நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

19.11.11

பூ ஒன்று புயலானது!


ஜான்சி ராணி லட்சுமிபாய்

(பிறப்பு: நவ. 19)
“இந்தப் பூமி இறைவனுக்குச் சொந்தம்; இந்த நாடு சக்கரவர்த்திக்குச் சொந்தம்; இந்த ராஜ்யம் ராணி லட்சுமிபாயின் அதிகாரத்துக்கு உட்பட்டது” என்று பிரகடனம் செய்தார்கள் தேசிய வீரர்கள்.
தேசிய சிந்தனையால் எழுந்த சுதந்திரப் போராட்டமான 1857ல் புரட்சிக் கனல் தெறித்தது; பாரத மக்களின் வீர உணர்வு சிலிர்த்தது.
மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரரான வீர சாவர்க்கர் தனது எரிமலை (அ) முதலாவது இந்திய சுதந்திர யுத்தத்தில் ஜான்சி ராணி லட்சுமிபாயை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்:
“உண்மை சரித்திராசிரியர்களே! தேச பக்தர்களே! உங்களுடைய வீர சங்குகளை வானளாவ முழக்குங்கள்! ஏனெனில், மிகக் கீர்த்தி வாய்ந்த இரண்டு வீரர்கள் சரித்திர மேடைக்கு வருகின்றனர். அதிருப்தி, அமைதி-யின்மை என்னும் கருமேகங்களால் பரத கண்டம் முழுவ-தும் இருண்டு கிடந்த சமயத்-தில் இந்தியா முழுவதும் மங்காத நட்சத்திரங்களாக ஒளி வீசத் திகழ்ந்தவர்கள் அந்த இருவரும் தாம். அவர்கள் பாரத அன்னை-யின் ஆரத்தில் இணையற்றுப் பிரகாசிக்கும் ஆழி முத்துக்கள்; இந்தியாவிற்காகத் தங்கள் உயிர்களையும், அர்ப்பணம் செய்த உத்தமர்கள்.
சிவாஜி போன்ற வீர திலகங்களை உற்பத்தி செய்யும் இந்துஸ்தான் ஊற்று வற்றி விடவில்லை என்பதை உலகம் அறியக் காட்டியவர்கள். பரதக் கண்டத்தின் சரித்திரத்தில் கலங்கரை விளக்கமாக விளங்கும் சீலர்கள்; தர்ம யுத்தத்தில் வாள் ஏந்தி, தோல்வியிலும் பெருமை குன்றாத பாரத திலகங்கள்; இவர்கள் தாம் நானாசாஹிப் பேஷ்வாவும், வீர தீர ரமணியான ராணி லட்சுமி பாயும்.”
மக்களின் விருப்பத்தின்படி ஜான்சியின் சிம்மா-சனத்தை அலங்கரித்த லட்சுமிபாய் தனது 11 மாத கால ஆட்சியில் - ஆம், வெறும் 11 மாதம் தான் அரசாட்சியில் வீற்றிருந்த ஜான்சிராணி ஜனங்களின் மனங்கவர்ந்த ராணியாகவே விளங்கினாள்.
எல்லாத் துறைகளிலும் சிறந்த நிர்வாகிகளை நியமித்தாள். கடுமையான சட்டங்கள் மூலம் மக்களின் மனத்தில் அச்சத்தைப் போக்கினாள். கோயில்களுக்கான மானியங்கள் மீண்டும் வழங்கப்பட்டன. மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களது குறைகளைப் போக்கினாள். மிகப்பெரிய நூலகத்தை கட்டிய ஜான்சிராணி, பல மொழிகளிலுள்ள நூல்களை மொழி-பெயர்க்க வழி செய்தாள். மொத்தத்தில் ஜான்சியை ஆண்ட மன்னர்களை விட - மங்கையர்க்கரசியாய் விளங்கினாள் லட்சுமிபாய்.
1858, பிப்ரவரி  22ஆம் தேதி, ஆங்கிலேய ஜெனரல் ஷியூ ரோஸின் வெள்ளைப்படைகள் ஜான்சியின் மீதான முற்றுகைப் போரை துவக்கின. வெறித்தாக்குத-லுடன் ஜான்சி கோட்டையின் மதில்களைச் சிதைக்க முயன்றார்கள்.
உயர்ந்த மலைப்பாதைகளுக்கு மேல் கருங்கற்களால் கட்டப்பட்ட 10 அடி அகலமும், 20 அடி உயரமும் கொண்ட ஜான்சி கோட்டையை லட்சுமிபாய், மேலும் பலப்படுத்தி யுத்தத்திற்கான வசதிகளுடன் நிர்மாணித்திருந்தாள். காவல், பீரங்கி அறைகள் உட்பட.....
ஜான்சியின் படைபலம் குறைவு. எனினும் சுதந்திர வேட்கையுடன், வீறு கொண்டு ஆவேசத்துடன் ஜான்சி வீரர்கள் வெள்ளைச் சிப்பாய்களை எதிர்த்தனர்.
“மேரா  ஜான்சி நஹீன் டெங்கே!”
(என் ஜான்சியை நான் ஒருபோதும் விட்டுத் தர மாட்டேன்)
ஆங்கிலேயர்கள் ஆண்மையுள்ளவர்களாக இருந்தால் என் வாளுக்குப் பதில் சொல்லட்டும் என அறைகூவல் விடுத்தாள். படை முழுவதற்கும் பொறுப்-பேற்று, தலைமை வகித்து, தாக்குதல், வியூகங்கள் போன்றவற்றை மேற்பார்வையிட்டாள். ஒவ்வொரு வீரனிடமும் சென்று உற்சாகப்படுத்தினாள்; உத்வேகமூட்டினாள்.
இருபதே வயதான லட்சுமிபாய், ஆணுடை தரித்து, வளர்ப்பு மகன் தாமோதரனை முதுகில் வைத்துக் கட்டிக் கொண்டு குதிரையில் வீற்றிருந்து வீரச்சமர் புரிந்த அவள் ஆங்கிலேயருக்கு பெண்புலியாய் தென்பட்டாள்.
அவளது வாள் வீச்சில் பறங்கியர்களின் தலைகள் பனங்காய்களாய் பந்தாடப்பட்டன;  ஆவேசத்துடனும், ஆத்திரத்துடனும் தன்னை நெருங்கிய படைத்தளபதி பௌகரை தனது வாளால் வீழ்த்தினாள். மிரண்டு போய் நின்றனர் ஆங்கிலேயர்கள்.
தேசபக்தர்களின் பீரங்கிகள் வாயடைத்துப் போயின. முக்கியப் படைப்பிரிவு சிதறுண்டது. வெள்ளையர்கள், நான்கு புறமும் சூழ்ந்து கொண்டு தாக்கினர்.
அந்த நிலையிலும், லட்சுமிபாய் தம்முடன் இருந்த 20 குதிரை வீரர்களுடன், தோழிகளுடன் பகைவர்களைப் பிளந்து கொண்டு, மற்றொரு புறத்தில் இருந்த தம் சகாக்கள் இருக்கும் இடத்துக்குப் போய் சேர முயன்றார். தன் தோழி மந்தரையைக் கொன்ற ஆங்கிலச் சிப்பாயை ஒரு வீச்சில் வெட்டிச் சாய்த்தார். அதே சமயம் அவருடைய முகத்தில் ஒரு குண்டு பாய்ந்தது.
தம் இரு புறத்திலும் வந்து கொண்டிருந்த தோழிகளையும், ராமச்சந்திர ராவ், ரகுநாத சிங் முதலிய மெய்க் காவலர்களையும் நோக்கி, “யுத்த களத்தில் நான் வீழ்ந்தால், என் உடலை வெள்ளையர்கள் தீண்டாமல் பாதுகாக்க வேண்டியது உங்களுடைய கடமை. உங்களிடம் கடைசியாக, நான் எதிர்பார்க்கும் உதவியும் அதுதான்” என்றாள்.
தாம் பட்ட காயத்தையும் லட்சியம் செய்யாமல் பகைவர்களை வீழ்த்தியபடி முன்னேறிக் கொண்டிருக்கையில் வழியே ஒரு கால்வாய். துரதிருஷ்டவசமாய், புதிய குதிரையால் கால்வாயைத் தாண்ட முடியவில்லை. சூழ்ந்து கொண்டனர் ஆங்கிலேயர்கள்.
ஆங்கிலேயன் ஒருவன் தன் கத்தியால் வெட்டியதால், லட்சுமிபாயின் தலையின் வலதுபுறம் சிதைந்தது; ரத்தவெள்ளம். வலது கண் அதிர்ச்சியால் தெறித்தது. மற்றொருவன் மார்பில் வெட்ட மகாராணி, வீரமங்கை படுகாயம் அடைந்தாள். இருவரையும் ஒரே மூச்சில் வெட்டில் வீழ்த்தினாள்.
ராமச்சந்திர ராவும், மற்றவர்களும் ராணியைத் தாங்கி, அருகிலுள்ள கூரைக் குடிசைக்கு  கொண்டு சென்றனர். தண்ணீர் பருகச் செய்தனர். உடல் முழுவதும் ரத்தமயம். மெது-வாய் கண்ணைத் திறந்தார். வெள்ளையர்களின் தீண்டலுக்கு ஆளாகாத பெருமித உணர்வுடன் புன்முறுவல் செய்தாள். தம் சுவீகாரப் புதல்வரான தாமோதர ராவை அன்புடன் நோக்கினாள்; ஆண்டவனைப் பிரார்த்தித்தாள்; அழியாப் புகழுடம்பைப் பெற்றாள்.
வீர சாவர்க்கரின் வார்த்தைகள் இதுதான்:
“ஒரு பெண் - இருபத்து மூன்று வயது கூட நிரம்ப-வில்லை - ரோஜா புஷ்பம் போன்ற அழகு - மனத்தைக் கொள்ளை கொள்ளும் உயரிய குணங்கள் - பரிசுத்த வாழ்க்கை - இணையற்ற தைரியம் - உவமையற்ற போர்த்திறன் - இவை வேறு எவரிடத்தும், ஒருங்கு வாய்க்கப் பெற்றதில்லை. இவருடைய இதயத்தில் என்றும் அழியாத தேசபக்திச் சுடர் பிரகாசித்துக் கொண்டிருந்தது.”
அந்த தேசபக்திச் சுடர் இன்றும், என்றும் நம் பாரதியர்களின் வாழ்வில் தேசபக்திச் சுடரை ஏற்றிக் கொண்டிருக்கும் - வெளிச்சம் தரும் விளக்காக சுடர்விடும்.       

000000000000000000000000000000 

இங்கிலாந்து நூலகத்தில் ஜான்சி கடிதம்!
ஜான்சி ராணி, தனது கணவரது மறைவிற்குப் பிறகு எழுதிய கடிதம் ஒன்று இங்கிலாந்து நூலகத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதலாம் சுதந்திரப் போர் துவங்குவதற்கு முன்பாக, அதாவது 1857ஆம் ஆண்டு ஜான்சி பகுதியை ஆட்சி செய்த மன்னர் மரணம் அடைந்தார். மன்னருக்கு வாரிசு இல்லாததால் ஜான்சிப் பகுதியைக் கைப்பற்ற கிழக்கிந்திய கம்பெனியினர் முயற்சி செய்தனர். இதை அறிந்த லட்சுமிபாய் அப்போதைய கிழக்கிந்திய கம்பெனி-யின் கவர்னர் ஜெனரல் டல்ஹவுசி பிரபுவுக்கு பாரசீக மொழியில் எழுதிய கடிதம் தான் தற்போது இங்கிலாந்து நூலகத்தில் உள்ள ஆவண காப்பகத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கணவனை இழந்த துயரத்துடன் லட்சுமிபாய் எழுதிய இந்தக் கடிதத்தில், “எனது கணவர் ஜான்சியை ஆட்சி செய்வதற்கு வசதியாக தாமோதர் ராவ் என்ற குழந்தையை தத்து எடுத்து இருக்கிறார். எனவே வாரிசு இல்லாத ராஜ்ஜியம் என்று கருதி ஜான்சியை உங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
எனினும் இந்த சுவீகாரப் புத்திரனை வாரிசாக ஏற்றுக் கொள்ளாத டல்ஹவுசி பிரபு, ஜான்சியைக் கைப்பற்றத் திட்டமிட்டார். இதனால் வெள்ளையர்-களை எதிர்த்து ஜான்சிராணி 1857 ல் தனது படைகளை திரட்டி போரில் குதித்தார் என்பது வரலாறு.
வெள்ளையர்களின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் அரசு ஊழியராக பணியாற்றிய லிவின் பென்தாம் போரிங் என்பவர் சேகரித்த முக்கிய ஆவணங்களில் இந்த கடிதம் இருந்ததாக லண்டன் நூலக ஆராய்ச்சியாளர் தீபிகா அலாவத் தெரிவித்தார்.          
- ம.கொ.சி. ராஜேந்திரன்
காண்க:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக