நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

13.7.12

வெற்றிக்கு வழி

சுவாமி சிவானந்தர்
(ஐம்பதாம் ஆண்டு நினைவுநாள்: ஜூலை 14)

இந்த உலகம் ஒரு வித்தியாசமான உலகம். இந்த மனமும் அதேபோல விசித்திரமானது. நெருங்கிய நண்பர்களிடையே கூட அவ்வப்போது சிறு சிறு வேற்றுமையும் மனக்கசப்பும் ஏற்படுவதுண்டு. சில சமயங்களில் அபிப்பிராய பேதம் எரியும் நெருப்பில் எண்ணெய் விட்டது போல ஆகிவிடும். பல்வேறு மனங்களோடு பழகும்போது நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நீங்கள் அனுசரணையும், பெருந்தன்மையும், புரிந்துகொள்ளக் கூடியதுமான இருதயத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அன்றாட வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளும் படிப்பினையைக் கொண்டு மிகவும் ஜாக்கிரதையாக உங்களைத் திருத்தி அமைத்துக்கொள்ள வேண்டும்.

-சுவாமி சிவானந்தர்

காண்க:

தெய்வீக வாழ்க்கையை உபதேசித்தவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக