நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

13.10.11

பாரதியின் நிவேதனம்

 
சகோதரி நிவேதிதை
(மறைவு: அக். 13)
 
அருளுக்கு நிவேதனமாய், அன்பினுக்கோர்
   கோயிலாய், அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய் எமதுயர் நாடாம்
   பயிர்க்கு மழையாய், இங்கு
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்
   பெரும்பொருளாய்ப் புன்மைத் தாதச்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்
   நிவேதிதையைத் தொழுது நிற்பேன்!

-மகாகவி பாரதி

குறிப்பு:  இன்று சகோதரி நினைவு நூற்றாண்டு துவங்குகிறது. 
                     அவரது மறைவு தினம்: 13.10.1911. 
காண்க:

ஆலிலை- மலர்மன்னன் (திண்ணை)

தேசபக்தியைக் கற்றுக் கொடுத்தவர்

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக