நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

24.3.12

அறுபடாத நூல்

 
 
காந்திய வழியில் சமூக மேம்பாட்டிற்காக தன் வாழ்வை முழுமையாக அர்பணித்த அந்த 74 வயது தீதியை பார்க்க அருகாமை கிராமங்களிலிருந்து தினமும் பெண்களும் குழந்தைகளும் ஜயாக் காந்தி ஆசிரமத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர். தன்னைக் காண வரும் விருந்தினர்களை மெல்லிய புன்முறுவலோடும் உள்ளமெல்லாம் அன்போடும் உபசரிக்கிறார், குமாரி. ஜர்ணா தாரா சௌத்ரி.
.
சுமார் 25,000 ஏழை குடும்பங்களுக்கு வாழ்வாதாரங்களை அமைத்துக் கொடுத்து அவர்களுக்கு வளமான வாழ்வை உறுதி செய்த பெருமை அவரையே சென்று சேரும் .ஜமன்லால் பஜாஜ் அமைப்பு, 'இந்தியாவிற்கு அப்பாலுள்ள இந்தியரல்லாத சிறந்த காந்தியவாதி' என்ற வகையில் 1998 ஆம் ஆண்டு அவருக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது.. 2010 ஆம் ஆண்டு அவருக்கு மேற்கு வங்க கவர்னரால் இந்திய அரசு வழங்கும் காந்தி புரஸ்கார் விருது வழங்கப்பட்டிருக்கிறது.

இவரைப் பற்றிய முழு கட்டுரை:
'காந்தி இன்று'  இணையதளத்தில்... 
.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக