நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

21.6.14

ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் நடத்தும் சிறப்பு சிறுகதைப் போட்டி



உங்கள் சிறுகதை 175 ஆயிரம் பிரதிகளில் அச்சாகி நீங்கள் பரிசு வெல்ல வேண்டுமா?

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை ஸ்ரீசாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் மற்றும் மனிதநேய மகான்கள், அருளாளர்களின் சரித்திரங்கள், அவர்களது உபதேசங்கள் மற்றும் நமது சாஸ்திரங்கள் யாவும் இன்றும் மக்களுக்கு வழிகாட்டி வருகின்றன; சிக்கலான சமயங்களில் அவர்களுக்கு ஆறுதலையும் தைரியத்தையும் வழங்கி வருகின்றன.

அந்த அடிப்படையில், சிறந்த சிந்தனைகள் எப்படியெல்லாம் நடைமுறையில் செயல் வடிவம் பெறுகின்றன என்பதைக் காட்டும் வகையில் தொண்டு, தியாகம், பக்தி, மனிதநேயம், தேசபக்தி, சமுதாயப் பொறுப்பு, சமய நல்லிணக்கம் போன்றவற்றைக் கூறும் சிறுகதைகளைப் படைப்பாளிகள், எழுத்தாளர்களிடமிருந்து வரவேற்கிறோம்.

படைப்பாளிகளே, 1,75,000 பிரதிகள் அச்சாகும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் உங்களது சிறுகதைகளும் வெளிவர இன்றே எழுதி அனுப்புங்கள்.

முதல் பரிசு ரூ.10,000/-  * இரண்டாம் பரிசு ரூ. 8,000/-
மூன்றாம் பரிசு ரூ. 6,000/-
5 ஊக்கப் பரிசுகள் ரூ. 2,000/- வீதம் ரூ. 10,000/-

எல்லோரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் மூன்று பக்கங்களுக்கு மிகாமல் சிறுகதைகள் இருக்க வேண்டும்.

முடிவுகள் செப்டம்பர் மாத ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் வெளியிடப்படும்.

சிறுகதைகளை அனுப்ப கடைசித் தேதி: 25.7.2014

மின்னஞ்சல்: sriramakrishnavijayam@gmail.com

***

நூற்றாண்டை நோக்கிப் பயணிக்கும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் நடத்தும்
சிறப்புச் சிறுகதைப் போட்டி
மொத்தப் பரிசுத் தொகை ரூ. 34,000

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை ஸ்ரீசாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் மற்றும் எண்ணற்ற மகான்கள், உலகளாவிய மனிதநேய அருளாளர்களின் சரித்திரங்கள், அவர்களது உபதேசங்கள் மற்றும் நமது சாஸ்திரங்களின் அடிப்படையில் கரு உண்மை; உரு கற்பனை என்ற வடிவில் ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் பல சிறுகதைகள் வெளியாகி வருகின்றன.

இந்த வகையில் சேவை, தியாகம், பக்தி, மனிதநேயம், தேசபக்தி, சமுதாயப் பொறுப்பு, சமய நல்லிணக்கம் போன்றவற்றை விளக்கும் சிறுகதைகளைப் படைப்பாளிகள் மற்றும் எழுத்தாளர்களிடமிருந்து வரவேற்கிறோம்.

சிறந்த சிந்தனைகள் எவ்வாறு நடைமுறையில் செயல்வடிவம் பெறுகின்றன என்பதைக் காட்டும் சிறுகதைகளை எழுதி அனுப்பிப் பரிசினைப் பெறுங்கள்.

உங்களது சிறுகதைகளை அனுப்பும்போது,
* சாஸ்திரங்களின்  கருத்துகளையோ, மகான்களின் சம்பவங்களையோ கூறும்போது ஆதாரத்துடன் குறிப்பிடுங்கள்.
* எல்லோரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
* ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் மூன்று பக்கங்களுக்கு மிகாமல் சிறுகதைகள் இருக்க வேண்டும்.
* கதைகளை தபாலிலோ, இ-மெயிலிலோ அனுப்பலாம்.
* இணையதளத்திலோ, வேறு பத்திரிகையிலோ ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டவற்றை ஏற்க இயலாது.
* தேர்வாகாத கதைகளைத் திருப்பி அனுப்ப இயலாது.
* போட்டிக்கு அனுப்பப்பட்ட கதை முடிவு தெரியும்வரை வேறெந்தப் பத்திரிகைக்கும் அனுப்பப்படவில்லை என்ற உத்தரவாதம் தேவை.
* பரிசுக்குரிய கதைகளை நடுவர் குழு தேர்ந்தெடுக்கும். ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது.
* முடிவு வெளியாகும் வரை கடிதம், தொலைபேசி, இ-மெயில் விசாரிப்புகளைத் தவிர்க்கவும்.

முடிவுகள் செப்டம்பர் மாதத்து ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் வெளியிடப்படும்.

 -ஆசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ணவிஜயம்

கதைகளை அனுப்ப கடைசித் தேதி : 25.7.2014

அனுப்ப வேண்டிய முகவரி : ஸ்ரீராமகிருஷ்ண விஜயம், 31, ஸ்ரீராமகிருஷ்ண மடம் சாலை,
மயிலாப்பூர், சென்னை - 600004.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக