நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

22.10.10

சித்தர்களில் முதல்வர்

திருமூலர் திருநட்சத்திரம்
ஐப்பசி 6 - அஸ்வினி

தமிழகத்தின் அறிவுச்சுடர்களான பதினெண் சித்தர்களில் முதலாமவர் திருமூலர். திருக்கயிலாய பரம்பரையைச் சேந்தவர். 63 நாயன்மார்களில் ஒருவர். 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்று 1500 ஆண்டுகளுக்கு முன்னமே அறிவித்தவர். 

9  தந்திரங்களுடன் கூடிய 3000 பாடல்கள் கொண்ட திருமந்திரம் திருமூலரின் தெய்வ வாக்கால் இயற்றப்பட்டது. இது சைவர்களின் பன்னிரு திருமுறைகளில் பத்தாவது திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. திருமந்திரமாலை என்னும் இத்திருமுறை, சைவசித்தாந்த சாத்திரமாகவும் இறைவன் திருவருளைப் போற்றிப் பரவும் தோத்திர மாகவும் விளங்கும்   தனிச் சிறப்புடையது.

கூடுவிட்டு கூடு பாயும் சித்தர்களின் சித்து காரணமாக ஆட்டிடையன் உடலில் புகுந்து இவர் நடத்திய திருவிளையாடல் நாம் அறிய வேண்டியது. சமரச நாட்டமும், தெய்வீக ஆற்றலும் கொண்டதாக இவரது உபதேசங்கள் விளங்குகின்றன. தமிழுக்கு இவர் அளித்த அறிய கருவூலமான திருமந்திரம் உள்ளவரை தமிழின் தெய்வீகத் தன்மை நீடூழி வாழும்.

''என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத்  தமிழ் செய்யுமாறே'' என்பது திருமூலர் வாக்கு.

.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.



Please follow

http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)

(First 2 mins audio may not be clear... sorry for that)

(PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)




Online Books
http://www.vallalyaar.com/?p=409


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454

கருத்துரையிடுக