நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

28.1.11

எப்போது சொல்லித் தரப் போகிறோம்?




லாலா லஜபதி ராய்

பிறப்பு: ஜன 28  (1865)

விடுதலைப் போராட்ட நிகழ்விலிருந்து ஒரு சிறு துளி...

1928 ம் ஆண்டு சைமன் கமிஷனை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம் அறிவித்தது.  ''சைமனே திரும்பிப் போ'' என்ற முழக்கம் நாடு முழுவதும் பிரபலமானது. அக். 30 ம் தேதியன்று சைமன் கமிஷனைக் கண்டித்து நடந்த லாகூரில் ஆர்ப்பாட்டத்தில் பஞ்சாப்  சிங்கம் லாலா லஜபதிராய் கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதில் இந்திய விடுதலைப் போராட்டத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான லாலா லஜபதிராய் படுகாயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் 1928 , நவ.  17 ம் தேதி மரணமடைந்தார். இச்சம்பவம் நாட்டில் பெரும் கொந்தளிப்பை உருவக்கியது. 


லாலா லஜபதிராய் மீது தடியடி நடத்திய வெள்ளைய காவல் அதிகாரியான சாண்டர்ஸ் என்பவனை,  லஜபதிராய் இறந்து சரியாக ஒரு மாதம் கழித்து,  டிச. 17 ம் தேதியன்று பகத்சிங்கும்,  ராஜகுருவும் சுட்டுக் கொன்றனர். 

சாண்டர்ஸை ஏன் கொன்றோம் என்பதனை விளக்கி லாகூர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. பகத்சிங்கும்,  ராஜகுருவும் தலைமறைவாயினர்.  பின்னாளில் நாடளுமம்ன்றத்தில் குண்டுவீசி கைதானபோது, சண்டர்சன் கொலைவழக்கில் பகத்சிங் மீது குற்றம் சாட்டப்பட்டது.  சாண்டர்ஸ் கொலை வழக்கில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.  1931 ம் ஆண்டு மார்ச் 23 ம் தேதி இவர்கள் மூவரும் தூக்கிலிடப்பட்டனர். 

நாம் இன்று சுவாசிக்கும் சுதந்திரக் காற்று கத்தியின்றி ரத்தமின்றி சத்தமின்றி வந்ததில்லை. லஜபதிராயின் தியாகமும் பகத் சிங்கின் வீரச்சமரும் நமது பாடப்புத்தகத்தில் இருட்டடிக்கப்பட்டதால்தான், நமது இளைய தலைமுறை சுதந்திரத்தின் மதிப்பறியாது விடுதலை தினத்திலும்கூட கேளிக்கைகளில் மூழ்கிக் கிடக்கிறது.

இந்நிலையை மாற்ற நாம் என்ன செய்யப் போகிறோம்? நமது குழந்தைகளுக்கு நமது உண்மையான வரலாற்றை நாம் எப்போது சொல்லித் தரப் போகிறோம்?

காண்க:
பஞ்சநதத்தின் சிங்கம்
.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக