நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

30.12.10

முடி காணிக்கையின் விளக்கமானவர்


மானக்கஞ்சாற நாயனார்

திருநட்சத்திரம்:
மார்கழி - 15 - சுவாதி
(டிச. 30)

கஞ்சனூரில் வாழ்ந்தவர் மானக்கஞ்சாறர். சிவனடியார் சேவையே வாழ்வின் அரிய பயன் என்று வாழ்ந்தவர். இவரது  அருமை மகளுக்கும், ஏயர்கோன் கலிக்காமருக்கும் (இவரும் ஒரு நாயன்மாரே) திருமணம் நடக்கவிருந்த நாளில், மானக்கஞ்சாறரின்  பக்தியை சோதிக்க, மாவிரத முனிவர் வடிவில் அவரது வீட்டிற்கு வந்தார் ஈசன்.

மணமேடையிலிருந்த  அவருடைய மகளின் நீண்ட கூந்தலை தனது 'பஞ்சவடி' எனப்படும், தலை முடியால் அகலமாகப் பின்னப்பட்ட மயிர்க்கயிற்றைப் பூணூலுக்குத் தேவை எனக் கூறி, அந்த அழகிய கூந்தலை தானமாகக் கேட்டார்.

உடனே சிறிதும் தயங்காமல் அப்படியே செய்தார் மானக்கஞ்சாறர். அவரது பக்தியை உலகறியச் செய்த ஈசன், முன் மாதிரியே அழகிய கூந்தலை அவரது மகளுக்கு அளித்து, திருமணம் சிறப்பாக நடக்க அருள்புரிந்தார். எஞ்சிய நாளில் ஈசன் தொண்டாற்றி கயிலைபதம் அடைந்தார் மானக்கஞ்சாறர். 

அனைத்தும் இறைவனின் உடைமையே என்ற அடக்கமான உணர்வையே முடி காணிக்கை. உணர்த்துகிறது. அதன் உச்சபட்ச வடிவமாக மானக்கஞ்சாறர் விளங்குகிறார். அதன் காரணமாக நாயன்மார்களுள் ஒருவராகப் போற்றப்படும் பேறு பெற்றார்.

காண்க:
மானக்கஞ்சாற நாயனார் (விக்கி)
டிசம்பர் மாத அடியார்கள் (தினகரன்)
மானக்கஞ்சாற நாயனார் (வீடியோ)
திருத்தொண்டர் புராணம்
MAANAKKANJAARA NAYANAR 
பெரியபுராணச் சொற்பொழிவு
தமிழ்க் களஞ்சியம்
பெரிய புராணம் (திண்ணை)
தேவாரம்
கஞ்சாறு தல புராணம்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக