நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

13.10.11

சிரத்தையின் தீவிர வடிவம்

உருத்திரபசுபதி நாயனார்

(திருநட்சத்திரம்: புரட்டாசி- 26 -அஸ்வினி)
(அக். 13)

காவிரி பாயும் சோழ நன்னாட்டில் மறையவர் வளர்க்கும் சிவவேள்வியின் பயனாக மாதம் மும்மாரி பொழிந்தது. அம் மறைக்குலத்தில் பசுபதி நாயனார் அவதரித்தார். வேதவிற்பனர்கள் கண்மலரென நினைக்கும் திருஉருத்திர மந்திரத்தினைத் தூய அன்புடன் பசுபதி நாயனார் நியமத்துடன் ஓதி வந்தார்.

இறைஅருளைப் பெற அவசியம் தேவை சிரத்தை. இந்தச் சிரத்தையினால்தான் நசிகேதன் மரணத்தை வென்றவனானான்; இந்தச் சிரத்தையினால்தான் மார்கண்டேயன் சிரஞ்சீவியானான்; பல ஞானிகள் முக்தியை அடைந்தது இந்தச் சிரத்தையினால்தான். தொடர்ந்து ஒரு நற்செயலை விடாமல் செய்து வரும்பொழுது அச்செயலே முக்திகான வழிக்காட்டியாகி விடுகின்றது என்பதை பாரத நாட்டில் வாழ்ந்து மறைந்த ஞானிகளும், மகாத்மாக்களும் நிரூபித்துள்ளனர். அவ்வகையில் உருத்திரபசுபதி நாயனார் உருத்திர ஜபம் செய்து இறைவனை அடைந்தார். உருத்திர ஜபம் செய்வது அவர் எடுத்துக்கொண்ட நியமம்.

நாயன்மார்களின் வரலாறு மானுடர்கள் முக்தியை அடைய பல வழிகளை எடுத்துக்காட்டுகிறது. எவ்வாறெல்லாம் நாயன்மார்கள் முக்தியை அடைந்தனர் என்பதை நோக்கும்போது, பிள்ளைக் கறி சமைத்து சிவத்தொண்டு செய்தவரும் உண்டு; உடலை உருக்கி பேய் உரு எடுத்து இறைவனை அடைந்தவரும் உண்டு; கண்களைப் பிடுங்கி இறைவனுக்குச் சமர்ப்பித்து முக்தி அடைந்தவரும் உண்டு; இதைப் போல எத்தனையோ கதைகள் உண்டு. நமக்கு இக்கதைகள் ஒன்றைத்தான் உணர்த்துகின்றன. அது சிரத்தையோடும், அர்ப்பண உணர்வோடும், உண்மையோடும் செய்யும் எச்செயலும் இறைவனை அடையும் வழியாகும் என்பதே.

நமக்குத் தெரிந்த நாயன்மார்கள், ஆழ்வார்கள் தவிர சமகாலத்திலும் சத்தியப் பாதையில் சிரத்தையோடு இறையனுபூதி பெற செயல்படும் சிரோன்மணிகள் நம் பாரதநாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால்தான் சத்தியத் தேடலும், பக்தியின்பால் ஈடுபாடும் மக்களிடையே அதிகரித்து வருகிறது.
அப்பாதையில் செல்லும் போது, அப்பாதையில் சென்ற முன்னோரின் வரலாறு பல தடைகளைக் கடந்து போக நமக்கு உதவும். எனவே, நாயன்மார்களின் வரலாறும், ஆழ்வார்களின் வரலாறும், மேலும் பாரத நாட்டில் தோன்றிய ஞானிகளின் வரலாறும் தெரிந்து கொள்வது ஆன்மிகப் பயணத்திற்கு அடிப்படையாக அமையும்.

உருத்திரம் என்பதன் விளக்கம்:  யஜுர்வேதம் ஏழு காண்டங்களை உடையது. இடையில் உள்ள காண்டத்தினுள் பதினோரு அநுவாகங்களை உடையது திருவுருத்திரம். இதன் இடையில் பஞ்சாக்கிரமும், அதன் இடையில் சிகாரமும் விளங்குகின்றது. வேத இதயம் சிவபஞ்சாக்கிரமாகும். வேதத்தின் கண் திருவுருத்திரம்; கண்மணி திருஐந்தெழுத்து என்பார்கள். உருத்திரன் என்ற சொல் ‘துன்பத்தினின்றும் விடுவிப்பவர்’ என்ற பொருளைத் தருகிறது.

- ராஜேஸ்வரி ஜெயகுமார்
காண்க:


உருத்திர பசுபதியார் (விக்கி)

URUTTIRA  PASUPATHI NAYANAR (saivam.org)

உருத்திர பசுபதி நாயனார் (பேரூர் ஆதீனம்)

உருத்திர பசுபதி நாயனார் புராணம்

உருத்திர பசுபதி நாயனார் (தமிழ்க் களஞ்சியம்)

உருத்திர பசுபதியார் (தினமலர்)
 
திருத்தலையூர்

உருத்திர பசுபதி நாயனார் (பெரியபுராண சொற்பொழிவு)

உருத்திர பசுபதியார் (திண்ணை)

உருத்திர பசுபதியார் (ஆறுமுக நாவலர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக