நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

24.10.10

சைவம் காத்த வள்ளல்

நாயன்மார் திருநட்சத்திரம்
ஐப்பசி- 7 பரணி (அக். 24)

பாண்டிய நாட்டை ஆண்ட மன்னர் நின்றசீர் நெடுமாறர், சமண மத தாக்கத்தால் சைவ நிந்தனை செய்தவர். இவருக்கு சூலைநோய் தாக்கியது. அதனை 'மந்திரமாவது நீறு' என்று துவங்கும் திருநீற்றுப் பதிகம் பாடி குணப்படுத்தினார் திருஞான சம்பந்தர். அதையடுத்து மனந்திருந்திய நெடுமாறர், சமணரை மறந்து சைவம் திரும்பினார். நாயன்மார்களில் ஒருவரான நெடுமாறர், திருஞான சம்பந்தர், மகையர்க்கர்சியார், குலச்சிறையார் ஆகியோரின் சமகாலத்தவர். மதுரையில் இருந்து ஆண்ட இவரது ஆட்சிக்காலம், சைவ சமய புத்தெழுச்சிக்  காலம்.
.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக