நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

4.1.11

ஏற்றம் காண்போம்!


இன்று அனுமன் ஜெயந்தி

அஞ்சனை பெற்ற மைந்தன்
அனுமனின் பாதம் பற்றி,
வஞ்சனை செய்யும் தீயோர்
வன்மையை வெல்லுவோம் நாம்!
லஞ்சமும், நியாயமற்ற
லாபமும் வாழ்க்கையென்று
நஞ்சிடும் நேர்மையற்ற
நரிகளை வெல்லுவோம் நாம்!

'வித்தக அரக்கன் வைத்த
வினையெனும் தீயைக்கொண்டு
மொத்தமாய் எதிரி நாட்டை
முற்றிலும் நாசம் செய்த
சித்தனே' என்று பாடி,
சிந்தையை ஒருமையாக்கி,
நித்தமும் நாட்டைக் காக்கும்
நிலைகளாய் வாழுவோம் நாம்!

அண்ணலை இதயம் ஏத்தி,
அடிமையாய் சேவை ஆற்றி,
நண்ணிய ராமதூதன்
நாமத்தை நாளும் சொல்லி,
விண்ணியல் வாயு மைந்தன்
விரைவினை நாமும் பெற்று,
எண்ணிய செயலில் எல்லாம்
ஏற்றமே என்றும் காண்போம்!

-வ.மு.முரளி

1 கருத்து:

ANGOOR சொன்னது…

நன்றி .....
உங்கள் வலைப்பூவில் அதிகமான பதிவுகள் படித்தேன் , மிகவும் அருமை ....நன்றி
தர்மா
திருச்சிற்றம்பலம்
www.devarathirumurai.wordpress.com

கருத்துரையிடுக