பக்கங்கள்
நமது இலக்கு
அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.
நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.
காண்க:
நமது நோக்கம்
நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.
காண்க:
நமது நோக்கம்
17.10.10
காவியத் தாயின் இளைய மகன்
கவியரசு கண்ணதாசன்
நினைவு தினம்: அக்.17
தமிழ்மொழிக்கு துள்ளும் நடையை வழங்கிச் சென்றவர் கண்ணதாசன். துவக்கத்தில் நாத்திகராக இருந்து, பிறகு ஆத்திகரானவர். இவர் எழுதிய 'அர்த்தமுள்ள இந்துமதம்' வெளிவந்த காலத்தில் கடவுள் நிந்தனை செய்தவர்களுக்கு சரியான பதிலடியாகத் திகழ்ந்தது. வனவாசம், ஏசு காவியம், மாங்கனி, கடைசிப் பக்கம் உள்ளிட்ட எண்ணற்ற நூல்களை எழுதியுள்ளார்.
திரைப்படப் பாடலாசிரியாரக முப்பது ஆண்டுகளுக்கு மேல் கோலோச்சியவர். தனது பாடல்களில் சமூகக் கருத்துக்களையும் செந்தமிழையும் புகுத்தி, திரைப்பாடல்களுக்கு புதுச்சுவை சேர்த்தவர். தனது சேரமான் காதலி புதினத்திற்காக 'சாகித்ய அகாதெமி' விருது (1980) பெற்றவர். தமிழகத்தில் தேசியமும் தெய்வீகமும் வளர பெருந்துணை புரிந்தவர்.
பிறந்த நாள்: 24 , ஜூன், 1927. தமிழக அரசவைப் புலவராக வீற்றிருந்த பெருமை இவருக்குண்டு. 1981-ல் மறைந்தார்.
காண்க: கண்ணதாசன்
.
Labels:
சான்றோர் வாழ்வில்,
ஞானிகள்,
தமிழ் காத்த நல்லோர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக