tag:blogger.com,1999:blog-1134172536605043424.post7687657010928025790..comments2023-09-17T19:25:58.491+05:30Comments on தேசமே தெய்வம்: பிரிவினைவாதத்திற்கு பலியான பிரதமர்Unknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1134172536605043424.post-22493856609117869342010-11-01T11:08:32.214+05:302010-11-01T11:08:32.214+05:30எந்த ஒரு மனிதருக்கும் உள்ள குறைபாடுகள் இந்திரா காந...எந்த ஒரு மனிதருக்கும் உள்ள குறைபாடுகள் இந்திரா காந்திக்கும் இருந்தன என்பது உன்மைதான். வாசகர் விஜயன் கூறுவது போல, பல அரசியல் சிக்கல்கள் இந்திராவால் உருவாகின என்பதும் உண்மையே. எனினும், இந்தியாவின் வளர்ச்சியில் இந்திராவின் பங்கு கணிசமானது என்பதில் சந்தேகமில்லை. தற்போதைய ஊழல் காங்கிரஸ் அரசுடன் ஒப்பிட்டால், இந்திரா ஆட்சியின் சிறப்பு தெரியவரும். <br /><br />இந்த வலைப்பூ, நாட்டிற்கு பெரும்பங்காற்றியவர்கள் யாரெனினும் அரசியல் வேறுபாடின்றி அவர்களை பதிவு செய்ய விரும்புகிறது. அவர்களது குறைகளைத் தவிர்த்து, பெருமைகளைப் பட்டியலிடவே விரும்புகிறோம். ஆயினும் வாசகர்களது எதிர்வினைகள் நிச்சயமாக பதிவு செய்யப்படும். நமது பதிவுகள் பக்குவத்துடன் அமைய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறோம். <br /><br />இலங்கையில் தமிழர்கள் மீது ஜெயவர்த்தன அரசு கொடுமைகளைக் கட்டவிழ்த்துவிட்டபோது, உலக நாடுகளைப் பற்றிய கவலையின்றி, வான்வழியாக இலங்கையில் உணவுப் பொட்டலங்களைப் போட இந்திரா ஏற்பாடு செய்தார். துரதிருஷ்டவசமாக அவர் 1984 ல் கொல்லப்பட, இலங்கைப் பிரச்னை வேறுவழியில் திசை திரும்பி பல லட்சம் தமிழர்களின் அழிவில் முடிந்தது. <br /><br />தனக்கு சரியென்று பட்டதை துணிவுடன் நிறைவேற்றியதில் இந்திரா பாராட்டப்பட வேண்டியவரே. இன்றைய குழப்பமான, ஊழல் மிகுந்த, பிரிவினை கோஷங்கள் மலிந்த நாட்டிற்கு இந்திரா போன்ற வலிமையான ஆட்சியாளர் தேவை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.தேசமேதெய்வம்https://www.blogger.com/profile/02406706643824123856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1134172536605043424.post-6220320209939937982010-10-31T13:08:47.679+05:302010-10-31T13:08:47.679+05:30இந்திய ஜன நாயகத்தை கேவலப்படுத்தியவர். ஜன நாயக கட்ச...இந்திய ஜன நாயகத்தை கேவலப்படுத்தியவர். ஜன நாயக கட்சியான காங்கிரஸ் இந்திராவின் குடும்ப சொத்தாக மாறியது.காமராஜரை ஒழிக்க எண்ணி கருணாநிதியோடு கூட்டு சேர்ந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை ஒழித்தவர்,பிரதமர் பதவி நேரு குடும்பத்தின் பிறப்புரிமை என்று நம்பி சஞ்சய் போன்ற கேப் மாறிகளை வளர்த்தவர்.எல்லா எதிர்கட்சிகளையும் உடைத்தவர்.அகாலி தள் கட்சியை உடைத்து பிந்தரன்வாலா வை வளர்த்தார், பின்னர் அதே பிந்தரன்வாலா ஆட்களால் மாண்டார். தன்னை பிரதமர் பதவியில் அமர்த்திய காமராஜரை who is kamaraj என்று நன்றி மறந்து கேட்டவர்.vijayanhttps://www.blogger.com/profile/05392179336401967133noreply@blogger.com