ஈரோடு மாவட்டம், துடுப்பதியில் உள்ள
ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் கடந்த
16.11.2013, சனிக்கிழமை, காலை 9.00 மணி முதல் மதியம் 2.30 மணி வரை கல்லூரி ஆசிரியர் கருத்தரங்கு நடைபெற்றது. சுவாமி விவேகானந்தர் 150 ஜெயந்தியை முன்னிட்டு, தேசிய சிந்தனைக் கழகமும் ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியும் இணைந்து இக்கருத்தரங்கை நடத்தின.
அதன் புகைப்படப் பதிவுகள் இங்கே...
![1Kuththuvilakku1](http://vivekanandam150.com/wp-content/uploads/2013/11/1Kuththuvilakku1-300x211.jpg)
- கருத்தரங்கை
குத்துவிளக்கேற்றி துவங்கிவைக்கிறார் கோவை ராமகிருஷ்ணா மிஷன்
வித்யாலயத்தின் உதவி செயலாளர் பூஜ்யஸ்ரீ சுவாமி நிர்மலேஸானந்தர்.
![2Kuththuvilakku 2](http://vivekanandam150.com/wp-content/uploads/2013/11/2Kuththuvilakku-2-300x220.jpg)
- குத்துவிளக்கேற்றுகிறார் தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்பாளர் திரு. ம.கொ.சி.ராஜேந்திரன்
![3Kuththuvilakku 3](http://vivekanandam150.com/wp-content/uploads/2013/11/3Kuththuvilakku-3-300x220.jpg)
- குத்துவிளக்கேற்றுகிறார் ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியின் செயலாளர் திரு. சா.சிவானந்தன்.
![5Principal ravichandran](http://vivekanandam150.com/wp-content/uploads/2013/11/5Principal-ravichandran-300x213.jpg)
- வரவேற்புரை வழங்குகிறார் ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் திரு. ஆ.த.ரவிசந்திரன்.
![6Secy Shivanandhan](http://vivekanandam150.com/wp-content/uploads/2013/11/6Secy-Shivanandhan-300x188.jpg)
- வாழ்த்துரை வழங்குகிறார் ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியின் செயலாளர் திரு. சா.சிவானந்தன்.
![7Swami Nirmaleshananda](http://vivekanandam150.com/wp-content/uploads/2013/11/7Swami-Nirmaleshananda-300x215.jpg)
- கருத்தரஙகைத்
துவங்கிவைத்து, ‘விவேகானந்தரும் இளைஞர்களும்’ என்ற தலைப்பில் உரையாற்றி,
ஆசியுரை வழங்குகிறார் பூஜ்யஸ்ரீ சுவாமி நிர்மலேஸானந்தர்.
![8Audiance 2](http://vivekanandam150.com/wp-content/uploads/2013/11/8Audiance-2-300x178.jpg)
- கருத்தரங்கில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதி.
![9Kuzalenthi](http://vivekanandam150.com/wp-content/uploads/2013/11/9Kuzalenthi-300x205.jpg)
- 'விவேகானந்தர்
விரும்பிய பாரதம்’ என்ற தலைப்பில் தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச்
செயலாளர் கவிஞர் திரு. குழலேந்தி உரையாற்றுகிறார்.
![10Pramodhkumar](http://vivekanandam150.com/wp-content/uploads/2013/11/10Pramodhkumar-300x215.jpg)
- 'பாரதம்
உலகிற்கு அளித்த நன்கொடைகள்’ என்ற தலைப்பில், கோவை அமிர்தா பல்கலைக்கழக
உதவி பேராசிரியர் திரு.மா.பிரமோத்குமார் உரையாற்றுகிறார்.
![11Prof Kanagasabapathi](http://vivekanandam150.com/wp-content/uploads/2013/11/11Prof-Kanagasabapathi-300x207.jpg)
- ’இனிவரும்
காலம் இந்தியாவின் கைகளில்’ என்ற தலைப்பில் கோவை- தமிழ்நாடு நகரியல் கல்வி
மையத்தின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் திரு. ப.கனகசபாபதி
உரையாற்றுகிறார்.
![12Prof Kumarasamy](http://vivekanandam150.com/wp-content/uploads/2013/11/12Prof-Kumarasamy-300x201.jpg)
- ’விவேகானந்தரின்
இன்றைய அவசியம்’ என்ர தலைப்பில், சேலம்- பெரியார் பல்கலைக்கழக-
விவேகானந்தா கல்வி மையத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர் பேராசிரியர்
திரு.க.குமாரசாமி உரையாற்றுகிறார்.
![13RPrabakar](http://vivekanandam150.com/wp-content/uploads/2013/11/13RPrabakar-300x191.jpg)
- நன்றி நவில்கிறார், தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலக் குழு உறுப்பினர் திரு. சேலம் இரா.பிரபாகரன்.
![14Audiance 1](http://vivekanandam150.com/wp-content/uploads/2013/11/14Audiance-1-300x186.jpg)
- கருத்தரங்கில் பங்கேற்றோரில் ஒரு பகுதி.
இந்நிகழ்வில்,
பெருந்துறை மருத்துவக் கல்லூரியின் பேராசிரியரும் கண் மருத்துவருமான
டாகடர் திரு.எம்.எல்.ராஜா, ‘விவேகானந்தரும் விஞ்ஞானமும்’ என்ற தலைப்பில்
பேசினார்.
கருத்தரங்கில் 6 கல்லூரிகளிலிருந்து 150-க்கு மேற்பட்ட
ஆசிரிரியர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர். தேசிய கீதத்துடன்
கருத்தரங்கம் இனிதே நிறைவடைந்தது.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக