நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

17.1.11

கடவுளுக்கு கண் தந்தவர்


கண்ணப்ப நாயனார்

திரு நட்சத்திரம்:
தை - 3 - மிருகசீரிஷம்
(ஜன. 17)

திண்ணன் எனும் வேடன் காளஹஸ்தி மலைக்காடுகளில் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு நாள் வேட்டையாடச் சென்றபோது ஒரு சிவலிங்கத்தைக் கண்டான்.  முன் ஜென்ம புண்ணிய வசத்தால் அந்த லிங்கத் திருமேனியின் மீது ஆறாக் காதல் கொண்டான். தன் வாயில் முகந்து வந்த நீரால் அவருக்கு அபிஷேகம்  செய்து, வாசனையற்ற காட்டுப் பூக்களால் அலங்கரித்து, தான் வேட்டையாடிய இறைச்சியை நிவேதித்து வந்தான். 

அவனை சோதிக்க எண்ணிய ஈசன் தன்  வலக்கண்ணிலிருந்து ரத்தத்தை வழியச் செய்ய, அதைக் கண்டு பதைத்த திண்ணன் தன் வலக்கண்ணை பெயர்த்து அந்த லிங்கத் திருமேனியில் வைத்தான்.  ஈசன் தன் இடக் கண்ணிலிருந்து ரத்தம் வரவழைக்க திண்ணன் அடையாளத்திற்காக தன் காலை லிங்கத்தின் கண் இருக்கும் இடத்தில் வைத்து தன் இடது  கண்ணைப் பெயர்க்க முற்பட்டபோது ஈசன், ‘நில்லு கண்ணப்ப’ என மும்முறை கூறி ஆட்கொண்டார். அவரே கண்ணப்ப நாயனார் ஆனார். 


இறைவனுக்கு வேடனும் ஒன்றுதான், உயர்  குலத்தவனும் ஒன்றுதான். இறைவனுக்கு வேடன் சமர்ப்பித்த இறைச்சியும் ஒன்றுதான், மடப்பள்ளியில் சமைத்த அன்னமும் ஒன்றுதான். இதனையே கண்ணப்ப நாயனார் சரிதம் காட்டுகிறது. உள்ளன்பால் இறைவனை உணர்ந்து பக்தி செலுத்துபவர்களுக்கு இறைவன் மிக நெருக்கமாகி விடுகிறான் என்பதும் கண்ணப்பர் காட்டும் உண்மை.

 நன்றி: தினகரன்.

காண்க:
கண்ணப்ப நாயனார் (விக்கி)
கண்ணப்ப நாயனார் புராணம்
திருத்தொண்டர் புராணம்
பெரியபுராணச் சொற்பொழிவு
கண்ணப்பர் (தமிழ்வு)
KANNAPPA NAYANAR
பெரிய புராணம் (திண்ணை)
உடுப்பூர்: கண்ணப்பர் அவதாரத் தலம்
கண்ணப்பர் (ஹோலி இந்தியா)
திருக்காளத்தி
காலனி அணிந்த பக்தன்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக