நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

19.4.13

நிவேதனம் நூல் வெளியீடு


 தேசிய சிந்தனைக் கழகம் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று நிவேதனம் நூல் வெளியிடப்பட்டுள்ளது.

48 பக்கங்கள் கொண்ட இந்த நூலில், நமது நாட்டின் ஆன்றோர் பெருமக்களின் திருநட்சத்திரங்களும், அவதார தினங்களும் தொகுக்கப்பட்டுள்ளன அதேபோல நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர்கள், சமூக சீர்திருத்தவாதிகள், விஞ்ஞானிகள் உள்ளிட்ட சான்றோரின் பிறந்த, நினைவு தினங்களும் தொகுக்கப்பட்டுள்ளன.

மேலும், சுவாமி விவேகானந்தரின் வாழ்வில் நடைபெற்ற நிகழ்வுகள் தேதி வாரியாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. இதனை நண்பர் திரு. செங்கோட்டை ஸ்ரீராம் தொகுத்திருக்கிறார்.

இவை மட்டுமல்லாது, சுவாமி விவேகானந்தரின்  150வது ஜெயந்தியை முன்னிட்டு, சுவாமிஜி குறித்த நான்கு கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.

ஆய்வாளர் திரு. அரவிந்தன் நீலகண்டன் எழுதிய "சுவாமி விவேகானந்தரும் அம்பேத்கரும்'  என்ற கட்டுரை, பேராசிரியர் திரு. ப.கனக சபாபதி எழுதிய 'சுவாமி விவேகானந்தரின் இன்றைய அவசியம்' கட்டுரை, பத்திரிகையாளர் திரு.வ.மு.முரளி எழுதிய 'ஒரு பாறையின் மகத்தான சரித்திரம்' கட்டுரை, தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்பாளர் திரு. ம.கொ.சி.ராஜேந்திரன் எழுதிய 'விவேகானந்த சுடரை நாடெங்கும் ஏற்றுவோம்' கட்டுரை ஆகியவை இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

இந்நூலுக்கு மதுரை ராமகிருஷ்ன மடத்தின் தலைவர் பூஜ்யஸ்ரீ சுவாமி கமலாத்மானந்தர், கோவை ராமகிருஷ்ண  வித்யாலயத்தின் செயலாளர் பூஜ்யஸ்ரீ சுவாமி அபிராமானந்தர், வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமத்தின் தலைவர் பூஜ்யஸ்ரீ சுவாமி சைதன்யானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் பத்திரிகையின் ஆசிரியர் பூஜ்யஸ்ரீ சுவாமி விமூர்த்தானந்தர், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த தலைவர் திரு. சூரிய நாராயண ராவ் ஆகியோர் ஆசியுரை வழங்கி உள்ளனர்.

இந்நூலின் விலை: ரூ. 15.00

இந்த நூலைப் பெற
திரு. ம.கொ.சி.ராஜேந்திரன் (90031 40968)
அவர்களை தொடர்பு கொள்ளவும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக