நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

20.7.11

இறைவனுக்கு நிவேதனம்

   
அன்னை சாரதா தேவி

(நினைவு: ஜூலை 20) 

எதைச்  சாப்பிட்டாலும்  முதலில்  அதை  கடவுளுக்கு  நிவேதனம்  செய்தல் வேண்டும்.   கடவுளுக்கு  அர்ப்பணம்  செய்யாத  எதையும்  உண்ணக் கூடாது.    நீ உண்ணும் உணவின் இயல்பைப் பொறுத்தே உன் இயல்பு அமைகிறது.  இறைவனுக்குப்  படைத்த உணவு,  உனது உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்துகிறது. அதனால் நீ பலம் வாய்ந்தவனாக ஆவாய். மனம் தூய்மையானால், உனது அன்பும் நிர்மலமாகும்.

- அன்னை சாரதா தேவி

ஆதாரம்:   அன்னை சாரதா தேவி வாழ்வும் வாக்கும் (பக். 147)
                   ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியீடு  


காண்க:

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக