நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

14.8.12

திருப்பூரில் சுதந்திர தினத் திருவிழா


திருப்பூரில் பல்வேறு பொதுநல அமைப்புக்கள் இணைந்து நாளை சுதந்திர தினத் திருவிழாவை நடத்துகின்றன. இதில் நமது தேசிய சிந்தனைக் கழகமும் பெருமையுடன் பங்கேற்கிறது.

இவ்விழாவில் காலை 9 மணிக்கு தேசியக் கொடியேற்றம் துவங்கி, 4 கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சி, மாணவர் கலை நிகழ்சிகள், சேவையாளர்களுக்கு பாராட்டு விழா, புத்தக வெளியீட்டு விழா உள்ளிட்ட நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. திருப்பூர் நகரின் பிரமுகர்கள் பலரும் பலதுறை நிபுணர்களும் இதில் பங்கேற்கின்றனர். நிறைவாக தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் சிறப்புரை ஆற்றுகிறார்.

மேலும் விவரங்களுக்கு காணவும்: வாழ்க சுதந்திரம் வலைப்பூ.

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக