நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

4.10.11

தியாகியர் வாழ்வில்...


சுப்பிரமணிய சிவா நினைவு சின்னம், பாப்பாரப்பட்டி 

தியாகி சுப்பிரமணிய சிவா
(பிறப்பு: அக். 4)

பிப்ரவரி 1908ல், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகியோர் மீது, ராஜ துரோக வழக்கு சுமத்தப்பட்டு, சிறைப்படுத்தப்பட்டனர். அச்சமயத்தில், திருநெல்வேலி சென்று, வ.உ.சி.,யையும், சிவாவையும் சிறையில் சந்தித்துப் பேசினார் பாரதியார். இது சம்பந்தமாக, ஜூலை 2, 1908ல் வெளியான, தன், ‘இந்தியா’ பத்திரிகையில் அவர் எழுதியது:

திங்கட்கிழமை காலை, பாளையங்கோட்டை ஜெயிலுக்குப் போய்ச் சேர்ந்தேன். அங்குள்ள அதிகாரிகள் அனுமதியின் பேரில் உள்ளே சென்று, ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை, ஸ்ரீ சுப்ரமணிய சிவா இருவரையும் கண்டு பேசினேன். ஸ்ரீ சிதம்பரம் பிள்ளையை, முன்பு நான் தூத்துக்குடியில், அவருடைய அரிய பிரசங்கங்களை ஆயிரக் கணக்கான ஜனங்கள் கேட்டு, புகழ்ச்சி கூறிக் கொண்டிருந்த காலத்தில் பார்க்கையில், அவருடைய முகம் எவ்வளவு பிரசன்னமாகவும், தேஜசுடனும் விளங்கியதோ, அதே மாதிரியே இப்போதும் இருக்கக் கண்டேன்.

ஸ்ரீ சிவாவும் சந்தோஷமாகத் தான் இருந்தார். ஆனால், அவர் தாடி, மீசையை எடுத்துவிட்ட படியால், முகம் சிறிது மாறுபாடாகத் தெரிந்தது. ஸ்ரீமான் பிள்ளையும், சிவாவும், தங்களுடைய சொந்த காரியங்களைப் பற்றி மட்டுமே என்னோடு வார்த்தையாடாமல், உலகப் பொது விஷயங்களைப் பற்றி, வெகு உல்லாசமாகப் பேசிக் கொண்டிருந்தனர்!

“சிவாவின் முகம், சிறிது மாறுபாடாகத் தெரிந்தது…” என்று பாரதியார் குறிப்பிட்டதை, சிதம்பரனார் சற்று விளக்கமாகவே, தன் சுயசரிதைப் பாடலிலே, பின்வருமாறு நகைச்சுவையாக விவரித்துள்ளார்:

“தாடியை யெடுத்திடச் சாற்றிய சிவம் தான், ‘வாடி’ என்றிடு வண்ணம்…” என்று. அதாவது, ‘வாடி’ என்று அழைக்கத் தோன்றும் விதத்தில், பெண் போன்ற தோற்றத்தில் சிவா காட்சி அளித்தார்.

நன்றி: தினமலர் வாரமலர் - திண்ணை

காண்க:

சிவாவின் கனவு நனவாகுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக