரிதி குழுவினரின் தேசபக்திப் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. மூன்றாம் வகுப்பு படிக்கும் மகிழன் பரிதி தனது மழலை கலந்த இனிய பாடல்களால் அனைவரையும் வசீகரித்தான். இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் சண்முகானந்த சங்கீத சபாவின் தலைவர் வழக்குரைஞர் V.வீரராகவன் தலைமை வகித்தார். திருப்பூர் குர்பானி அறக்கட்டளை செயலாளர்  M. அகமது பைசல் முன்னிலை வகித்தார். 

இதனிடையே, மேகலா குழும நிறுவனங்கள் அனைவருக்கும் தேநீர் வழங்கினர்.

இயற்கை வளங்களும் சுகாதாரமும் - கருத்தரங்கம்:

அடுத்து பகல் 12 மணியளவில் இரண்டாவது கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவின் தலைவர் R. அண்ணாதுரை தலைமை வகித்தார். கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவர் N.S.பழனிசாமி முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில், ஈரோட்டைச் சேர்ந்த தமிழக பசுமை இயக்கத் தலைவர் டாக்டர் வெ. ஜீவானந்தம், திருமானூரைச் சேர்ந்த இயற்கை வாழ்வியல் இயக்கத்தின் தலைவர் டாக்டர் அ.காசிப்பிச்சை ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

அடுத்து திருப்பூர் - தென் இந்திய பின்னலாடை உற்பத்தியாளர் சங்கம் அனைவருக்கும் மதிய உணவு வழங்கியது.

காண்க:

'இயற்கையைச் சார்ந்து வாழ்வதே சுகாதாரம்'


கண்கவர்ந்த கலைநிகழ்ச்சிகள்:

உணவு இடைவேளைக்குப் பிறகு, மதியம் 2.15 மணியளவில், பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  இந்நிகழ்வுக்கு தமிழ்நாடு அரசு ஹோமியோபதி மருத்துவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் K.கிங் நார்சியஸ் தலைமை வகித்தார்.  திருப்பூர் இன்னர்வீல் சங்கத்தின் முன்னாள் தலைவர் ராஜாத்தி சந்தானகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

முதல் அரை மணி நேரம் வானவில் அகாடெமி, சிருஷ்டி அகாடெமி ஆகியவற்றின் மாணவர்கள் இசை நிழ்ச்சிகளை  நடத்தினர். அடுத்து K. செட்டிபாளையம் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி  மாணவ மாணவியரின் நாட்டிய நிகழ்ச்சிகள் அரைமணி நேரம் நடைபெற்றன. இந்நிகழ்வுகள் பார்வையாளர்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தன.


அரசியலும் நிர்வாகமும்- கருத்தரங்கம்:

அடுத்து பிற்பகல் 3 .15 மணியளவில் மூன்றாவது கருத்தரங்கம் துவங்கியது. இந்நிகழ்வுக்கு  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர் சங்கத்தின் திருப்பூர் பகுதி தலைவர் R. ஈஸ்வரன் தலைமை வகித்தார். தொழிலதிபர்  ஓகே டெக்ஸ்டைல்ஸ் M.கந்தசாமி முன்னிலை வகித்தார்.

திருப்பூர்  தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் , மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவருமான K. தங்கவேலு கருத்தரங்கில் முதலில் பேசினார். அடுத்து கோவையைச் சேர்ந்த வழக்குரைஞரும், AICCTU தொழிற்சங்கத் தலைவருமான R. லட்சுமண நாராயணன் உரையாற்றினார். பார்வையாளர்களின் கேள்விகளுக்கு இருவரும் கருத்தரங்கின் இறுதியில் பதில் அளித்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது.


கல்வியும் பண்பாடும்- கருத்தரங்கம்:

அடுத்து மாலை 5 மணியளவில், நான்காவது கருத்தரங்கம் நடைபெற்றது. திருப்பூர் பார்க் கல்வி நிறுவனங்களின் தலைவர் P.V.ரவி தலைமை வகித்தார். திருப்பூர், K. செட்டிபாளையம் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளியின் செயலாளர் எக்ஸ்லான் K. ராமசாமி முன்னிலை வகித்தார்.

தேசிய கல்விக் கழகத்தின் முன்னாள் நிர்வாகியான சிந்தனையாளர் கிருஷ்ண.ஜெகநாதன், கன்னியாகுமரி- விவேகானந்த கேந்திராவில் பணிபுரியும் ஆராய்ச்சியாளரும் எழுத்தாளருமான அரவிந்தன் நீலகண்டன் ஆகியோர் கருத்தரங்கில் பேசினர்.


சேவை உள்ளங்களுக்கு பாராட்டு விழா:

அடுத்து திருப்பூர் வட்டாரத்தில் செயல்படும் சேவை அமைப்புக்களை பாராட்டும் நிகழ்வு இரவு 7 மணியளவில் நடைபெற்றது. திருப்பூரைச் சேர்ந்த பல்வேறு சமூக சேவை அமைப்புகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு, திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் S.குணசேகரன் தலைமை வகித்தார். மேகலா நிறுவனங்களின் தலைவர் C.சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.

 இதில், அன்பு இல்லம் (திருமுருகன்பூண்டி), வள்ளலார் இயற்கை நலவாழ்வு அறக்கட்டளை முதியோர் இல்லம் (கரடிவாவி), பாரதி குரு குலம் (அலகுமலை), மகாத்மா காந்தி கருணை இல்லம் (அமராவதிபாளையம்), குர்பானி அறக்கட்டளை, முயற்சி மக்கள் அமைப்பு (திருப்பூர்), காதுகேளாதோர் பள்ளி (முருகம்பாளையம்) ஆகிய சமூக சேவை அமைப்புகளை கௌரவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

சுதந்திர தின விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தென்னிந்திய பின்னலாடை உரிமையாளர் சங்க செயலாளர் எம்பரர் V.பொன்னுசாமி பரிசுகளை வழங்கினார்.

காண்க:

1 .சுதந்திர தின விழாவில் சேவை அமைப்புகளுக்குப் பாராட்டு

2 . போட்டிகளில் வென்ற மாணவ மணிகள் பட்டியல்


நாட்டிய நாடகம்:

அடுத்து இரவு 7 .30 மணியளவில், அருள்புரம் ஜெயந்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளின் நாட்டிய நாடகம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தேசிய சிந்தனைக் கழகத்தின் திருப்பூர் பகுதி தலைவர் அரிமா M ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். முன்னாள் ராணுவ வீரர் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்டத் தலைவர் அருள்நிதி T R முரளிதரன் முன்னிலை வகித்தார்.

புறநானூற்று தமிழ்ப் பெண்ணின் வீரத்தையும் தன்மானத்தையும் விளக்கும் 'வீரத்தாய்' நாட்டிய நாடகம் பார்வையாளர்களால் கரகோஷத்துடன் வரவேற்கப்பட்டது.


விழா நிறைவு நிகழ்ச்சி:

இரவு 7 .50 மணியளவில் சுதந்திர தினத் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சி துவங்கியது. தி சென்னை சில்க்ஸ் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் K.பரஞ்சோதி தலைமை வகித்தார். திருப்பூர் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சக்தி M.சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில், ஈரோடு பாரதி வாசகர் வட்டத்தின் செயலாளர் சு.சண்முகவேல் எழுதிய 'விவசாயிகளைப் பாதுகாப்போம்' என்ற நூல் வெளியிடப்பட்டது. திருப்பூர் நேஷனல் சில்க்ஸ் உரிமையாளர் N.அருணாசலம் நூலை வெளியிட, சக்தி M.சுப்பிரமணியம் அதைப் பெற்றுக் கொண்டார். திருப்பூர்  இளைஞர் T.A.ஷான் தயாரித்த 'தேசபக்திப் பாடல்கள்' குறுந்தகடும் இந்நிழ்வில் வெளியிடப்பட்டது.

விழா நிறைவாக, 'தினமணி' நாளிதழின் ஆசிரியர் K. வைத்தியநாதன் விழா பேருரையாற்றினார். முன்னதாக, சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி முத்துசாமி- அவரது மனைவி மயிலம்மாள் தம்பதியினரை தினமணி ஆசிரியர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

காண்க:
 

அடிமை மனோ நிலையிலிருந்து விடுபட வேண்டும்! - 'தினமணி' ஆசிரியர்


      தேசிய கீதத்துடன் விழா இரவு 9.15 மணியளவில் இனிதே நிறைவடைந்தது.


காலை முதல் இரவு வரை சுமார் 12 மணிநேரம் நடைபெற்ற இவ்விழாவில் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த மக்களும், பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தோரும் திரளாகக் கலந்துகொண்டனர். இவ்விழா சிறக்க உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், அமைப்புகளுக்கும் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக